Wednesday, March 29, 2017

கிருஷ்ணனின் நேரடிப் போர் வர்ணனை! - கர்ண பர்வம் பகுதி – 60

Live war commentary of Krishna! | Karna-Parva-Section-60 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : சம்சப்தகர்களிடம் செல்லுமாறு சொன்ன அர்ஜுனனுக்கு யுதிஷ்டிரனின் நிலையைச் சுட்டிக் காட்டிய கிருஷ்ணன்; போரை நேரடியாக வர்ணித்த கிருஷ்ணன்; யுதிஷ்டிரனைக் காத்து நின்ற சாத்யகியும், பீமனும்; ஒருவேளை யுதிஷ்டிரர் இறந்திருக்கக்கூடும் என்று ஐயமெழுப்பிய கிருஷ்ணன்; பீமனின் வீரத்தை எடுத்துரைத்த கிருஷ்ணன்; யுதிஷ்டிரன் உயிரோடுதான் இருக்கிறான் என ஐயந்தெளிந்த கிருஷ்ணன்; நிஷாத இளவரசன் ஒருவனைக் கொன்ற பீமன்; அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் குந்தியின் மகனான பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குச்} சுட்டிக் காட்டிய கிருஷ்ணன், அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(2) “ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, வலிமைமிக்கவர்களும், தார்தராஷ்டிரர்களில் பெரும் வில்லாளிகளுமான பலர், அதோ உன் அண்ணனை (யுதிஷ்டிரரைப்) பின்தொடர்ந்து செல்கிறார்கள். அவர்கள் அனைவரும் அவரைக் கொல்லும் விருப்பத்தைக் கொண்டவர்களாவர்.(2) போரில் வீழ்த்தப்படக் கடினமானவர்களும் வலிமைமிக்கவர்களுமான பாஞ்சாலர்கள், உயர் ஆன்ம யுதிஷ்டிரரை மீட்கும் விருப்பத்தால் அவரை நோக்கிச் செல்கின்றனர்.(3) ஓ! பார்த்தா {அர்ஜுனா}, மொத்த உலகின் மன்னனான துரியோதனன், கவசம்பூண்டு, பெரும்படை ஒன்றின் துணையுடன் அதோ பாண்டவ மன்னரை {யுதிஷ்டிரரைப்} பின்தொடர்ந்து செல்கிறான்.(4) தன் எதிராளியைக் கொல்லும் விருப்பத்தால் தூண்டப்பட்ட அந்த வலிமைமிக்கத் துரியோதனன், ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, நஞ்சுமிக்கப் பாம்புகளின் தீண்டலையுடைய ஆயுதங்களைக் கொண்டவர்களும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவர்களுமான தன் தம்பிகளின் துணையுடன் அவரைப் பின்தொடர்ந்து செல்கிறான்.(5)


அந்தத் தார்தராஷ்டிர யானைகளும், குதிரைகளும், தேர்வீரர்களும், காலாட்படை வீரர்களும், மதிப்புமிக்க ரத்தினத்தைக் கவர நினைக்கும் ஓர் ஏழை மனிதரைப் போல யுதிஷ்டிரரைக் கைப்பற்ற வருகின்றனர்.(6) சாத்யகியாலும், பீமனாலும் தடுக்கப்படும் அவர்கள், அமுதத்தைக் கவர்ந்து செல்ல விரும்பிய தைத்தியர்கள் சக்ரனாலும் {இந்திரனாலும்}, அக்னியாலும் அசைவற்றவர்களாகச் செய்யப்பட்டதைப் போல மீண்டும் மலைப்படைந்து நிற்கின்றனர்.(7) எனினும், (குரு படையின்) வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அதிகமான தங்கள் எண்ணிக்கையின் விளைவால், மழைக்காலங்களில் பெருங்கடலை நோக்கி விரையும் பெரும் அளவிலான நீரைப் போல யுதிஷ்டிரரை நோக்கி மீண்டும் செல்கின்றனர்.(8) அந்த வலிமைமிக்க வில்லாளிகள் சிங்க முழக்கங்களைச் செய்து, சங்குகளை முழக்கித் தங்கள் விற்களை அசைத்துக் கொண்டிருக்கின்றனர்.(9) இவ்வாறு துரியோதனனின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டவரும், குந்தியின் மகனுமான யுதிஷ்டிரரை ஏற்கனவே காலனின் வாய்க்குள் அகப்பட்டவராகவோ, ஏற்கனவே வேள்வி நெருப்பில் ஊற்றப்பட்ட ஆகுதியாகவோ நான் கருதுகிறேன்[1].(10)

[1] வேறொரு பதிப்பில், “துரியோதனனுடைய வசத்தை அடைந்திருக்கின்ற குந்தீபுத்திரரான யுதிஷ்டிரரை மிருத்யுவின் வாயை அடைந்தவரென்றும், அக்னியில் ஹோமம் பண்ணப்பட்டவரென்றும் எண்ணுகிறேன்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், “குந்தியின் மகனான யுதிஷ்டிரர் காலனின் வாய்க்குள் நுழைந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். அந்த நற்பேறுபெற்றவர், துரியோதனின் ஆளுகையின் கீழு வந்திருப்பது நெருப்பில் ஊற்றப்பட்ட ஆகுதியைப் போன்றதே” என்றிருக்கிறது.

ஓ! பாண்டவா {அர்ஜுனா}, திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} படையானது முறையாக ஆயத்தம் செய்யப்பட்டு அணிவகுக்கப்பட்டிருக்கிறது. அதன் {அந்த வியூகத்துடைய} கணைகளின் எல்லைக்குள் சக்ரனே {இந்திரனே} வந்தாலும், அவனும் தப்புவது அரிதே.(11) பெரும் வேகத்துடன் கணைமாரிகளைப் பொழிபவனும், கோபத்தில் அந்தகனுக்கு ஒப்பானவனுமான வீரத் துரியோதனனின் மூர்க்கத்தைப் போரில் எவனால் தாங்கிக் கொள்ள முடியும்?(12) வீரத் துரியோதனன், அல்லது துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, அல்லது கிருபர், அல்லது கர்ணனுடைய கணைகளின் சக்தியானது, மலைகளையே பிளந்துவிடக் கூடியதாகும்.(13) எதிரிகளை எரிப்பவரான மன்னர் யுதிஷ்டிரர், ஒரு முறை கர்ணனால் களத்தில் புறமுதுகிடச் செய்யப்பட்டார். அந்த ராதையின் மகன் {கர்ணன்}, பெரும் வலிமைகொண்டவனாகவும், பெரும் கரநளினம் கொண்டவனாகவும் இருக்கிறான். அவன் {கர்ணன்}, போரில் பாண்டுவின் மூத்த மகனை {யுதிஷ்டிரரைப்} பீடிக்கத் தகுந்தவனாக, அதிலும் குறிப்பாக, வலிமைமிக்கவர்களும், துணிச்சல்மிக்கவர்களுமான திருதராஷ்டிரர் மகன்களுடன் சேர்ந்திருக்கும்போது அதற்கு முற்றிலும் தகுந்தவனாகவே அவன் இருக்கிறான்.(14,15)

கடும் நோன்புகளைக் கொண்ட அந்தப் பிருதையின் மகன் {திருஷ்டத்யும்னன்}, அவ்வீரர்கள் அனைவருடன் போரிட்டுக் கொண்டிருந்த போது, பெரும் தேர் வீரர்களான பிறர் அவரைத் தாக்கி, அவரது வீழ்ச்சியில் பங்களித்தனர்.(16) ஓ! பாரதர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, தன் உண்ணா நோன்புகளின் விளைவால் மன்னர் {யுதிஷ்டிரர்} மிகவும் மெலிந்திருக்கிறார். அவர் பிரம்ம சக்தியைக் கொண்டிருக்கிறார், ஆனால், அந்தப் பலமிக்கவர் அதிக அளவு க்ஷத்திரிய வலிமையைக் கொண்டவராக இல்லை[2].(17) எனவே, கர்ணனால் தாக்கப்பட்டவரும், எதிரிகளை எரிப்பவருமான அந்தப் பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரர்}, பேராபத்தான நிலையில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.(18) ஓ! பார்த்தா, மன்னர் யுதிஷ்டிரர் வீழ்ந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். உண்மையில், எதிரிகளைத் தண்டிப்பவரும், கோபம் நிறைந்தவருமான பீமசேனர், வெற்றியடையும் விருப்பத்தால் அடிக்கடி கூச்சலிட்டு, சிங்க முழக்கங்களைச் செய்து, தங்கள் சங்குகளை முழக்கும் தார்தராஷ்டிரர்களைப் பொறுமையாகத் தாங்கிக் கொள்வதால்,(19,20) ஓ! மனிதர்களில் காளையே, பாண்டுவின் மகனான யுதிஷ்டிரர் இறந்துவிட்டார் என்றே நான் நினைக்கிறேன்[3]. அதோ தார்தராஷ்டிரர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் கர்ணன் முன்னேறத் தூண்டுகிறான்.(21)

[2] வேறொரு பதிப்பில், “பரதஸ்ரேஷ்டரும், பிரபுவுமான தர்மராஜா உபவாசத்தினால் மிகவும் இளைத்திருக்கிறார், பிராம்மணருக்குரிய பொறுமையில் நிலைபெற்றிருக்கிறார், க்ஷத்திரியருக்குரிய கொடுமையில் நிலைபெற்றிருக்கவில்லை என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “மன்னர் தன் உண்ணா நோன்புகளின் காரணமாக மிகவும் மெலிந்திருக்கிறார். அவன் பிராமணனுடைய பலத்திலேயே நிலைகொண்டிருக்கிறார், ஆனால் அவர் க்ஷத்திரிய வகைக்கான பெரும் அளவு பலத்தைக் கொண்டிருக்கவில்லை” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் பிபேக்திப்ராயில் உள்ளதைப் போலவே இருக்கிறது.

[3] வேறொருபதிப்பில், “பிழைக்கமாட்டாரென்று நான் நினைக்கிறேன்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், “ஓ பார்த்தா, யுதிஷ்டிரரோடு இருக்கும் பீமசேனர், பொறுமையின்றி முழங்கிக் கொண்டிருந்தாலும், பெரும் மன்னரான அவர் {யுதிஷ்டிரர்} உயிரோடு இருப்பார் என்று நான் நினைக்கவில்லை” என்றிருக்கிறது.

வலிமைமிக்க (தார்தராஷ்டிரத்) தேர்வீரர்கள், ஸ்தூணாகர்ணம், இந்திரஜாலம், பாசுபதம் மற்றும் பிற ஆயுதக் கூட்டங்களுடன் பிருதையின் அரச மகனைச் {குந்தியின் மகனான யுதிஷ்டிரனைச்} சூழ்ந்திருக்கிறார்கள் [4].(22) வேகமே தேவையான அந்த உயர்ந்த வேளையில் பாஞ்சாலர்களும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான பாண்டவர்களும், அடியற்ற கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் மனிதனை காக்க விரையும் பலசாலிகளைப் போல மன்னரை {யுதிஷ்டிரரை} நோக்கி விரைந்து செல்வதால், அவர் ஆழமாகப் பீடிக்கப்பட்டு, மிகப் பலவீனமான நிலையிலேயே இருக்கக்கூடும்.(23,24) மன்னரின் கொடிமரமும் தென்படவில்லை. ஒருவேளை கர்ணன் தன் கணைகளால் தாக்கி அதை வீழ்த்தியிருக்கக்கூடும். ஓ! பார்த்தா, இரட்டையர்கள் {நகுல சகாதேவன், சாத்யகி, சிகண்டி,(25) திருஷ்டத்யும்னன், பீமன், சதானீகன் ஆகியோரும், பாஞ்சாலர்களும் மற்றும் சேதிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஓ! பாரதா,(26) தாமரைக்கூட்டங்களை அழிக்கும் யானையொன்றைப் போலக் கர்ணன் தன் கணைகளால் பாண்டவப் படையை அதோ அழித்துக் கொண்டிருக்கிறான்.(27) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, உன் படையின் தேர்வீரர்கள் அதோ தப்பி ஓடுகின்றனர். பார், ஓ! பார்த்தா, அந்தப் பெரும் போர்வீரர்கள் எவ்வாறு பின்வாங்குகிறார்கள் என்பதைப் பார்.(28) ஓ! பாரதா, போரில் கர்ணனால் தாக்கப்படும் அந்த யானைகள், வலியால் பிளிறிக் கொண்டே அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடுகின்றன.(30)

[4] பாசுபத ஆயுதத்தைப் பெற அர்ஜுனன் மேற்கொண்ட கடும்பயணத்தை நாம் ஏற்கனவே படித்திருக்கிறோம். பாசுபதத்தைப் பலர் வைத்திருந்தனர் என்பது இங்கே நெருடலாகத் தெரிகிறது. நான் ஒப்புநோக்கும் மூன்று பதிப்புகளிலும் இவ்வாயுதங்களைக் கௌரவர்கள் கொண்டிருந்ததாகவே இந்தக் குறிப்பிட்ட இடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

சூதன் மகனின் {கர்ணனின்} தேரில் இருப்பதும், யானையின் கயிற்றைப் பொறியாகத் தாங்கியதுமான அந்த முதன்மையான கொடிமரம், களமெங்கும் அசைந்து தென்படுவதைப் பார்.(31) அதோ, அந்த ராதையின் மகன் {கர்ணன்}, பீமசேனரை எதிர்த்து இப்போது விரைகையில், நூற்றுக்கணக்கான கணைகளை இறைத்து, உன் படையைக் கொன்றுகொண்டே செல்கிறான்.(32) அச்சந்தரும் போரில் சக்ரனால் {இந்திரனால்} முறியடிக்கப்படும் தைத்தியர்களைப் போலவே அந்த வலிமைமிக்கப் பாஞ்சாலத் தேர்வீரர்கள் அங்கே (கர்ணனால்) முறியடிக்கப்படுகின்றனர்.(33) பாஞ்சாலர்கள், பாண்டுக்கள், சிருஞ்சயர்கள் ஆகியோரை வென்ற கர்ணன், அதோ அனைத்துப் பக்கங்களிலும் தன் கண்களைச் செலுத்தி உன்னையே தேடுகிறான் என நான் நினைக்கிறேன்.(34) ஓ! பார்த்தா, கர்ணன் தன் முதன்மையான வில்லை அழகாக வளைக்கும்போது, தன் எதிரிகளை வென்று தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் சக்ரனை {இந்திரனைப்} போல மிக அழகாகத் தெரிகிறான் பார்.(35)

கௌரவர்கள், கர்ணனின் ஆற்றலைக் கண்டு, அனைத்துப் பக்கங்களிலும் பாண்டுக்களையும், சிருஞ்சயர்களையும் அச்சங்கொள்ளச் செய்யும் வகையில் அதோ முழங்கிக் கொண்டிருக்கின்றனர்.(36) அந்தப் பயங்கரப் போரில், ஓ! கௌரவங்களை அளிப்பவனே, கர்ணனே தன் முழு ஆன்மாவோடு பாண்டுக்களை அச்சுறுத்தும் வகையில், அனைத்துத் துருப்புகளிடமும்,(37) “கௌரவர்களே முன்னேறிச் செல்லுங்கள், நீங்கள் அருளப்பட்டிருப்பீராக. இந்தப் போரில் ஒரு சிருஞ்சயனும் உயிரோடு தப்பாத வகையில் வேகமாக விரைவீராக.(38) நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதைச் செய்வீராக. எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் உங்களைப் பின்தொடர்ந்து வருவோம்” என்று அதோ சொல்கிறான். இந்த வார்த்தைகளைச் சொன்ன அவன் {கர்ணன்}, தன் கணைகளை இறைத்தபடியே (தன் துருப்புகளுக்குப்) பின்னால் முன்னேறிச் செல்கிறான்.(39) ஓ! பார்த்தா, இந்தப் போரில் வெண்குடையால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் கர்ணன், சந்திரனால் அலங்கரிக்கப்பட்ட உதயமலைகளைப் போலத் தெரிவதைப் பார்.(40) நூறு விலாக்களை {கம்பிகளைக்} கொண்டதும், முழு நிலவுக்கு ஒப்பானதும், இந்தப் போரில் அவனது தலைக்கு மேலே பிடிக்கப்பட்டதுமான அவனது அழகிய குடையுன் கூடிய கர்ணன், ஓ! இளவரசே {அர்ஜுனா}, தன் பார்வையை உன் மேல் செலுத்துகிறான். இந்தப் போரில் அவன் பெரும் வேகத்துடன் இங்கே வருவான் என்பதில் ஐயமில்லை.(41,42)

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, அச்சத்தை ஏற்படுத்தும் இந்தப் போரில் அவன் {கர்ணன்}, தன் உறுதிமிக்க வில்லை அசைப்பதையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தன் கணைகளை ஏவுவதையும் பார்.(43) ஓ! பார்த்தா, அந்த ராதையின் மகன் {கர்ணன்}, குரங்கைக் கொண்டிருக்கும் உன் கொடியைக் கண்டு, ஓ! எதிரிகளை எரிப்பவனே, உன்னோடு மோத விரும்பி, இந்தத் திசையை நோக்கி அதோ திரும்புகிறான். உண்மையில் அவன் {கர்ணன்}, விளக்கின் வாய்க்குள் புகும் பூச்சி ஒன்றைப் போலவே தன் அழிவுக்காகவே {இங்கே} வந்து கொண்டிருக்கிறான்.(44) கோபம் நிறைந்தவனும், துணிச்சல்மிக்கவனுமான அவன், திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} நன்மையிலேயே எப்போதும் ஈடுபடுகிறான். தீய புத்தியைக் கொண்ட அவனால் {கர்ணனால்}, எப்போதும் உனக்கு இணையானவனாக ஆக முடியாது.(45)

கர்ணன் தனியனாகவும், ஆதரவற்றவனாகவும் இருப்பதைக் கண்ட திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, ஓ! பாரதா, அவனைக் காப்பதற்காகத் தன் பெரும் படையின் துணையுடனும், பெரும் உறுதியுடனும் அவனை நோக்கித் திரும்புகிறான்.(46) அந்தத் தீய ஆன்மா கொண்டவனும், அவனது கூட்டாளிகள் அனைவரும், புகழ், அரசாங்கம் மற்றும் இன்பத்தை வெல்லும் விருப்பத்துடன், சுறுசுறுப்பையும் வெளிப்படுத்தும் உன்னால் கொல்லப்பட வேண்டும்.(47) நீங்கள் இருவரும் பெரும் பலத்தைக் கொண்டவர்கள். நீங்கள் இருவரும் பெரும் புகழையும் கொண்டவர்கள். ஓ! பார்த்தா, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான பெரும்போரில் தேவனைப் போலவும், தானவனைப் போலவும் ஒருவருடனொருவர் போரில் {நீங்கள் இருவரும்} மோதும்போது, உன் ஆற்றலைக் கௌரவர்கள் அனைவரும் காண வேண்டும்.(48) பெருஞ்சினத்தால் நிறைந்திருக்கும் உன்னையும், சீற்றத்துடன் இருக்கும் கர்ணனையும் கண்டு, ஓ! பாரதக் குலத்தின் காளையே, கோபத்திலிருக்கும் துரியோதனனால் எதையும் செய்ய இயலாது.(49) தூய்மையான ஆன்மாகவாக உன்னைக் கருதியும், ஓ! பாரதக் குலத்தின் காளையே, நல்லோனான யுதிஷ்டிரரிடம் ராதையின் மகன் {கர்ணன்} பெரும் பகைமையைப் பாராட்டுவதையும் நினைவுகூர்ந்தும்,(50) ஓ! குந்தியின் மகனே, எது இப்போது அடையப்பட வேண்டுமோ அதை அடைவாயாக. போரில் உன் இதயத்தை நேர்மையாக நிறுத்தி, அந்தத் தேர்வீரர்களின் தலைவனை {கர்ணனை} எதிர்த்துச் செல்வாயாக.(51)

ஓ! தேர்வீரர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, ஓ! குந்தியின் மகனே, ஓ! வீரா, பெரும் வலிமையும், கடும் சக்தியும் கொண்ட ஐநூறு முதன்மையான தேர்வீரர்களும்,(52) ஐயாயிரம் யானைகளும், அதைவிட இருமடங்கு குதிரைகளும், எண்ணற்ற காலாட்படை வீரர்களும் ஒன்று சேர்ந்து, ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொண்டு, உன்னை எதிர்த்து அதோ வருகின்றனர். உன் விருப்பப்படியே நீ, பெரும் வில்லாளியான சூதன் மகனிடம் {கர்ணனிடம்} உன்னை வெளிப்படுத்துவாயாக. ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவனை {கர்ணனை} நோக்கிப் பெரும் வேகத்துன் செல்வாயாக.(53,54) பெருங்கோபத்தால் நிறைந்த கர்ணன், அதோ பாஞ்சாலர்களை எதிர்த்து விரைகிறான். அவனது கொடிமரம் திருஷ்டத்யும்னனின் தேரை நோக்கிச் செல்வதை நான் காண்கிறேன். அவன் பாஞ்சாலர்களை முற்றாக அழிப்பான் என்றே நான் நினைக்கிறேன்.(55) நான் உனக்குச் சில நற்செய்திகளையும் சொல்கிறேன், ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஓ! பார்த்தா, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்[5].(56)

[5] வேறொரு பதிப்பில், “பாரதர்களுள் உத்தமனே, பார்த்தா, உனக்குப் பிரியமான இதைச் சொல்லுகிறேன். தர்மபுத்திரரும், அரசருமான அந்த யுதிஷ்டிரர் க்ஷேமமுள்ளவராகவும், ஒளியுள்ளவராகவுமிருக்கிறார்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் வேறொரு பதிப்பில் உள்ளதைப் போலவே இருக்கிறது.

திரும்பி வரும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமர், ஓ! பாரதரே, சிருஞ்சயர்கள் மற்றும் சாத்யகியால் ஆதரிக்கப்பட்டுப் படையின் தலைமையில் நிலைகொள்கிறார்.(57) ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, பீமசேனர் மற்றும் உயர் ஆன்ம பாஞ்சாலர்களின் கூரிய கணைகளால் அதோ கௌரவர்கள் கொல்லப்படுகின்றனர்.(58) குருதியில் குளித்திருக்கும் பாரதப் படையானது, ஓ! பாரத் குலத்தின் தலைவா, பயிர்களை இழந்திருக்கும் பூமியின் தன்மையை அடைந்து மிகவும் உற்சாகமற்றிருக்கிறது.(60) ஓ! குந்தியின் மகனே, போராளிகளில் முதன்மையானவரான பீமசேனர், கடும் நஞ்சுமிக்கப் பாம்பொன்றைப் போலச் சினத்தால் நிறைந்து (கௌரவப்) படையை முறியடித்துக் கொண்டிருக்கிறார்.(61) விண்மீன்கள், நிலவுகள் மற்றும் சூரியன்களால் அலங்கரிக்கப்பட்ட மஞ்சள், சிவப்பு, கருப்பு, மற்றும் வெள்ளைக் கொடிகளும், குடைகள் பலவும், ஓ! அர்ஜுனா {அதோ} சிதறிக் கிடக்கின்றன.(62) தங்கம், அல்லது வெள்ளி, அல்லது பித்தளை மற்றும் பிற உலோகங்களால் செய்யப்பட்ட கொடிமரங்களும், யானைகள், மற்றும் குதிரைகளும், களமெங்கும் {அதோ} சிதறிக் கிடக்கின்றன.(63)

பின்வாங்காத பாஞ்சாலர்களின் பல்வேறு வகைக் கணைகளால் உயிரை இழுந்த அந்தத் தேர்வீரர்கள் அதோ தங்கள் தேர்களில் இருந்து விழுகின்றனர்.(64) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, பெரும் வேகத்தோடு கூடிய பாஞ்சாலர்கள், சாரதிகளற்ற தார்தராஷ்டிர யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களை எதிர்த்து அதோ விரைகின்றனர்.(65) தங்கள் உயிர்களைத் துச்சமாக மதிப்பவர்களும், போரில் வீழ்த்தக் கடினமானவர்களுமான அந்தப் போர்வீரர்கள், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, ஓ! மனிதர்களில் புலியே, பீமசேனரின் வலிமையின் துணைகொண்டு பகைவரின் படையை நொறுக்குகின்றனர்.(66) பாஞ்சாலர்கள், உரத்த முழக்கங்களைச் செய்து, தங்கள் எதிரிகளை நோக்கி விரைகையில், தங்கள் சங்குகளை முழக்கிக் கொண்டு, போரில் தங்கள் கணைகளால் அதோ அவர்களை நொறுக்குகின்றர்.(67) அவர்களது சக்தியையும், பலத்தையும் பார். யானைகளைக் கொல்லும் கோபக்கார சிங்கங்களைப் போல, சுத்தமான வீரத்தால் பாஞ்சாலர்கள் தார்தராஷ்டிரர்களைக் {அதோ} கொல்கிறார்கள்.(68) ஆயுதங்களற்ற அவர்கள், ஆயுதம்படைத்த தங்கள் எதிரிகளிடம் இருந்து அவ்வாயுதங்களைப் பறித்து, இவ்வாறு பறிக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு நன்கு தாக்கக்கூடிய தங்கள் எதிரிகளைக் கொன்று உரத்த முழங்கங்களைச் செய்கின்றனர்.(69)

அவர்களது எதிரிகள், சிரங்கள் மற்றும் கரங்கள் தாக்கப்பட்டுக் களத்தில் வீழ்த்தப்படுகின்றனர். பாஞ்சாலத் தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகள் அனைத்தும் உயர்ந்த பாராட்டுக்குரியவையாகும்.(70) மானஸத் தடாகத்தை {மானசரோவர் ஏரியை} விட்டுப் பெரும் வேகத்தில் புறப்பட்டு, கங்கைக்கு விரையும் அன்னங்களைப் போல, கௌரவர்களை எதிர்த்துப் பாஞ்சாலர்கள் {அதோ} விரைகின்றனர், அந்தப் பரந்த தார்தராஷ்டிரப் படையின் ஒவ்வொரு பகுதியும் {அதோ} அவர்களால் தாக்கப்படுகின்றன.(71) காளைகளைத் தடுக்கும் காளைகளைப் போல, வீரக் கிருபர், கர்ணன் மற்றும் பிற தலைவர்கள், தங்கள் வீரமனைத்தையும் வெளிப்படுத்திப் பாஞ்சாலர்களைத் தடுக்கின்றனர்.(72) திருஷ்டத்யும்னனால் தலைமை தாங்கப்பட்ட பாஞ்சால வீரர்கள், பீமரின் ஆயுதங்கள் எனும் பெருங்கடலில் ஏற்கனவே மூழ்கிக் கொண்டிருப்பவர்களும், தங்கள் எதிரிகளுமான தார்தராஷ்டிரப் படையின் பெருந்தேர் வீரர்களை ஆயிரக்கணக்கில் கொல்கின்றனர்.(73) தங்கள் எதிரிகளால் விஞ்சப்படும் பாஞ்சாலர்களைக் காண்பவரும், அச்சமற்றவருமான அந்தக் காற்று தேவனின் மகன் {பீமர்}, தன் கணைகளை ஏவி, பகைவர் படையைத் தாக்கி, உரத்த முழக்கங்களைச் செய்கிறார்.(74) பரந்த தார்தராஷ்டிரப் படையின் பெரும் பகுதியானது மிகவும் அச்சத்திலிருக்கிறது.(75)

துணிக்கோல் கணைகளைக் கொண்டு பீமரால் துளைக்கப்படும் அந்த யானைகள், இந்திரனின் வஜ்ரத்தால் பிளக்கப்படும் மலை முகடுகளைப் போலக் கீழே விழுவதைப் பார்.(76) பீமசேனரின் நேரான கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட அந்தப் பெரும் யானைகள், தங்கள் படையணிகளையே நசுக்கியபடியே தப்பி ஓடுகின்றன.(77) ஓ! அர்ஜுனா, போரில் வெற்றியடையும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்டுப் பயங்கரமாக முழங்கும் பீமசேனரின் தாங்கிக் கொள்ள முடியாத சிங்க முழக்கங்களையும் நீ அறிந்துகொள்ளவில்லையா {கேட்கவில்லையா}?(78) நிஷாதர்களின் இளவரசன், சினத்தால் நிறைந்து, தண்டத்தைத் தரித்திருக்கும் யமனைப் போலவே பாண்டுவின் மகனை {பீமரைக்} கொல்ல விரும்பி தன் வேல்களை எடுத்துக் கொண்டு, தன் முதன்மையான யானையின் மீதேறி அவரை எதிர்த்து அதோ வருகிறான். (79) நெருப்பு, அல்லது சூரியனின் காந்தியுடன் கூடிய பத்து கூரிய துணிக்கோல் கணைகளைக் கொண்டு பீமரால் தாக்கப்பட்டு, முழங்கிக் கொண்டிருக்கும் அந்த {நிஷாத} இளவரசனின் பிடியில் இருந்த வேல்களுடன் கூடிய இரு கரங்களும் வெட்டப்படுகின்றன.(80)

அந்த இளவரசனைக் கொன்ற பீமர், நீல மேகங்களைப் போலத் தெரிபவையும், சாரதிகளால் திறனுடன் வழிநடத்தப்பட்ட பிற யானைகளையும் எதிர்த்துச் செல்கிறார்.(81) அந்தச் சாரதிகள், அபரிமிதமான ஈட்டிகளாலும், வேல்களாலும் விருகோதரை {பீமரைத்} தாக்குவதைப் பார். ஒரே நேரத்தில் தன் கணைகளால் ஏழு யானைகளைக் கொல்லும் உனது அண்ணனால் {பீமரால்} அவற்றின் {அந்த யானைகளின்} வெற்றிக் கொடிகளும் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. பிற யானைகளைப் பொறுத்தவரை, அவை ஒவ்வொன்றும் பத்துப் பத்துக் கணைகளைக் கொண்டு அவரால் கொல்லப்படுகின்றன.(82.83) புரந்தரனுக்கு {இந்திரனுக்கு} இணையான பீமர் இப்போது போரில் ஈடுபடுவதால், ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, தார்தராஷ்டிரர்களின் கூச்சல்கள் இதற்கு மேல் கேட்கப்படவில்லை.(84) துரியோதனனின் படைவீரர்களில், முழுமையாக மூன்று அக்ஷௌஹிணி வீரர்கள் (பீமரின் முன்னிலையில்) ஒன்று சேர்ந்து நிற்கின்றனர். கோபத்திலிருப்பவரும், மனிதர்களில் சிங்கமான அந்தப் பீமரால், அவர்கள் அனைவரும் தடுக்கப்படுகின்றனர்” என்றான் {கிருஷ்ணன்}.(85)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அடைவதற்கரிதானதும், பீமசேனனால் அடையப்பட்டதுமான அந்த அருஞ்செயலைக் கண்ட அர்ஜுனன், எஞ்சியிருக்கும் தன் எதிரிகளைத் தன் கணைகளால் அழித்தான்.(86) (அர்ஜுனனால்) முறியடிக்கப்பட்டு, போரில் கொல்லப்பட்ட அந்த வலிமைமிக்கச் சம்சப்தகர்கள், ஓ! தலைவா, அச்சத்தால் பீடிக்கப்பட்டு அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(87) (அப்படி விழுந்த) அவர்களில் பலர், சக்ரனின் {இந்திரனின்} விருந்தினர்களாகி பேரின்பத்தை அடைந்தனர். பார்த்தனைப் {அர்ஜுனனைப்} பொறுத்தவரை, மனிதர்களில் புலியான அவன், தன் நேரான கணைகளைக் கொண்டு, தார்தாஷ்டிரரின் நால்வகைப் படைகளையும் கொல்வதைத் தொடர்ந்தான்” {என்றான் சஞ்சயன்}.(88)
---------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி -60ல் உள்ள சுலோகங்கள் : 88


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்