Thursday, June 22, 2017

தனியொருவனாகப் போரிட வேண்டாம்! - சல்லிய பர்வம் பகுதி – 08

Don't Fight alone with the Pandavas! | Shalya-Parva-Section-08 | Mahabharata In Tamil

(சல்லிய வத பர்வம் - 08)


பதிவின் சுருக்கம் : எவரும் தனியொருவராகப் பாண்டவர்களுடன் நேருக்கு நேராகப் போரிட வேண்டாம் என்று தீர்மானித்த கௌரவர்கள்; இரு தரப்பிலும் அமைக்கப்பட்ட வியூகங்கள்; எஞ்சியிருந்த கௌரவ மற்றும் பாண்டவப் படைகளின் எண்ணிக்கை; அப்போதும் கௌரவர்களே எண்ணிக்கையில் அதிகமாக இருந்தது; பதினெட்டாம் நாள் போர் தொடங்கியது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அந்த இரவு கழிந்ததும், துரியோதனன், உமது படைவீரர்கள் அனைவரிடமும், "வலிமைமிக்கத் தேர்வீரர்களே, ஆயுதம் தரிப்பீராக" என்றான்.(1) மன்னனின் ஆணையைக் கேட்ட அந்தப் போர்வீரர்கள் தங்கள் கவசங்களைப் பூட்டத் தொடங்கினர். சிலர் தங்கள் தேர்களில் வேகமாகத் தங்கள் குதிரைகளைப் பூட்டினர், வேறு சிலர் அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருந்தனர்.(2) யானைகளை ஆயத்தம் செய்வது தொடங்கப்பட்டது. காலாட்படைவீரர்கள் ஆயுதங்களைத் தரிக்கத் தொடங்கினர். ஆயிரக்கணக்கான வேறு சிலர், தேர்த்தட்டுகளில் தரைவிரிப்புகளைப் பரப்பத் தொடங்கினர்.(3) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, படைவீரர்களின் உற்சாகத்தை அதிகரிக்க இசைக்கருவிகளின் ஒலி அங்கே எழுந்தது.(4) அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சரியான நிலைகளில் நிறுத்தப்பட்ட துருப்பினர் அனைவரும், கவசமணிந்து கொண்டு, மரணத்தையே தங்கள் இலக்காகத் தீர்மானித்து நிற்பதாகத் தெரிந்தது.(5)


மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைத்} தங்கள் தலைவனாக்கிக் கொண்ட கௌரவர்களின் பெரும் தேர்வீரர்கள், தங்கள் துருப்புகளைப் பிரித்துப் படைப்பிரிவுகளாக அணிவகுத்து நின்றனர்.(6) பிறகு, கிருபர், கிருதவர்மன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சல்லியன், சுபலனின் மகன் {சகுனி} ஆகியோரோடு கூடிய உமது போர்வீரர்கள் அனைவரும், இன்னும் உயிரோடு எஞ்சியிருக்கும் பிற மன்னர்களும், உமது மகனை {துரியோதனனைச்} சந்தித்து, அவர்களில் எவரும் தனி நபராகவோ, துணையின்றியோ பாண்டவர்களுடன் போரிடுவதில்லை என்ற தீர்மானத்தை எட்டினர்.(7,8) அவர்கள், "பாண்டவர்களுடன் எவன் எந்த ஆதரவுமின்றித் தனியாகப் போரிடுவானோ, எவன் போரிட்டுக் கொண்டிருக்கும் தன் தோழனைக் கைவிடுவானோ, அவன் ஐந்து முக்கியப் பாவங்களையும் {பஞ்சமாபாதகங்களால் விளையும் பாவங்களையும்}, சிறு பாவங்கள் {உபபாதகங்களால் விளையும் பாவங்கள்} அனைத்தையும் அடைவான்" என்றனர். மேலும் அவர்கள், "நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து {ஒருவரையொருவர் காத்துக் கொண்டு} எதிரியுடன் போரிடுவோமாக" என்றனர்.(9) ஒருவருக்கொருவர் இவ்வாறு ஒரு தீர்மானத்தை எட்டிய அந்தப் பெரும் தேர்வீரர்கள், மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைத்} தங்கள் தலைமையில் கொண்டு, தங்கள் எதிரிகளை எதிர்த்து விரைந்து சென்றனர்.(10)

அதேபோல, பாண்டவர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும்போரில் தங்கள் துருப்புகளை அணிவகுத்துக் கொண்டு, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கௌரவர்களோடு போரிடுவதற்காக அவர்களை எதிர்த்துச் சென்றனர்.(11) ஓ! பாரதர்களின் தலைவரே, கலங்கும் பெருங்கடலுக்கு ஒப்பான ஒலியுடன் கூடியதும், தேர்கள் மற்றும் யானைகளின் விளைவால் அற்புதமாகத் தெரிந்ததுமான அந்தப் படையானது அலைகள் பெருகிய ஆழமான பெருங்கடலின் தன்மையை விரைவில் அடைந்தது" {என்றான் சஞ்சயன்}.(12)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "துரோணர், பீஷ்மர் மற்றும் ராதையின் மகன் {கர்ணன்} ஆகியோரின் வீழ்ச்சியை நான் கேட்டிருக்கிறேன். இப்போது சல்லியன் மற்றும் என் மகனின் {துரியோதனனின்} வீழ்ச்சியை எனக்குச் சொல்வாயாக.(13) ஓ! சஞ்சயா, உண்மையில் சல்லியன் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் எவ்வாறு கொல்லப்பட்டான்? மேலும் எனது மகன் துரியோதனன், பெரும் வலிமை கொண்ட பீமசேனனால் எவ்வாறு கொல்லப்பட்டான்?" என்று கேட்டான்.(17)

சஞ்சயன் {திடுதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் போரை (உமக்கு) விவரிக்கும்போதே, மனித உடல்களின் அழிவையும், யானைகள் மற்றும் குதிரைகள் இழப்பையும் {மனவுறுதியுடன்} பொறுமையாகக் கேட்பீராக.(15) ஓ! மன்னா, துரோணர், பீஷ்மர் மற்றும் சூதன் மகன் {கர்ணன்} ஆகியோர் வீழ்த்தப்பட்ட பிறகு, ஓ! ஐயா, போரில் பார்த்தர்கள் அனைவரையும் சல்லியன் கொன்றுவிடுவான் என்ற நம்பிக்கை உமது மகன்களின் இதயத்தில் பலமடைந்தது.(16) அந்நம்பிக்கையைத் தன் இதயத்தில் வளர்த்துக் கொண்டு, அதன் மூலம் ஆறுதலை அடைந்த உமது மகன் துரியோதனன், ஓ! பாரதரே, போரில் வலிமைமிக்கத் தேர்வீரனான மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} நம்பி, தன்னைப் பாதுகாவலனுள்ளவனாகக் கருதிக் கொண்டான்.(17) கர்ணனின் வீழ்ச்சியில் பார்த்தர்கள் சிங்க முழக்கங்கள் செய்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தார்தராஷ்டிரர்களின் இதயங்களைப் பேரச்சம் பீடித்திருந்தது.(18) முறையாக அவனுக்கு உறுதி கூறிய, மத்ரர்களின் வீர மன்னன் {சல்லியன்}, ஓ! ஏகாதிபதி, அனைத்து வகையிலும் மங்கலகரமான ஏற்பாடுகளுடன் கூடிய ஒரு பெரும் வியூகத்தை அமைத்து,(19) போரில் பார்த்தர்களை எதிர்த்துச் சென்றான். மத்ரர்களின் அந்த வீர மன்னன் {சல்லியன்}, மிகப் பலமானதும், பெரும் வேகத்தில் கணைகளை ஏவவல்லதுமான தன் அழகிய வில்லை அசைத்துக் கொண்டே சென்றான்.(20)

அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சல்லியன்}, சிந்துவில் பிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட முதன்மையான வாகனத்தில் ஏறிச் சென்றான். அவனது தேரை ஓட்டிய சாரதி, அவ்வாகனத்தினை பிரகாசமாகத் தெரியும்படி செய்தான்.(21) எதிரிகளை நொறுக்கும் துணிச்சல்மிக்கவனான அந்த வீரன் (சல்லியன்), ஓ! ஏகாதிபதி, உமது மகன்களின் அச்சங்களை விலக்கியபடி, அத்தேரால் பாதுகாக்கப்பட்டு நின்றான்.(22) அப்படி (போருக்கு) முன்னேறிச் செல்கையில், கவசம் பூண்டிருந்த அந்த மத்ரர்களின் மன்னன், வியூகத்தின் தலைமையில் நின்று கொண்டு, துணிச்சல் மிக்க மத்ரகர்களின் மற்றும் வெல்லப்பட முடியாத கர்ணனின் மகன்கள் ஆகியோரின் துணையுடன் சென்றான் (23) இடப்பக்கத்தில், கிருதவர்மன், திரிகர்த்தர்களால் சூழப்பட்டு நின்றான். வலப்பக்கத்தில், கௌதமர் (கிருபர்), சகர்கள் மற்றும் யவனர்களுடன் கூடி நின்றார்.(24) பின்புறத்தில், அஸ்வத்தாமன், காம்போஜர்களால் சூழப்பட்டு நின்றான். நடுவில், துரியோதனன், முதன்மையான குரு போர்வீரர்களால் சூழப்பட்டு நின்றான்.(25) சுபலனின் மகனான சகுனியும், வலிமைமிக்கத் தேர்வீரனான உலூகனும், பெரும் குதிரைப்படை மற்றும் பிற துருப்புகளுடன் முன்னேறிச் சென்றனர்.(26)

எதிரிகளைத் தண்டிப்பவர்களான பாண்டவர்களில் வலிமைமிக்க வில்லாளிகள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்களை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, உமது துருப்புகளை எதிர்த்து விரைந்தனர்.(27) திருஷ்டத்யும்னன், சிகண்டி, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர், சல்லியனின் படையை எதிர்த்து பெரும் வேகத்தோடு சென்றனர்.(28) அப்போது தன் துருப்புகளின் துணையுடன் கூடிய மன்னன் யுதிஷ்டிரன், ஓ! பாரதக் குலத்தின் காளையே, சல்லியனைக் கொல்லும் விருப்பத்தால், அவனை மட்டுமே எதிர்த்துச் சென்றான்.(29) எதிரிகளின் பெருங்கூட்டங்களைக் கொல்பவனான அர்ஜுனன், பெரும் வில்லாளியான கிருதவர்மனையும், சம்சப்தகர்களையும் எதிர்த்துப் பெரும் வேகத்தோடு விரைந்தான்.(30) பீமசேனன் மற்றும் சோமகர்களில் பெரும் தேர்வீரர்கள் ஆகியோர், ஓ! ஏகாதிபதி, போரில் தங்கள் எதிரிகளைக் கொல்ல விரும்பி கிருபரை எதிர்த்து விரைந்தானர்.(31) தங்கள் துருப்புகளின் துணையுடன் கூடியவர்களான மாத்ரியின் மகன்கள் {நகுலன்-சகாதேவன்} இருவரும், சகுனியையும், அவர்களது படைகளின் முன்னணியில் இருந்த பெரும் தேர்வீரனான உலூகனையும் எதிர்த்து விரைந்தனர்.(32) அதேபோலவே உமது படையைச் சேர்ந்த ஆயிரமாயிரம் போர்வீரர்களும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, சினத்தால் நிறைந்து, அந்தப் போரில் பாண்டவர்களை எதிர்த்துச் சென்றனர்" {என்றான் சஞ்சயன்}.(33)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "வலிமைமிக்க வில்லாளிகளான பீஷ்மர், துரோணர் மற்றும் பெரும் தேர்வீரனான கர்ணன் ஆகியோரின் வீழ்ச்சிக்குப் பிறகு, குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இருதரப்பினரின் எண்ணிக்கையும் குறைந்த பிறகு, உண்மையில், பெரும் ஆற்றலைக் கொண்ட பார்த்தர்கள் போரில் மீண்டும் கோபமடைந்த போது, ஓ! சஞ்சயா, படைகள் ஒவ்வொன்றின் பலமும் என்னவாக இருந்தது?" என்று கேட்டான்.(34,35)

சஞ்சயன்{திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா, அந்தச் சந்தர்ப்பத்தில் நாமும், எதிரியும் போருக்காக எவ்வாறு நின்றோம்? அந்த இரண்டு படைகளின் பலமும் அப்போது என்னவாக இருந்தது என்பதைக் கேட்பீராக.(36) ஓ! பாரதக் குலத்தின் காளையே,

கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு கௌரவ பாண்டவ
படைகளின் எண்ணிக்கை
பதினோராயிரம் {11,000} தேர்கள், பத்தாயிரத்து எழுநூறு {10,700} யானைகள்,(37) இருநூறாயிரம் {2லட்சம்} குதிரைகள், முப்பது லட்சம் {3 Million} காலாட்படை வீரர்கள் ஆகியவையே உமது படையின் {கௌரவப்படையின்} பலமாக இருந்தது.(38)

ஆறாயிரம் {6,000} தேர்கள், ஆறாயிரம் {6,000} யானைகள், பத்தாயிரம் {10,000} குதிரைகள், பத்து லட்சம் {1 Million} காலாட்படை வீரர்கள் ஆகியவை, ஓ! பாரதரே,(39) அந்தப் போரில் எஞ்சிய பாண்டவப் படையாக இருந்தது[1]. ஓ! பாரதக் குலத்தின் காளையே, இவர்களே போரில் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(40)

[1] மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "பாரதர்களுள் சிறந்தவரே! பதினோராயிரம் தேர்களும், பதினோராயிரத்தெழுநூறு யானைகளும் இருந்தன. பாரதரே! அந்த யுத்தத்தில் இரண்டு லக்ஷம் குதிரைகள் நிறைந்திருந்தன. மூன்று கோடி காலாட்களும் இருந்தார்கள். உமது சைனியம் இவ்வளவிருந்தது. பாரதரே! பாண்டவர்களுடைய சேனையில் ஆறாயிரம் தேர்களும், ஆறாயிரம் யானைகளும், பதினாயிரம் குதிரைகளும், இரண்டு கோடி காலாட்படையும் யுத்தத்தில் மிகுந்திருந்தது" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "உமது தரப்பில் பதினோராயிரம் ரதர்களும், பத்தாயிரத்தெழுநூறு யானைகளும், இருநூறாயிரம் குதரைகளும் இருந்தன. ஓ பாரதக் குலத்தின் காளையே, அதில் மூன்று கோடி மனிதர்களும் இருந்தனர். ஓ பாரதக் குலத்தவரே, பாண்டவர்களின் படையில் ஆறாயிரம் ரதர்களும், ஆறாயிரம் யானைகளும், பத்தாயிரம் குதிரைகளும் இருந்தன. ஒரு கோடி காலாட்படையினரும் இருந்தனர்" என்றிருக்கிறது. கர்ணன் இறந்த பிறகும் கூடக் கௌரவர்களே படையளவில் பெரியவர்களாக இருந்திருக்கின்றனர். கௌரவர்ப்படையை ஒப்பிடுகையில் பாண்டவர்கள் தரப்பில் குதிரைப்படையின் அளவு மிகச் சொற்பமாக இருக்கிறது.

இவ்வழியில் தங்கள் படைகளைப் பிரித்துக் கொண்ட நாங்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்டும், வெற்றியடையும் விருப்பத்தாலும், எங்களை மத்ரர்களின் ஆட்சியாளனின் {சல்லியனின்} கட்டுப்பாட்டில் நிறுத்திக் கொண்டு பாண்டவர்களை எதிர்த்துச் சென்றோம்.(41) அதே போல, மனிதர்களில் புலிகளும், வெற்றியில் விருப்பம் கொண்டவர்களுமான அந்தத் துணிச்சல்மிக்கப் பாண்டவர்களும், பெரும்புகழைக் கொண்ட பாஞ்சாலர்களும் {எங்களை எதிர்த்துப்} போரிட வந்தனர்.(42) இவ்வாறே, ஓ! ஏகாதிபதி, ஓ! தலைவா, அந்த மனிதப் புலிகள் அனைவரும் தங்கள் எதிரிகளைக் கொல்லும் விருப்பத்தால், நாளின் வைகறைப் பொழுதில் {விடியற்காலையில்} ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(43) அதன் பிறகு, ஒருவரையொருவர் அடிப்பதிலும், கொல்லுவதிலும் ஈடிபட்டிருந்த உமது துருப்புகளுக்கும், எதிரிகளுக்கும் இடையில் கடுமையானதும், பயங்கரமானதுமான ஒரு போர் தொடங்கியது" {என்றான் சஞ்சயன்}.(44)
-----------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 08ல் உள்ள சுலோகங்கள் : 44

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்