Tuesday, June 20, 2017

கிருஷ்ணனுடன் ஆலோசித்த யுதிஷ்டிரன்! - சல்லிய பர்வம் பகுதி – 07

Yudhishthira consulted Krishna! | Shalya-Parva-Section-07 | Mahabharata In Tamil

(சல்லிய வத பர்வம் - 07)


பதிவின் சுருக்கம் : துரியோதனனுக்கு உறுதிகூறிய சல்லியன்; சல்லியனைப் படைத்தலைமையில் நிறுவிய துரியோதனன்; கர்ணன் கொல்லப்பட்ட துயர் மறைந்து, மகிழ்ச்சியடைந்த கௌரவர்கள் சல்லியனை வாழ்த்தியது; படைத்தலைமையில் சல்லியன் நிறுவப்பட்டதை அறிந்து கிருஷ்ணனுடன் ஆலோசித்த யுதிஷ்டிரன்; சல்லியனைப் புகழ்ந்த கிருஷ்ணன்; யுதிஷ்டிரனைத் தவிர வேறு எவராலும் சல்லியனைக் கொல்ல முடியாது என்று சொன்ன கிருஷ்ணன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "(குரு) மன்னனின் {துரியோதனனின்} வார்த்தைகளைக் கேட்ட அந்த வீர ஏகாதிபதி (சல்லியன்), ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனுக்கு மறுமொழியாக இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(1) "ஓ! வலிய கரங்களைக் கொண்ட துரியோதனா, ஓ! சொல்திறமிக்க மனிதர்களில் முதன்மையானவனே, நான் சொல்வதைக் கேட்பாயாக. தேரில் இருக்கும் இரு கிருஷ்ணர்களையும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களாக நீ கருதுகிறாய். எனினும், அவ்விருவரும் ஒன்றாகச் சேர்ந்தாலும்கூடக் கரங்களின் வலிமையில் எனக்கு இணையாக மாட்டார்கள்.(2) பாண்டவர்களைக் குறித்துச் சொல்ல வேறு என்ன தேவை இருக்கிறது? போரின் முன்னணியில் கோபத்துடன் போரிடும்போது, தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்கள் அடங்கிய மொத்த உலகமும் ஆயுதங்களுடன் எதிர்த்து வந்தாலும், அவர்களுடன் என்னால் போரிட முடியும்.(3) போரில் கூடியிருக்கும் பார்த்தர்களையும், சோமகர்களையும் நான் வெல்வேன். நான் உன் துருப்புகளுக்குத் தலைவனாவேன் என்பதில் ஐயமில்லை.(4) நம் எதிரிகளால் விஞ்சமுடியாத ஒரு வியூகத்தை நான் வகுப்பேன். ஓ! துரியோதனா, இதையே நான் உனக்குச் சொல்வேன். இதில் எந்த ஐயமுமில்லை" என்றான் {சல்லியன்}.(5)


(சல்லியனால்) இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் துரியோதனன், ஓ! பாரதர்களில் சிறந்தவரே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, காலந்தாழ்த்தாமல் மகிழ்ச்சியுடன் தன் துருப்புகளுக்கு மத்தியில் வைத்து, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின்படி மத்ரர்களின் மன்னன் {சல்லியன்} மீது புனித நீரை ஊற்றினான்[1].(6) சல்லியனுக்குத் தலைமைப் பொறுப்புக் கொடுக்கப்பட்ட பிறகு, ஓ! பாரதரே, உமது துருப்புகளுக்கு மத்தியில் உரத்த சிங்க முழக்கங்களும், பல்வேறு இசைக்கருவிகளின் ஒலிகளும் எழுந்தன.(7) கௌரவப் போர்வீரர்களும், மத்ரகர்களுக்கு மத்தியில் வலிமைமிக்கத் தேர்வீரர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து, போர்க்கள ரத்தினமான அரசன் சல்லியனை இவ்வார்த்தைகளில் புகழ்ந்தனர்.(8) அவர்கள், "ஓ! மன்னா {சல்லியா}, வெற்றி உனதாகட்டும். நீ நீடூழி வாழ்வாயாக. கூடியிருக்கும் எதிரிகள் அனைவரையும் கொல்வாயாக. உனது கரங்களின் வலிமையைப் பெற்ற பிறகு, பெரும் பலம் கொண்ட தார்தராஷ்டிரர்கள், ஓர் எதிரியுமற்ற பரந்த உலகை ஆளட்டும்.(9) தேவர்களும், அசுரர்களும் அடங்கிய மூலவுலங்கங்களையும் போரில் நீ வெல்ல வல்லவன் என்பதால், அழியக்கூடியவர்களான சோமகர்கள் மற்றும் சிருஞ்சயர்களைக் குறித்துச் சொல்லும் தேவை என்ன இருக்கிறது?" என்றனர்.(10)

[1] முறைப்படி படையின் தலைமையில் அவனை நிறுவினான். தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதனின் தலை மீது புனித நீரை ஊற்றி தலைவனாக நிறுவுவதே இச்சடங்காகும் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

இவ்வாறு புகழப்பட்ட அந்த மத்ரகர்களின் வலிமைமிக்க மன்னன் {சல்லியன்} பண்படாத ஆன்மாக்களைக் கொண்டோரால் அடைய முடியாத பெருமகிழ்ச்சியை அடைந்தான்.(11) சல்லியன், "ஓ! மன்னா {துரியோதனா}, போரில் பாண்டவர்களையும், பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்வேன், அல்லது அவர்களால் கொல்லப்பட்டுச் சொர்க்கத்திற்குச் செல்வேன்.(12) இன்று (போர்க்களத்தில்) அச்சமற்றுத் திரியப்போகும் என்னை இந்த உலகம் காணட்டும். இன்று, பாண்டுவின் மகன்கள் அனைவரும், வாசுதேவனும், சாத்யகியும், (13) திரௌபதியின் மகன்களும், திருஷ்டத்யும்னனும், சிகண்டியும், பிரபத்ரகர்கள் அனைவரும்(14) என் ஆற்றல், என் வில்லின் பெரும் வலிமை, எனது வேகம், என் ஆயுதங்களின் சக்தி, என் கரங்களின் பலம் ஆகியவற்றைப் போரில் காணப் போகிறார்கள்.(15) இன்று பார்த்தர்களும், சித்தர்கள் மற்றும் சாரணர்கள் அனைவரும், என் கரங்களின் பலத்தையும், நான் கொண்டிருக்கும் ஆயுத செல்வத்தையும் காணட்டும்.(16) இன்று என் ஆற்றலைக் காணும் பாண்டவர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், எதிர்நடவடிக்கை எடுக்க விரும்பி, பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றப் போகிறார்கள்.(17) இன்று நான் பாண்டவர்களின் துருப்புகளை அனைத்துப் பக்கங்களிலும் முறியடிப்பேன். ஓ! தலைவா {துரியோதனா}, துரோணர், பீஷ்மர் மற்றும் சூதன் மகன் {கர்ணன்} ஆகியோரை நான் போரில் விஞ்சுவேன். ஓ! கௌரவா {துரியோதனா}, உனக்கு ஏற்புடையதைச் செய்வதற்காக நான் களத்தில் திரிவேன்" என்றான் {சல்லியன்}."(18)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "சல்லியன் தலைமைப் பொறுப்பில் நிறுவப்பட்ட பிறகு, ஓ! கௌரவங்களை அளிப்பவரே {திருதராஷ்டிரரே}, அதற்கு மேலும் உமது துருப்புகளில் எவரும், கர்ணன் குறித்து எத்துயரும் அடையவில்லை.(19) உண்மையில், துருப்புகள் உற்சாகமும், மகிழ்ச்சியுமடைந்தனர். பார்த்தர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டதாகவும், மத்ரர்களின் ஆட்சியாளனுடைய பலத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதாகவும் அவர்கள் கருதினர்.(20) பெரும் மகிழ்ச்சியை அடைந்த உமது துருப்புகள், ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவ்விரவில் மகிழ்ச்சியாக உறங்கி, பெரும் உற்சாகம் அடைந்தனர்.(21)

உமது படையின் அந்தக் கூச்சல்களைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன், க்ஷத்திரியர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கும்போது, விருஷ்ணி குலத்தோனிடம் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(22) "ஓ! மாதவா {கிருஷ்ணா}, மத்ரர்களின் ஆட்சியாளரும், போர் வீரர்கள் அனைவராலும் உயர்வாக மதிக்கப்படுபவரும், பெரும் வில்லாளியுமான சல்லியரை, அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, தன் படையின் தலைவராக்கியிருக்கிறான்.(23) ஓ! மாதவா, நடந்ததை அறிந்த பிறகு, எது நன்மையோ அதைச் செய்வாயாக. நீயே எங்கள் தலைவனும், பாதுகாவலனுமாவாய். அடுத்து செய்யப்பட வேண்டியதைச் செய்வாயாக" என்றான்{யுதிஷ்டிரன்}.(24)

அப்போது, வாசுதேவன் {கிருஷ்ணன்}, ஓ! ஏகாதிபதி, அம்மன்னிடம் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, ஆர்த்தாயனியை {சல்லியரை} உண்மையாக {உள்ளபடியே} நான் அறிவேன்.(25) ஆற்றலும், பெரும் சக்தியும் கொண்ட அவர், மிகவும் சிறப்புமிக்கவராவார். அவர் போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவரும், பெரும் கரநளினம் கொண்டவரும் ஆவார்(26) நான் அந்த மத்ரர்களின் ஆட்சியாளரை {சல்லியரை} பீஷ்மர், அல்லது துரோணர், அல்லது கர்ணன் ஆகியோருக்கு இணையானவர், அல்லது, ஒருவேளை அவர்களுக்கும் மேம்பட்டவர் என்றே நினைக்கிறேன்.(27) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {யுதிஷ்டிரரே}, போரிடும் சல்லியருக்கு ஒப்பான ஒரு போர்வீரனை நன்கு சிந்தித்த பிறகும் நான் காணவில்லை.(28) போரில் அவர் {சல்லியர்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிகண்டி, அர்ஜுனன், பீமர், சாத்யகி, திருஷ்டத்யும்னன் ஆகியோரைவிட வலிமைமிக்கமிக்கவராவார்.(29) ஓ! ஏகாதிபதி, சிங்கம், அல்லது யானையின் ஆற்றலைக் கொண்டவரான அந்த மத்ரர்களின் மன்னன், அண்ட அழிவின் போது உயிரினங்களுக்கு மத்தியில் கோபத்துடன் திரியும் அந்தகனைப் போலவே போரில் அச்சமில்லாமல் திரியப் போகிறார்.(30)

ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரரே}, புலிக்கு இணையான அற்றலைக் கொண்ட உம்மைத் தவிர, போரில் அவருக்கு இணையான வேறு எவரையும் நான் காணவில்லை.(31) ஓ! குரு குலத்தின் மகனே, போரில் கோபத்தால் தூண்டப்பட்ட மத்ரர்களின் ஆட்சியாளரைக் கொல்ல இந்த மொத்த உலகத்திலோ, சொர்க்கத்திலோ கூட உம்மைத்தவிர வேறொரு மனிதன் இல்லை.(32) நாளுக்கு நாள் போரில் ஈடுபட்டு உமது துருப்புகளை அவர் கலங்கடித்து வருகிறார். இதற்காகவே, சம்பரனைக் கொன்ற மகவத்தை {இந்திரனைப்} போல, போரில் சல்லியரைக் கொல்வீராக.(33) திருதராஷ்டிரர் மகனால் {துரியோதனனால்} மதிப்புடன் நடத்தப்படும் அந்த வீரர்கள் போரில் வெல்லப்பட முடியாதவராவார். போரில் மத்ரர்களின் ஆட்சியாளர் {சல்லியரே} வீழ்ந்த பிறகே, நீர் அடையப்போகும் வெற்றி உறுதியானதாகும். அவர் கொல்லப்பட்டால், பரந்த தார்தராஷ்டிரப் படையும் கொல்லப்படும்.(34) ஓ! ஏகாதிபதி, ஓ! பார்த்தரே {யுதிஷ்டிரரே}, இப்போது என் வார்த்தைகளைக் கேட்கும் நீர், வலிமைமிக்கத் தேர்வீரரான அந்த மத்ரர்களின் ஆட்சியாளரை எதிர்த்துச் செல்வீராக.(35)

ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, அசுரன் நமுசியைக் கொன்ற வாசவனை {இந்திரனைப்} போல அந்தப் போர்வீரரை நீர் கொல்வீராக. அவர் {சல்லியர்} உமது தாய்மாமன் என்பதை நினைத்து இங்கே எந்தக் கருணையும் காட்டப்பட வேண்டிய தேவை இல்லை. க்ஷத்திரியக் கடமைகளை உமக்கு முன் கொண்டு, அந்த மத்ரர்களின் ஆட்சியாளரைக் கொல்வீராக.(36) பீஷ்மர், துரோணர் மற்றும் கர்ணன் ஆகிய அடியற்ற பெருங்கடல்களைக் கடந்துவிட்டு, மாட்டுக்குளம்படி தடமேயான {அத்தடத்தில் உள்ள நீரேயான} சல்லியரிடம் நீரும், உம்மைப் பின்தொடர்பவர்களும் மூழ்கிவிடாதீர்.(37) உமது மொத்த தவச் சக்தியையும், உமது க்ஷத்திரிய ஆற்றலையும் போரில் வெளிப்படுத்துவீராக. அந்தத் தேர்வீரரை {சல்லியரைக்} கொல்வீராக" என்றான் {கிருஷ்ணன்}.(38)

இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பகைவீரர்களைக் கொல்பவனும், பாண்டவர்களால் வழிபடப்படுபவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, அந்த மாலை வேளையில் தன் பாசறைக்குச் சென்றான்.(39) கேசவன் சென்றதும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகள் மற்றும் சோமகர்கள் அனைவருக்கும் விடைகொடுத்தனுப்பி, உடலில் இருந்து ஈட்டிகள் பிடுங்கப்பட்ட யானை ஒன்றைப் போல அவ்விரவில் மகிழ்ச்சியாக உறங்கினான்.(40) பெரும் வில்லாளிகளான பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும், கர்ணனுடைய வீழ்ச்சியின் விளைவில் திளைத்து, அவ்விரவில் மகிழ்ச்சியாக உறங்கினர்.(41) நோய் விலகியதும், வில்லாளிகள் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரர்களால் நிரம்பியதுமான அந்தப் பாண்டவர்களின் படையானது, ஓ! ஐயா, கர்ணனின் படுகொலையால் கிடைத்த வெற்றியின் விளைவால் அவ்விரவில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்" {என்றான் சஞ்சயன்}.(42)
-----------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 07ல் உள்ள சுலோகங்கள் : 42


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்