Monday, July 31, 2017

கிருதவர்மனை வென்ற சாத்யகி! - சல்லிய பர்வம் பகுதி – 21

Satyaki vanquished Kritavarma! | Shalya-Parva-Section-21 | Mahabharata In Tamil

(சல்லிய வத பர்வம் - 21)


பதிவின் சுருக்கம் : கிருதவர்மன் போரிடுவதைக் கண்டு திரும்பி வந்த கௌரவர்கள்; கிருதவர்மனை எதிர்த்த சாத்யகி; கிருதவர்மனைத் தேரற்றவனாகச் செய்த சாத்யகி; கிருதவர்மனைக் காத்த கிருபர்; தனியொருவனாக நின்று பாண்டவப் படையை எதிர்த்த துரியோதனன்; மற்றொரு தேரில் ஏறி மீண்டும் வந்த கிருதவர்மன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "சபைகளின் ரத்தினமான சால்வன்[1] கொல்லப்பட்ட பிறகு, சூறாவளியில் முறிந்த விழுந்த பெரும் மரம் போல உமது படை வேகமாகப் பிளந்தது.(1) படை பிளவுறுவதைக் கண்டவனும், வீரமும், பெரும்பலமும் கொண்டவனும், வலிமைமிக்கத்தேர்வீரனுமான கிருதவர்மன், அந்தப் போரில் பகைவரின் படையைத் தடுத்தான்.(2) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தப்பி ஓடியவர்களான குருவீரர்கள், அந்தச் சாத்வத வீரன் {கிருதவர்மன்}, (எதிரியின்) கணைகளால் துளைக்கப்பட்டாலும் அந்தப் போரில் மலையென நிற்பதைக் கண்டு, மீண்டும் அணிதிரண்டு திரும்பி வந்தனர்.(3) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களுக்கும், தப்பி ஓடி, மரணத்தையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டு மீண்டும் திரும்பி வந்தவர்களான குரு வீரர்களுக்கு இடையில் போர் நடந்தது.(4) அந்தச் சாத்வத வீரனுக்கும் {கிருதவர்மனுக்கும்}, அவனது எதிரிகளுக்கும் இடையில் நேர்ந்த கடும் மோதலானது, வெல்லப்பட முடியாத பாண்டவப் படையைத் தனியொருவனாக அவன் {கிருதவர்மன்} தடுத்ததால் அற்புதமானதாக இருந்தது.(5)


[1] போரில் திறன்மிக்கவனான சால்வன் என்று இருந்திருக்க வேண்டும். சபைகளின் ரத்தினம் என்பது சல்லியனைக் குறிக்கும் அடைமொழியாகும். கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் "சபைகளின் ரத்தினமான சால்வன்" என்றே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "யுத்தத்தில் தேர்ச்சியுள்ளவனான சால்வன்" என்றிருக்கிறது. அல்லது சால்வனல்லாமல் இது சல்லியனையே குறிக்க வேண்டும். ஆங்கிலத்தில் சால்வனுக்கும் Shalva, சல்லியனுக்கும் Shalya ஓரெழுத்தே வேறுபாடு. ஆதிபர்வத்தில் கூட, பீஷ்மர் காசி மன்னனின் மகள்களான அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகியோரைக் கடத்தி வரும்போது, எதிர்த்து வந்த மன்னர்களில் சால்வனுக்குப் பதில் சல்லியனின் பெயரையே ஆங்கிலப் பதிப்புகளில் காண முடிகிறது.

நண்பர்கள் மிகக்கடுமையான சாதனைகளைச் செய்வதைக் கண்ட அவர்களது நண்பர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து, சொர்க்கத்தையே எட்டுமளவுக்கு உரத்த சிங்க முழக்கங்களைச் செய்தனர்.(6) ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்த ஒலிகளைக் கேட்ட பாஞ்சாலர்கள் அச்சமடைந்தனர். அப்போது சிநியின் பேரனான சாத்யகி அவ்விடத்திற்கு வந்தான்.(7) பெரும் பலம் கொண்டவனான மன்னன் க்ஷேமகீர்த்தியை {க்ஷேகதூர்த்தியை} அணுகிய சாத்யகி, ஏழு கூரிய கணைக்களால் அவனை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிவைத்தான்.(8) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட தேர்வீரனான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, கூரிய கணைகளை ஏவியபடியே வந்தபோது, பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} அவனை {சாத்யகியை} எதிர்த்து வேகமாக விரைந்தான்.(9) தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், முதன்மையான ஆயுதங்களைத் தரித்து வந்தவர்களுமான அவ்விரு வில்லாளிகளும், சிங்கங்களைப் போல முழங்கி, பெரும்பலத்துடன் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(10)

பாண்டவர்களும், பாஞ்சாலர்களும் மற்றும் பிற போர்வீரர்களும், அவ்விரு வீரர்களுக்கிடையில் ஏற்பட்ட பயங்கரமான மோதலின் பார்வையாளர்களானார்கள்.(11) விருஷ்ணி மற்றும் அந்தகக் குலத்தைச் சேர்ந்த அவ்விரு வீரர்களும், மகிழ்ச்சியால் நிறைந்த இரு யானைகளைப் போல, நீண்ட கணைகளாலும் {நாராசங்களாலும்}, கன்றின் பல் போன்ற தலைகளைக் கொண்ட கணைகளாலும் {வத்சதந்தங்களாலும்} ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(12) பல்வேறு வகையான தடங்களில் திரிந்தவர்களான ஹிருதிகன் மகனும் {கிருதவர்மனும்}, அந்தச் சிநிகுலத்துக் காளையும் {சாத்யகியும்}, விரைவில் கணைமாரிகளால் ஒருவரையொருவர் மறைத்தனர்.(13) அந்த இரு விருஷ்ணி சிங்கங்களின் விற்களில் இருந்து பெரும் பலத்துடன் ஏவப்பட்ட கணைகள், வேகமாகச் செல்லும் பூச்சிகளுக்கு ஒப்பாக ஆகாயத்தில் பறப்பது காணப்பட்டது.(14) அப்போது ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, உண்மையான ஆற்றலைக் கொண்டவனான சாத்யகியை அணுகி, அவனது நான்கு குதிரைகளையும் நான் கூரிய கணைகளால் துளைத்தான்.(15)

நீண்ட கரங்களைக் கொண்ட சாத்யகி, வேலால் தாக்கப்பட்ட ஒரு யானையைப் போல இதனால் சினம் தூண்டப்பட்டு, எட்டு முதன்மையான கணைகளால் கிருதவர்மனைத் துளைத்தான்.(16) பிறகு கிருதவர்மன், முழுமையாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான மூன்று கணைகளால் சாத்யகியைத் துளைத்து, மற்றொரு கணையால் அவனது வில்லையும் அறுத்தான்.(17) முறிந்த தன் வில்லை ஒருபுறம் கிடத்திய அந்தச் சிநி குலத்துக் காளை {சாத்யகி}, கணைபொருத்தப்பட்ட மற்றொன்றை {மற்றொரு வில்லை} வேகமாக எடுத்துக் கொண்டான்.(18) முதன்மையான அந்த வில்லை எடுத்து, அதற்கு நாண்பொருத்தியவனும், பெரும் நுண்ணறிவும், பெரும் பலமும் கொண்டவனும், வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவனும், வலிமையும் சக்தியும் கொண்டவனுமான அந்த அதிரதன் {சாத்யகி}, கிருதவர்மனால் தன் வில் வெட்டப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், சீற்றத்தால் நிறைந்து, பின்னவனை {கிருதவர்மனை} எதிர்த்து வேகமாக விரைந்தான்.(19,20)

அப்போது அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, பத்து கூரிய கணைகளால், கிருதவர்மனின் சாரதி, குதிரைகள் மற்றும் கொடிமரத்தைத் தாக்கினான்.(21) இதன் காரணமாக, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வில்லாளியும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான கிருதவர்மன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் தேர் சாரதியற்றதாக, குதிரைகளற்றதாகச் செய்யப்பட்டதைக் கண்டு(22) சினத்தால் நிறைந்தான். கூர்முனை கொண்ட ஒரு வேலை உயர்த்திய அவன் {கிருதவர்மன்}, அந்தச் சிநிகுலத்துக் காளையைக் கொல்லும் விருப்பத்தால் தன் கரவலிமை முழுவதையும் பயன்படுத்தி அஃதை அவன் {சாத்யகி} மீது வீசினான்.(23) எனினும், அந்தச் சாத்வத குலத்தின் சாத்யகி, பல கூரிய கணைகளால் அந்த வேலைத் தாக்கி பல துண்டுகளாக வெட்டி வீழ்த்தி, மதுகுலத்துக் கிருதவர்மனை (தன் சுறுசுறுப்பாலும், ஆற்றலாலும்) திகைப்படையச் செய்தான். மற்றுமோர் அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்} அவன் கிருதவர்மனின் மார்பைத் துளைத்தான்.(24) அந்தப் போரில் ஆயுதங்களில் திறன் கொண்ட யுயுதானனால் {சாத்யகியால்}, குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாகச் செய்யப்பட்ட கிருதவர்மன் கீழே பூமியில் இறங்கினான்.(25)

அந்த வீரக் கிருதவர்மன், அந்தத் தனிப்போரில் சாத்யகியால் தன் தேரை இழந்ததால், (கௌரவர்களின்) துருப்புகள் அனைத்தும் பேரச்சத்தால் நிறைந்தன.(26) கிருதவர்மன் இவ்வாறு குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாக, தேரற்றவனாகச் செய்யப்பட்ட போது உமது மகன்களின் இதயங்கள் பெரும் சோகத்தால் பீடிக்கப்பட்டன.(27) எதிரிகளைத் தண்டிப்பவனான அவன் குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாகச் செய்யப்பட்டதைக் கண்ட கிருபர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சிநி குலத்துக் காளையை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்ப விரும்பி அவனை நோக்கி விரைந்தார்.(28) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருபர், வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கிருதவர்மனைத் தமது தேரில் ஏற்றிக் கொண்டு, போரின் நெருக்கத்தில் இருந்து அவனை வெளியே கொண்டு சென்றார்.(29) கிருதவர்மன் தேரற்றவனாகச் செய்யப்பட்ட பிறகு, சிநியின் பேரன் {சாத்யகி} அக்களத்தில் பலம் நிறைந்தவனாக ஆனதும், துரியோதனனின் மொத்த படையும் போரில் இருந்து புறமுதுகிட்டது.(30)

எனினும், (குரு) படையானது புழுதி மேகத்தால் மறைக்கப்பட்டிருந்ததால், எதிரியால் அதைப் பார்க்க முடியவில்லை. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} மன்னன் துரியோதனனைத் தவிர உமது போர்வீரர்களான மற்றவர்கள் அனைவரும் தப்பி ஓடினர்.(31) தன் படை முறியடிக்கப்பட்டதை அருகில் இருந்து கண்ட அவன், வேகமாக விரைந்து, வெற்றியடைந்த எதிரியைத் தாக்கி, தனியொருவனாக அவர்கள் அனைவரையும் தடுத்தான்.(32) அந்த வெல்லப்பட முடியாத வீரன் {துரியோதனன்}, சினத்தால் நிறைந்து, பாண்டுக்கள், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னன், சிகண்டி, திரௌபதியின் மகன்கள் ஆகியோர் அனைவரும் மற்றும் பாஞ்சாலர்கள், கைகேயர்கள், சோமகர்கள் ஆகியோரின் பெருங்கூட்டத்தையும் கூரிய கணைகளால் அச்சமில்லாமல் தாக்கினான்.(33,34) மந்திரங்களால் தூய்மையாக்கப்பட்ட வேள்வி மேடையில் எரியும் சுடர்மிக்கப் பெரும் நெருப்பைப் போல, வலிமைமிக்கவனான உமது மகன் {துரியோதனன்}, உறுதியான தீர்மானத்துடன் களத்தில் நின்று கொண்டிருந்தான். இவ்வாறே மன்னன் துரியோதனன் அந்தப் போரில் களமெங்கும் திரிந்து கொண்டிருந்தான்.(35) அப்போது, அந்தகனை அணுகமுடியாத உயிரினங்களைப் போலவே, அவனது எதிரிகளால் அவனை {துரியோதனனை} நெருங்க முடியவில்லை. பிறகு, ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, மற்றொரு தேரைச் செலுத்திக் கொண்டு அங்கே வந்தான்" {என்றான் சஞ்சயன்}.(36)
---------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 21ல் உள்ள சுலோகங்கள் : 36


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்