Wednesday, August 02, 2017

யுதிஷ்டிரனைத் தேரற்றவனாகச் செய்த சகுனி! - சல்லிய பர்வம் பகுதி – 22

Shakuni made Yudhishthira carless! | Shalya-Parva-Section-22 | Mahabharata In Tamil

(சல்லிய வத பர்வம் - 22)


பதிவின் சுருக்கம் : துரியோதனனின் அருஞ்செயல்; பாண்டவப்பட்டையைத் தனியொருவனாக எதிர்கொண்ட துரியோதனன்; தப்பி ஓடிய போர்வீரர்கள் துரியோதனன் போரிடுவதைக் கண்டு மீண்டும் வந்தது; அஸ்வத்தாமன் பீமனோடும், சகுனி யுதிஷ்டிரனோடும் போரிட்டது; யுதிஷ்டிரனைத் தேரற்றவனாகச் செய்த சகுனி; மற்றொரு தேரில் ஏறிவந்த யுதிஷ்டிரன்; உலூகன் நகுலனோடும், துரியோதனன் திருஷ்டத்யும்னனோடும், கிருபர் திரௌபதியின் மகன்களோடும் போரிட்டது; களமெங்கும் அடர்த்தியாக எழுந்த புழுதி மேகம், போர்வீரர்களின் குருதியால் நனைந்து தணிவையடைந்தது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "தேர்வீரர்களில் முதன்மையானவனான உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் தேரைச் செலுத்திக் கொண்டு, மனத்தளர்ச்சியால் ஏற்பட்ட துணிவால் நிறைந்து, பெரும் வீரத்தோடு கூடிய ருத்திரனைப் போல அந்தப் போரில் தெரிந்தான்.(1) அவனால் ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகளால் பூமி முற்றிலும் மறைக்கப்பட்டது. உண்மையில் அவன் {துரியோதனன்}, மலைச்சாரல்களில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலக் கணைமாரிகளால் தன் எதிரிகளை நனைத்தான்.(2) அப்போது அந்தப் பெரும்போரில் பாண்டவர்களில் எந்த ஒரு மனிதனோ, குதிரையோ, யானையோ, தேரோ, துரியோதனனின் கணைகளால் தாக்கப்படாதவர்களாகவோ, தாக்கப்படாததாகவோ இல்லை.(3) போர்வீரர்களில் யார்மீதெல்லாம் நான் கண்களைச் செலுத்தினேனோ, ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதரே, அவர்கள் அனைவரும் உமது மகனின் {துரியோதனனின்} கணைகளால் தாக்கப்பட்டிருந்தனர்.(4) போரில் விரையும்போதோ, அணிவகுத்துச் செல்லும்போதே எழும் புழுதியால் மறைக்கப்படும் ஒரு கூட்டத்தைப் போல, அந்தப் பாண்டவப் படையானது அப்போது அந்தச் சிறப்புமிக்க வீரனின் கணைகளால் மறைக்கப்பட்டிருந்தது.(5)


அப்போது பூமியானது, ஓ! பூமியின் தலைவரே {திருதராஷ்டிரரே}, பெரும் கரநளினம் கொண்ட வில்லாளியான உமது மகன் துரியோதனனின் கணைகளாலான ஒரே பரப்பாக என்னால் காணப்பட்டது.(6) உமது தரப்பையும், எதிரியின் தரப்பையும் சேர்ந்தவர்களான களத்தில் இருந்த ஆயிரமாயிரம் போர்வீரர்களில், அப்போது துரியோதனன் என்ற ஒரு மனிதன் மட்டுமே எனக்குத் தெரிந்தான்.(7) ஒன்று சேர்ந்திருந்தவர்களான பார்த்தர்களால், தனியொருவனான உமது மகனை {துரியோதனனை} அணுக முடியாததால், அப்போது அவனிடம் {துரியோதனனிடம்} நாங்கள் கண்ட ஆற்றலானது மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(8) அவன் {துரியோதனன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே, யுதிஷ்டிரனை நூறு கணைகளாலும், பீமசேனனை எழுபதாலும், சகாதேவனை ஏழாலும் துளைத்தான்.(9) அவன், நகுலனை அறுபத்துநான்காலும், திருஷ்டத்யும்னனை ஐந்தாலும், திரௌபதியின் மகன்களை ஏழாலும், சாத்யகியை மூன்று கணைகளாலும் துளைத்தான். பிறகு அவன், ஓ! ஐயா ஓர் அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்} சகாதேவனின் வில்லையும் அறுத்தான்.(10)

முறிந்த வில்லை ஒருபுறம் கிடத்திய மாத்ரியின் வீரப் புதல்வன் {சகாதேவன்}, மற்றொரு உறுதியான வில்லை எடுத்துக் கொண்டு மன்னன் துரியோதனனை எதிர்த்து விரைந்து, அந்தப் போரில் பத்து கணைகளால் அவனைத் துளைத்தான்.(11) பெரும் வில்லாளியும், துணிவுமிக்கவனுமான நகுலன், மேலும் பயங்கரமான ஒன்பது கணைகளால் மன்னனைத் {துரியோதனனைத்} துளைத்து உரக்க முழங்கினான்.(12) சாத்யகி நேரான ஒற்றைக் கணையால் மன்னனை {துரியோதனனைத்} தாக்கினான்; திரௌபதியின் மகன்கள் எழுபத்துமூன்றாலும், மன்னன் யுதிஷ்டிரன் ஐந்தாலும் அவனைத் தாக்கினர். பீமசேனன் அம்மன்னனை எண்பது கணைகளால் பீடித்தான்.(13) இவ்வாறு பார்வையாளர்களாக நின்று கொண்டிருந்த துருப்பினர்களுக்கு முன்னிலையில் அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரர்களால் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் எண்ணற்ற கணைகளால் துளைக்கப்பட்டாலும் துரியோதனன் நடுங்கவில்லை.(14) அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரனின் வேகம், திறம், ஆற்றல் ஆகியவை அனைத்து உயிரினங்களையும் விஞ்சுவதாக மனிதர்கள் அனைவராலும் காணப்பட்டது.(15)

அதேவேளையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்ற தார்தராஷ்டிரர்கள், மன்னனைக் கண்டு மீண்டும் அணிதிரண்டு, கவசம் தரித்தவர்களாக அங்கே திரும்பி வந்தனர்.(16) அவர்கள் திரும்பி வந்தபோது அவர்களால் உண்டாக்கப்பட்ட ஒலியானது, மழைக்காலங்களில் பொங்கும் கடலைப் போல மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.(17) அந்தப் போரில் வெல்லப்படாத தங்கள் மன்னனை {துரியோதனனை} அணுகிய அந்தப் பெரும் வில்லாளிகள், போரிடுவதற்காகப் பாண்டவர்களை எதிர்த்துச் சென்றனர்.(18) அந்தப் போரில் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பீமசேனனத் தடுத்தான். ஓ! ஏகாதிபதி, துணிச்சல்மிக்கப் போராளிகளால் முக்கிய மற்றும் துணை திசைப்புள்ளிகளுக்கிடையில் வேறுபாடு காணமுடியாத அளவுக்கு அந்தப் போரில் ஏவப்பட்ட கணைகளால் திசைப்புள்ளிகள் அனைத்தும் முற்றிலும் மறைக்கப்பட்டன.(19,20)

அஸ்வத்தாமன் மற்றும் பீமசேனனைப் பொறுத்தவரையில், ஓ! பாரதரே, அவர்கள் இருவரும் கொடுஞ்சாதனைகளைப் புரிபவர்களாக இருந்தனர். அவ்விருவரும் போரில் தடுக்கப்பட முடியாதவர்களாக இருந்தனர். மீண்டும் மீண்டும் வில்லின் நாண்கயிற்றை இழுத்ததால் இருவரின் கரங்களும் பல வடுக்களைக் கொண்டிருந்தன. ஒருவருக்கொருவர் சாதனைகளில் பதிலடி கொடுத்து, மொத்த அண்டத்தையே அச்சுறுத்தும் வகையில் அவர்கள் இருவரும் தொடர்ந்து போரிட்டனர்.(21) வீரனான சகுனி அந்தப் போரில் யுதிஷ்டிரனைத் தாக்கினான். சுபலனின் வலிமைமிக்க மகன் {சகுனி}, மன்னனின் {யுதிஷ்டிரனின்} நான்கு குதிரைகளைக் கொன்று, துருப்புகள் அனைத்தையும் அச்சத்தால் நடுங்கச் செய்தபடியே உரக்க முழங்கினான்.(22) அதேவேளையில் வீரச் சகாதேவன், வீரனும், வெல்லப்பட்டவனுமான மன்னனை {யுதிஷ்டிரனைத்} தன் தேரில் ஏற்றிக் கொண்டு அந்தப் போரில் இருந்து கொண்டு சென்றான்.(23) மற்றொரு தேரைச் செலுத்திக் கொண்டு (போருக்குத் திரும்பி வந்த) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், முதலில் ஒன்பது கணைகளால் சகுனியைத் துளைத்து, மீண்டும் ஐந்தால் அவனை மேலும் துளைத்தான். பிறகு, வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான அவன் {யுதிஷ்டிரன்} உரத்த முழக்கம் செய்தான்.(24) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அச்சத்தை ஏற்படுத்துவதான அந்தப் போர் இவ்வாறே காண்பதற்கு அற்புதமானதாக இருந்தது. பார்வையாளர்களை மகிழ்ச்சியில் நிறைத்த அந்தப் போர், சித்தர்களாலும், சாரணர்களாலும் புகழப்பட்டது.(25)

அளவிலா ஆன்மா கொண்ட {சகுனியின் மகன்} உலூகன், அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கணைமாரியை ஏவியபடியே வலிமைமிக்க வில்லாளியான நகுலனை எதிர்த்து விரைந்தான்.(26) வீர நகுலனோ, அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களிலும் அடர்த்தியான கணைமாரிகளை அந்தச் சகுனியின் மகனை {உலூகனைத்} தடுத்தான்}.(27) அந்தத் தேர்வீரர்கள் இருவரும் நற்பிறப்பையும், வலிமையையும் கொண்டவர்களாக இருந்தனர். பெரும் சினத்துடன் ஒருவரோடொருவர் போரிடுவதாக அவர்கள் இருவரும் காணப்பட்டனர்.(28) அதேபோலக் கிருதவர்மன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அசுரன் பலனோடு போரிடும் சக்ரனை {இந்திரனைப்} போல, எதிரிகளை எரிப்பவனான சிநியின் பேரனோடு {சாத்யகியோடு} போரிட்டுப் பிரகாசமாகத் தெரிந்தான்.(29) துரியோதனன், அந்தப் போரில் திருஷ்டத்யும்னனின் வில்லை வெட்டி, வில்லற்றிருந்த தன் எதிராளியைக் கூரிய கணைகளால் துளைத்தான்.(30) அம்மோதலில் மற்றொரு உறுதிமிக்க வில்லை எடுத்துக் கொண்ட திருஷ்டத்யும்னன், அனைத்து வில்லாளிகளும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அம்மன்னனோடு {துரியோதனனோடு} போரிட்டுக் கொண்டிருந்தான்.(31) ஓ! பாரதக் குலத்தின் காளையே, மதநீர் பெரும் இரு காட்டு யானைகளுக்கிடையில் நடக்கும் மோதலைப் போல அவ்வீரர்கள் இருவருக்கும் இடையில் நடந்த போரானது மிகக் கடுமையானதாக இருந்தது.(32)

அந்தப் போரில், சினத்தால் தூண்டப்பட்ட வீரக்கௌதமர் {கிருபர்}, நேரான கணைகள் பலவற்றால் திரௌபதியின் வலிமைமிக்க மகன்களைத் துளைத்தார்.(33) உடல் படைத்த ஒருவன், தன் (ஐந்து) புலன்களோடு போரிடுவதற்கு ஒப்பாக அவருக்கும் அந்த ஐவருக்கும் இடையில் நடைபெற்ற போர் இருந்தது. அச்சத்தை ஏற்படுத்துவதும், மிகக் கடுமையானதாகவும் இருந்த அந்தப் போரில் எத்தரப்பும் அடுத்தவருக்கு எக்கருணையும் காட்டவில்லை.(34) திரௌபதியின் (ஐந்து) மகன்களும், மூடனைப் பீடிக்கும் (ஐம்)புலன்களைப் போலக் கிருபரைப் பீடித்தனர். மறுபுறம் அவரோ அவர்களோடு மிகத் தீவிரமாகப் போரிட்டு அவர்களைக் கட்டுப்படுத்தினார்.(35) ஓ! பாரதரே, இவ்வாறே, அவருக்கும் {கிருபருக்கும்}, அவர்களுக்கும் {திரௌபதியின் மகன்களுக்கும்} இடையில் நடைபெற்ற போரானது மிக அற்புதமானதாக இருந்தது.(36)

மனிதர்கள் மனிதர்களோடும், யானைகள் யானைகளோடும், குதிரைகள் குதிரைகளோடும், தேர்வீரர்கள் தேர்வீரர்களோடும் போரிட்டனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மீண்டும் அந்தப் போரானது, சாதாரணமானதாகவும், அச்சந்தருவதுமாக மாறியது.(37) ஓ! தலைவா, இங்கே ஒரு மோதல் அழகானதாக இருந்தால், அங்கே மற்றொரு மோதல் அச்சம்தருவதாகவும், வேறு இடத்தில் மிகக் கடுமையானதாக இருந்தது. ஓ! ஏகாதிபதி, அந்தப் போரில் பயங்கரமான பல மோதல்கள் நடைபெற்றன.(38) (இரு படைகளையும் சார்ந்தவர்களான) அந்த எதிரிகளைத் தண்டிப்போர் ஒருவரோடொருவர் மோதி, அந்தப் பயங்கரப் போரில் ஒருவரையொருவர் துளைத்துக் கொன்றனர்.(39) போர்வீரர்களின் வாகனங்களாலும், விலங்குகளாலும் எழுப்பப்பட்ட அடர்த்தியான புழுதி மேகம் அங்க காணப்பட்டது. ஓ! மன்னா, ஓடும் குதிரைகளால் எழுப்பப்பட்ட அடர்த்தியான புழுதியும், காற்றால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.(40) சக்கரங்களாலும், யானைகளின் மூச்சுக்காற்றாலும் எழுப்பப்பட்ட புழுதியானது, மாலை மேகத்தைப் போல வானத்தில் அடர்த்தியாக எழுந்தது.(41)

புழுதி எழுந்து, சூரியன் ஒளியை இழந்து, பூமி மறைக்கப்பட்டபோது, வீரமும், வலிமையும் கொண்ட தேர்வீரர்களைக் காண முடியவில்லை.(42) ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, வீரர்களின் குருதியால் பூமி நனைக்கப்பட்டபோது, ஒருகணத்தில் புழுதி மறைந்து அனைத்தும் தெளிவாகத் தெரிந்தது.(43) உண்மையில், அடர்த்தியானதும், பயங்கரமானதுமான அந்தப் புழுதி மேகம் தணிக்கப்பட்டது. அப்போது, ஓ! பாரதரே, அந்த நடுப்பகலில் போராளிகளுக்கிடையில் தங்கள் தங்கள் பலம் மற்றும் தரத்தின் அடிப்படையில் உண்டானவையும், மிகக் கடுமையானவையுமான பல்வேறு தனிப்போர்களை என்னால் காண முடிந்தது. அந்த அருஞ்செயல்களின் பிரகாசமான காந்தி முழுமையாகக் காட்சியில் தோன்றியது.(44,45) அந்தப் போரில் பாய்ந்த கணைகளின் ஒலியானது, அனைத்துப் பக்கங்களிலும் எரிந்து கொண்டிருக்கும் பரந்த மூங்கில் காட்டில் எழும் ஒலிக்கு ஒப்பான போரொலியாக இருந்தது" {என்றான் சஞ்சயன்}.(46)
-----------------------------------------------------------------------------------------
 சல்லிய பர்வம் பகுதி – 22ல் உள்ள சுலோகங்கள் : 46


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்