Sunday, July 30, 2017

எதிரிகளைக் கலங்கடித்த மிலேச்சன் சால்வன்! - சல்லிய பர்வம் பகுதி – 20

The hostile army agitated by Mleccha Shalva! | Shalya-Parva-Section-20 | Mahabharata In Tamil

(சல்லிய வத பர்வம் - 20)


பதிவின் சுருக்கம் : பாண்டவப் படையை எதிர்த்து வந்த மிலேச்சன் சால்வன்; படையைக் கலங்கடித்த சால்வனின் பெரும் யானை; பாண்டவப் படையைப் பிளந்த சால்வன்; சால்வனை எதிர்த்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனின் தேரை நொறுக்கிய யானை; யானையைக் கொண்ட திருஷ்டத்யும்னன்; சால்வனைக் கொன்ற சாத்யகி...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "(குரு) படை மீண்டும் அணிதிரண்டபிறகு, மிலேச்சர்களின் ஆட்சியாளனான சால்வன், சினத்தால் நிறைந்து, அங்கங்களில் மதநீர் சொரிந்ததும், மலையைப் போலத் தெரிந்ததும், செருக்கு நிறைந்ததும், {இந்திரனின் யானையான} ஐராவதனுக்கு ஒப்பானதும், பகைவரின் பெருங்கூட்டத்தை நொறுக்கவல்லதுமான ஒரு பெரிய யானையைச் செலுத்திக் கொண்டு, பாண்டவர்களின் பெரும்படையை எதிர்த்து விரைந்தான்.(2) அந்தச் சால்வனின் விலங்கானது {யானையானது} உன்னதமான உயர்ந்த குலத்தில் {பத்ர குலத்தில்} பிறந்ததாகும். அஃது எப்போதும் திருதராஷ்டிரன் மகனால் {துரியோதனனால்} வழிபடப்பட்டதாகும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அது யானை பழக்குவதை நன்கறிந்தோரால் சரியாக ஆயத்தம் செய்யப்பட்டு, போருக்காகச் சரியாகப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. அந்த யானையைச் செலுத்தி வந்த அந்த மன்னர்களில் முதன்மையானவன் {சால்வன்} கோடையின் நெருக்கத்தில் உள்ள காலை சூரியனைப் போலத் தெரிந்தான்.(3) அந்த முதன்மையான யானையில் ஏறிய அவன் {சால்வன்}, ஓ! ஏகாதிபதி, பாண்டவர்களை எதிர்த்துச் சென்று, சக்தியில் இந்திரனின் வஜ்ரத்துக்கு ஒப்பானவையும், பயங்கரமானவையுமான கூரிய கணைகளால் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவர்களைத் துளைத்தான்.(4) அந்தப்போரில் அவன் {சால்வன்} தன் கணைகளை ஏவி, பகைவீரர்களை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பியபோது, ஓ மன்னா, பழங்காலத்தில் வஜ்ரதாரியான வாசவன் {இந்திரன்}, தைத்தியர்களின் படைகளை நொறுக்குகையில் ஏற்பட்ட தைத்தியர்களின் நிலையைப் போலக் கௌரவர்களாலோ, பாண்டவர்களாலோ அவனிடம் எந்தக் குறையையும் {கவனக்குறைவையும்} காணமுடியவில்லை.(5)


பாண்டவர்கள், சோமகர்கள் மற்றும் சிருஞ்சயர்கள், ஆயிரம் யானைகளைப் போலத் தங்களைச் சுற்றித் திரிந்து கொண்டிருந்த அந்த யானையை, பழங்காலப் போரில் இந்திரனின் யானையைத் தேவர்களின் எதிரிகள் கண்டதைப் போலக் கண்டார்கள்.(6) (அந்த விலங்கால்) கலங்கடிக்கப்பட்டிருந்த பகைவரின் படை அனைத்துப் பக்கங்களிலும் உயிரை இழந்ததைப் போலத் தெரிந்தது. போரில் நிற்க இயலாமல், ஒருவரையொருவர் மிதித்து நசுக்கிக் கொண்டே பேரச்சத்துடன் தப்பி ஓடினார்கள்.(7) மன்னன் சால்வனால் பிளக்கப்பட்ட பாண்டவர்களின் அந்தப் பெரும் படையானது, அந்த யானையின் மூர்க்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் திடீரென அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடியது.(8) பாண்டவப்படை பிளந்து வேகமாகத் தப்பி ஓடுவதைக் கண்ட உமது படையின் முதன்மையான தேர்வீரர்கள் அனைவரும் மன்னன் சால்வனை வழிபட்டு, சந்திரனைப் போல வெண்மையான தங்கள் சங்குகளை முழக்கினர்.(9) சங்குகளை முழக்கிக் கொண்டு கௌரவர்கள் மகிழ்ச்சியால் கூச்சலிடுவதைக் கேட்டவனும், பாண்டவ மற்றும் சிருஞ்சயப் படைகளின் தலைவனுமான பாஞ்சால இளவரசனால் (திருஷ்டத்யும்னனால்) அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(10)

அப்போது சிறப்புமிக்கத் திருஷ்டத்யும்னன், இந்திரனோடு கூடிய மோதலில் அசுரன் ஜம்பன், இந்திரன் செலுத்தி வந்த யானைகளின் இளவரசனான ஐராவதனை எதிர்த்துச் சென்றதைப் போல அந்த யானையை வெல்வதற்காகச் சென்றான்.(11) பாஞ்சாலர்களின் ஆட்சியாளன் தன்னை எதிர்த்து மூர்க்கமாக விரைந்து வருவதைக் கண்டவனும், மன்னர்களில் சிங்கமுமான சால்வன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருபதன் மகனை {திருஷ்டத்யும்னனை} அழிப்பதற்காகத் தன் யானையை விரைவாகத் தூண்டினான்.(12) பின்னவன் {திருஷ்டத்யும்னன்}, குப்புற வீழ்வதுபோலத் தன்னை அணுகி வந்த அந்த விலங்கை, கொல்லன் கையால் பளபளக்காப்பட்டவையும், சுடர்மிக்கவையும், கடுஞ்சக்தி கொண்டவையும், நெருப்பின் காந்திக்கும் ஒப்பானவையுமான முதன்மையான மூன்று கணைகளால் துளைத்தான்.(13) பிறகு அந்தச் சிறப்புமிக்க வீரன், கூராக்கப்பட்ட முதன்மையான ஐந்து கணைகளால் அவ்விலங்கின் மத்தகத்தைத் தாக்கினான். அவற்றால் துளைக்கப்பட்ட அந்த யானைகளின் இளவரசன், போரில் இருந்து புறமுதுகிட்டு பெரும் வேகத்தோடு ஓடியது.(14) எனினும் சால்வன், அதீதமாகச் சிதைக்கப்பட்டிருந்ததும், பின்வாங்கச்செய்யப்பட்டுதுமான அந்த முதன்மையான யானையைத் திடீரெனத் தடுத்துத் திரும்பச் செய்து, அந்த மதங்கொண்ட விலங்குக்குப் பாஞ்சால மன்னனின் {திருஷ்டத்யும்னனின்} தேரைக் காட்டி, அங்குசங்கள் மற்றும் கூரிய வேல்களால் அத்தேரை எதிர்த்துச் செல்லத் தூண்டினான்.(15)

அவ்விலங்கு தன்னை நோக்கி மூர்க்கமாக விரைவதைக் கண்ட வீரத் திருஷ்டத்யும்னன், ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, அச்சத்தால் அங்கங்கள் திகைத்துப் போய், தன் தேரில் இருந்து கீழே பூமியில் குதித்தான்.(16) அதே வேளையில் அந்தப் பெரும் யானையானது, குதிரைகள் மற்றும் சாரதியுடன் கூடியதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தத் தேரைத் திடீரெனத் தன் துதிக்கையால் தூக்கி பூமியில் அடித்து நொறுக்கியது. பாஞ்சால மன்னனின் சாரதி, அந்த யானையால் இவ்வாறு நசுக்கப்பட்டதைக் கண்ட பீமன், சிகண்டி மற்றும் சிநியின் பேரன் {சாத்யகி} ஆகியோர் அவ்விலங்கை எதிர்த்துப் பெரும் வேகத்தோடு விரைந்தனர்.(18) மூர்க்கமாக முன்னேறிவரும் அவ்விலங்கைத் தங்கள் கணைகளால் வேகமாகத் தடுத்தனர். அந்தத் தேர்வீரர்களால் இவ்வாறு எதிர்க்கப்பட்டு, போரில் அவர்களால் தடுக்கப்பட்ட அந்த யானையானது நடுங்கத் தொடங்கியது.(19) அதே வேளையில், மன்னன் சால்வன், அனைத்துப் பக்கங்களிலும் கதிர்களைப் பொழியும் சூரியனைப் போலத் தன் கணைகளை ஏவத் தொடங்கினான். அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட (பாண்டவத்) தேர்வீரர்கள் தப்பி ஓடத் தொடங்கினர்.(20)

சால்வனின் அந்த அருஞ்செயலைக் கண்ட பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் மற்றும் மத்ஸ்யர்கள் ஆகியோர், ஓ! மன்னா, அந்தப் போரில் ஓ! என்றும், ஐயோ! என்றும் உரக்கக் கூச்சலிட்டனர்.(21) அப்போது, அந்தத் துணிச்சல்மிக்கவனான பாஞ்சால மன்னன் {திருஷ்டத்யும்னன்}, உயர்ந்த மலைச்சிகரத்திற்கு ஒப்பான தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு அங்கே தோன்றினான். ஓ! மன்னா, எதிரிகளைத் தாக்குபவனான அந்த வீரன், அச்சமில்லாமல் அந்த யானையை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(22) பெரும் சுறுசுசுறுப்புடன் கூடிய அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, மலையைப் போலப் பெரியதாக இருந்ததும், மழைபொழியும் மேகங்களைப் போல மதநீரைப் பெருக்கியதுமான அந்த யானையைத் தன் கதாயுதத்தால் தாக்கத் தொடங்கினான்.(23) மலையைப் போன்ற அந்தப் பெரும் விலங்கானது, திடீரென மத்தகம் பிளக்கப்பட்டு, உரக்கப் பிளிறிக் கொண்டே பெரும் அளவிலான குருதியைக் கக்கி, நிலநடுக்கத்தின் போது கீழே விழும் மலையைப் போலத் திடீரெனக் கீழே விழுந்தது.(24) அந்த யானைகளின் இளவரசன் விழுந்த காட்சியைக் கண்டு உமது மகனின் துருப்புகள் ஓலமிட்டபோது, சிநிகுலத்தப் போர்வீரர்களில் முதன்மையானவன் {சாத்யகி}, ஒரு கூரிய அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்}, மன்னன் சால்வனின் தலையை அறுத்தான்.(25) சாத்வத வீரனால் {சாத்யகியால்} அந்தச் சால்வனின் தலை வெட்டப்பட்டப்பட்டதும், தேவர்களின் தலைவன் வீசிய வஜ்ரத்தால் திடீரெனப் பிளக்கப்பட்ட ஒரு மலைச்சிகரத்தைப் போல அவன், யானைகளின் இளவரசனான தன் யானையுடன் சேர்ந்து கீழே பூமியில் விழுந்தான்" {என்றான் சஞ்சயன்}.(26)
-------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 20ல் உள்ள சுலோகங்கள் : 26

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்