Showing posts with label சுனந்தை. Show all posts
Showing posts with label சுனந்தை. Show all posts

Friday, January 10, 2014

தமயந்தியைக் கண்ட சுதேவன் - வனபர்வம் பகுதி 68

Sudeva found Damayanti | Vana Parva - Section 68 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

மன்னன் பீமன் நளனையும் தமயந்தியையும் தேடச் சொல்லி அந்தணர்களை அனுப்பியது; சுதேவன் என்ற அந்தணன் சேதி நாட்டு அரண்மனையில் தமயந்தியைக் காண்பது; தமயந்தி அவனிடம் கண்ணீர்விட்டு அழுவது; இதைக் கண்ட சுனந்தை இது பற்றி அரசத்தாயிடம் {ராஜமாதாவிடம்} சொல்வது…

வைசம்பாயனர் சொன்னார், "நளனுடைய நாடு திருடப்பட்டு, அவன் தனது மனைவியுடன் காணாமல் போன பிறகு, பீமன் நளனைக் காண விரும்பி, அவனைத் தேட அந்தணர்களை அனுப்பி வைத்தான். அவர்களுக்குப் பெரும் செல்வத்தைக் கொடுத்த பீமன் அவர்களிடம், "நளனையும் எனது மகள் தமயந்தியையும் தேடுங்கள். நிஷாதர்களின் ஆட்சியாளன் {நளன்} எங்கிருக்கிறான் என்பதை உறுதி செய்து, அவனுடன் சேர்த்து எனது மகளையும் {தமயந்தியையும்} இங்கே கொண்டு வாருங்கள். இப்பணியை யார் நிறைவேற்றுவார்களோ, அவர்கள் ஆயிரம் பசுக்களையும், வயல்வெளிகளையும், நகரத்தைப் போன்ற ஒரு கிராமத்தையும் என்னிடம் இருந்து பெறுவார்கள். நளனையும் தமயந்தியையும் இங்கே கொண்டு வருவதில் தோல்வியுற்றாலும், அவர்களைப் பற்றிய செய்தியைக் கொண்டு வருபவர்கள் என்னிடம் இருந்து செல்வத்தைப் பிரதிபலிக்கும் ஆயிரம் பசுக்களைப் பெறுவார்கள்" என்று அறிவித்தான் {பீமன்}.

இப்படிச் சொல்லப்பட்ட அந்த அந்தணர்கள், மகிழ்ச்சியுடன், நளனையும் அவனது மனைவியையும் தேடி, எல்லா புறங்களிலும் இருந்த நகரங்கள் மற்றும் மாகாணங்களில் தேடச் சென்றனர். ஆனால் நளனையோ அவனது மனைவியையோ அவர்கள் எங்கும் காணவில்லை. கடைசியாக சுதேவன் என்ற அந்தணன், சேதி நாட்டின் அழகான நகரத்திற்கு வந்த போது, {சேதிநாட்டு} மன்னன் {தெய்வங்களை} *வழிபடும் நேரத்தில், சுனந்தையுடன் அமர்ந்திருந்த விதரப்ப்பத்தின் இளவரசியை {தமயந்தியை} மன்னனின் அரண்மனையில் கண்டான். புகைச் சுருள்களால் மூடப்பட்ட நெருப்பு போன்று பிரகாசித்த அவளது ஒப்பற்ற அழகு, லேசாகக் கண்டடையக்கூடியதாக இருந்தது. அழுக்கடைந்து, மெலிந்திருந்த அகன்ற கண்களையுடைய அந்த மங்கையைக் கண்டதும், பல காரணங்களால் அது தமயந்திதான் என்ற முடிவுக்கு வந்தான் {அந்த அந்தணன் சுதேவன்}.

பிறகு சுதேவன், "நான் முன்பு கண்டதைப் போலவே இந்த மங்கை இப்போதும் இருக்கிறாள். ஓ, மூன்று உலகங்களின் கண்களுக்கும் இனிய ஸ்ரீயைப் {லட்சுமியைப்} போன்ற இந்த அழகானவள் மீது, எனது கண்கள் பட்டதால் நான் அருளப்பட்டவனே! முழு நிலவைப் போன்றும், மாறாத இளமையுடனும், அழகிய வட்டமான மார்புகளுடனும், எல்லாபுறங்களையும் தனது காந்தியால் பிரகாசிக்க வைத்துக் கொண்டும், அழகான தாமரைகளைப் போன்ற அகன்ற கண்களுடனும், காமனின் ரதியைப் போன்றும், அனைத்து உலகங்களின் கண்களுக்கும் இனியவளாக முழு நிலவின் கதிர்களைப் போலவும், பாதகமான அதிர்ஷ்டத்தால் இடம் மாற்றப்பட்ட விதரப்ப்பத்தின் தடாகத்தில் இருக்கும் தாமரைத் தண்டைப் போலவும் இருக்கிறாள். இவள் செயல்களால் ஏற்பட்ட ஏமாற்றத்தில் இருக்கிறாள்.

தனது கணவனைக் குறித்த வருத்தத்தால் பீடிக்கப்பட்டு, துயரத்துடன் இருக்கும் அவள், பவுர்ணமி இரவின் போது விழுங்கப்பட்ட முழு நிலவின் வெளிச்சம் போலவோ அல்லது ஊற்று வற்றிக் காய்ந்த நீரோடை போலவோ இருக்கிறாள். யானையின் துதிக்கையால் நசுக்கப்பட்ட தாமரை இதழ்களையும், யானையின் வருகையால் பயந்த பறவைகளையும், நீர்க்கோழிகளையும் கொண்ட நாசமடைந்த தடாகத்தைப் போல அவளது நிலை இருக்கிறது. உண்மையில் இந்தப் பெண், அழகான வடிவுடனும், அழகான அங்கங்களுடனும், ரத்தினங்கள் நிறைந்த மாளிகையில் வசிக்கும் தகுதியுடனும் இருக்கிறாள். ஆனால் இப்போதோ, சூரியனால் சுடப்பட்ட தாமரைத் தண்டைப் போல வேரறுந்து இருக்கிறாள். அழகு, தயை ஆகியவற்றுடன், பூணும் தகுதி இருந்தும் ஆபரணங்கள் ஏதுமற்று, புதிய புகலிடத்தை அடைந்த சந்திரன் கருப்பு மேகங்களால் மறைக்கப்பட்டது போல இருக்கிறாள்.

வசதிகளையும் ஆடம்பரங்களையும் இழந்து, அன்புக்குரியவர்கள் மற்றும் நண்பர்களைப் பிரிந்து, தனது தலைவனைக் காணும் நம்பிக்கையில் துயரத்துடன் வாழ்கிறாள். உண்மையில், ஆபரணங்கள் அற்று இருந்தாலும், கணவனே ஒரு பெண்ணுக்குச் சிறந்த ஆபரணம். கணவன் இல்லாமல் இருப்பதால், இந்தப் பெண் அழகாக இருந்தாலும், ஒளி இழந்து இருக்கிறாள். இப்படிப்பட்ட மனைவியை இழந்து, அவன் {நளன்} துக்கத்திற்கு பலியாகாமல் இருந்தால், அந்தக் காரியம் நளனால் செய்யப்பட்ட கடும் சாதனையே.

கரிய கூந்தலும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களும் கொண்டு, அருளுக்கு தகுதியிருப்பினும் துயரில் இருக்கும் இந்த மங்கையைக் கண்டு, எனது இதயம் கூட வலிக்கிறதே. ஐயோ, கணவனுக்குத் தன்னை அர்ப்பணித்து, அனைத்து நற்குறிகளாலும் அருளப்பட்ட இந்தப்பெண், இந்தத் துன்பக்கடலைக் கடந்து, சந்திரனை மீண்டும் அடைந்த ரோகிணி {நட்சத்திரம்} போல, எப்போது தனது தலைவனின் துணையை அடையப்போகிறாளோ? இழந்த நாட்டை மீண்டும் பெறும் மன்னன் மகிழ்வதைவிட, நிச்சயம், இவளை {தமயந்தியை} மீண்டும் அடையும் நிஷாதர்களின் மன்னன் {நளன்} அதிகமாக மகிழ்வான். இவளது இயல்புக்கும், வயதுக்கும், ஒழுக்கத்துக்கும் சமமான நளன், கரிய கண்களைக் கொண்டவளும், விதரப்ப்பனின் மகளுமான இந்த மங்கையை அடையத் தகுதியுடையவனே. தனது கணவனைச் சந்திக்க எவ்வளவு ஆர்வத்துடன் இருக்கிறாள் இவள். அளவிடமுடியா வீரமும், சக்தியும், பலமும் கொண்ட அந்த வீரனைக் குறித்து துயருற்றிருக்கும் இந்த ராணிக்கு {தமயந்திக்கு}, நான் ஆறுதல் சொல்வதே தகும். தனது தலைவனை நினைத்தும், இதுவரை காணாத துன்பத்தையும் கண்டும் இருக்கும், சந்திரனைப் போன்ற முகம் கொண்டு, துயரத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் இந்தப் பெண்ணுக்கு நான் ஆறுதல் சொல்வேன்" என்று நினைத்துக் கொண்டான் {அந்தணன் சுதேவன்}.

பிருகதஸ்வர் தொடர்ந்தார், "இப்படி பல்வேறு சூழ்நிலைகளையும் குறிப்புகளையும் நினைத்துப் பார்த்த சுதேவன் என்ற அந்த அந்தணன் {சுதேவன்} தமயந்தியை அணுகி, "ஓ விதரப்ப்ப இளவரசியே {தமயந்தியே}, நான் சுதேவன், உனது தமயனின் அன்பு நண்பன். நான் மன்னன் பீமரின் விருப்பத்தின் பேரில் உன்னைத்தேடியே இங்கு வந்திருக்கிறேன். உனது தந்தை, தாய் மற்றும் உனது சகோதரர்கள் அனைவரும் நலமாக இருக்கிறார்கள். நீண்ட ஆயுள் அருளப்பட்ட உனது மகனும் மகளும் அமைதியாக வாழ்கிறார்கள். உனது உறவினர்கள், உயிரோடு இருந்தாலும், உன்னை நினைத்து இறந்தவர்கள் போலவே இருக்கிறார்கள். உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான அந்தணர்கள், உன்னைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்" என்றான் {சுதேவன்}.

பிருகதஸ்வர் தொடர்ந்தார், "ஓ யுதிஷ்டிரா, சுதேவனை அடையாளம் கண்டு கொண்ட தமயந்தி, தனது உறவினர்கள் மற்றும் அவளது இரத்த சம்பந்தமுடைய அனைவரின் நிலையையும் ஒருவர் பின் ஒருவராக அவனிடம் விசாரித்தாள். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, பிறகு, துயரத்தால் பீடிக்கபட்ட விதரப்ப்ப இளவரசி, தனது தமையனின் நண்பனும், அந்தணர்களில் முதன்மையானவனுமான சுதேவனை எதிர்பாராமல் கண்டதால், மிகவும் அழுதாள். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, தமயந்தி அழுவதையும், சுதேவனிடம் தனிமையில் பேசுவதையும் கண்ட சுனந்தை, துன்பம் கொண்டு அரசத்தாயிடம் சென்று "ஒரு அந்தணனின் முன்னிலையில் சைரந்திரி கடுமையாக அழுகிறாள். நீ விரும்பினால், உன்னைத் திருப்திப்படுத்திக் கொள் {வேண்டுமானால் வந்து பார்}" என்றாள் {சுனந்தை}.

இதன்பேரில், சேதி நாட்டு மன்னனின் தாய், அரண்மனையின் அந்தப்புரத்தில் இருந்துவெளியே வந்து, அந்தப் பெண்ணும் (தமயந்தியும்), அந்த அந்தணனும் இருந்த இடத்திற்கு வந்தாள். பிறகு, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, சுதேவனை அழைத்து, அவனிடம், "இந்த அழகானவள் யாருடைய மனைவி? இவள் யாருடைய மகள்? இந்த அழகான கண் கொண்ட மங்கை, தனது உறவினர்களையும், கணவனையும் எப்படி இழந்தாள்? இந்தத் துன்பத்தில் வீழ்ந்திருக்கும் இந்த மங்கையைக் காண நீ எப்படி வந்தாய்? இவை அனைத்தையும் நான் உன்னிடம் விவரமாகக் கேட்க விரும்புகிறேன். தெய்வீக அழகு கொண்ட இந்த மங்கையைப் பற்றி உன்னிடம் நான் கேட்பது அனைத்திற்கும் உண்மையைச் சொல்" என்றாள். பிறகு, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி அரசத்தாயால் சொல்லப்பட்ட அந்தணர்களில் சிறந்தவனான சுதேவன், வசதியாக {சிரமம் இல்லாமல்} அமர்ந்து கொண்டு, தமயந்தியின் உண்மையான வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தான் {விதரப்ப்ப நாட்டு மன்னன் பீமனால் அனுப்பப்பட்ட அந்தணன் சுதேவன்}". 

**************************************************************************

* அரசத்தாயால் பணிக்கப்பட்ட சைரந்திரி {தமயந்தி}, அந்தணர்களுக்கு அமுது படைக்கும்போது சுதேவன் கண்டதாகவும் வேறு கதைகளில் சொல்லப்படுகிறது.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்