Friday, January 10, 2014

குதிரைக்கொட்டில் அதிகாரியான நளன் - வனபர்வம் பகுதி 67

Nala, the superintendent of stables | Vana Parva - Section 67 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

பாம்பு கார்க்கோடகன் மறைந்த பிறகு நளன் அயோத்தி செல்வது; ரிதுபர்ணனின் கொட்டில் (லாயம்) கண்காணிப்பாளன் ஆனது; வார்ஷ்ணேயன் மற்றும் ஜீவலன் என்ற நண்பர்களை அடைந்தது; தனது மனைவி தமயந்தியை நினைத்துப் புலம்பியது…

பிருகதஸ்வர் சொன்னார், "பிறகு அந்தப் பாம்பு {கார்க்கோடன்} மறைந்ததும், நிஷாதர்களின் ஆட்சியாளனான நளன், அன்றிலிருந்து பத்தாம் நாளில் ரிதுபர்ணனின் நகரத்திற்குள் {அயோத்திக்குள்} நுழைந்தான். பிறகு அவன் {நளன்} மன்னனை {ரிதுபர்ணனை} அணுகி, "எனது பெயர் பாகுகன். இந்த உலகத்தில் குதிரைகளை நிர்வகிப்பதில் எனக்கு இணை யாரும் இல்லை. அனைத்து காரியங்களிலும் நிபுணத்துவம் பெற்ற என்னிடம் கடினமான விஷயங்கள் குறித்த ஆலோசனைக்கும் நாடலாம். சமையற்கலையிலும் நான் அனைவரையும் விஞ்சி இருக்கிறேன். கடினமான அனைத்து சாதனைகளிலும், இந்த உலகத்தில் உள்ள அனைத்து கலைகளிலும் வெற்றியடைய நான் முயல்கிறேன். ஓ ரிதுபர்ணரே, என்னை நீர் ஆதரிக்கலாமே!" என்று கேட்டான் {நளன்}.


அதற்கு ரிதுபர்ணன், "ஓ பாகுகா என்னுடன் வசிப்பாயாக. உனக்கு நன்மை ஏற்படட்டும். நீ சொன்ன அனைத்தையும் நீ செய்வாய். குறிப்பாக, எனக்கு எப்போதுமே விரைவாக {பயணம்} செல்வதில் விருப்பம் உண்டு. எனது குதிரைகள் விரைவாகச் செல்ல தக்க நடவடிக்கைகள் எடு. நான் உன்னை கொட்டில்களின் {லாயங்களின்} கண்காணிப்பாளனாக நியமிக்கிறேன். நான் உனக்கு பத்தாயிரம் {10000} (பொன் அல்லது நாணயம்) ஊதியமாகக் கொடுப்பேன். வார்ஷ்ணேயன், ஜீவலன் ஆகிய இருவரும் எப்போதும் உனது கட்டளைப்படியே நடப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து நீ மகிழ்ச்சியாக வாழ்வாய். ஆகையால், ஓ பாகுகா, நீ என்னிடம் வசித்துக் கொள்" என்று மறுமொழி கூறினான் {அயோத்தி மன்னன் ரிதுபர்ணன்}.

பிருகதஸ்வர் தொடர்ந்தார், "இப்படி மன்னனால் சொல்லப்பட்ட நளன், வார்ஷ்ணேயனையும், ஜீவலனையும் துணையாகக் கொண்டு, மரியாதையுடன் நடத்தப்பட்டு, ரிதுபர்ணனின் நகரத்திலேயே {அயோத்தியிலேயே} வசிக்க ஆரம்பித்தான். அந்த மன்னன் {நளன்} அங்கேயே வசித்துக் கொண்டு, விதரப்ப்பத்தின் இளவரசியை {தமயந்தியை} நினைவுகூர்ந்து, எல்லா மாலை நேரங்களிலும் பின்வரும் ஸ்லோகத்தை உரைத்தான். அதாவது, "கதியற்று, பசி மற்றும் தாகத்தால் பீடிக்கப்பட்டு, களைத்துப் போய் அந்த இழிந்தவனை {என்னை} நினைத்து எங்கு படுத்திருக்கிறாளோ? இப்போது யாருக்காக {வேலை செய்யக்} காத்திருக்கிறாளோ?" என்று சொன்னான் {என்ற பொருள் கொண்ட சுலோகத்தைச் சொன்னான்}. ஒருமுறை இரவில், அவன் அந்தச் சுலோகத்தை இப்படிச் சொல்லிக் கொண்டிருந்த போது, ஜீவலன், "ஓ பாகுகா, நீ தினமும் யாருக்காகப் புலம்புகிறாய்? நான் அதைக் கேட்க ஆவலாக இருக்கிறேன். ஓ நீண்ட ஆயுள் அருளப்பட்டவனே, நீ யாருக்காகப் புலம்புகிறாயோ, அவள் யாருடைய மனைவி?" என்று கேட்டான்.

இப்படிக் கேட்கப்பட்ட அந்த மன்னன் நளன், "புத்தியற்ற குறிப்பிட்ட ஒருவனுக்கு, அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஒரு மனைவி இருந்தாள். அந்த இழிந்தவன் தனது சத்தியங்களைப் பொய்யாக்கினான். ஏதோ காரணத்திற்காக அந்தத் தீய மனிதன் அவளிடம் இருந்து பிரிந்தான். அவளிடம் இருந்து பிரிந்த பிறகு, அந்த இழிந்தவன் ஊரெல்லாம் சுற்றி துயரத்துடனும், துன்பத்தில் எரிந்தும் இரவும் பகலும் ஓயாதிருந்தான். இரவில் அவளைக் குறித்து அவன் நினைத்து, இந்த சுலோகத்தைப் பாடுகிறான். இந்தத் துயரங்களுக்குத் தகுதியில்லாத அவன், உலகம் முழுவதும் சுற்றி, கடைசியாக ஒரு புகலிடத்தை அடைந்து, தனது நாட்களைக் கடத்தி, தனது மனைவியை நினைத்துக் கொண்டிருக்கிறான்.

இந்த மனிதனுக்குப் பேரிடர் சம்பவித்தபோது, அவனது மனைவி அவனுடன் காட்டுக்குத் தொடர்ந்து வந்தாள். அற்ப அறம் கொண்ட அவனால் கைவிடப்பட்ட அவளது உயிர் கூட ஆபத்தில் இருக்கிறது. தனியாக, வழிகளைப் பற்றிய ஞானம் இல்லாமல், தாங்க முடியாத துன்பத்தோடு, பசியாலும் தாகத்தாலும் களைப்படைந்த ஒரு பெண்ணால், தனது உயிரைக் காத்துக்கொள்ள முடியாது. ஓ நண்பா, அதிர்ஷ்டமற்ற, புத்தியற்ற அவனால், இரைதேடும் விலங்குகள் நிறைந்த, அகன்ற, பயங்கரமான கானகத்தில் அவள் கைவிடப்பட்டாள்" என்றான் {நளன் }.

இப்படி தமயந்தியை நினைவுகூர்ந்த நிஷாதர்களின் மன்னன் {நளன்}, யாரும் அறியாதவாறு, அந்த ஏகாதிபதியின் {ரிதுபர்ணனின்} வசிப்பிடத்தில் தொடர்ந்து வசிக்கலானான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்