Showing posts with label துருபதன் புரோகிதர். Show all posts
Showing posts with label துருபதன் புரோகிதர். Show all posts

Saturday, January 24, 2015

புரோகிதரின் தூது! - உத்யோக பர்வம் பகுதி 20

The emissary of the priest! | Udyoga Parva - Section 20 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 20)

பதிவின் சுருக்கம் : துருபதனின் புரோகிதர் தூதுவராக ஹஸ்தினாபுரம் சென்றது; வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு தான் வந்த நோக்கத்தைச் சொன்னது; பாண்டவர்கள் வஞ்சிக்கப்பட்டாலும் எப்படி அறம் காத்தனர் என்பதையும், பாண்டவர்களின் செல்வங்களை எப்படிக் கௌரவர்கள் வஞ்சித்தனர் என்பதையும் எடுத்துச் சொன்னது; படைகளின் எண்ணிக்கையைப் பார்த்துப் பாண்டவர்களைக் குறைத்து எடைபோட்டுவிட வேண்டாம் எனப் புரோகிதர் சொன்னது; பாண்டவர்களுக்கு உரியதைத் திருப்பித் தருமாறு புரோகிதர் கௌரவர்களைக் கேட்டுக் கொண்டது....

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, கௌரவர் தலைவனை {துரியோதனனை} அணுகிய துருபதனின் புரோகிதர், திருதராஷ்டின், பீஷ்மர் மற்றும் விதுரனால் மரியாதை செலுத்தப்பட்டார். முதலில் பாண்டவர்களின் நலம் குறித்த செய்தியை சொல்லிய அவர், பின்பு கௌரவர்களின் நலன் குறித்து விசாரித்தார். பிறகு, துரியோதனனின் படைத்தலைவர்கள் மத்தியில் இச்சொற்களில் பேசினார் {துருபதனின் புரோகிதர்}, “மன்னர்களின் நித்திய கடமைகள் குறித்து நீங்கள் அனைவரும் அறிவீர்கள். ஆனால், {அவற்றை} நீங்கள் அறிந்திருந்தாலும், நான் சொல்லப்போவதற்கு அறிமுக உரையாக அதைச் சொல்கிறேன் {கேளுங்கள்}.


திருதராஷ்டிரன் மற்றும் பாண்டு ஆகிய இருவரும் ஒரே தந்தையின் மகன்களாக அறியப்படுகிறார்கள். தந்தை வழி செல்வத்தில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் சமமான பங்கே என்பதில் ஐயமில்லை. திருதராஷ்டிரன் மகன்கள், தங்கள் தந்தை வழி செல்வத்தை அடைந்துவிட்டனர். {ஆனால்} பாண்டுவின் மகன்கள் தங்கள் தந்தை வழி பங்கை ஏன் அடையவே இல்லையே?

பாண்டு மகன்களுடைய {பாண்டவர்களுடைய} தந்தைவழி சொத்துகள் அனைத்தையும் திருதராஷ்டிரன் மகன்கள் {கௌரவர்கள்} முன்பே பறித்துக் கொண்டனர் என்பதனை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். பின்னவர்கள் {கௌரவர்கள்}, தங்கள் கொலைகார சூழ்ச்சி வேலைகள் மூலம் பாண்டுவின் மகன்களைப் {பாண்டவர்களைத்} தங்கள் வழியில் இருந்து அகற்ற பல்வேறு வழிகளில் முயன்றனர்; ஆனால் விதிப்படி அவர்களின் வாழ்வு முற்றிலும் முடிவடையாததால், பாண்டுவின் மகன்களை {கௌரவர்களால்} யமனுலகு அனுப்ப முடியவில்லை.

பிறகு மீண்டும், அந்த உயர் ஆன்ம இளவரசர்கள் {பாண்டவர்கள்}, தங்கள் சொந்த பலத்தின் மூலம் ஒரு நாட்டைச் செதுக்கிக் கொண்ட போது, தீய மனம் கொண்ட திருதராஷ்டிரன் மகன்கள், சுபலன் மகனின் {சகுனியின்} துணை கொண்டு அவர்களின் சொத்துகளை ஏமாற்றுகரமாக {பகடையாட்டத்தின் மூலம்} அபகரித்தனர். வழக்கம் போலவே, இந்தத் திருதராஷ்டிரன், தனது அனுமதியை அச்செயலுக்கும் அளித்தான். அதன்பிறகு, அவர்கள் {பாண்டவர்கள்} பதிமூன்று ஆண்டுகள் பெரும் காட்டுக்குள் திரிய அனுப்பி வைக்கப்பட்டனர்.

வீரமிக்கவர்களாக இருப்பினும், சபா மண்டபத்தில் தங்கள் மனைவியுடன் அவர்கள் பல்வேறு வகையான அவமதிப்புகளுக்கும் உள்ளாகினர். காட்டில் அவர்கள் மேற்கொள்ள வேண்டியிருந்த துன்பங்கள் கடுமையாக இருந்தன. அந்த அறம்சார்ந்த இளவரசர்கள் {பாண்டவர்கள்}, விராட நகரத்தில் சொல்லொணாத் துயரத்தை அனுபவிக்க நேர்ந்தது. தாழ்ந்த மனிதர்களின் வடிவத்தில் அவர்கள் தங்கள் ஆன்மாக்களைச் செலுத்தியதை {சாதாரணத் தாழ்ந்த மனிதர்களாக அவர்கள் வாழ்ந்ததை}, தீய மனிதர்களால் மட்டுமே தாங்கிக் கொள்ள முடியும். குருகுலத்தில் சிறந்தவர்களே, பழங்காலத்தில் {கடந்த காலத்தில்} நடந்த இத்தீங்குகள் அனைத்தையும் புறந்தள்ளி, குருக்களுடனான அமைதி ஒப்பந்தத்தைத் தவிர வேறு எதையும் அவர்கள் விரும்பவில்லை.

அவர்களது நடத்தையையும், துரியோதனனின் நடத்தையையும் நினைவில் கொண்டு, பின்னவனின் {துரியோதனனின்} நண்பர்கள், அவனை {துரியோதனனை} அமைதியை ஏற்கும்படி செய்ய வேண்டும்! குருக்களுடன் போரிடுவதில் பாண்டுவின் வீர மகன்கள் உற்சாகங்கொள்ளவில்லை. அவர்கள் {பாண்டவர்கள்}, உலகத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலேயே, தங்கள் பங்கை மீண்டும் பெற விரும்புகிறார்கள். திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} போருக்கு ஆதரவாக {அவர்களைவிடப் படைபலம் அதிகம் இருக்கிறது என்ற} காரணத்தைத் தேடினால், அது சரியான கராணமாக இருக்க முடியாது. பாண்டுவின் மகன்கள் அதிகப் பலம் கொண்டவர்கள்.

யுதிஷ்டிரனுக்கு ஆதரவாக ஏழு அக்ஷௌஹிணி துருப்புகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் குருக்களுடன் போரிட விரும்பி, அவனது {யுதிஷ்டிரனின்} சொல்லுக்காகக் காத்திருக்கின்றனர். மனிதர்களில் புலிகளான சாத்யகி, பீமசேனன், பெரும்பலமிக்க இரட்டைச் சகோதரர்கள் ஆகியோரும், இன்னும் பிறரும் ஆயிரம் அக்ஷௌஹிணிகளின் பலத்துக் சமமான சக்தியைப் பெற்றவர்களாவர்.

ஒருபுறத்தில் இந்தப் பதினோரு பிரிவுகள் {11 அக்ஷௌஹிணிகள்}  அணிவகுத்திருப்பது உண்மையே, எனினும், மறுபுறத்தில் உள்ள பலவடிவத் திறன்களைக் கொண்ட வலிய கரங்களுடைய தனஞ்சயனால் {அர்ஜுனனால்} இவை சமமாக்கப்படுகிறது. இந்தத் துருப்புகள் அனைத்தையும் சேர்த்தாலும் கிரீடி {அர்ஜுனன்} பலத்தில் விஞ்சியவனாகவே இருப்பான். அதே போலப் பெரும்பிரகாசம் மிக்க வசுதேவரின் மகன் {கிருஷ்ணன்} பெரும் பலமிக்க அறிவாற்றலுடையவன் ஆவான். அர்ஜுனனின் வீரம், கிருஷ்ணனின் ஞானம் ஆகியவற்றையும், அந்த எதிர்ப்படையின் அளவையும் நோக்கில் கொண்டவன் எவன்தான் போரிட விரும்புவான்? எனவே, அறநெறிக்கு கட்டுப்பட்டு, எது கொடுக்கப்பட வேண்டுமோ அதைத் திருப்பிதருமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த வாய்ப்பை நழுவ விட்டுவிடாதீர்கள்” என்றார் {துருபதனின் புரோகிதர்}. 

***********************

மற்ற பதிப்புகளில் இந்தப் பகுதியில் இருந்து புதிய உபபர்வமான சஞ்சயயான பர்வம் ஆரம்பிக்கிறது. கங்குலியில் அப்படி ஆரம்பிக்கவில்லை. அதனால் கங்குலியில் வழியிலேயே செல்கிறோம்...

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Audio பதிவிறக்கம்

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்