Showing posts with label வைகர்த்தனன். Show all posts
Showing posts with label வைகர்த்தனன். Show all posts

Tuesday, December 16, 2014

புறமுதுகிட்டான் கர்ணன்! - விராட பர்வம் பகுதி 54

Karna quickly took a flight! | Virata Parva - Section 54 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 29)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண





பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் தனது தேரை கர்ணனிடம் கொண்டு செல்லுமாறு உத்தரனைப் பணித்தது; கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; போர்க்களத்தை விட்டு ஓடிய கர்ணன்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “எதிரிக் கூட்டத்தைச் சீர்குலைத்து, பசுக்களை மீட்ட பிறகு, மீண்டும் போரிட விரும்பிய அந்த வில்லாளிகளில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, துரியோதனனை நோக்கி முன்னேறினான். மத்ஸ்யர்களின் நகரத்தை நோக்கி பசுக்கள் முரட்டுத்தனமாகத் திரும்புவதைக் கண்ட குரு வீரர்களில் முதன்மையானவர்கள் {கௌரவர்கள்}, கிரீடி {Kiritin - அர்ஜுனன்} ஏற்கனவே வெற்றியை அடைந்துவிட்டதாகவே கருதினார்கள். பிறகு, துரியோதனனை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த அர்ஜுனன் மீது, அவர்கள் {கௌரவர்கள்} அனைவரும் தீடிரெனப் பாய்ந்தனர்.


எண்ணற்ற கொடிகள் பறக்க, அவர்களது எண்ணற்ற பிரிவுகள் போருக்காக வரிசையாக நிற்பதைக் கண்ட அந்த எதிரிகளைக் கொல்பவன் {அர்ஜுனன்}, மத்ஸ்ய மன்னனின் மகனிடம் {உத்தரனிடம்}, “தங்கக் கடிவாளங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இந்த வெள்ளைக் குதிரைகளை, அவற்றால் முடிந்த அளவு சிறப்பாக, இச்சாலையின் வழியே செலுத்துவாயாக. நான் அந்தக் குரு சிங்கங்களின் கூட்டத்தை அணுகும் வகையில் நன்றாக முயற்சி செய். வேறு யானையுடன் மோத விரும்பும் யானை போல அந்தத் தீய ஆன்மாக் கொண்ட சூதனின் மகன் {கர்ணன்}, என்னுடன் போரிட ஆவல் கொண்டிருக்கிறான். ஓ! இளவரசே {உத்தரா}, துரியோதனனின் ஆதரவின் கீழ், கர்வத்துடன் வாழும் அவனிடம் {கர்ணனிடம்} என்னை அழைத்துச் செல்.

இப்படிச் சொல்லப்பட்ட விராடனின் மகன் {உத்தரன்}, தங்கக்கவசம் பூண்டிருந்தவையும், காற்றின் வேகம் கொண்டவையுமான அந்தப் பெரிய குதிரைகளைச் செலுத்தி, போர்க்களத்தின் மத்தியில் அந்தப் பாண்டவனை {அர்ஜுனனை} அழைத்துச் சென்றான். இதைக் கண்ட சித்திரசேனன், சங்கிராமஜித்தன் {கர்ணனின் தம்பி}, சத்ருசஹன், மற்றும் ஜயன் ஆகிய தேர்வீரர்கள் கர்ணனுக்கு உதவ விரும்பி, முன்னேறி வந்து கொண்டிருந்த பாரதகுல வீரனை {அர்ஜுனனை} எதிர்த்து, தங்கள் நீண்ட கணைகளுடன் விரைந்தார்கள். பிறகு, கோபத்தால் எரிந்த அந்த மனிதர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, தனது வில்லில் இருந்து நெருப்பு போன்ற கணைகளை அடித்தான். அங்கே கூடியிருந்த குருக்களில் {கௌரவர்களில்} காளையருக்குச் சொந்தமான தேர்வரிசை காடு எரிவது போல எரிந்தது.

பிறகு, போர் மிகவும் உக்கிரமடையத் தொடங்கியது. பீமனுக்குத் தம்பியும், தேர்வீர்களில் முதன்மையானவனுமான பார்த்தன் {அர்ஜுனன்} மீது, தனது தடித்த நீண்ட கணைகளைப் பொழிந்து கொண்டேயிருந்த குரு வீரனான விகர்ணன், தனது தேரில் அவனை {அர்ஜுனனை} அணுகினான். கடினமான நாணால் கட்டப்பட்டிருந்த விகர்ணனின் வில்லை அறுத்த அர்ஜுனன், பிறகு, அவனது கொடிக்கம்பத்தையும் வெட்டி வீழ்த்தினான். தனது கொடிக்கம்பம் அறுபட்டதைக் கண்ட விகர்ணன், {போர்க்களத்தை விட்டு} விரைவாக ஓடினான்.

விகர்ணன் ஓடிப்போனதும், சினத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாத சத்துருந்தபன், எதிரிகளைத் தடுப்பவனும், மனித சாதனைக்கு அப்பாற்பட்ட சாதனைகளைச் செய்பவனுமான பார்த்தனை {அர்ஜுனனை} அடிக்கத் தொங்கினான். குரு {கௌரவப்} படை வரிசைக்கு மத்தியில் மூழ்கியவன் போல இருந்த அர்ஜுனன், அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான மன்னன் சத்ருந்தபனால் துளைக்கப்பட்டான். பிறகு, அவன் {அர்ஜுனன்}, பதிலுக்கு அவனை {சத்ருந்தபனை} ஐந்து கணையால் தாக்கி, அவனது தேரோட்டியை பத்து கணைகளால் தாக்கினான். பிளக்கக் கடினமான தடித்த கவசம் பூண்டிருந்த சத்ருந்தபனை அந்தப் பாரதக் குலக் காளை {அர்ஜுனன்} அடித்த கணை துளைத்தது. காற்றால் கிழிக்கப்பட்டு மலைமேல் இருந்து விழும் மரம் போல. அந்தப் போர்க்களத்தில் அவன் {சத்ருந்தபன்} இறந்து விழுந்தான்.

மனிதர்களில் துணிச்சல் மிக்கவனால் {அர்ஜுனனால்}, போரில் சிதைக்கப்பட்ட அந்த மனிதர்களில் வீரக்காளைகள் {கௌரவர்கள்}, அண்ட அழிவின் போது வீசும் கடும் காற்றால் அசைக்கப்பட்ட பெரும் கானகம் போல, தடுமாற்றத்துடன் நடுங்க ஆரம்பித்தனர். வாசவனின் {இந்திரனின்} மகனான பார்த்தனால் {அர்ஜுனனால்} போரில் தாக்கப்பட்டவர்களும், வாசவனின் {இந்திரனின்} சக்தியைக் கொண்டவர்களும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கரிய கவசம் பூண்டவர்களும், முழுதாய் வளர்ந்த இமாலய யானைகளைப் போன்றவர்களும், பெரும் கொடையாளிகளுமான, அந்த மனிதர்களில் நன்கு உடுத்திய வீரர்கள், {அர்ஜுனனிடம்} தோல்வியுற்று, உயிரிழந்து, தங்கள் {உடலின்} நீளத்தால் தரையை அளக்க ஆரம்பித்தனர்.

கோடைகாலத்தின் நெருக்கத்தில் {முதுவேனிற்காலத்தில்} பொங்கியெழும் தீ, கானகத்தை எரிப்பது போலப் பொங்கியெழுந்த, அந்த மனிதர்களில் முதன்மையானவனான காண்டீவத்தைத் தாங்குபவன் {அர்ஜுனன்}, போர்க்களத்தில் தனது எதிரிகளை அனைத்துப் புறங்களிலும் கொன்று கொண்டிருந்தான். மேகக்கூட்டங்களைக் கலைக்கும் காற்று, வசந்த காலத்தில், சருகுகளைக் கீழே உதிர்ப்பது போல, தேர்வீரர்களில் முதன்மையானவனான {அதிரதனான} கிரீடி {அர்ஜுனன்}, தனது எதிரிகள் அனைவரையும் உதிர்த்துக் கொண்டு, போர்க்களத்தில் உலவினான்.

கிரீடத்தைத் தரித்தவனான பெருந்தீரமுடையவன் {அர்ஜுனன்}, விரைவில், விகர்த்தனன் மகனின் {கர்ணனின்} தம்பியான சங்கிராமஜித்தின் தேரில் பூட்டப்பட்டிருந்த சிவப்பு குதிரைகளைக் கொன்றான். பிறகு, ஒரு பிறை வடிவக் கணையால், தனது எதிரியின் {சங்கிராமஜித்தினுடைய} தலையை அறுத்தான். தனது தம்பி கொல்லப்பட்டதும், சூத சாதியைச் சேர்ந்த விகர்த்தனன் மகன் {கர்ணன்}, தனது பராக்கிரமம் அனைத்தையும் திரட்டி, தந்தங்களை நீட்டி வரும் பெரிய யானையைப் போலவோ, பெருங்காளையை எதிர்த்து வரும் புலியைப் போலவோ அர்ஜுனனை நோக்கி விரைந்தான்.

பாண்டுவின் மகனைப் {அர்ஜுனனைப்} பனிரெண்டு கணைகளால் அந்த விகர்த்தனன் மகன் {கர்ணன்} துளைத்தான். அவனது {அர்ஜுனனது} குதிரைகளின் உடம்பில் அனைத்துப் பகுதிகளிலும் அடித்தான். {ஒரு கணையால்} விராடன் மகனைக் {உத்தரனை} அவனது கையில் அடித்தான். தன்னை நோக்கித் திடீரென முன்னேறி வரும் விகர்த்தனன் மகனை {கர்ணனை} நோக்கி அவசரமாக விரைந்த கிரீடி {அர்ஜுனன்}, பலவண்ணத் தோகை கொண்ட கருடன், கீழிருக்கும் பாம்பின் மீது பாய்வது போல, அவனைக் {கர்ணனைக்} கடுமையாகத் தாக்கினான். அவ்வீரர்கள் இருவரும் வில்லாளிகளில் முதன்மையானவர்களாக இருந்தனர்; இருவரும் பெரும் சக்தியுடன் இருந்தனர்; இருவரும் எதிரிகளைக் கொல்லும் வல்லமையைப் பெற்றிருந்தனர். அவர்களுக்குள் நடைபெற்ற மோதலைச் சாட்சியாகக் காண, ஆவலுடன் வந்த கௌரவர்கள், வெறும் பார்வையாளர்களாகத் தொலைவிலேயே நின்றுவிட்டனர்.

குற்றவாளியான கர்ணனைக் கண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கோபத்தால் வெகுண்டெழுந்தாலும், அவன் {கர்ணன்} கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்து, விரைவில் எண்ணற்ற கணைகளைப் பயங்கர மழையாகப் பொழிந்து, அவனையும் {கர்ணனையும்}, அவனது குதிரைகளையும், அவனது தேரோட்டியையும் {கணை மழையால்} மறைத்தான். பீஷ்மரைத் தலைமையாகக் கொண்ட வீரர்கள், தங்கள் குதிரைகள், யானைகள், தேர்கள் ஆகியவை, கிரீடியால் {அர்ஜுனனால்} துளைக்கப்பட்டு, அவனது கணைகளால் மறைக்கப்பட்டு, தங்கள் படைகள் சிதறிப் போனதால் உடைந்து போய், துயரத்தில் பெருத்த ஓலமிடத் தொடங்கினார்கள்.

எனினும், அர்ஜுனன் கரங்களால் அடிக்கப்பட்ட அந்தக் கணைகளைத் தனது எண்ணற்ற கணைகளால் எதிர்கொண்ட ஒப்பற்றவனும், வீரனுமான கர்ணன், விரைவில், தனது அம்புகளையும் வில்லையும் கொண்டு {அவற்றை} வெடிக்கச் செய்து, சுடர்மிகும் நெருப்பெனக் காட்சியில் தோன்றினான். அப்போது, வில்லின் நாண் கையுறைகளில் பட்டதால் ஏற்பட்ட நாணொலியால், அச்சூழலை அந்த விகர்த்தனன் மகன் {கர்ணனை} நிரப்பினான். அவனைப் {கர்ணனைப்} பாராட்டும் வகையில் கௌரவர்கள் எழுப்பிய கரவொலிகளாலும் {கை தட்டல்களாலும்}, சங்கொலிகளாலும், எக்காளம் மற்றும் பேரிகைகளாலும் அங்கே பெருத்தவொலி எழுந்தது.

காண்டீவத்தின் நாணொலியால் காற்றை நிரப்பிய கிரீடியையும் {அர்ஜுனனையும்}, அவனது கொடிக்கம்பத்துக்கு மேல் இருந்த கொடியில் பயங்கரமாகக் கதறிக் கொண்டிருக்கும் உயர்ந்த வாலுடைய குரங்கையும், {அக்கொடியிலிருக்கும்} பயங்கரமான உயிரினங்களையும் கண்ட கர்ணன், உரத்த கர்ஜனையை எழுப்பினான். குதிரைகளோடு இருந்த விகர்த்தனன் மகனைத் {கர்ணனைத்} தனது கணைகளால் துன்புறுத்திய கிரீடி, தனது பாட்டன் {பீஷ்மர்}, துரோணர், கிருபர் ஆகியோர் மீது பார்வையைச் செலுத்தியபடியே, துரிதமான கணை மழையை அவன் {கர்ணன்} மீது விரைந்து பொழிந்தான். பதிலுக்கு, விகர்த்தனன் மகனும் {கர்ணனும்}, கணைகளின் அடர்த்தியான மழையைப் பார்த்தன் {அர்ஜுனன்} மீது, மழைபொருந்திய மேகம் போலப் பொழிந்தான்.

கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த அர்ஜுனன், கூரிய முனை கொண்ட தனது கணைகளால் கர்ணனை மூடினான். கூரிய முனை கொண்ட கணைகளின் மேகங்களைத் தங்கள் தேர்களில் இருந்து உற்பத்தி செய்த அந்த இரு வீரர்களும் எண்ணற்ற கணைகளையும், ஆயுதங்களையும் கொண்டு மோதிய போது, அவர்கள், மேகங்களால் மூடப்பட்ட சூரியனும் சந்திரனும் போலப் பார்வையாளர்களுக்குத் தோன்றினார்கள். எதிரியைப் பார்க்க முடியாதவனும், இலகுவான கரங்கள் கொண்டவனுமான கர்ணன், கிரீடம் அணிந்த அந்த வீரனின் {அர்ஜுனனின்} நான்கு குதிரைகளைத் தனது கூரிய கணைகளால் துளைத்தான். பிறகு அவனது தேரோட்டியை {உத்தரனை} மூன்று கணைகளாலும், அவனது கொடிக்கம்பத்தை மூன்றாலும் அடித்தான்.

இப்படி அடிக்கப்பட்டவனும், போரில் எதிரிகளை அடிப்பவனும், குரு குலத்தின் காளையுமான காண்டீவத்தைத் தாங்கும் ஜிஷ்ணு {அர்ஜுனன்}, துயில் நீத்த சிங்கமென எழுந்து, நேராகச் செல்லும் கணைகளால் கர்ணனைக் கடுமையாகத் தாக்கினான். (கர்ணனால் அடிக்கப்பட்ட) கணைமழையால் துன்புற்றவனும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயல்களைச் சாதிப்பவனுமான அந்த ஒப்பற்றவன் {அர்ஜுனன்}, பதிலுக்கு அடர்த்தியான கணை மழையைப் பொழிந்தான். பல்வேறு உலகங்களைத் தனது கதிர்களால் மூடும் சூரியனைப் போல, அவன் {அர்ஜுனன்}, எண்ணற்ற கணைகளால் கர்ணனின் தேரை மறைத்தான். யானையால் தாக்கப்பட்ட சிங்கம் போன்ற அர்ஜுனன், தனது அம்பறாத்தூணியில் இருந்து சில கூரிய பிறைவடிவக் கணைகளை எடுத்து, தனது வில்லைக் காதுவரை இழுத்து, அந்தச் சூத மகனின் {கர்ணனின்} உடலெங்கும் {அந்தப் பிறைவடிவ அம்புகளை} அடித்தான்.

அந்தப்போரில், வஜ்ர வேகம் கொண்ட தனது கூரிய கணைகளால், கர்ணனின் கரங்கள், தொடைகள், தலை, நெற்றி, கழுத்து மற்றும் {அவனது} உடலின் பிற முக்கிய உறுப்புகள் ஆகியவற்றை, அந்த எதிரிகளை அடிப்பவன் {அர்ஜுனன்}, தனது காண்டீவத்தில் இருந்து அடித்தான். பாண்டுவின் மகனான பார்த்தனால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்ட கணைகளால் தாக்கப்பட்டு, சிதைக்கப்பட்ட விகர்த்தனன் மகன் {கர்ணன்}, போர்க்களத்தின் முன்னணியை விட்டு அகன்று, ஒரு யானையால் வீழ்த்தப்பட்ட மற்றொரு யானை போல {அந்தப் போர்க்களத்தைவிட்டு} விரைந்து ஓட்டமெடுத்தான்.”
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்