Wednesday, December 17, 2014

பீஷ்மர் எனக்குத் தடையாக முடியும்! - விராட பர்வம் பகுதி 55

Bhishma may be an obstacle to me! | Virata Parva - Section 55 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 30)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண





பதிவின் சுருக்கம் : போரில் அர்ஜுனன் செய்த சாகசம்; அர்ஜுனன் உத்தரனுக்கு எதிரிணியின் படைத்தலைவர்களை அறிமுகப்படுத்தியது; உத்தரன் கிருபரை நோக்கித் தேரை நடத்திச் சென்றது....

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ராதையின் மகன் {கர்ணன்} களத்தை விட்டு ஓடியதும், துரியோதனன் தலைமையிலான பிற வீரர்கள் ஒருவர் பின் ஒருவராகத் தங்களுக்குரிய படைப்பிரிவுகளில் இருந்து பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது பாய்ந்தனர். துள்ளும் கடலின் கோபத்தைத் தாங்கும் கரையைப் போல, போர்க்களத்தில் வரிசையாக அணிவகுத்து, தன்னை எதிர்த்து விரைந்தோடி வந்த எண்ணிலடங்கா தலைவர்களின் சீற்றத்தைத் தாங்கிக் கொண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, {அவர்கள் மீது} கணைகளின் மேகங்களைப் பொழிந்தான். தேர்வீரர்களில் முதன்மையானவனும், வெள்ளைக் குதிரைகளைக் கொண்டவனும், குந்தியின் மகனுமான பீபத்சு {அர்ஜுனன்}, எந்நேரமும் தெய்வீக ஆயுதங்களை அடித்துக் கொண்டே எதிரியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான்.


விரைவில், சூரியன் தனது கதிர்களால் முழு உலகத்தையும் மூடுவதைப் போல, பார்த்தன் {அர்ஜுனன்}, தனது காண்டீவத்தில் இருந்து அடிக்கப்பட்ட எண்ணிலடங்கா கணைகளால், வானத்தின் அனைத்து திக்குகளையும் நிறைத்தான். தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றில் இருந்து போரிட்டவர்கள் மற்றும் கவசம் பூண்டு தரைப்படையில் போரிட்ட வீரர்கள் ஆகியோரில், கூர்மையான அம்புகளால் காயம்படாதவாறு தங்கள் உடலில் இரண்டு விரல் அகலத்தில் எஞ்சிய இடம் கொண்டவர்கள் எவரும் இல்லை. தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் அவனுக்கு {அர்ஜுனனுக்கு} இருந்த திறமையாலும், அந்தக் குதிரைகள் பெற்றிருந்த பயிற்சியாலும், உத்தரனனின் திறமையாலும், அவனது {அர்ஜுனனின்} ஆயுதங்கள் சென்ற விதத்தாலும், அவனது பராக்கிரமத்தாலும், இலகுவான கரங்களாலும், அர்ஜுனனை, படைக்கப்பட்ட அத்தனை பொருட்களையும் அண்ட அழிவின் போது, உட்கொள்ளும் சுடர்மிக்க நெருப்பாக மக்கள் கருதத் தொடங்கினர்.

எதிரிகள் மத்தியில் எவராலும், சுடர்விடும் தீ போலப் பெரும் பிரகாசத்துடன் ஒளிர்ந்த அர்ஜுனன் மீது தங்கள் கண்களைச் செலுத்த முடியவில்லை. அர்ஜுனனின் கணைகளால் சிதைக்கப்பட்ட எதிரிப்படை தலைவர்கள், மலையின் மார்பில் புதிதாக உதித்திருக்கும் மேகங்கள் சூரியக் கதிர்களைப் பிரதிபலிப்பதைப் போலவும், அசோக மரங்கள் நிறைந்த தோப்பு, கொத்து கொத்தான மலர்களால் பிரகாசிப்பது போலவும் தோன்றினர். உண்மையில், பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் துன்புற்ற படைவீர்கள் இவற்றைப் போலவே இருந்தனர். அல்லது மலர்கள் படிப்படியாகத் தளர்ந்து விழும் அழகிய பூமாலை போல இருந்தனர். அனைத்திலும் வியாபித்துள்ள காற்று, எதிரிப்படை தலைவர்களுடைய கிழிந்த கொடிகளையும், குடைகளையும் தனது சிறகுகளில் தாங்கிச் சென்றது.

மேலும், தங்கள் அணிகளின் மத்தியில் ஏற்பட்ட அழிவைக் கண்டு பயந்த குதிரைகள், பார்த்தனின் அம்புகளால் {தேர்களின்} நுகங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு, தேர்களின் உடைந்த பாகங்களை இழுத்தபடியே அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடின. காதுகளிலும், விலாப்புறங்களிலும், தந்தங்களிலும், கடைவாயருகிலும், உடலின் முக்கியப் பகுதிகளிலும் தாக்கப்பட்ட யானைகள், அந்தப் போர்க்களத்தில் கீழே விழ ஆரம்பித்தன. மேலும், கௌரவர்களைச் சார்ந்த யானைகளின் சடலங்கள் குறுகிய காலத்தில் பரவலாகச் சிதறுண்டதால், அந்தப் பூமியைக் காண பெருந்திரளான கருமேகங்கள் நிறைந்த மேகமூட்டமான வானம் போல இருந்தது. யுகத்தின் முடிவில் தோன்றும் சுடர்விடும் தழல்களைக் கொண்ட நெருப்பு, உலகத்தில் அழிந்து போகக்கூடிய அசைவன, அசையாதன ஆகிய அனைத்துப் பொருட்களையும் எரிப்பது போல, அந்தப் போர்க்களத்தில் அனைத்து எதிரிகளையும் பார்த்தனும் {அர்ஜுனனும்} எரித்தான். தனது ஆயுதங்களின் சக்தியாலும், தனது வில்லின் நாணொலியாலும், கொடிக்கம்பத்தில் நிலைத்திருக்கும் உயிரினங்களின் இயல்புக்கு மிக்கக் கதறல்களாலும், அந்தக் குரங்கின் பயங்கரமான கர்ஜனையாலும், சங்கொலியின் வெடிப்பாலும், எதிரிகளைப் பலமாக அடிப்பவனான பீபத்சு {அர்ஜுனன்}, துரியோதனனுடைய துருப்பினரின் இதயங்களில் திகிலை உணரச் செய்தான்.

அர்ஜுனன் பார்வைக்கெதிரிலேயே, எதிரி வீரர்கள் ஒவ்வொருவரின் வலிமையும் தூசிக்குச் சமானமாக மாறுவது தெரிந்தது. பாதுகாப்பற்றவர்களைக் கொல்லும் பாவத்தைச் செய்யத் துணிய விரும்பாத அர்ஜுனன், திடீரெனத் திரும்பி, தங்கள் இலக்கைக் கூர்முனை கணை மேகங்களால் தாக்குவதற்காகப் பருந்துகளைத் தப்பவிடும் வேடர்களைப் போல அப்படையைப் பின்னால் இருந்து தாக்கினான். அவன் {அர்ஜுனன்} விரைவில், இரத்தம் குடிக்கும் அம்புகளைக் கொத்துக் கொத்தாக ஆகாயம் முழுவதும் நிரப்பினான். சக்தி மிக்கச் சூரியனின் (முடிவிலியான} கதிர்கள் சிறு பாத்திரத்திற்குள் நுழைந்து, அதை முழுவதுமாக நிரப்புவது போல, அர்ஜுனனின் எண்ணற்ற கணைகள் விரிவடைவதற்கு ஆகாயத்தில் இடம் இல்லாமல் போயிற்று.

அருகில் இருக்கும்போது ஒரே ஒரு முறை மட்டுமே எதிரிகளால் அர்ஜுனனின் தேரைக் காண முடிந்தது. ஏனெனில், அதன் பிறகு {அப்படிப் பார்த்த} உடனேயே அவர்கள் தங்களுடைய குதிரைகளுடன் சேர்த்து அடுத்த உலகத்திற்கு அனுப்பப்பட்டனர் {அடுத்த நொடியிலேயே கொல்லப்பட்டனர்}. அவனது கணைகள் எப்படி எதிரிகளின் உடலைத் தடங்கலற்றுக் கடந்து சென்றனவோ, அதே போல, அவனது தேரும் எதிரி தலைவர்கள் மத்தியில் தடங்கலற்று கடந்து சென்றது. உண்மையில், பெருங்கடலில் விளையாடும் ஆயிரம் தலை கொண்ட வாசுகியைப் போல, அவன் எதிரி துருப்புகளைப் பெரும் வன்முடையுடன் தூக்கியெறிந்து கலங்கடிக்கத் தொடங்கினான். இடையறாது கிரீடி {அர்ஜுனன்} தனது கணைகளை அடித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வில்லின் நாணொலி, மற்ற உயிரினங்களால் ஏற்கனவே கேட்கப்படாத அளவுக்கு அனைத்து ஒலிகளையும் விஞ்சி இருந்தது. சூரியக் கதிர்களால் பளிச்சென ஒளிர்ந்த கருமேகங்கள் போல, களத்தை நிரப்பிய யானைக்கூட்டம், தங்கள் உடல்கள் (கொழுந்துவிட்டெரியும்) கணைகளால் துளைக்கப்பட்டு ஒளிவீசின. அனைத்துத் திசைகளிலும் உலவி, வலதிலும் {வலது கையாலும்}, இடதிலும் {இடது கையாலும்} (கணைகளை) அடித்த அர்ஜுனனின் வில் இழுக்கப்பட்டு எப்போதும் சரியான வட்டமாகத் தெரிந்தது. அழகற்ற எதன் மீதும் கண்கள் நிலைக்காததைப் போல, அந்தக் காண்டீவந்தாங்கியின் {அர்ஜுனனின்} கணைகள் இலக்கைத் தவிர வேறு எதையும் அடையவில்லை. யானைக்கூட்டத்தின் நடையால் பாதை உண்டாவது போல, அந்தக் கிரீடியின் {அர்ஜுனனின்} தேரால் அங்குப் பாதை உண்டாக்கப்பட்டது. பார்த்தனால் அடிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் இருந்த எதிரி வீரர்கள், “பார்த்தனின் வெற்றியை விரும்பும் இந்திரனே இறவாதவர்கள் {தேவர்கள்} அனைவரையும் அழைத்து வந்து நம்மைக் கொன்று கொண்டிருக்கிறானோ” என்று எண்ணினார்கள்.

சுற்றிலும் பயங்கரப் படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த விஜயனை {அர்ஜுனனை} கண்ட அவர்கள், அனைத்து உயிரினங்களையும் கொல்வதற்காக மரணமே அர்ஜுனனின் உருவில் வந்திருப்பதாகவும் கருதினார்கள். பார்த்தனால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்ட குருக்களின் {கௌரவர்களின்} துருப்புகள், பார்த்தனின் மோதல்களில் மட்டுமே காணக்கூடிய வகையிலும், பார்த்தனின் சாதனையை விவரிக்கும் வண்ணமும் சிதைக்கப்பட்டு, சிதறப்பட்டு இருந்தன. {பருவ காலத்தில்} இலையுதிர்க்கும் மூலிகைச் செடிகளின் மேல்புறத்தைத் துண்டிப்பதைப் போல, அவன் {அர்ஜுனன்} பகைவரின் தலைகளை வெட்டிச் சாய்த்தான். அர்ஜுனனால் ஏற்பட்ட பயங்கரத்தைக் கண்ட குருக்களின் சக்தி அனைத்தும் தொலைந்து போயிற்று. அர்ஜுனனின் எதிரிகள் நிரம்பிய காடு, அர்ஜுனன் என்ற புயலால் சிதைக்கப்பட்டுக் கலங்கடிக்கப்பட்டது போல, ஊதா நிற சுரப்பு நீரால் {purple secretions} பூமியைச் சிவப்பாக்கியது. குருதி கலந்த புழுதி காற்றால் உயர்த்தப்பட்டு, சூரியனின் கதிர்களையே கூட, மேலும் சிவப்பாக்கியது. விரைவில் சூரியனால் அலங்கரிக்கப்பட்ட வானம் மாலைவேளை வந்துவிட்டதைப் போல அதிகச் சிவப்பாக இருந்தது. உண்மையில், சூரியன் கூட அஸ்தமித்ததும் தனது கதிர்களை நிறுத்திவிடுவான், ஆனால் பாண்டுவின் மகன் தனது கணையடிப்பை நிறுத்தினானில்லை. எதிரியின் பெரும் வில்லாளிகள் அனைவரும் பெரும் சக்தியும் பராக்கிரமமும் கொண்டிருந்தாலும், நினைத்துப் பார்க்க முடியாத சக்தி கொண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, தனது அனைத்து தெய்வீக ஆயுதங்களாலும் அவர்களை மூழ்கடித்தான்.

பிறகு அர்ஜுனன், துரோணர் மீது கூர்முனை கொண்ட எழுபத்துமூன்று {73} அம்புகளை அடித்தான். துஸ்ஸஹன் மீது பத்தும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மீது எட்டும், துச்சாசனன் மீது பனிரெண்டும், சரத்வானின் மகன் கிருபர் மீது மூன்றும் அடித்தான். பிறகு, அந்த எதிரிகளைக் கொல்பவன் {அர்ஜுனன்}, சந்தனுவின் மகனான பீஷ்மரையும், மன்னன் துரியோதனனையும் நூறு அம்புகளால் துளைத்தான். கடைசியாக, பராசத்தைக் கொண்டு கர்ணனுடைய காதைத் துளைத்தான். அனைத்து ஆயுதங்களிலும் திறமைபெற்ற பெரும் வில்லாளியான கர்ணன் அப்படித் துளைக்கப்பட்ட போது, அவனது குதிரைகளும், தேரும், தேரோட்டியும் என அனைத்தும் அழிக்கப்பட்டன. அவனுக்கு {கர்ணனுக்கு} ஆதரவாக இருந்த துருப்புகள் உடைய ஆரம்பித்தன. அப்படி அந்த வீரர்கள் உடைவதைதக் கண்ட விராடன் மகன் {உத்தரன்}, பார்த்தனின் நோக்கத்தை அறிந்து அவர்களுக்கு வழி கொடுத்தபடியே அவனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! பார்த்தரே {அர்ஜுனரே}, என்னைத் தேரோட்டியாகக் கொண்டு, இந்த அழகிய தேரில் நின்று கொண்டிருக்கும் உம்மை, நான் எந்தப் பிரிவுக்கு {எந்தப் பிரிவின் பக்கம்} அழைத்துச் செல்லட்டும்? நீர் உத்தரவிட்டால், நான் உடனே அங்கு அழைத்துச் செல்வேன்” என்றான் {உத்தரன்}.

அதற்கு அர்ஜுனன் {உத்தரனிடம்}, “ஓ! உத்தரா, புலித்தோலைக் கவசமாக அணிந்து, சிவப்பு நிற குதிரைகளால் இழுக்கப்படும் நீலக்கொடி பொருந்திய தேரில் இருக்கும் மங்கலவீரரான கிருபர் அதோ இருக்கிறார். கிருபரின் படைப்பிரிவின் முகப்பு அதோ தெரிகிறது. அங்கே என்னை அழைத்துச் செல். அந்தப் பெரும் வில்லாளிக்கு {கிருபருக்கு}, நான் வில்வித்தையில் எனது வேகமான கரங்களின் திறனைக் காட்ட விரும்புகிறேன்.

தனது கொடியில் தங்க வேலைப்பாடு கொண்ட நேர்த்தியான நீர்க்குடத்தைக் கொண்டிருக்கும் அந்த வீரரே அனைத்து ஆயுதங்களிலும் முதன்மையானவரான ஆசான் துரோணராவார். ஆயுதம் தாங்கும் அனைவரைக்காட்டிலும், நான் அவர் மீது எப்போதும் மிகுந்த மதிப்பைக் கொண்டிருக்கிறேன். எனவே, நீ உற்சாகமாக அவரை {துரோணரை} வலம் வா. அங்கே நமது சிரம் தாழட்டும். அதுவே நிலைத்த அறமாகும். எனது உடலை துரோணர் முதலில் தாக்கிய பிறகே நான் அவரைத் தாக்குவேன். ஏனெனில், அப்போதுதான் அதற்காக அவரால் சீற்றங்கொள்ள இயலாது.

அதோ, அங்கே துரோணருக்கு அருகில், வில்லைக் கொடியில் தாங்கியிருக்கும் வீரர், ஆசானின் {துரோணரின்} மகனான பெரும் தேர்வீரர் அஸ்வத்தாமன் ஆவார். ஆயுதம் தாங்கும் அனைவரிலும் நான் பெரிதும் மதிப்பவர்களில் அவரும் {அஸ்வத்தாமரும்} ஒருவராவார். எனவே, நீ அவரது தேர் அருகே செல்லும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் நிறுத்துவாயாக.

அதோ, தங்கக்கவசம் பூண்டு, {நான்காகப் பிரிக்கப்பட்ட படையின்} மூன்றாவது பிரிவான மிகத் திறமையான துருப்பால் சூழப்பட்டு, தங்கத்தரையில் இருக்கும் யானையைத் தனது கொடியில் கொண்டிருப்பவன், திருதராஷ்டிரரின் மகனான துரியோதனனாவான். ஓ! வீரா {உத்தரா}, எதிரிப்படையின் தேர்களைக் கலங்கடிக்கும் உனது தேரை அவனுக்கு முன்பாக நடத்து. இம்மன்னன் {துரியோதனன்} போர்க்களத்தில் வீழ்த்தப்படக் கடினமானவனும், அனைத்து எதிரிகளையும் கலங்கடிக்க வல்லவனும் ஆவான். கரங்களின் வேகத்தில் இவனே துரோணரின் சீடர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகிறான். நான் விற்கலையில் மேன்மையான வேகத்தைப் போர்க்களத்தில் அவனுக்குக் காட்டுவேன்.

அதோ, யானைகளைக் கட்டும் தடித்த கயிறைத் தனது கொடியில் தாங்கியிருப்பவன் விகர்த்தனன் மகனான கர்ணனாவான். அவனை நீ ஏற்கனவே அறிவாய். ராதையின் அந்தத் தீய மகனருகே {கர்ணனருகே} நீ செல்லும் போது, நீ மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவன் என்னிடம் எப்போதும் மோதலுக்குச் சவால் விடுவான்.

அதோ, (நடுவில்) சூரியனையும், ஐந்து நட்சத்திரங்களையும் தனது நீல நிறக் கொடியில் கொண்டவரும், பெரும் சக்தியுடன் தனது தேரில் நிற்பவரும், கையில் பெரும் வில்லுடன் இருப்பவரும், அற்புதமான கையுறைகளை அணிந்திருப்பவரும், சுத்தமான வெள்ளை நிறத்திலான குடையைத் தனது தலைக்கு மேலே கொண்டவரும், பெருந்திரளான கருமேகங்களுக்கு முன்னிலையில் இருக்கும் சூரியனைப் போல, பல்வேறு கொடிகளும் பதாகைகளும் தாங்கி வரிசையாக நிற்கும் பெருந்தேர்களுக்குத் தலைமையாக நிற்பவரும், சூரியனைப் போன்றும், சந்திரனைப் போன்றும் பிரகாசமிக்கத் தங்க கவசத்தை அணிந்தவரும். தலையில் அணிந்திருக்கும் தங்கக் கவசத்தால் எனது இதயத்தை அச்சமூட்டுபவரும், எங்கள் அனைவருக்கும் பாட்டனுமான சந்தனுவின் மகன் பீஷ்மர் அவரே ஆவார்.

துரியோதனனால், அரசருக்குரிய பிரகாசத்துடன் தான் உற்சாகமூட்டப்படுவதால், அந்த இளவரசனிடம் {துரியோதனனிடம்} அவர் {பீஷ்மர்} பாசம் கொண்டு மிகுந்த பாகுபாட்டுடன்,  இருக்கிறார். அவரை நாம் கடைசியாக அணுகுவோமாக. ஏனெனில், இப்போது கூட அவரால் {பீஷ்மரால்} எனக்குத் தடையாக இருக்க முடியும். என்னோடு {அவர்} போரிடும்போது, குதிரைகளை நீ கவனமாகச் செலுத்துவாயாக” என்றான் {அர்ஜுனன்}. அவனால் {அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்ட விராடன் மகன் {உத்தரன்}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, பெரும் அவசரத்துடன், அந்தச் சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} தேரை, போரிட ஆவலாக நின்று கொண்டிருந்த கிருபரிடம் நடத்திச் சென்றான்.”


இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்