Saturday, February 02, 2013

ருருவும் பிரமத்வரையும்! | ஆதிபர்வம் - பகுதி 8

Ruru and Pramadvara! | Adi Parva - Section 8 | Mahabharata In Tamil

(பௌலோம பர்வம் - 5)

பதிவின் சுருக்கம் : மேனகைக்குப் பிறந்த பிரமத்வரையின் கதை; சியவனனின் பேரன் ருரு; பிரமத்வரையை விரும்பிய ருரு; பிரமத்வரைக்கும், ருருவுக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமணம்; மணப்பெண்ணைக் கடித்த பாம்பு; தனிமையில் சென்ற ருரு....

சௌதி சொன்னார், "ஓ பிராமணரே, பிருகுவின் மைந்தன் சியவனன், தனது மனைவி சுகன்யாவின் {சுகன்னியின்} கருவறையில் ஒரு மைந்தனைப் பெற்றெடுத்தான். அந்த மைந்தன்தான் ஒப்பற்ற சக்தி கொண்ட, புகழ்பெற்ற பிரமதி ஆவான்.(1) பிரமதி கிரீடச்சி {கிருதாசி} கருவறையில் ருருவைப் பெற்றான். ருரு, தனது மனைவி பிரமத்வரையின் மூலம் சுனகன் என்ற மகனைப் பெற்றான்.(2) ஓ பிராமணரே, அபரிமிதமான சக்தி கொண்ட ருருவின் வரலாற்றை முழுவதுமாகக் கூறுகிறேன் கேட்பீராக.(3)

முன்பொரு காலத்தில் தவசக்தியும், கல்வியும், அனைத்துயிரிடமும் அன்பு செலுத்தும் குணமும் கொண்ட ஸ்தூலகேசர் என்ற ஒரு முனிவர் இருந்தார்.(4) ஓ பிராமண முனிவரே {சௌனகரே}, அந்த நேரத்தில், கந்தர்வர்களின் மன்னன் விஸ்வாவசு, தேவலோக நடனமங்கை மேனகையுடன் நெருக்கமாக இருந்தான்.(5) ஓ பிருகுவின் வழித்தோன்றலே {சௌனகரே}, அந்த அப்சரஸ் மேனகை, அவளது நேரம் நெருங்கியதும், ஸ்தூலகேசரின் ஆசிரமத்திற்கருகே ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்தாள்.(6)

புதிதாகப் பிறந்த அந்தக் குழந்தையை அவள் ஆற்றங்கரையிலேயே விட்டுச் சென்று விட்டாள். ஓ பிராமணரே {சௌனகரே}, மேனகை என்ற அந்த அப்சரஸ் இரக்கத்தையும், வெட்கத்தையும் துறந்து அங்கிருந்து சென்றுவிட்டாள்.(7) பெரும் தவவலிமை பொருந்திய ஸ்தூலகேசர், ஆள் நடமாட்டமில்லாத நதிக்கரைப் பகுதியில் அந்தக் குழந்தையைக் கண்டார். அந்தக் குழந்தையானது இறப்பில்லாதவர்களின் {தேவர்களின்} குழந்தை என்றும், அழகால் ஒளிவீசும் ஒரு பெண்குழந்தை என்றும் கண்டுகொண்டார்.(8,9) அந்தப் பெரும் பிராமணரும், முனிவர்களில் முதன்மையானவருமான ஸ்தூலகேசர், இரக்கத்தினால் {மனம்} நிறைந்து அந்தக் குழந்தையை எடுத்து வளர்த்தார். அந்தக் குழந்தையும் அவருடைய புனிதமான இருப்பிடத்திலேயே {ஆசிரமத்திலேயே} வளர்ந்தாள்.(10)

உயர்ந்த மனம் படைத்தவரும், ஆசிர்வதிக்கப்பட்டவருமான ஸ்தூலகேசர் தெய்வீக விதிகளுக்குட்பட்டு {சாஸ்திரங்களுக்குட்பட்டு} பிறந்ததிலிருந்து செய்யவேண்டிய சடங்குகளையெல்லாம் அந்தந்த காலத்தில் அக்குழந்தைக்குச் செய்தார்.(11) தனது நற்குணங்களாலும், அழகாலும், மற்றும் எல்லாப் பண்புகளாலும் அனைத்துப் பெண்களையும் அவள் மிஞ்சி நின்றதால், பிரமத்வரை[1] என்று அந்த முனிவர் அவளை அழைத்தார்.(12) தெய்வத்திற்கு அஞ்சி நடக்கும் ருரு, ஒரு நாள் ஸ்தூலகேசரின் ஆசிரமத்திற்கு அருகே இருந்த பிரமத்வரையைக் கண்டு, காம தேவனின் {மன்மதனின்} கணையால் இதயத்தில் துளைக்கப்பட்டவன் ஆனான்.(13) ருரு, தனது நண்பர்கள் மூலம், பிருகுவின் மகனான தனது தந்தை பிரமதி, தன் ஆசையை அறியும்படி செய்தான்.

[1] பிரமதா என்றால் பெண்கள் என்று பொருள். வரா என்றால் சிறந்தவள் என்று பொருள். எனவே, பிரமத்வரா என்பது பெண்களிற்சிறந்தவள் என்ற பொருளைத் தரும்.

பிரமதி தனது மகனுக்காக மிகவும் புகழ்வாய்ந்த ஸ்தூலகேசரிடம் அவளைக் {பிரமத்வரையைக்} கேட்டான்(14). அவளது வளர்ப்புத்தந்தை {ஸ்தூலகேசர்}, அந்தக் கன்னிப்பெண் பிரமத்வரையை ருருவுக்கு நிச்சயித்துக் கொடுத்தார். திருமணம் அடுத்து வரும் வர்க தைவதா {பூரம்} நட்சத்திரத்தில்[2] என நிச்சயமானது.(15)

[2] கும்பகோணம் ஹஸ்தம் நட்சத்திரம் என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக் திப்ராயின் பதிப்பிலும், கங்குலியில் உள்ளதைப் போலவே பூரம் நட்சத்திரம் என்றே இருக்கிறது.

திருமணத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு, அந்த அழகான கன்னிப்பெண் மற்ற பெண்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது,(16) விதி வசத்தால் அவளது நேரம் நெருங்கி வந்தது. வழியில் சுருண்டு கிடந்த ஒரு பாம்பைக், கவனியாமல், அதை மிதித்துவிட்டாள்.(17) அந்த ஊர்வனவும் {பாம்பும்}, விதியின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் தூண்டப்பட்டு, கவனக்குறைவாக இருந்த அவளது உடம்பில் தனது நஞ்சுப் பற்களைச் செலுத்தியது.(18)

பாம்பால் கடிபட்டதும், அவள் {பிரமத்வரை} உணர்விழந்து தரையில் விழுந்தாள். அவளது நிறம் மங்கி ஒளி குன்றியது.(19) கலைந்த கேசத்துடன் கிடந்த அவள் துன்பத்தைத் தருகின்ற ஒரு காட்சி பொருளானாள். காண்பதற்கு இனிமையானவளான அவள் இறந்து கிடப்பதைக் காண்பது வேதனையைத் தந்தது.(20) விஷம் ஏறி, தரையில் விழுந்து கிடந்த அந்தக் கொடியிடையாள், தூங்குபவளை போலக் காட்சியளித்து, அந்நிலையிலும், உயிரோடு இருந்தபோதை விட அழகாக இருந்தாள்.(21)

வளர்ப்புத் தந்தையும் {ஸ்தூலகேசரும்}, மற்ற முனிவர்கள் அனைவரும் அங்கு வந்து, அழகான தாமரை மலரைப் போலத் தரையில் அசைவில்லாமல் கிடக்கும் அவளைக் {பிரமத்வரையை} கண்டனர்.(22) சுவஸ்தியாத்ரேயர், மஹாஜானு, குசிகர், சங்கமேகலர்,(23) உத்தாலகர், கடர், அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஸ்வேதர், பரத்வாஜர், கௌணகுத்சியர், ஆர்ஷ்டிஷேணர், கௌதமர்,(24) பிரமதி, அவனது மகனான ருரு, மற்றும் அந்தக் கானகத்தில் வசிப்போர் ஆகியோர் அங்கே வந்தனர். பாம்பு கடித்ததால், தரையில் உயிரற்ற சடலமாகக் கிடக்கும் அந்த மங்கையைக் கண்டு அனைவரும் துக்கத்தில் அழுதனர். இந்த நிகழ்ச்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட ருரு அந்த இடத்தைவிட்டு அகன்றான்." {என்றார் சௌதி}.(25)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்