Friday, February 08, 2013

காலகூட நஞ்சையுண்ட மகேஸ்வரன்! | ஆதிபர்வம் - பகுதி 18

Maheswara swallowed poisonous Kalakuta! | Adi Parva - Section 18 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 6)

பதிவின் சுருக்கம் : மந்தர மலையைப் பெயர்த்தெடுத்த அனந்தன் என்ற பாம்பு; கடைவதற்காகப் பெருங்கடலை வேண்டிய தேவர்கள்; ஆமையின் முதுகில் மந்தர மலையை வைத்தது; வாசுகி என்ற பாம்பைக் கயிறாக்கி மந்தர மலையைக் கொண்டு அந்தப் பெருங்கடலைக் கடைந்த தேவர்களும், அசுரர்களும்; கடைந்ததில் இறுதியாக வந்த காலகூட நஞ்சு; பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் அந்த நஞ்சை விழுங்குவது; பெண்ணுரு கொண்ட நாராயணன்...

பாற்கடல் கடைதல்
"சௌதி சொன்னார், "மேகம்போன்ற முகடுகளைக் கொண்டதும், மந்தரம் என்றழைக்கப்பட்டதுமான ஒரு மலை இருந்தது. அந்தச் சிறந்த மலையெங்கும் ஒன்றோடொன்று பின்னிக்கொண்ட மூலிகைகள் நிறைந்திருந்தன.(1) எண்ணற்ற பறவைகள் தங்கள் மெல்லிசைகளை எழுப்பியும், விலங்குகள் இரையைத் தேடியும் அலைந்து கொண்டிருந்தன. தேவர்கள், அப்சரஸ்கள் மற்றும் கின்னரர்கள் அந்த இடத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.(2) பதினோராயிரம் யோஜனைகள்[1] மேலெழுந்தவாரியும், அதே அளவு {சம பங்கு} கீழிறங்கியவாறும் அஃது இருந்தது.(3) தேவர்கள் கடலைக் கடையும் மத்தாக அந்த மலையைப் பயன்படுத்த எண்ணி, அதைப் பெயர்த்தெடுக்க முயன்றுத் தோற்றனர். ஆகவே அவர்கள், ஒன்றாக அமர்ந்திருந்த விஷ்ணு மற்றும் பிரம்மனிடம்,(4) "எங்கள் நன்மைக்காக இந்த மலையை எப்படிப் பெயர்த்தெடுப்பது என்று ஆலோசனை வழங்குவீராக" என்று வேண்டினர்."(5)


[1] அதாவது 88,000 மைல்கள் {1 யோஜனை = 8 மைல்கள்} மேலெழுந்தவாரியாக – புவி ஓட்டுக்கு மேல் தெரியும் பகுதி, கீழிறங்கியவாறு – பூமிக்குள் புதைந்து அமைந்த பகுதி

சௌதி தொடர்ந்தார், "ஓ பிருகு குல மைந்தரே{சௌனகரே}! விஷ்ணுவும் பிரம்மனும் அதற்கு ஒப்புக் கொண்டனர்.

அந்தத் தாமரைக்கண்ணன் (விஷ்ணு), கடினமான அவ்வரும்பணியைப் பாம்புகளின் இளவரசனான அனந்தனுக்குக் {திருமாலின் படுக்கையான ஆதிசேஷன் என்ற பாம்புக்கு} கொடுத்தான்.(6) ஓ பிராமணரே {சௌனகரே}, பிரம்மனாலும், நாராயணனாலும் அறிவுறுத்தப்பட்ட அந்தப் பலம்பொருந்திய அனந்தன், அந்த மலையை, அதன் கானகங்களுடனும், அவற்றில் வசித்த உயிர்களுடனும் பெயர்த்தெடுத்தான்.(7,8) தேவர்கள், கடலின் கரைக்கு அனந்தனுடன் வந்து, பெருங்கடலிடம் {சமுத்திரத்திடம்}, "ஓ கடலே! நாங்கள் உன்னைக் கடைந்து, அமுதத்தை எடுக்க வந்துள்ளோம்" என்றனர்.(9) அதற்கு அந்தப் பெருங்கடல், "அப்படியே ஆகட்டும், ஆனால் கிடைப்பனவற்றில் எனக்கும் பங்கு வேண்டும். கடையும்போது, அந்த மலையின் சுழற்சியால் ஏற்படும் கலக்கத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியும்" என்றது.(10) அதன்பிறகு தேவர்கள், ஆமை மன்னனிடம் {திருமாலின் கூர்ம அவதாரம்} சென்று, "ஓ ஆமை மன்னா! நீ அந்த மலையை உன் முதுகில் தாங்கிக் கொள்ள வேண்டும்" என்றனர்.(11) ஆமை மன்னனும் அதற்கு ஒப்புக்கொண்டதால், இந்திரன் மந்தர மலையை முன்னவனின் {ஆமையின்} முதுகில் வைக்கச் செய்தான்.(12)

தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையை மத்தாக வடித்து, வாசுகியை (பாம்பினை) கயிறாகப் பயன்படுத்தி, அமுதத்துக்காக அந்தக் கடலைக் கடைய ஆரம்பித்தனர். அசுரர்கள் வாசுகியின் தலைப் பக்கம் பிடித்துக் கொண்டனர், தேவர்கள் அவனது வால்பக்கம் பிடித்துக் கொண்டனர்.(13,14) அனந்தன், தேவர்களின் பக்கம் நின்று {தேவர்களின் நன்மைக்காக} வாசுகியின் தலையை உயர்த்துவதும், திடீரெனத் தாழ்த்துவதுமாக இருந்தான்.(15) தேவர்களும் அசுரர்களும் இழுத்த இழுப்பில், வாசுகியின் வாயிலிருந்து கரும்புகை நெருப்புடன் வெளிப்பட ஆரம்பித்தது.(16) அந்தப் புகை மேகமாக மாறி, இடி மின்னலுடன் கூடிய மழையைப் பொழிந்து களைத்துப் போன தேவர்களுக்குப் புத்துணர்ச்சி கொடுத்தது.(17) மத்தாகச் சுழன்ற மந்தர மலையில் இருந்து அனைத்துப் பக்கங்களிலும் விழுந்த மலர்களும் அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தன.(18)

ஓ பிராமணரே! {சௌனகரே}, கடலில் இருந்து ஒரு கடுமையான முழக்கம் கேட்டது. அஃது ஊழிக் காலத்தில் மேகங்கள் இடும் முழக்கத்திற்கு ஒப்பானதாக இருந்தது.(19) பெரிய நீர் விலங்குகள் அந்தப் பெரிய மலையின் சுழற்சியால் அந்த உப்பு நீரிலேயே தமது உயிரை விட்டன.(20) பாதாள உலகில் வசிப்பவர்களும், வருணனின் உலகில் வசித்தவர்களும் கொல்லப்பட்டனர்.(21) மந்தர மலை சுழன்று கொண்டிருக்கும்போது அதன் மீதிருந்து பறவைகளுடன் கூடிய பெரிய மரங்களும் வேருடன் பிடுங்கப்பட்டு நீருக்குள் விழுந்தன.(22) மேலும் பல மரங்கள் ஒன்றோடொன்று உராய்ந்து அவ்வப்போது நெருப்பை உண்டாக்கின. அப்படி அந்த மலை மின்னலுடன் கூடிய கருமேகம் போல் காட்சியளித்தது. (23) ஓ பிராமணரே! {சௌனகரே}, நெருப்புப் பரவி சிங்கங்களும், யானைகளும், மற்ற உயிரினங்களும் அதில் சாம்பலாகின.(24) பிறகு இந்திரன் பெரும் மழையைப் பொழிந்து அந்த நெருப்பை அடக்கினான்.(25)

ஓ பிராமணரே! {சௌனகரே}, இப்படியே கடைந்துகொண்டு சிலகாலம் ஆனதும், மரங்களின் பாலும் அமுதத்தின் தன்மை கொண்ட மூலிகைகளும் ஒன்றாகக் கலந்து அந்தக் கடலில் கலந்தது.(26) தேவர்கள், அந்தக் கூழுடனும், தங்கச்சாற்றுடனும் {தங்கரஸத்துடனும்} கலந்த நீரைக் குடித்தே அமரத்துவம் அடைந்தனர்.(27) கொந்தளித்த கடலின் பால் போன்ற நீர் {கொந்தளித்த அந்தப் பாற்கடல்} நன்றாகக் கடையப்பட்டு அந்தக் கூழான சாற்றின் தன்மையால் தெளிந்த நெய்யைப் போன்று காட்சியளித்தது. ஆனால் அப்போதும் அமுதம் தோன்றவில்லை.(28) தன் ஆசனத்தில் அமர்ந்திருந்த வரங்கொடுக்கும் பிரம்மன் முன்பு தேவர்கள் வந்து, "தகப்பனே, நாங்கள் களைப்படைந்தோம். மேலும் கடைவதற்கு எங்களிடம் பலம் இல்லை. அமுதம் இன்னும் உதிக்கவில்லை. எங்களுக்கு வேறு வழியில்லை. நாராயணனைத் தவிர எங்களுக்கு வேறு ஆதாரம் இல்லை {உதவுபவர் வேறு ஒருவருமில்லை}" என்றனர்.(29,30)

"இதைக் கேட்டதும் பிரம்மன், நாராயணனிடம், "ஓ தெய்வமே! தேவர்களுக்கு மீண்டும் கடலைக் கடைவதற்கான பலத்தை அருள்வாயாக" என்றான்.(31)

பிறகு நாராயணன் அவர்களது பல்வேறு வேண்டுதல்களை {பிரார்த்தனைகளை} நிறைவேற்ற உறுதிகூறி, "ஞானமுள்ளவர்களே, போதிய பலத்தை உங்களுக்குத் தருகிறேன். போய் மலையை மீண்டும் சரியான இடத்தில் வைத்து நீரைக் கடையுங்கள்" என்றார்.(32)

அப்படிப் பலத்தை மீண்டும் பெற்ற தேவர்கள் திரும்பவும் கடையத் தொடங்கினர்.(33) சிறிது காலத்திற்குப் பிறகு மென்மையான ஆயிரங்கதிர்களுடன் நிலவு (சந்திரன்) கடலில் இருந்து உதித்தான்.(34)

வெண்மையான உடையுடன் லட்சுமியும், அதன் பிறகு சோமமும், அதன்பிறகு வெள்ளைக் குதிரையும்,(35) அதன்பிறகு நாராயணனின் மார்பை அலங்கரிக்கும் தெய்வீக ரத்தினமான கௌஸ்துபமும் வெளிப்பட்டன.(36) லட்சுமி, சோமம், மனத்தின் வேகங்கொண்ட குதிரை என அனைவரும், மகிழ்ச்சியுடன் இருந்த தேவர்கள் முன்னிலையில் வந்தனர்.(37,38) அதன்பிறகு அமுதம் கொண்ட வெள்ளைப் பாத்திரத்தோடு தன்வந்தரி உதித்தான்.(39) அவனைப் பார்த்ததுமே, அசுரர்கள் "அஃது எங்களுடையது" என்று பெரிதும் கூச்சலிட்டனர்.(40)

நீண்ட நேரத்திற்குப் பிறகு, சிறந்த யானையான ஐராவதன், இரு ஜோடி வெள்ளைத் தந்தங்களுடனும், பெருத்த உடலுடனும் தோன்றினான். அவனை இடிக்குத் தலைவனான இந்திரன் எடுத்துக்கொண்டான்.(41) கடைதல் நடந்து கொண்டே இருந்தது. இறுதியாகக் காலகூட {ஹாலாஹலம் என்ற} நஞ்சு வெளிப்பட்டது[2].(42) புகையுடன் கூடிய நெருப்புடன் அஃது உலகத்தையே விழுங்கிவிடுவது போலத் தகித்தது. பயத்தைத் தரும் காலகூடத்தின் மணத்தை நுகர்ந்தே மூன்று உலகங்களும் உணர்விழந்தன.

[2] காலகூட நஞ்சுதான் முதலில் தோன்றியது என்று சொல்லும் பதிப்புகளும் இருக்கின்றன. அவையே சரியானதாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் அமுதம் முதலிலேயே கிடைத்துவிட்டால், பிறகும் ஏன் கடலைக் கடைய வேண்டும்.

படைக்கப்பட்டவற்றின் பாதுகாப்புக்காக, பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் அந்த நஞ்சை எடுத்து விழுங்கினான்.(43) அந்தத் தெய்வீகமான மகேஸ்வரன் {சிவன்}, அந்த நஞ்சைத் தனது தொண்டையில் நிறுத்தினான். ஆகையால் அதுமுதல் அவன் நீலகண்டன் (நீல நிற தொண்டையுள்ளவன்) என அழைக்கப்படுகிறான் என்று சொல்லப்படுகிறது.(44) இந்த அற்புதமான நிகழ்வுகள் அனைத்தையும் கண்ட அசுரர்கள் நம்பிக்கையிழந்தனர். அமுதத்தையும், லட்சுமியையும் பெற தேவர்களைப் பகைத்துக் கொள்ளத் தயாராகினர்.(45)

அந்நேரத்தில் நாராயணன் தனது மயக்கும் மாய சக்தியின் உதவியால் (ஏமாற்றும் சக்தி) மதியைக் கவரும் பெண்ணுருக் கொண்டு தானவர்களிடம் இதமான காதல் மொழி பேசினான்.(46) தானவர்களும், தைத்தியர்களும் அந்த மங்கையின் பேரழகினாலும், கவர்ச்சியானாலும் மயக்கப்பட்டு, மதியிழந்து அனைவரும் சேர்ந்து அந்த அமுதத்தை அந்த அழகு மங்கையின் கையிலேயே கொடுத்தனர்" {என்றார் சௌதி}.(47)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்