Thursday, February 21, 2013

கருடன் வேட்டை! | ஆதிபர்வம் - பகுதி 28

Garuda's Hunt! | Adi Parva - Section 28 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 16)

பதிவின் சுருக்கம் : அமுதத்தைத் தேடிச் சென்ற கருடனுக்குத் தாயின் அறிவுரை; நிஷாதர்களைக் கொன்று தின்ற கருடன்...

வினதையிடம் விடைபெற்று சென்ற கருடன்
சௌதி சொன்னார், "இப்படிப் பாம்புகள் சொல்ல, அதைக் கேட்ட கருடன் தனது தாயிடம், "நான் சென்று அமுதத்தைக் கொண்டு வருகிறேன். வழியிலேயே ஏதாவது நான் சாப்பிட விரும்புகிறேன். எனக்கு வழிகாட்டுவாயாக" என்றான்.(1) வினதை, "தொலைதூரத்தில், நடுக்கடலில் நிஷாதர்களின் அழகான வசிப்பிடம் இருக்கிறது. அங்கு வாழும் ஆயிரக்கணக்கான நிஷாதர்களைத் தின்று அமுதத்தைக் கொண்டு வருவாயாக.(2) ஆனால், எந்த ஒரு பிராமணனின் உயிரையும் மாய்க்க உன் மனதில் எண்ணாதே. எல்லா உயிரினங்களிலும் பிராமணன் கொல்லப்படக்கூடாது. அவன் உண்மையில் நெருப்பு போன்றவன்.(3) ஒரு பிராமணன் கோபம் கொள்ளும்போது, நெருப்பு போல, அல்லது சூரியனைப் போல அல்லது கூரிய முனை கொண்ட ஆயுதம் போல அல்லது விஷம் போல ஆகிறான்.

பிராமணன் எல்லா உயிரினங்களுக்கும் தலைவனாகச் சொல்லப்படுகிறான். இதற்காகவும், பிற காரணங்களுக்காகவும் ஒழுக்கம் மிகுந்தவர்களிடையே பிராமணன் போற்றப்படுகிறான்.(4) அதனால் பிராமணர்களுடன் பகை என்பது எந்தச் சூழ்நிலையிலும் நல்லதல்ல. ஓ மகனே! உனக்குக் கோபம் உண்டானாலும், பிராமணர்களைக் கொல்லாதிருப்பாயாக.(5) ஓ பாவங்களற்றவனே! கடுமையான விரதங்கள் இருந்த ஒரு பிராமணனின் கோபம் எரிப்பது போல, சூரியனாலும் அக்னியாலும் கூட எரிக்க முடியாது.(6) இது போன்ற பல குறிப்புகளைக் கொண்டு ஒரு நல்ல பிராமணனை நீ அறியலாம். பிராமணனே எல்லா உயிர்களிலும் முன் பிறந்தவன். நான்கு வர்ணங்களில் முதன்மையானவன். அவன் எல்லா உயிரினங்களுக்கும் தந்தையும் தலைவனும் ஆகிறான்" என்றாள்.(7)

கருடன், "ஓ தாயே! {வினதையே}, பிராமணன் என்பவன் எந்த உருவத்தில் இருப்பான்? அவனுடைய நடத்தை எப்படியிருக்கும்? எந்தச் சக்திகள் கொண்டவனாக இருப்பான்? அவன் நெருப்பைப் போல ஒளிர்வானா? அல்லது அவன் அமைதிமிக்கவனா?(8) ஓ தாயே, எந்தச் சிறந்த அறிகுறிகளைக் கொண்டு ஒரு பிராமணனை அடையாளம் காண முடியும்? எனக்கு நீ பதில் சொல்வதே உனக்குத் தகும்" என்று கேட்டான்.(9) வினதை, "ஓ குழந்தாய்! உனது தொண்டையில் நுழைந்தவுடன், மீன்முள் தைத்தது போலவோ, நிலக்கரி எரிவது போலவோ உனக்குத் துன்பத்தை ஏற்படுத்துபவனை, பிராமணர்களில் சிறந்தவனாக நீ அறிந்து கொள்வாயாக.(10) கோபத்தால் எந்த ஒரு பிராமணனையும் நீ கொல்லக்கூடாது" என்றாள்.

வினதை தனது மகன் {கருடன்} மீது கொண்ட பாசத்தால் மீண்டும்,(11) "உனது குடலால் செரிக்கப்பட முடியாதவனை நல்ல பிராமணனாக அறிந்து கொள்வாயாக" என்றாள்.(12) பாம்புகளால் ஏமாற்றப்பட்டு, பெருந்துன்பத்திற்கு உள்ளான வினதை, தனது மகனின் {கருடனின்} ஒப்பற்ற பலத்தை அறிந்திருந்தாலும் அவனை முழு மனதோடு ஆசிர்வதித்தாள்.(13) "மாருதன் (காற்று தேவதை) உனது சிறகுகளைக் காக்கட்டும், உனது முதுகெலும்பை சூரியனும் சந்திரனும் காக்கட்டும். அக்னி உனது தலையைக் காக்கட்டும், வசுக்கள் உனது முழு உடலையும் காக்கட்டும்.(14) நானும் உனது நன்மைக்காக இங்கே அமர்கிறேன். ஓ குழந்தாய்! பத்திரமாகச் சென்று உன் காரியத்தை முடிப்பாயாக" என்று கூறினாள்."(15)

சௌதி தொடர்ந்தார், "தன் தாயின் இந்த வார்த்தைகளைக் கேட்ட கருடன், தனது சிறகுகளை விரித்து, வானத்தில் உயர்ந்தான். அந்தப் பெரும்பலம் வாய்ந்தவன், பசித்தவன், விரைவாகச் சென்று இன்னொரு எமனைப் போல நிஷாதர்கள் மீது விழுந்தான்.(16)

நிஷாதர்களைக் கொல்ல விரும்பிய அவன் {கருடன்}, அந்த இடத்தில் பெரும் தூசிப்படலத்தைக் கிளப்பி ஆகாயத்தை மறைத்தான். கடலிலிருந்து தண்ணீரை உறிஞ்சி எடுத்து {கடலை வற்ற செய்து}, மலைகளில் வளரும் மரங்களைக் குலுக்கினான்.(17) அந்தப் பறவைகளின் மன்னன் {கருடன்}, தனது வாயால் {அலகால்}, நிஷாதர்களுடைய நகரத்தின் முக்கிய வாயில்களை அடைத்து அந்த வாயைப் பெரிதாக்கினான். அந்த நிஷாதர்கள் பெரும் வேகத்துடன் பாம்பை உண்ணும் அவனது {கருடனின்} திறந்த வாய் இருக்கும் திசை நோக்கியே ஓடினர்.(18) காற்றினால் அசைக்கப்பட்ட காட்டு மரங்களிலிருந்து எப்படி ஆயிரக்கணக்கான பறவைகள் பெரிதும் கலக்கமுற்று விண்ணில் எழுமோ, அவ்வாறே அந்த நிஷாதர்கள், புயலினால் உண்டான புழுதியில் குருடாகி அவர்களை வரவேற்க விரிந்து திறந்திருந்த கருடனின் வாயில் போய் விழுந்தனர்.(19) பிறகு அந்த எதிரிகளை அழிப்பவனும், பெரும் பலம் பொருந்தியவனும், தன் காரியத்தை முடிக்கப் பெரும் லாகவத்தோடு நகர்பவனும், பசித்தவனுமான அந்த விண்ணோடிகளின் தலைவன் (கருடன்}, மீன்பிடி தொழிலைச் செய்துவந்த எண்ணற்ற நிஷாதர்களைத் தன் வாயை மூடி கொன்றான்" {என்றார் சௌதி}.(20)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்