Saturday, February 02, 2013

பாம்பினத்தை அழிப்பதாக ருரு ஏற்ற உறுதி | ஆதிபர்வம் - பகுதி 9

Ruru's vow for the destruction of the serpent-race! | Adi Parva - Section 9 | Mahabharata In Tamil

(பௌலோம பர்வம் - 6)

பதிவின் சுருக்கம் : ருருவின் புலம்பல்; ருருவின் பாதி ஆயுளைக் கொண்டு மீண்டும் உயிர்பெற்ற பிரமத்வரை; ருரு பிரமத்வரை திருமணம்; துந்துபா பாம்பைக் கண்ட ருரு...

சௌதி சொன்னார், "பிரமத்வரையின் உயிரற்ற சடலத்தைச் சுற்றி புகழ்பெற்ற பிராமணர்கள் அமர்ந்திருக்கும்போது, பெரும் துக்கமடைந்த ருரு அடர்ந்த கானகத்தின் ஆழத்துக்குச் சென்று சத்தம்போட்டு கதறி அழுதான்.(1) துயரத்தால் உந்தப்பட்டுப் பரிதாபகரமாக ஒப்பாரி வைத்தான். தன் அன்பிற்குரியவளான பிரமத்வரையை நினைத்த ருரு தன் துக்கத்தைத் தீர்த்துக்கொள்ளப் பின் வரும் வார்த்தைகளில்,(2) “ஐயோ! {அந்தப்} பேரழகி இப்படிக் கட்டாந்தரையில் கிடந்து என் துயரைப் பெருகச் செய்தாளே! இதைவிட எங்களுக்கும், அவள் நண்பர்களுக்கும் துயர் தருவது ஏது?(3) நான் கொடையளித்திருந்தால், தவம் செய்திருந்தால், மேலோரை எப்போதும் மதித்திருந்தால், இந்தச் செயல்களின் புண்ணியம் என் அன்பிற்குரியவளை உயிர்மீட்டுத் தரட்டும்!(4) நான் பிறந்ததிலிருந்து ஆசைகளை அடக்கி, நோன்புகளைக் கடைப்பிடித்திருந்தேன் என்றால் அந்த அழகான பிரமத்வரை தரையிலிருந்து எழுந்திருக்கட்டும்” என்று புலம்பினான்.(5)

தன் துணையை இழந்ததினால் ருரு இப்படிக் கதறிக்கொண்டிருக்கையில், தேவலோகத் தூதுவன் ஒருவன், அந்தக் கானகத்துக்கு வந்து, அவனிடம் {ருருவிடம்},(6) "ஓ ருருவே, உனது துயர் மேலீட்டால் நீ இப்போது உதிர்த்தாயே வார்த்தைகள், அவை பயனற்றவை. ஓ நல்லவனே, இந்த உலகத்தில் உள்ளவர்களுக்கு நாட்கள் முடிந்தால், அவர்கள் திரும்பி வருவதில்லை.(7) கந்தர்வருக்கும், அப்சரசுக்கும் பிறந்த அந்தப் பரிதாபத்திற்குரிய குழந்தையின் நாட்கள் முடிந்துவிட்டன. அதனால் மகனே, நீ உன் இதயத்தைத் துயருக்குப் பறிகொடுக்காதே.(8) இருந்தாலும், ஒப்பற்ற தேவர்கள் அவளது உயிரை மீட்கும் வழி குறித்து முன்பே சொல்லி வைத்துள்ளனர். நீ அதன்படி நடந்தால் பிரமத்வரை {மீண்டும்} கிடைக்க வாய்ப்பிருக்கிறது" என்றான்.(9)

ருரு, "ஓ தேவலோகத் தூதுவரே! அந்தத் தேவர்கள் என்னதான் கட்டளையிட்டிருகின்றனர். முழுவதும் {முழு விவரம்} கூறினால், நான் (அதைக் கேட்டு) அப்படியே நடந்துகொள்வேன். என்னைத் துன்பத்திலிருத்து விடுவிப்பதே உமக்குத் தகும்” என்றான்.(10) அதற்குத் தேவதூதுவன், "உனது வாழ்நாட்களில் பாதியை உனது துணைக்குக் கொடுக்க வேண்டும். பிருகுவின் பரம்பரையில் வந்த ஓ ருருவே, உனது பிரமத்வரை தரையில் இருந்து எழுந்து வருவாள்" என்றான்.(11)

ருரு, "ஓ தேவதூதர்களில் சிறந்தவரே, நான் எனது வாழ்நாளில் பாதியை எனது துணைக்கு அதிவிருப்பத்துடன் கொடுப்பேன். எனது அன்புக்குரியவளை மறுபடியும் அவளது {பழைய} உடைகளுடனே, அழகான அவள் தோற்றத்துடனே எழுப்புவீராக" என்றான்."(12)

சௌதி சொன்னார், "பிறகு நற்குணங்கள் கொண்டவர்களாகிய கந்தர்வ மன்னனும் (பிரமத்வரையின் தகப்பனும்), தேவதூதனும், இருவரும் தர்மதேவனிடம் சென்று,(13) "ஓ அறமன்னா {தர்மராஜா}, உமக்கு விருப்பமிருந்தால் {சம்மதமிருந்தால்} ருருவுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த இனிமையான பிரமத்வரையை, அவனது {ருருவின்} பாதி வாழ்நாட்களைக் கொண்டு உயிர்ப்பிப்பாயாக" என்றான்.(14) அதற்கு அந்த அறமன்னன், "ஓ தேவதூதா, உனது விருப்பத்தின்படியே, ருருவின் பாதி ஆயுளைக் கொண்டு, அவனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பிரமத்வரை எழுந்திருக்கட்டும்" என்றான்."(15)

சௌதி தொடர்ந்தார், "அறமன்னன் இவ்வாறு சொன்னதும், தேர்ந்த நிறமுடைய அந்த மங்கை பிரமத்வரை, ருருவின் பாதி ஆயுளை எடுத்துக் கொண்டு, தூக்கத்திலிருந்து எழுவதைப் போல் எழுந்தாள்.(16) ருரு தனது பாதி ஆயுளைத் தனது துணை உயிர்த்தெழ தந்ததால், பின்னர் அவனது ஆயுள் சுருங்கியது.(17)

ஒரு நன்னாளில், அவர்களது தந்தைமார், அவர்களுக்கு முறையான சடங்குகளுடன் திருமணம் செய்து வைத்தனர். அந்தத் தம்பதியினரும் ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புடன் தங்கள் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தனர்.(18) அவ்வளவு அழகான, கிடைப்பதற்கரிதான, தாமரை இதழ்களின் காந்தியை ஒத்த மங்கையை மணந்து கொண்ட பிறகும் கூட, ருரு {பாம்பினத்தின் மீது கொண்ட கோபம் காரணமாக} பாம்பினத்தையே அழிப்பதாக உறுதியேற்றான்.(19) எப்பொழுதெல்லாம் அவன் பாம்பைக் கண்டானோ அப்பொதெல்லாம் பெரும்கோபத்தில் நிறைந்து, ஒரு ஆயுதத்தை எடுத்து அந்தப் பாம்பைக் கொன்று வந்தான்.(20)

ஓ பிராமணரே {சௌனகரே}, ஒரு நாள் ருரு ஒரு பெரிய கானகத்திற்குள் நுழைந்தான். அங்கே ஒரு வயதான துந்துபா {டுண்டுப} வகையைச் {நீர்பாம்பு வகை} சார்ந்த ஒரு பாம்பு தரையில் கிடப்பதைக் கண்டான்.(21) கோபத்தால் உந்தப்பட்ட ருரு, அந்தப் பாம்பைக் கொல்ல மரணக்கோல் {யமனின் தண்டத்தைப்} போல இருந்த தன் தடியை உயத்தினான். அப்போது அந்தத் துந்துபா {தண்ணீர்ப்பாம்பு} ருருவிடம்,(22) "ஓ பிராமணா! நான் உனக்கு எந்தக் கெடுதலையும் செய்யவில்லையே. பிறகு ஏன் கோபங்கொண்டு என்னைக் கொல்ல வருகிறாய்" என்றது" {என்றார் சௌதி}.(23)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்