Monday, August 19, 2013

ஒரு பெண்ணுக்குப் பல கணவர்களா? - ஆதிபர்வம் பகுதி 198

Polyandry! | Adi Parva - Section 198 | Mahabharata In Tamil

(வைவாஹிக பர்வம் - 04)

பதிவின் சுருக்கம் : ஒருத்திக்கு பலர் கணவராக இருப்பதில் துருபதன் முதலியோருக்குள்ள மறுப்புகளைக் கேட்ட வியாசர்; பிறகு, திரௌபதி ஐவருக்கு மனைவியாவது அறமே எனச் சொன்ன வியாசர்...

வைசம்பாயனர் சொன்னார், "பாண்டவர்கள் அனைவரும், பாஞ்சாலர்களின் சிறப்பு வாய்ந்த மன்னனும், மற்றும் ஏனையோரும் எழுந்திருந்து சிறப்பு வாய்ந்த முனிவர் கிருஷ்ணருக்கு (துவைபாயனருக்கு) {வியாசருக்கு} மரியாதையுடன் தங்கள் வணக்கத்தைச் செலுத்தினர்.(1) அந்த உயர் ஆன்ம முனிவர், அவர்கள் அனைவருக்கும் பதில் வணக்கம் செலுத்தி, அனைவரின் நலனையும் விசாரித்தபடி கீழே தங்கத் தரைவிரிப்பில் அமர்ந்தார்.(2) அளவிலா சக்தி கொண்ட கிருஷ்ணரால் (துவைபாயனரால்) {வியாசரால்} ஆணையிடப்பட்ட அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள் தங்கள் விலையுயர்ந்த ஆசனங்களில் அமர்ந்தனர்.(3) சிறிது நேரத்திற்குப் பிறகு, ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்தப் பிருஷதனின் மகன் {துருபதன்} இனிமையான குரலில் சிறப்பு மிகுந்த முனிவரிடம் தனது மகளின் {திரௌபதியின்} திருமணம் குறித்துப் பேசினான்.(4)

அவன், "ஓ சிறந்தவரே, பாவத்தின் கறை படியாமல் ஒரு பெண் எப்படிப் பல மனிதர்களுக்கு மனைவியாக முடியும்? இது குறித்து எனக்கு உண்மையைச் சொல்லுங்கள்" என்று கேட்டான்.(5)

இவ்வார்த்தைகளைக் கேட்ட வியாசர், "ஓ மன்னா, இந்த நடைமுறை பயன்பாட்டுக்கும், வேதங்களுக்கும் எதிராக இருப்பதால் வழக்கற்றுப் போயிற்று. இருப்பினும் நான், இக்காரியத்தில் உங்கள் ஒவ்வொருவரின் கருத்தையும் கேட்க விரும்புகிறேன்" என்று சொன்னார்.(6)

முனிவரின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, முதலில் துருபதன் பேசினான், "பயன்பாட்டிலும், வேதங்களாலும் எதிர்க்கப்பட்டிருக்கும்போது, இந்த நடைமுறை பாவகரமானது என்பது எனது கருத்து, ஓ பிராமணர்களில் சிறந்தவரே, பலர் கூடி ஒரு மனைவியை வைத்திருப்பதை நான் எங்கும் கண்டிலேன்.(7) பழங்காலத்தில் இருந்த சிறப்பு வாய்ந்தவர்கள் கூட இது போன்ற பயன்பாட்டை கொண்டிருக்கவில்லை. ஞானிகள் ஒருபோதும் பாவம் செய்யமாட்டார்கள்.(8) எனவே, நான் இவ்வழியில் செயல்பட எனது மனத்தைத் தயார் செய்ய முடியாது. இந்த நடைமுறை எனக்குச் ஐயத்திற்கிடமான அறமாகவே படுகிறது" என்றான் {துருபதன்}.(9)

துருபதன் சொல்லி முடித்ததும், திருஷ்டத்யும்னன், "ஓ பிராமணர்களில் காளையே, ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! ஓ பிராமணரே! நல்ல மனநிலையில் உள்ள {நல்ல குணத்தைக் கொண்ட} ஓர் அண்ணன், தனது தம்பியின் மனைவியை எப்படி அணுக முடியும்?(10) அறவழிகள் நுட்பமானவை {தர்மத்தின் பாதைகள் புதிரானவை}, எனவே, அதுகுறித்து நாம் அறிவதில்லை. நாம் அறத்திற்கு உகந்தது எது, எது இல்லை என்பதைச் சொல்ல முடியாது.(11) எனவே, மனசாட்சியுடன் நாம் அத்தகு செயலைச் செய்ய முடியாது. உண்மையில், ஓ பிராமணரே! 'திரௌபதி, ஐந்து சகோதரர்களுக்குப் பொது மனைவியாக இருக்கட்டும்' என்று என்றால் சொல்ல முடியவில்லை" என்று பேசினான் {திருஷ்டத்யும்னன்}.(12)

பிறகு யுதிஷ்டிரன், "எனது நாக்கு ஒருபோதும் பொய்ம்மையைப் பேசுவதில்லை. எனது இதயம் ஒருபோதும் பாவமெனப்பட்டதை நோக்கி உயர்வதில்லை. ஒன்றை எனது இதயம் அங்கீகரிக்கும் போது, ஒருபோதும் அது பாவகரமாக இருக்க முடியாது.(13) புராணங்களில் நான் ஜடிலை என்ற பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கோதம குலத்தைச் சார்ந்த அந்த அறம்சார்ந்த மங்கையரில் முதன்மையானவள் {ஜடிலை}, ஏழு முனிவர்களைத் திருமணம் செய்தாள்.(14) அதே போல, மரத்தில் பிறந்தவளான ஒரு துறவியின் மகள் {வார்க்ஷி [மாரிஷா]},  முன்பொரு காலத்தில், தவத்தின் உச்சத்தை அறிந்த ஆன்மாக்களான பிரசேதர்கள் என்ற ஒரே பெயரையுடைய பத்து சகோதரர்களைத் திருமணம் செய்தாள்.(15) ஓ அறவிதிகள் அனைத்தையும் அறிந்தவர்களில் முதன்மையானவரே, பெரியோருக்குக் கீழ்ப்படிதல் நன்மை பயக்கத்தக்கது என்று சொல்லப்படுகிறது.  அப்படிச் சொல்லப்படும் பெரியோர்களில் தாயே முதன்மையானவள் என்பது நன்கு அறியப்பட்டது.(16) நாங்கள் பிச்சையாக அடைந்த திரௌபதியை அனைவரும் அனுபவிக்குமாறு அவளே ஆணையிட்டாள். இதன் காரணமாகவே, ஓ பிராமணர்களில் சிறந்தவரே, இச்செயலை நான் அறம் சார்ந்ததாகக் கருதுகிறேன்" என்று பேசினான் {யுதிஷ்டிரன்}.(17)

அப்போது குந்தி, "யுதிஷ்டிரன் சொன்னது போலவே இச்செயல் அறம்சார்ந்ததுதான். ஓ பிராமணரே! எனது வார்த்தை பொய்த்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன். பொய்ம்மையிலிருந்து நான் எவ்வாறு காக்கப்படுவேன்?" என்று சொன்னாள்.(18)

அனைவரும் பேசி முடித்த பிறகு, வியாசர், "ஓ இனிமையானவளே, இதுவே நிலைத்த அறமாக இருக்கும் போது, நீ பொய்ம்மையின் விளைவுகளிலிருந்து எவ்வாறு நீ காக்கப்படுவாய்? ஓ பாஞ்சாலர்களின் மன்னா {துருபதா}, உங்கள் அனைவரின் முன்னிலையிலும் நான் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்த மாட்டேன். ஆனால், நீ மட்டும் தனியாக அமர்ந்து, இந்த நடைமுறை எப்படி நிறுவப்பட்டது? இதுவே பழமையானதும், நிலைத்ததுமாக ஏன் மதிக்கப்படுகிறது? என்பதைப் பற்றி நான் சொல்லப் போவதைக் கேள். யுதிஷ்டிரன் சொன்னது அறத்திற்குக் கட்டுப்பட்டது என்பதில் யாதொரு ஐயமும் கிடையாது" என்றார்".(19,20)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு அந்தச் சிறப்பு வாய்ந்த வியாசர், அந்தக் குரு துவைபாயனர், எழுந்திருந்து, துருபதனின் கையைப் பற்றி அரண்மனைக்குள் இருந்த ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார்.(21) பாண்டவர்களும், குந்தியும் பிருஷதனின் குலத்தில் வந்த திருஷ்டத்யும்னனும் அங்கேயே அமர்ந்து கொண்டு, வியாசர் மற்றும் துருபதனின் வரவுக்காகக் காத்திருந்தனர்.(22) அதே வேளையில் துவைபாயனர் {வியாசர்} அந்தச் சிறப்பு வாய்ந்த ஏகாதிபதியிடம் {துருபதனிடம்}, எப்படி பலபதியுடைமை என்ற நடைமுறை பாவகரமாகக் கருதப்பட முடியாது என்பது குறித்துப் விளக்கினார்” {என்றார் வைசம்பாயனர்}.(23)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்