Sunday, August 18, 2013

உமது மகள் எங்களுக்கு பொது மனைவியாவாள்! - ஆதிபர்வம் பகுதி 197

Thy daughter,shall be the common wife of us all! | Adi Parva - Section 197 | Mahabharata In Tamil

(வைவாஹிக பர்வம் - 03)

பதிவின் சுருக்கம் : துருபதன் விசாரிக்கும்போது தாங்கள் பாண்டவர்களே என்று சொன்ன யுதிஷ்டிரன்; திரௌபதி ஐவருக்கு மனைவியாக எதிர்ப்பு தெரிவித்த துருபதன்; வியாசர் வருகை...

வைசம்பாயனர் சொன்னார், "பாண்டவர்கள் ஆயுதங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, சிறப்புமிகுந்த பாஞ்சால மன்னன் {துருபதன்}, குந்தியின் சிறப்புமிக்க மகனான, அந்த பிராமண வடிவில் இருக்கும் யுதிஷ்டிரனிடம் மகிழ்ச்சியாக, "நாங்கள் உங்களை க்ஷத்திரியர்கள் என்று அறிவதா? அல்லது பிராமணர்கள் என்று அறிவதா?(1,2) அல்லது சாதித்த வைசியர்களா? அல்லது சூத்திரர்களுக்குப் பிறந்தவர்களா? அல்லது திரௌபதியின் கைப்பிடிக்க மாயசக்தியைப் பயன்படுத்தி பிராமண வடிவில் பூமியில் உலவும் தேவர்கள் என்று அறிவதா? உண்மையைச் சொல்வீராக. எங்களுக்குப் பெரும் ஐயங்கள் எழுகின்றன.(3,4) எங்கள் சந்தேகங்கள் களையப்பட்டால் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டோமா? ஓ எதிரிகளைத் தண்டிப்பவர்களே, எங்கள் விதி எங்களுக்கு நன்மையைச் செய்யுமா?(5) விருப்பத்துடன் உண்மையைச் சொல்லுங்கள். கிணறுகளை அர்ப்பணம் {உபயம்} செய்வதை விடவும், வேள்விகளைச் செய்வதை விடவும், உண்மையை பேசுவதே ஓர் ஏகாதிபதிக்குத் தகுந்ததாகும். எனவே, எங்களிடம் பொய்யுரைக்க வேண்டாம். (6) ஓ தெய்வீக அழகுடையவரே, ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே, உமது மறுமொழியைக் கேட்ட பிறகே, நான் எனது மகளின் திருமணத்தை உங்கள் முறையில் செய்ய ஏற்பாடு செய்ய முடியும்" என்றான்.(7)

துருபதனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், "ஓ மன்னா, மகிழ்வற்றவராக இருக்காதீர். உற்சாகமடைவீராக. நீர் உமது மனத்தில் வளர்த்து வந்த விருப்பம் ஈடேறியது.(8) நாங்கள் க்ஷத்திரியர்களே, ஓ மன்னா, நாங்கள் சிறப்புமிக்க பாண்டுவின் மகன்களே. குந்தியின் மகன்களில் என்னை மூத்தவனாக அறிந்து கொள்வீராக. இவர்கள் பீமனும், அர்ஜுனனும் ஆவர்.(9) ஓ மன்னா இவர்களாலேயே, உமது மகள் {திரௌபதி}, அந்த மன்னர்கள் கூட்டத்தின் முன்னிலையில் வெல்லப்பட்டாள். இரட்டையர்களும் (நகுலனும், சகாதேவனும்), குந்தியும் கிருஷ்ணை {திரௌபதி} இருக்கும் இடத்தில் காத்திருக்கிறார்கள்.(10) ஓ மனிதர்களில் காளையே, நாங்கள் க்ஷத்திரியர்களே, ஆதலால் துயரத்தை உமது இதயத்தில் இருந்து விரட்டுவீராக. ஓ ஏகாதிபதி! தாமரையைப் போன்ற உமது மகள் ஒரு தடாகத்தில் இருந்து மற்றொரு தடாகத்திற்கு மாற்றப்படுகிறாள். அவ்வளவுதான்.(11) ஓ மன்னா, நீர் மரியாதைக்குரிய பெரியவரும், எங்கள் முக்கியப் புகலிடமும் ஆவீர். நான் உம்மிடம் முழு உண்மையையும் சொல்லிவிட்டேன்" என்றான் {யுதிஷ்டிரன்}".(12)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் துருபதன் பரவசத்தால் மெய்மறந்து கண்களை உருட்டினான். மகிழ்ச்சி நிறைந்த அம்மன்னனால் சிறிது நேரத்திற்கு யுதிஷ்டிரனுக்குப் பதில் அளிக்க இயலவில்லை.(13) பெருமுயற்சியுடன் தனது உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு முறையான வார்த்தைகளால் யுதிஷ்டிரனுக்குப் பதில் கூறினான்.(14) அறம் சார்ந்த ஏகாதிபதி {துருபதன்} வாரணாவத நகரத்திலிருந்து பாண்டவர்கள் எப்படித் தப்பினார்கள் என்பதைக் கேட்டான். பாண்டுவின் மகன் அந்த ஏகாதிபதியிடம் அரக்கு மாளிகை எரியூட்டல் சம்பந்தமான அனைத்துத் தகவல்களையும் தெரிவித்தான்.(15) குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} சொன்னதைக் கேட்ட மன்னன் துருபதன், மனிதர்களின் ஆட்சியாளனான திருதராஷ்டிரனைப் பழித்தான்.(16) அப்போது, அந்த ஏகாதிபதி! குந்தியின் மகனான யுதிஷ்டிரனுக்கு அனைத்து உறுதிகளையும் கொடுத்தான். அந்தச் சொல்திறன் வாய்ந்தவர்களில் முதன்மையான {துருபதன்}, யுதிஷ்டிரனிடம் அவனது தந்தைவழி அரியணையை மீட்டுத் தருவதாக உறுதிமொழியளித்தான்.(17)

குந்தி, கிருஷ்ணை {திரௌபதி}, பீமன், அர்ஜுனன், இரட்டையர் ஆகியோர் மன்னனின் உத்தரவின் பேரில் அங்கேயே தங்கி,(18) அந்த யக்ஞசேனனால் {துருபதனால்} உரிய மரியாதையுடன் நடத்தப் பட்டனர். மன்னன் துருபதன் தனது மகன்களுடன் நடந்தது அத்தனையும் உறுதி செய்து கொண்டு, யுதிஷ்டிரனை அணுகி,(19) "ஓ பெரும் பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவரே, குரு இளவரசனான அர்ஜுனன், நன்னாளான இன்றே உரிய சடங்குகளுடன் எனது மகளின் {திரௌபதியின்} கரத்தைப் பற்றட்டும். எனவே, அவன் திருமணத்திற்கான தொடக்கச் சடங்குகளைச் செய்யட்டும்" என்றான்".(20)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "துருபதனின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், "ஓ பெரும் மன்னா! நானும் திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்றான்.(21)

இதைக் கேட்ட துருபதன், "உமக்கு விருப்பம் இருந்தால், நீரே எனது மகளின் {திரௌபதியின்} கரத்தை உரிய சடங்குகளுடன் பெற்றுக் கொள்ளும். அல்லது கிருஷ்ணையை {திரௌபதியை} நீர் விரும்பிய சகோதரனுக்குக் கூடத் திருமணம் செய்து கொடுக்கலாம்" என்றான்.(22)

யுதிஷ்டிரன், "ஓ மன்னா, உமது மகள் எங்களுக்குப் பொது மனைவியாக இருப்பாள். ஓ ஏகாதிபதியே, இப்படியே எங்கள் அன்னை உத்தரவு இட்டிருக்கிறாள்.(23) எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, பாண்டுவின் மகன்களில் பீமனும் அப்படியே {திருமணம் ஆகாமல்}[1] இருக்கிறான். இந்த ரத்தினம் போன்ற உமது மகள் அர்ஜுனனால் வெல்லப்பட்டாள்.(24) ஓ மன்னா, எந்த ரத்தினத்தை நாங்கள் அடைந்தாலும், அதைச் சமமாக அனுபவித்துக் கொள்ள வேண்டும் என்ற விதி எங்களுக்குள் இருக்கிறது. ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவரே, அந்த நடத்தை விதியை எங்களால் கைவிட முடியாது.(25) எனவே, கிருஷ்ணை, எங்கள் அனைவராலும் மணந்து கொள்ளப்படும் மனைவியாக இருப்பாள். அவள், நெருப்பின் {அக்னியின்} முன்னிலையில், எங்கள் வயதின் வரிசைப்படி எங்கள் ஒவ்வொருவரின் கரங்களைப் பற்றட்டும்" என்றான்.(26)

அதற்குத் துருபதன், "ஓ குரு குலத்தின் வழித்தோன்றலே, ஒரு மனிதன் பல மனைவிகளைக் கொள்ள வழிகாட்டப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு பெண்மணி பல கணவர்களைக் கொண்டதை நாம் கேள்விப்பட்டதே இல்லை.(27) ஓ குந்தியின் மகனே, நீர் தூய்மையானவராகவும், அறவிதிகளைக் கடைப்பிடிப்பவராகவும் இருப்பதால், நீர் இத்தகு பாவ காரியத்தைச் செய்யக்கூடாது. இப்படிப்பட்ட பழக்கம் நடைமுறையிலும் இல்லை, வேதங்களிலும் இல்லை. ஓ இளவரசே, ஏன் உமது புரிதல் இப்படி ஆனது? {ஏன் உமது புத்தி இப்படிச் செல்கிறது?}" என்று கேட்டான்.(28)

அதற்கு யுதிஷ்டிரன், "ஓ ஏகாதிபதி! அறநெறியானது நுட்பமானது, நாம் அதன் போக்கை {வழியை} அறிவதில்லை.  எனவே, பழங்காலத்தில் சிறப்பு வாய்ந்தவர்கள் சென்ற வழியில் நாம் நடக்கலாம்.(29) எனது நாக்கு ஒருபோதும் பொய்யைச் சொல்லாது. எனது இதயமும் ஒருபோதும் பாவத்தின் பக்கம் திரும்பாது.  எனது தாய் அப்படிக் கட்டளையிட்டாள்; எனது இதயமும் அதை அங்கீகரிக்கிறது.(30) எனவே, ஓ மன்னா, இஃது அறத்தின் நியமங்களுக்குக் கட்டுப்பட்டதே. எந்தப் பழிக்கும் அஞ்சாமல் அதன்படி நடந்து கொள்ள வேண்டியதுதான். ஓ மன்னா, இக்காரியத்தில் அச்சத்தை ஊக்கப்படுத்தாதீர்" என்றான்.(31)

துருபதன், "ஓ குந்தியின் மகனே, என்ன செய்யப்பட வேண்டும் என்பதை உமது தாயும், எனது மகன் திருஷ்டத்யும்னனும், நீரும் கலந்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். ஆழ்ந்து ஆராய்ந்து எடுத்த உங்கள் முடிவை, நாளை என்னிடம் சொல்லுங்கள். நான் எது சரியோ அதைச் செய்கிறேன்" என்றான்".(32)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ பாரதா {ஜனமேஜயா}, அதன்பிறகு, யுதிஷ்டிரனும், குந்தியும், திருஷ்டத்யும்னனும் இக்காரியம் குறித்துக் கலந்து பேசினர். இருப்பினும், சரியாக அதே நேரத்தில், ஓ ஏகாதிபதி, தீவில் பிறந்தவர் {துவைபாயனர் = வியாசர்}, பயணம் போகும் வழியில் அங்கே வந்தார்” {என்றார் வைசம்பாயனர்}.(33)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்