Wednesday, September 11, 2013

அரண்மனையை முடிக்க பதினான்கு மாதம்! - சபாபர்வம் பகுதி 3

The Palace was constructed in fourteen months! | Sabha Parva - Section 3 | Mahabharata In Tamil

(சபா கிரியா பர்வம் - 03)

பதிவின் சுருக்கம் :அர்ஜுனனின் அனுமதி பெற்ற மயன் வடகிழக்கு திசையில் சென்றது; கைலாசத்துக்கு வடக்கே சென்று அங்கிருந்து பல செல்வங்களை எடுத்து வந்து பாண்டவர்களுக்கு மாளிகை கட்ட ஆரம்பித்தது. அந்த அரண்மனைக்குள்ளேயே ஒரு குளத்தை அமைத்தது; வேலை நிறைவை மயன் யுதிஷ்டிரனிடம் தெரிவித்தது…

வைசம்பாயனர் சொன்னார், "பிறகு மய தானவன், வெற்றி பெறும் போர்வீரர்களில் முதன்மையான அர்ஜுனனிடம், "நான் இப்போது உன்னிடம் விடை பெற்றுக் கொண்டு, விரைவில் திரும்பி வருகிறேன்.(1) கைலாச மலைக்கு வடக்கில் மைநாகம் என்ற மலைக்கு அருகில் உள்ள பிந்து நதியின் {பிந்துசரஸின்} கரையில், தானவர்கள் வேள்வி செய்தார்கள். அப்போது நான், காண்பதற்கினிய பல வண்ண ரத்னங்களாலும், தங்கத்தாலும் ஆன பண்டா[1] என்ற பொருளை அங்கே பெரும் அளவில் சேகரித்து வைத்தேன். அவை எப்போதும் தன்னை உண்மைக்கு அர்ப்பணித்திருந்த விருஷபர்வனின் மாளிகையில் வைக்கப்பட்டது.(2,3) அவை இப்போதும் அங்கே இருக்குமானால், ஓ பாரதா {அர்ஜுனா}, நான் அவற்றுடன் திரும்பி வருகிறேன். அதன் பிறகு, நான் அனைத்து வகையான ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும், உலகத்தால் கொண்டாடப்படப் போவதுமான பாண்டவர்களின் அரண்மனையை கட்டத் தொடங்குவேன். ஓ குரு குலத்தில் வந்தவனே, (தானவ} மன்னனால் எதிரிகளைக் கொல்லப் பயன்படுத்துப்பட்ட ஒரு கொடும் கதாயுதமும் அந்த நதியில் இருப்பதாக நினைக்கிறேன். வலுவும் எடையும் நிறைந்ததான அது, பல வண்ணங்களிலான தங்கக் குமிழ் கொண்டிருந்தது. அது பெரும் எடையைத் தாங்க வல்லதாகவும், எதிரிகளைக் கொல்ல வல்லதாகவும், நூறு கதாயுதங்களுக்கு சமமானதாகவும் இருந்தது. உனக்கு காண்டீபம் பொருந்தியிருப்பதைப் போல, அந்த ஆயுதம் பீமனுக்குப் பொருந்துவதாக இருக்கும்.(4-7) அங்கு, வருணனிடம் இருந்து வந்ததும், தேவதத்தம் {Devadatta} என்ற பெயரைக் கொண்டதும், பெருத்த ஒலியை எழுப்பவல்லதுமான பெரிய சங்கு ஒன்றும் இருக்கிறது. நான் இவை அனைத்தையும் உனக்குத் தருவேன் என்பதில் ஐயமில்லை" என்றான்.(8)


[1] பண்டா Vanda-ஒரு வகை கரடு முரடான பொருள்

இப்படி பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} பேசிய அந்த அசுரன் {மயன்} வட கிழக்கு திசையில் புறப்பட்டு சென்றான். கைலாசத்துக்கு வடக்கில் மைநாக மலையில்,(9) ஹிரண்யசிருங்கம் என்ற பெயரைக் கொண்ட ரத்தினங்களால் ஆன ஒரு பெரிய சிகரம் இருக்கிறது. அந்த சிகரத்திற்கு அருகில்தான் பிந்து என்ற பெயரில் இனிமையான ஒரு தடாகமும் இருக்கிறது. அங்கே, அதன் கரையில், முன்பொரு சமயம் பகீரதன் என்ற மன்னன்,(10) தெய்வீக கங்கையைக் காண விரும்பி, பல வருடங்களாக அங்கு வசித்தான். அதனாலேயே அதற்கு {கங்கைக்கு}, அந்த மன்னனின் பெயரை ஒட்டி பாகீரதி என்ற பெயரும் உண்டு.(11) அங்கே அதன் கரையில், ஓ பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, படைக்கப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் சிறப்பு வாய்ந்த தலைவனான இந்திரன், நூறு வேள்விகளைச் செய்தான். அங்கே விதிப்படி அல்லாமல் வெறும் அழகுக்காக ரத்தினங்களால் ஆன கம்பங்களும், தங்கத்தாலான பலிபீடங்களும் வைக்கப்பட்டிருந்தன. அங்கே அந்த வேள்விகளைச் செய்த ஆயிரம் கண் கொண்டவனான சச்சியின் தலைவன் வெற்றி மகுடம் சூட்டப்பட்டான் {சித்தி அடைந்தான்}.(12,13)

அங்கே, அனைத்து உயிர்களுக்கும் நிலைத்த தலைவனான கடும் மஹாதேவன் {சிவன்}, அனைத்து உலகங்களையும் படைத்துவிட்டு, பல ஆயிரக்கணக்கான ஆவிகளால் {கணங்களால்} வழிபடப்பட்டு, தனது வசிப்பிடத்தை இங்கே அமைத்துக் கொண்டான்.(14) நரனும் நாராயணனும், பிரம்மனும், யமனும், ஐந்தாவவதாக ஸ்தாணுவும் அங்கே ஆயிரம் யுகங்களின் முடிவில் தங்கள் வேள்விகளைச் செய்தனர்.(15) அங்கே, வாசுதேவன் {கிருஷ்ணன்}, அறத்தையும் நல்லொழுக்கத்தையும் நிறுவ, நேர்மையான அர்ப்பணிப்புடன், பல பல வருடங்களுக்கு நீண்ட தனது வேள்விகளைச் செய்தான்.(16) அங்கே கேசவனால் {கிருஷ்ணனால்} ஆயிரக்கணக்கிலும் பத்தாயிரக் கணக்கிலும் தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வேள்விக் கம்பங்களும், பெரும் பிரகாசமுடைய வேள்விப்பீடங்களும் வைக்கப்பட்டன.(17)

ஓ பாரதா {ஜனமேஜயா}, அங்கே சென்ற மயன் கதாயுதத்தையும், சங்கையும், மன்னன் விருஷபர்வனுக்குச் சொந்தமான பளிங்கினாலான கண்ணாடி போன்ற பல்வேறுவகை பொருட்களையும் கொண்டு வந்தான்.(18) அந்தப் பெரும் அசுரனான மயன், அங்கே சென்று யக்ஷர்களாலும் ராட்சசர்களாலும் காக்கப்பட்டு வந்த பெரும் செல்வத்தைக் கொண்டு வந்தான்.(19) அப்படிக் கொண்டு வந்த அனைத்துப் பொருட்களையும் வைத்து, பெரும் அழகுடனும், தெய்வீகக் கலையம்சத்துடனும், ரத்தினங்களாலும் விலையுயர்ந்த கற்களாலும் அலங்கரிக்கப்பட்ட, மூன்று உலகங்களாலும் கொண்டாடப்பட்ட இணையற்ற ஓர் அரண்மனையைக் கட்டினான்.(20) அவன் அந்தச் சிறந்த கதாயுதத்தைப் பீமசேனனிடம் கொடுத்தான். அற்புதமான அந்த சங்கை {தேவதத்தம் என்ற சங்கைக்} அர்ஜுனனிடம் கொடுத்தான்.(21) அதன் ஒலியைக் கேட்ட மாத்திரத்தில் அனைத்து உயிரினங்களும் நடுங்கத் தொடங்கின.

மயன் கட்டிய அந்த அரண்மனை தங்கத் தூண்கள் கொண்டிருந்தது. ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அது ஐயாயிரம் சதுர முழத்திற்கான[2] பகுதியைப் பிடித்துக் கொண்டது. மிகுந்த அழகான வடிவம் கொண்ட அந்த அரண்மனை அக்னியைப் போலவும், சூரியனைப் போலவும், சோமனை {சந்திரனைப்} போவலவும், பிரகாசத்தில் ஒளிர்ந்து, சூரியனையே கருத்துவிட்டது போலத் தெரியச் செய்தது.(22-24) அது வெளிப்படுத்திய பிரகாசம், ஆகாயம் மற்றும் பாதாளத்தின் ஒளிகளைக் கலந்து, நெருப்பைப் போல இருந்தது. வானத்தில் தெளிவாய்த் தெரிகிற மேகத்திரள் போல, அந்த மாளிகை அனைவரும் பார்க்க எழுந்து நின்றது. திறமை வாய்ந்த மயனால் கட்டப்பட்ட அந்த அரண்மனை, மிகுந்த அகலமாக, இனிமையானதாக, அற்புதமான பொருட்களால் ஆனதாக. தங்கச் சுவர்களும், வளைவுகளும் கொண்டு, பல வித்தியாசமான ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டு, அனைத்து செல்வங்களும் கொண்டு கட்டி முடிக்கப்பட்ட போது,(25,26) அது தசார்ஹ குலத்தைச் சேர்ந்த சுதர்மாவைக் {சுதர்மம் என்ற சபையைக்} காட்டிலும், பிரம்மனின் வசிப்பிடத்தைக் காட்டிலும் விஞ்சி இருந்தது.

[2] கும்பகோணம் பதிப்பில், "சுற்றிலும் பதினாயிர முழம் விஸ்தாரமுள்ளதாகவிருந்தது" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பத்தாயிரம் கிஷ்குவின் அளவுக்குச் சுற்றளவைக் கொண்டிருந்தது" என்றிருக்கிறது. கிஷ்கு என்பது முழமாக இருக்க வேண்டும்.

பெரும் உடலும், பெரும் பலமும் கொண்டவர்களும், தாமிரம் போலச் சிவந்த கண்களைக் கொண்டவர்களும், அம்புகள் போலக் காதுகள் நீண்டவர்களும், கடுமையானவர்களும், விண்ணில் செல்லும் சக்தியும் கொண்டவர்களும், அனைத்து ஆயுதங்களையும் தரிந்திருந்தவர்களும், கின்னரர்கள் என்று அழைக்கப்பட்டவர்களுமான எட்டாயிரம் ராட்சசர்கள், அந்த அரண்மனையைப் பாதுகாத்து வந்தனர்.(27-29) மயன், அந்த அரண்மனைக்குள்ளேயே ஓர் இணையற்ற குளத்தை உண்டாக்கினான். கரிய நிறம் கொண்ட ரத்தினங்களாலான இலைகள், பிரகாசமான நகைகளாலான தண்டுகள் ஆகியவற்றைக் கொண்ட தாமரைகளும், தங்க இலைகள் கொண்ட மற்ற மலர்களும் அந்தக் குளத்தில் இருந்தன. அதன் மார்பில் பல்வேறு வகையான நீர்வாழ் உயிரினங்கள் விளையாடித் திரிந்தன. முழுதும் மலர்ந்த தாமரைகளுடனும், மீன்களும் நிறைந்து, தங்க நிற ஆமைகளும் கொண்டு வண்ணமயமாகக் காட்சி அளித்தது அந்தக் குளம். மண் கலவாமல் தெளிந்த நீரை அது கொண்டிருந்தது. அந்தக் குளத்தின் கரையில் இருந்து நீர் வரை பளிங்கினால் ஆன படிக்கட்டுகள் இருந்தன.(30,31) மிதமாக வீசிய தென்றல் அதன் {குளத்தின்} மார்புகளை மெதுவாகத் தழுவி, அங்கே நின்று கொண்டிருந்த மலர்களை குலுக்கி விட்டு சென்றது. அந்தக் குளத்தின் கரைகள் விலை மதிப்புமிக்க வெண்பளிங்கினாலும், முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(32)

இப்படி பல வித நகைகளாலும், மதிப்பு மிக்க கற்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த குளத்தைக் கண்ட மற்ற மன்னர்கள், தங்கள் கண்கள் அகலமாக விரிந்திருக்கும் போதே, தவறுதலாக நிலம் என்று நினைத்து, அதற்குள் விழுந்தனர்.(33) பல்வேறு வகையான மரங்கள் பலவும் அந்த அரண்மனையைச் சுற்றி நடப்பபட்டன. அடர்த்தியான பச்சை வண்ணத்துடன், குளிர்ந்த நிழலைக் கொடுத்துக் கொண்டு,(34) எப்போதும் மலர்ந்து கொண்டே இருந்த அந்த மரங்கள் பார்பதற்கு அழகாக இருந்தன. அங்கே அமைக்கப்பட்டிருந்த செயற்கை கானகம் {நந்தவனம்} எப்போதும் நறுமணத்தை வீசிக்கொண்டே இருந்தது. அங்கே இன்னும் பல குளங்களும இருந்தன. அதில் அன்னப் பறவைகளும், கறந்தவங்களும் {நீர்க்காக்கைகளும்}, சக்கரவாகப் பறவைகளும் இருந்தன. நீரில் மலர்ந்த தாமரையின் மணத்தைச் சுமந்து வந்த தென்றல், பாண்டவர்களின் இன்பத்தையும் மகிழ்ச்சியையும் கூட்டியது.(35,36)  மயன் தெய்வீக சபை கொண்ட அத்தகையை அரண்மனையை பதினான்கு மாதங்களில் கட்டி முடித்து, அதன் நிறைவு குறித்து யுதிஷ்டிரனிடம் தெரிவித்தான் {மயன்}" {என்றார் வைசம்பாயனர்}.(37)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்