Wednesday, July 16, 2014

பெண் கண்டித்தாள் கௌசிகரை! - வனபர்வம் பகுதி 205

A Woman reproached Kausika! | Vana Parva - Section 205 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

காட்டில் கௌசிகர் என்ற அந்தணரின் மேல் கொக்கு எச்சமிடுவது; கோபப்பார்வை பார்த்து அந்தணர் அந்தக் கொக்கை எரிப்பது; ஒரு கிராமத்திற்குள் சென்று ஓர் இல்லத்தரசியிடம் அந்தணர் பிச்சை கேட்பது; அவள் பிச்சையிட தாமதப்படுத்துவது; அந்தணர் கோபம்; அவள் அவரது கோபத்தைத் தணித்துப் புத்தி சொல்லி அனுப்புவது…

கௌசிகரும் கற்புக்கரசியும்
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, கௌசிகர் என்ற பெயரில் ஓர் அறம் சார்ந்த துறவி இருந்தார். அவர் தன்னை வேத கல்விக்கு அர்ப்பணித்துக் கொண்டு, துறவை செல்வமாகக் கொண்டு அந்தணர்களில் வெகு மேன்மையானவராக இருந்தார். அந்த அந்தணர்களில் சிறந்தவர் {கௌசிகர்} அனைத்து வேதங்களையும், அங்கங்களையும், உபநிஷத்துகளையும் கற்றறிந்தார். ஒரு நாள் அவர் {கௌசிகர்} ஒரு மரத்தின் அடியில் நின்று கொண்டு வேதம் உரைத்துக் கொண்டிருந்தபோது, அந்த மரத்தின் மேலே ஒரு பெண் கொக்கு இருந்தது. அந்நேரத்தில் அந்தப் பெண் கொக்கு அந்த அந்தணன் மீது எச்சமிட்டது. கொக்கைக் கண்ட அந்த அந்தணர் மிகவும் கோபம் கொண்டு அதற்குக் காயமேற்படுத்த எண்ணி, தனது கோபப்பார்வையை அந்தக் கொக்கின் மீது செலுத்தி, மனதால் தீங்கை நினைத்தார். அந்தக் கொக்கு உடனே தரையில் விழுந்தது.
கொக்கு -  Crane
அப்படி அந்தக் கொக்கு மரத்தில் இருந்து விழுந்து, இறந்து போய் உணர்வற்றுக் கிடப்பதைக் கண்ட அந்த அந்தணர் {கௌசிகர்}, மனதால் இரக்கம் கொண்டார். பிறகு இறந்து போன கொக்கைக் கண்ட அந்த மறுபிறப்பாளர் {பிராமணர்}, "ஐயோ, கோபத்தாலும் துர்க்குணத்தாலும் ஒரு தீச்செயலைச் செய்துவிட்டேனே" என்று சொல்லி அழுதார்"



மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைப் பலமுறை சொன்ன அந்தக் கற்ற அந்தணர் {கௌசிகர்}, பிறகு பிச்சை எடுப்பதற்காக ஒரு கிராமத்திற்குள் நுழைந்தார். ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, நற்குலத்தில் பிறந்தவர்களின் வீடுகளில் பிச்சையெடுக்கச் சென்ற அந்த அந்தணர் {கௌசிகர்}, முன்பே தான் அறிந்த ஒரு வீட்டினுள் நுழைந்தார். அவர் அந்த வீட்டினுள் நுழைந்ததுமே, "{பிச்சை} கொடு" என்று கேட்டார். அவருக்கு ஒரு பெண், "நில்லும்" என்ற வார்த்தையால் பதிலுரைத்தாள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த இல்லத்தரசி, பிச்சையிடுவதற்கான பாத்திரத்தைக் கழுவி கொண்டிருந்த போது, பசியால் துன்பப்பட்ட அவளது கணவன் திடீரென வீட்டினுள் நுழைந்தான். அந்தக் கற்புடைய இல்லத்தரசி, தனது கணவனைக் கண்டதும், அந்தப் பிராமணனைக் கவனியாமல், தனது தலைவனுக்குக் கால்களையும் முகத்தையும் கழுவ நீர் கொடுத்து, இருக்கையும் கொடுத்தாள். பிறகு அந்தக் கருவிழி மங்கை, தனது தலைவனுக்கு முன்னால் சுவை நிறைந்த உணவையும், பானத்தையும் வைத்து, அவனது தேவைகளைக் கவனிக்க விரும்பி, அடக்கத்துடன் அவன் {கணவன்} அருகில் நின்றாள். ஓ! யுதிஷ்டிரா, கீழ்ப்படிதலுள்ள மனைவியான அவள் தினமும் தனது கணவன் உண்ட தட்டில் உள்ள மிச்சத்தை உண்டாள். தனது கணவனின் விருப்பங்களுக்கு எப்போதும் கீழ்ப்படியும் நடத்தை கொண்டவளான அவள், எப்போதும் தனது கணவனை மதித்து வந்தாள். அவளது இதயத்தின் அன்பு முழுவதும் தனது தலைவனை {கணவனை} நோக்கியே இருந்தது. புனிதமான நடத்தையாலும், இல்லறக் கடமைகளில் நிபுணத்துவத்தோடும், விருந்தினர்களைக் கவனித்துக் கொண்டும், தனது கணவனுக்கு நன்மை பயப்பதையும், ஏற்புடையதையுமே அவள் எப்போதும் செய்து வந்தாள். அவள் கவனம் நிறைந்த உணர்வுகளுடன் தேவர்களை வணங்கி, விருந்தினர்கள், பணியாட்கள், மாமியார் மற்றும் மாமனாரின் தேவைகளை உணர்ந்து நடந்து கொண்டாள்.

அந்த அழகிய விழிகளைக் கொண்ட மங்கை, தனது தலைவனின் {கணவனின்} சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவள், பிச்சைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் அந்தணரைக் கண்டாள். அவரைக் கண்ட பிறகுதான், அவரைக் காத்திருக்கச் சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது. இவை அனைத்தையும் நினைவுகூர்ந்த அவள், {தான் மறந்ததை நினைத்து} வெட்கமடைந்தாள். பிறகு ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, அந்தப் பெரும் புகழுடைய கற்புள்ள பெண், பிச்சைக்காகக் கொடுக்க வேண்டியதை எடுத்துக் கொண்டு வெளியே வந்து அந்த அந்தணருக்குக் {பிச்சையைக்} கொடுத்தாள். அவள் அந்த அந்தணர் முன்பு வந்த போது, அவர் {கௌசிகர்}, "ஓ! பெண்களில் சிறந்தவளே, ஓ! அருளப்பட்டவளே! நான் உனது நடத்தையைக் கண்டு வியக்கிறேன்! "நில்லும்" என்று சொல்லி என்னை நிறுத்திவிட்டு, இன்னும் என்னை அனுப்பாமல் இருக்கிறாய்!" என்றார் {கௌசிகர்}.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்த அந்தணர் கோபத்தால் நிறைவதைக் கண்ட அந்தக் கற்புள்ள பெண் அவரைச் சமாதானம் படுத்த எண்ணி, "ஓ! கற்றவரே, என்னை மன்னிப்பதே உமக்குத் தகும். எனது கணவரே எனக்குத் தலைமையான தெய்வம். அவர் பசியோடும் களைப்போடும் வந்தார். அதனால் நான் அவருக்குச் சேவை செய்து அவருக்காகக் காத்திருந்தேன்" என்றாள். இதைக் கேட்ட அந்தணர், "உனக்கு, பிராமணர்கள் உயர்ந்த மதிப்பிற்குத் தகார். அவர்களுக்கு மேலாக உனது கணவனை உயர்த்துகிறாயா? இல்லற வாழ்வு வாழும் நீ, பிராமணர்களை அவமதிக்கிறாயா? அவர்களை {பிராமணர்களை} இந்திரனே கூட வணங்குவான். அப்படியிருக்கும்போது பூமியில் இருக்கும் மனிதர்களைக் குறித்து நான் என்ன சொல்வேன். கர்வம் கொண்ட பெண்ணே, பிராமணர்கள் நெருப்பைப் போன்றவர்கள் அவர்கள் முழு உலகத்தையும் எரித்து விடுவார்கள் என்பதை நீ அறியவில்லையா? அதை இதுவரை நீ கேள்விப்பட வில்லையா?" என்று கேட்டார்.

கொக்கு என்று நினைத்தாயோ 
கௌசிக முனிவா!
அந்தணரின் {கௌசிகரின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பெண், "நான் பெண் கொக்கல்ல, ஓ! மறுபிறப்பாள முனிவரே! ஓ! துறவை செல்வமாகக் கொண்டவரே, இந்த உமது கோபத்தைக் கைவிடும். கோபமுள்ள நீர், உமது கோபப்பார்வையால் என்னை என்ன செய்துவிடுவீர்? நான் அந்தணர்களை அவமதிப்பதில்லை. பெரும் சக்தி கொண்ட ஆன்மா உடைய அவர்கள் தேவர்களைப் போன்றவர்களாவர். ஆனால், ஓ! பாவமற்றவரே, இந்த எனது குற்றம் மன்னிக்கத்தக்கதே. ஞானம் கொண்ட அந்தணர்களின் சக்தி மற்றும் கௌரவத்தை நான் அறிவேன். கடலின் நீர் உவர்ப்பாகவும் குடிக்க முடியாமல் போகவும் அந்தணர்களின் கோபமே காரணம். ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தவத்தகுதியால் சுடர்விடும் முனிவர்களின் சக்தி என்னவென்பதை நான் அறிவேன். அவர்களது கோபத்தால் உண்டான் நெருப்பு இந்த நாள் வரையில் தண்டக வனத்தில் அணையாமல் இருக்கிறது. அந்தணர்களை அவமதித்ததன் காரணமாகவே, தீய மனம் கொண்ட வாதாபி அகஸ்தியரைச் சந்தித்தபோது அவரால் செரிக்கப்பட்டான். உயர் ஆன்மா கொண்ட {மகாத்மாவான} அந்தணர்களின் சக்திகளும் தகுதிகளும் பெரிது.

ஆனால், ஓ! அந்தணரே, மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} கோபத்தில் பெரியவர்களாக இருந்தாலும், அதே அளவு மன்னிப்பதிலும் பெரியவர்களாக இருக்கிறார்கள். எனவே, ஓ! பாவமற்றவரே, இக்காரியத்தில் எனது குற்றத்திற்காக நீர் என்னை மன்னிப்பதே தகும். எனது கணவருக்குச் சேவை செய்வதாற்க்காக கிடைக்கும் தகுதியையே நான் உயர்வாகக் கருதுகிறேன். நான் எனது கணவரையே தேவர்களில் உயர்ந்தவராகக் கருதுகிறேன். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே, உயர்ந்த தெய்வமாக நான் கருதும் எனது கணவருக்குப் பணிவிடை செய்வதையே நான் பெரும் தகுதியாக நினைக்கிறேன். ஓ! மறுபிறப்பாளரே, ஒருத்தி கணவருக்குச் செய்யும் பணிவிடையால் கிடைக்கும் தகுதியைப் {பலனைப்} பாரும்! நீர் உமது கோபத்தால் ஒரு பெண் கொக்கை எரித்து வந்தீர் என்பதை அறிந்திருக்கிறேன். ஆனால், ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, ஒருவரால் பேணப்படும் கோபமே அவனது பெரிய எதிரியாகும்.

கோபத்தையும் ஆசையையும் கைவிட்டவனையே, தேவர்கள் அந்தணன் என்று அறிகிறார்கள். எப்போதும் உண்மையைப் பேசுபவர்கள், குருவைத் திருப்தி செய்பவர்கள், தான் காயப்பட்டாலும் பதிலுக்குப் பிறருக்குக் காயமேற்படுத்தாதவர்கள் ஆகியோரையே, தேவர்கள் அந்தணர்கள் என்று அறிகிறார்கள். தனது புலன்களை {உணர்வுகளை} முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவன், அறம்சார்ந்து சுத்தனாக இருப்பவன், வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணிப்பவன், கோபம் மற்றும் காமத்தை ஆளுமை செய்பவன் ஆகியோரையே தேவர்கள் அந்தணர்கள் என்று அறிகிறார்கள். அறநெறிகள் அறிந்தவர்கள், மனோ சக்தி கொண்டவர்கள், அறத்தால் அனைவருக்கும் பொதுவானவன் {Catholic in religion என்கிறார் கங்குலி}, அனைவரையும் தனக்குச் சமமாக நினைப்பவன் ஆகியோரையே தேவர்கள் அந்தணர்கள் என்று அறிகிறார்கள். தானே பயின்று, மற்றவர்களுக்குப் பயிற்றுவிப்பவன், தானே வேள்விகள் செய்பவன், தானே முன்வந்து அடுத்தவர்களின வேள்விகளைச் செய்து தருபவன், தன்னால் இயன்ற அளவு தானம் செய்பவன் ஆகியோரையே தேவர்கள் அந்தணர்கள் என்று அறிகிறார்கள். ஆன்ம சுதந்திரம் கொண்டு, பிரம்மச்சரிய நோன்பு பயின்று, கல்விக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவன், உண்மையில், விழிப்பான வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் மறுபிறப்பாளர்களில் காளையையே தேவர்கள் அந்தணன் என்று அறிகிறார்கள்.

எதுவெல்லாம் அந்தணர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமோ அவற்றை இவற்றுக்கு முன்பாக எப்போதும் சொல்ல வேண்டும். உண்மையில் இன்பம் கொள்கிறவர்களின் இதயம் பொய்மையில் இன்பத்தைக் காணாது. ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, வேத கல்வி, ஆன்ம அமைதி, எளிய நடத்தை, புலன்களை ஒடுக்குதல் ஆகியன அந்தணர்களின் நித்திய கடமைகளாகும். அறமும் அறநெறிகளும் அறிந்தவர்கள், உண்மையும் நேர்மையும் உயர்ந்த அறங்கள் என்று சொல்கின்றனர். நித்தியமான அறம் புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமானது. ஆனால், அஃது எதுவாக இருந்தாலும், அஃது உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. பழங்காலத்தவர்கள், அறம் எனப்பட்டது சுருதியை நம்பி இருக்கிறது என்று தீர்மானித்திருக்கின்றனர். ஆனால், ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே {கௌசிகரே}, சுருதியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அறம் பலவகைப்பட்டதாகத் தோன்றுகிறது. எனவே, புரிந்து கொள்வதற்கு அது மிகவும் நுட்பமானது. ஓ! புனிதமானவரே {கௌசிகரே} நீர் அறம் மற்றும் சுத்தம் ஆகியவற்றை அறிந்தவர். வேத கல்விக்கு உம்மை அர்ப்பணித்திருப்பவர். எனினும், ஓ! புனிதமானவரே {கௌசிகரே}, உண்மையில் அறத்தை நீர் அறியவில்லை என்றே நான் நினைக்கிறேன். ஓ! மறுபிறப்பாளரே {கௌசிகரே}, நீர் உண்மையில் உயர்ந்த அறம் எவற்றால் ஆனது என்பதை அறியவில்லையெனில், மிதிலை நகரத்திற்குச் சென்று அறம் சார்ந்த வேடனிடம் {தர்மவயாதனிடம்} விசாரியும். அங்கே மிதிலையில் பெற்றோருக்கு சேவை செய்வதற்குத் தன்னை அர்ப்பணித்து உண்மையுள்ளவனாக, புலன்களை முழுக் கட்டுக்குள் வைத்திருப்பவனாக ஒரு வேடன் இருக்கிறான். அறம் சம்பந்தமான சொற்பொழிவை அவன் உனக்காக ஆற்றுவான். ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, நீர் அருளப்பட்டிரும். நீர் விரும்பினால் அங்கே செல்லும். ஓ! களங்கமற்றவரே {கௌசிகரே}, நான் சொன்னது உமக்கு உகந்ததாக இல்லையென்றாலும், நீர் என்னை மன்னிப்பதே உமக்குத் தகும். ஏனென்றால், அறம் கொள்ள விரும்புபவர்களால் ஒரு பெண்ணெக்குத் தீங்கிழைக்க இயலாது!" என்றாள்.

கற்புள்ள பெண்ணின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தணர் {கௌசிகர்}, "நான் உன்னிடம் திருப்தி அடைந்தேன். நீ அருளப்பட்டிரு; ஓ! அழகானவளே, எனது கோபம் தணிந்தது. உன்னால் சொல்லப்பட்ட கண்டனம் {நீ செய்த கண்டிப்பு}, எனக்கு உயர்ந்த பலனையே தரும். நீ அருளப்பட்டிரு, ஓ! அழகானவளே, நான் இப்போது சென்று, என் நன்மைக்குகந்ததைச் சாதிக்கப் போகிறேன்" என்றார் {கௌசிகர்}".

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அவளால் விடை கொடுக்கப்பட்ட மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரான கௌசிகர், அவ்வீட்டை விட்டு வந்து, தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டு, தனது வசிப்பிடத்திற்குத் திரும்பினார்".



கொக்கை கொங்கணவர் என்ற சித்தர் எரித்தார், என்று சித்தர் இலக்கியம் சொல்கிறது.

"கொக்கல்ல கொங்கணவா எரிவதற்கு" என்று பத்தினி சொன்னதாக அவ்விலக்கியம் சொல்லும்

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்