Saturday, July 19, 2014

நல்லவர்கள் நல்லவர்களை மெச்சுவதில்லையே! - வனபர்வம் பகுதி 207

Good men are not commended by good men | Vana Parva - Section 207 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

ஊண் உணவு குறித்தும், முற்பிறவி கர்மங்கள் குறித்தும், பிற உயிருக்குத் தீங்கு செய்யாமை குறித்தும் வேடன் கௌசிகருக்கு உரைத்தது...

மார்க்கண்டேயர் {{யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! யுதிஷ்டிரா, பக்திமானான வேடன் {தர்மவியாதன்} அந்த அந்தணரிடம் {கௌசிகரிடம்}, "எனது செயல்கள் அனைத்தும் சந்தேகமற கொடுமையானவையே. ஆனால், ஓ! அந்தணரே {கௌசிகரே}, விதி மிக வலிமையானது. மேலும், நமது பழைய செயல்களின் {முற்பிறப்பில் செய்த வினைகளின்} விளைவால் அதைத் தவிர்ப்பது கடினமாகும். அஃது, முந்தைய பிறவியில் இழைத்த பாவத்தால் எழும் கர்மம் சார்ந்த தீமையாகும் {தோஷமாகும்}. ஆனால், ஓ! அந்தணரே {கௌசிகரே}, நான் எப்போதும் தீமையை ஒழிப்பதில் ஊக்கமுடன் இருக்கிறேன். ஓர் உயிர் தெய்வத்தாலேயே கொல்லப்படுகிறது. அதைக் கொல்பவன், இரண்டாம் நிலை முகவராக மட்டுமே {கருவியாக மட்டுமே} செயல்படுகிறான். ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, எங்கள் கர்மத்தின் காரணமாக நாங்கள் அத்தகு முகவர்களாக {கொல்லும் கருவியாக} மட்டுமே இருக்கிறோம். என்னால் கொல்லப்படும் விலங்குகளும், நான் விற்கும் அதன் இறைச்சியும் கர்ம பலனை அடைகின்றன. ஏனெனில், (அவற்றின் இறைச்சியை), தேவர்களும், விருந்தினர்களும், பணியாட்களும் சுவைமிகுந்த உணவை விருந்தாக உண்பதால், இறந்தவர்களின் ஆவி சாந்தமடைகிறது. மூலிகைகள், காய்கறிகள், மான்கள், பறவைகள், காட்டு விலங்குகள் ஆகியவை அனைத்து உயிர்களின் உணவாக இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.



ஓ! அந்தணரே {கௌசிகரே}, உசீனரன் மகனான பொறுமைமிக்க மன்னன் சிபி, தனது சொந்த சதையைத் {இறைச்சியைத்} தானமளித்து, அடைவதற்கு அரிதான சொர்க்கத்தை அடைந்தான். ஓ! அந்தணரே {கௌசிகரே}, பழங்காலத்தில், மன்னன் ரந்திதேவனின் சமையலறையில் {மடைப்பள்ளியில்} ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் விலங்குகள் கொல்லப்பட்டு வந்தன; அதே போலத் தினமும் இரண்டாயிரம் {2000} மாடுகளும் கொல்லப்பட்டன; ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, மன்னன் ரந்திதேவன் அந்த இறைச்சியைக் {தானம்} கொடுத்து வந்ததால், அவன் நிகரற்ற புகழை அடைந்தான். நான்கு மாதச் சடங்கைச் {சாதுர்மாஸ்யம்} செய்வதற்குத் தினமும் விலங்குகள் பலி கொடுக்கப்பட வேண்டும். 'புனித நெருப்புக்கு விலங்கின் {இறைச்சி} உணவு பிடிக்கும்' என்ற மொழி {ஸ்ருதி} நம்மிடம் இருக்கிறது. வேள்விகளில் மறுபிறப்பாள அந்தணர்களால் விலங்குகள் வகைதொகையின்றிக் கொல்லப்படுகின்றன. மந்திரங்களால் பாவம் அழிக்கப்பட்ட அவ்விலங்குகள் சொர்க்கத்தை அடைகின்றன.

ஓ! அந்தணரே {கௌசிகரே}, பழங்காலத்தில், புனிதமான நெருப்புக்கு விலங்கு {இறைச்சி} உணவு பிடிக்காமல் போயிருந்தால், யாருக்கும் அது {இறைச்சி} உணவாகியிருக்க முடியாது. இந்த விலங்கு {இறைச்சி} உணவு சம்பந்தமாக முனிவர்களால் இவ்விதி விதிக்கப்பட்டுள்ளது. "முதலில் தேவர்களுக்கும், இறந்தவர்களின் ஆவிகளுக்கும் மரியாதையாகக் காணிக்கை செய்யப்பட்ட விலங்கு {இறைச்சி} உணவை உண்பவன், அத்தகு செயலால் {காணிக்கை செய்வதால்} அசுத்தமடையமாட்டான் {தோஷத்துக்கு உள்ளாக மாட்டான்}. பிரம்மச்சாரி ஒருவன், தனது மனைவியின் மாதவிடாய் காலத்தில் {Menstrual period} கூடிவிட்டால்கூட, அவன்  நல்ல அந்தணனுக்குக் குறைவாகக் கருதப்படுவதில்லை. அதுபோல, அம்மனிதன் விலங்கு {இறைச்சி} உணவு உண்டவனாகக் கருதப்பட மாட்டான். சரி, சரியில்லை என்று இக்காரியத்தைப் பரிசீலித்த பிறகே இவ்விதி விதிக்கப்பட்டது" {இதுவே விலங்கு {இறைச்சி} உணவு சம்பந்தமாக முனிவர்களால் விதிக்கப்பட்ட விதியாகும்}.

ஓ அந்தணரே {கௌசிகரே}, ஒரு சாபத்துக்கு உட்பட்டிருந்த மன்னன் சௌதாசனே மனிதர்களை இரையாகக் கொண்டான். இவ்விஷயத்தில் உமது கருத்து என்ன? ஓ! நல்ல அந்தணரே {பிராமணோத்தமரே - கௌசிகரே}, எனது சொந்த நடவடிக்கைகளின் விளைவாகவே {சொந்த கர்மங்களினாலேயே}, நான் இந்தத் தொழிலின் மூலம் எனது வாழ்வாதாரத்தை அடைகிறேன். ஓ! அந்தணரே {கௌசிகரே}, ஒருவன், தனது சொந்தத் தொழிலைக் கைவிடுவது, பாவம் எனக் கருதப்படுகிறது. ஒருவன் தனது சொந்தத் தொழிலைச் செய்வதென்பது மெச்சத்தகுந்த செயலே என்பதில் ஐயமில்லை. முந்தைய இருப்பின் {முற்பிறவியின்} செயல்கள் {கர்மங்கள்} எந்த உயிரினத்தையும் விடுவதில்லை. ஒருவனது செயல்களின் விளைவுகளைத் தீர்மானிப்பதில், இவ்விதி, படைப்பாளனின் {பிரம்மனின்} பார்வையைப் பெற்றது. {பல்வேறு தொழில்களை நிர்ணயிக்கும் விஷயத்தில் பிரம்மனே இவ்விதியை விதித்தான்}.

தீய கர்மத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒரு மனிதன், எப்போதும் தன் கர்மத்திற்கு எப்படிப் பரிகாரம் செய்வது என்பதையே கருத்தில் கொள்ள வேண்டும். தீவினையில் இருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொண்டால், தீய கர்மம் பல்வேறு வழிகளில் ஈடு {சரி} செய்யப்படும். அதற்கேற்றவாறே, ஓ! நல்ல அந்தணரே {பிராமணோத்தமரே}, நான் தானம் செய்கிறேன், உண்மையுடன் இருக்கிறேன், பெரியவர்களைக் கவனிப்பதில் சிரத்தை கொள்கிறேன், மறுபிறப்பாள {இருபிறப்பாள} பிராமணர்களை முழுமையாக மதிக்கிறேன், கர்வம் கொள்வதில்லை, அதிகமாகப் பேசாமலும் இருக்கிறேன்.

வேளாண்மை என்பது போற்றுதலுக்குரிய தொழிலாகக் கருதப்படுகிறது. அதில் கூட, விலங்கின வாழ்வுக்குப் பெரிய தீங்கு செய்யப்படுகிறது என்பது நன்கு அறியப்படுகிறது; நிலத்தை உழுவதால் தரையில் ஒளிந்திருக்கும் எண்ணற்ற உயிரினங்களும், பல்வேறு உருவங்களில் உள்ள விலங்குகளின் வாழ்வும் அழிக்கப்படுகின்றன. இது குறித்து நீர் என்ன நினைக்கிறீர்? ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, விரிகியும் {அரிசியும்} மற்ற அரிசி விதைகளும் {நெல் முதலிய அரிசி வகைகள் அனைத்தும்} உயிருள்ளவையே. இவ்விஷயத்தில் உமது கருத்து என்ன?

ஓ! அந்தணரே {கௌசிகரே}, மனிதர்கள் காட்டுவிலங்குகளை வேட்டையாடிக் கொன்று, அவற்றின் இறைச்சியைப் புசிக்கின்றனர்; அவர்கள் மரங்களையும், மூலிகைகளையும் {செடிகளையும்} கூட அறுக்கின்றனர்; ஆனால், ஓ! அந்தணரே {கௌசிகரே}, மரங்களிலும், பழங்களிலும், ஏன் நீரிலும் கூட எண்ணற்ற உயிரிகள் இருக்கின்றன; நீர் அப்படி எண்ணவில்லையா? ஓ! அந்தணரே {கௌசிகரே} முழுப் படைப்புமே, உயிரிகளை உணவாக ஏற்கும் விலங்குகளின் உயிரால் நிறைந்திருக்கிறது. மீன்கள் மீனை இரையாக்குகின்றன; பல்வேறு விலங்கு வகைகள் பிற விலங்கு வகைகளை இரையாகக் கொள்கின்றன; ஒன்றை ஒன்று உண்ணும் விலங்கு வகைகளும் இருக்கின்றன என்பதை நீர் காணவில்லையா? ஓ! அந்தணரே {கௌசிகரே}, மனிதர்கள் அங்கேயும் இங்கேயும் நடக்கும்போது, தரையில் ஒளிந்திருக்கும் எண்ணற்ற உயிர்களை மிதித்துக் கொல்கின்றனர். விவேகிகளும் ஞானிகளும் கூட, தூங்கும்போதும், நிலைகளை மாற்றும்போதும் எனப் பல்வேறு வழிகளில் விலங்குகளின் உயிரை அழிக்கின்றனர். இதற்கு நீர் என்ன சொல்லப் போகிறீர்? பூமியிலும், காற்றிலும் மொய்த்துக் கொண்டு இருக்கும் அனைத்து உயிர் வகைகளையும், மனிதர்கள், சுயநினைவற்ற நிலையிலும், அறியாமையிலும் அழித்து விடுகின்றனர். இப்படி நடக்கவில்லையா?

இவ்வழக்கில், மக்கள் எவ்வுயிரினத்துக்கும் தீங்கிழைக்கக்கூடாது என்ற கட்டளை,  உண்மை நிலை அறியாமல் இருந்த பழங்காலத்து மனிதர்களால் விதிக்கப்பட்டது. ஓ! அந்தணரே {கௌசிகரே}, எவ்வுயிருக்கும் தீங்கிழைத்த பாவத்தில் இருந்து விடுபட்ட ஒரு மனிதனும் இவ்வுலகில் கிடையாது. முழுமையாகப் பரிசீலித்துப் பார்த்தால், எவ்வுயிருக்கும் தீங்கிழைத்த பாவத்தில் இருந்து விடுபட்டவனாக, இவ்வுலகில் ஒரு மனிதனும் கிடையாது என்ற தவிர்க்க முடியாத தீர்மானத்திற்கே நாம் வர இயலும்.. ஓ! நல்ல அந்தணரே {பிராமணோத்தமரே}, எவ்வுயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்று நோன்பு நோற்ற தவசிகள் கூட, விலங்குகளின் உயிருக்கு தீங்கையே செய்கின்றனர். இன்றியமையாத பெரிய தேவைகள் இருக்கும்போது மட்டுமே, தீங்கு குறைவாக இருக்கிறது. உன்னதப் பிறவிகளும், சிறந்த குணங்கள் கொண்டவர்களும் கூட, தீச்செயல்களை இழைத்துவிட்டு, அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, எதற்கும் வெட்கப்படாமல் இருக்கிறார்கள்.

பின்பற்றத்தக்க வழியில் செயல்படும் நல்லவர்கள், மற்ற நல்லவர்களால் மெச்சப்படுவதில்லை; அதே போல, முரண்பாட்டு வழியில் செயல்படும் தீயவர்கள், தங்கள் உடன் ஒத்த தீயவர்களால் புகழப்படுவதில்லை; உயர் குணங்களைக் கொடையாகக் கொண்டிருந்தாலும், நண்பர்கள், {மற்ற} நண்பர்களுக்கு ஏற்புடையவர்களாக இருப்பதில்லை. மூடப்பண்டிதர்கள் {பண்டிதர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் முட்டாள்கள்}, தங்கள் குருக்களின் அறங்களைச் {சிறப்புகளைச்} சொல்லிக் கதறுகிறார்கள். ஓ! அந்தணரே {கௌசிகரே}, பொருட்களின் இயற்கையான ஒழுங்கு இவ்வுலகில் எல்லா இடங்களிலும் தலைகீழாகவே காணப்படுகிறது. {உலகத்தில் பல பொருட்கள் மாறுபட்டிருப்பனவாகக் காணப்படுகின்றன}. பொருட்களின் நிலை மற்றும் அறம் ஆகியவற்றில் உமது கருத்தென்ன? நமது செயல்களில் நன்மையோ தீமையோ, சொல்வதற்கு அதிகமாகவே இருக்கிறது. ஆனால், எவனொருவன், தனது சொந்த தொழிலில் நிலைபெற்றிருக்கிறானோ, அவன் பெரும் புகழை அடைகிறான்.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்