Friday, July 25, 2014

இல்லறத்தான் கடமை! - வனபர்வம் பகுதி 213

Duty of a House holder!  | Vana Parva - Section 213 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

தர்மவியாதன் கௌசிகரைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, தன் தாய் தந்தையை அறிமுகப்படுத்தி, தன் பெற்றோருக்குத் தான் செய்யும் பணிவிடைகளைச் சொன்னது…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! யுதிஷ்டிரா, முக்தி சம்பந்தமான இந்தப் புதிர்கள் அந்தணருக்கு விளக்கப்பட்ட போது, அவர் {அந்தணர் - கௌசிகர்}, பெரிதும் திருப்தியடைந்து, அந்த வேடனிடம் {தர்மவியாதனிடம்}, "நீ விளக்கிய யாவையும் பகுத்தறிவு கொண்டதாக இருக்கிறது. அறப்புதிர்கள் சம்பந்தமாக உனக்குத் தெரியாதது எதுவும் இல்லை என்று எனக்குப் படுகிறது" என்றார். வேடன் {தர்மவியாதன்}, "ஓ! நல்ல பெரும் அந்தணரே {கௌசிகரே}, நான் கோரும் அனைத்து அறத்தையும், இந்த அருள்நிலையை நான் அடைந்ததற்கான காரணத்தையும் உமது கண்களால் நீர் காண்பீர். வழிபடத்தகுந்த ஐயா, எழுந்து விரைவாக இந்த உள் அறைக்குள் நுழையும். ஓ! அறம் சார்ந்த மனிதரே {கௌசிகரே}, நீர் எனது தந்தையையும், தாயையும் காண வேண்டியது முறையாகும்" என்று சொன்னான் {வேடன் தர்மவியாதன்}.



மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இப்படிச் சொல்லப்பட்ட அந்தணர் {கௌசிகர்}, உள்ளே சென்று ஒரு அழகிய மாளிகையைக் கண்டார். தேவர்களால் போற்றப்படும் அவர்களது {தேவர்களது} அரண்மனைகளில் ஒன்றைப் போல, நான்கு அறைகளாகப் பிரிக்கப்பட்டு, இருக்கைகளுடனும், படுக்கைகளுடனும், சிறந்த நறுமணப் பொருட்களால் மணம் நிறைந்த அற்புதமான வீடாக அது இருந்தது. அவனது {வேடனின்} மரியாதைக்குரிய பெற்றோர், உணவுண்டு முடித்து, வெள்ளை ஆடைகளை உடுத்தி வசதியாக அமர்ந்திருந்தனர். அவர்களைக் கண்ட வேடன் {தர்மவியாதன்}, நெடுஞ்சாண் கிடையாக விழுந்து, தன் தலையை அவர்களது பாதங்களில் வைத்தான். அவனது வயது முதிர்ந்த பெற்றோர் அவனிடம் {வேடனிடம்}, "ஓ! பக்திமானே எழு. நீதி {தர்மம்} உன்னைக் காக்கட்டும்; உனது பக்திக்கான நாங்கள் உன்னிடம் மிகவும் திருப்தியாக இருக்கிறோம்; நீண்ட வாழ்நாள், ஞானம், உயர்ந்த புத்தி, உனது விருப்பங்கள் நிறைவேற்றம் ஆகியவை உனக்கு அருளப்படட்டும்.

நீ கடமையுணர்ச்சி கொண்ட நல்ல மகன். நாங்கள் நியாயமாகவும், தொடர்ச்சியாகவும் உன்னால் பார்த்துக் {கவனித்துக்} கொள்ளப்படுகிறோம். தேவர்களில் கூட உனக்கு {எங்களைத் தவிர} வேறு ஒரு தேவன் தேவையில்லை. தொடர்ந்து உன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அந்தணர்களின் சுயக்கட்டுப்பாட்டை அடைந்திருக்கிறாய். எங்களிடம் நீ கொண்டிருக்கும் பக்தியையும், சுயக்கட்டுப்பாட்டையும், அறங்களையும் கண்டு உனது முப்பாட்டன்களும், மூதாதையர்களும் தொடர்ந்து உன்னிடம் திருப்தியாகவே இருக்கின்றனர். எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும், எங்களைக் கவனிப்பதில் நீ எப்போதும் தடுமாறியதில்லை. உனது மனதில் {எங்களை எப்படித் திருப்தி செய்வது என்பதைத் தவிர} இப்போது வேறு எண்ணமே இல்லை என்று தெரிகிறது. ஜமதக்னியின் மகன் ராமன் {பரசுராமன்} தனது வயது முதிர்ந்த பெற்றோரைச் சேவித்தது போலவும் அதற்கு மேலும், ஓ! மகனே, நீ எங்களைச் சேவிக்கிறாய்" என்றனர் {தர்மவியாதனின் பெற்றோர்}.

பிறகு அந்த வேடன் {தர்மவியாதன்}, அந்த அந்தணரை {கௌசிகரை} தனது பெற்றோரிடம் அறிமுகப் படுத்தினான். அவர்கள் வழக்கமான நல்வரவு வழிபாட்டுடன் அவரை வரவேற்றனர். அந்தணரும் அவர்களது மரியாதையை ஏற்றுக் கொண்டு, அவர்களது இல்லத்தில் உள்ள அவர்களது பிள்ளைகள், பணியாட்கள் ஆகியோரின் நலம் குறித்தும், அவர்களது ஆரோக்கியம் குறித்தும் விசாரித்தார். அந்த வயது முதிர்ந்த இணை {ஜோடி}, "ஓ! அந்தணரே, எங்கள் வீட்டில், எங்கள் பணியாட்கள் உட்பட அனைவரும் நலமுடன் இருக்கிறோம். வழிபடத்தகுந்த ஐயா, நீர் இந்த இடத்தை எந்தச் சிரமமும் இல்லாமல் அடைந்தீரா?" என்று கேட்டனர்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அந்த அந்தணர் {கௌசிகர்}, "ஆம், சிரமமின்றி அடைந்தேன்" என்றார். பிறகு அந்த வேடன் அந்த அந்தணரிடம், "வழிபடத்தகுந்த ஐயா, இந்த எனது பெற்றோர்களே நான் வணங்கும் {உயிருள்ள} சிலைகளாகும். தேவர்களுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் நான் இவர்களுக்குச் செய்கிறேன். இந்திரனைத் தலைமையாகக் கொண்ட முப்பத்து மூன்று தேவர்களும் மனிதர்களால் வழிபடப்படுவதைப் போல, இந்த எனது வயதுமுதிர்ந்த பெற்றோர் என்னால் வழிபடப்படுகின்றனர். தேவர்களுக்குக் காணிக்கைகள் பெற அந்தணர்கள் முயற்சிப்பதைப் போல, நானும் இந்த இருவருக்காகவும் (எனது தெய்வச் சிலைகளுக்காக} விடாமுயற்சியுடன் செயல்படுகிறேன். ஓ! அந்தணரே {கௌசிகரே}, இந்த எனது தந்தையும் தாயுமே எனக்குத் தலைமையான தெய்வங்கள். நான் அவர்களுக்கு மலர்களும், கனிகளும், ரத்தினங்களும் காணிக்கையாகக் கொடுத்து அவர்களை எப்போதும் திருப்தி செய்ய முயல்கிறேன். கற்றவர்களால் சொல்லப்படும் மூன்று புனிதமான நெருப்புகளும் எனக்கு இவர்களே; ஓ! அந்தணரே, அவர்கள் எனக்கு வேள்விகளைப் போலவும், நான்கு வேதங்களைப் போலவும் நன்மையானவர்களாகத் தெரிகிறார்கள்.

எனது, ஐந்து உயிரைக் கொடுக்கும் காற்றுகளும் {வாயுக்களும்}, எனது மனைவி, பிள்ளைகள், நண்பர்கள் ஆகிய அனைவரும் (தங்கள் சேவையை அர்ப்பணிப்புடன்) அவர்களுக்காகவே செயல்படுகின்றனர். எனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கூடி நான் எப்போதும் அவர்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஓ! நல்ல அந்தணரே, அவர்கள் குளிப்பதற்கும், கால் கழுவுவதற்கும், உணவு உண்பதற்கும், நான் எனது கைகளால் அவர்களுக்கு உதவுகிறேன். அவர்களுக்கு ஏற்பில்லாததை விடுத்து, அவர்களுக்கு ஏற்புடையதை மட்டுமே நான் அவர்களிடம் சொல்கிறேன். நான், அவர்களுக்கு ஏற்புடையதைச் செய்வது, நீதியற்ற காரியமாக இருந்தாலும் அதையே நான் உயர்ந்த கடமையாகக் கருதுகிறேன். ஓ! அந்தணரே {கௌசிகரே}, நான் அவர்களைக் கவனிப்பதில் ஊக்கத்துடன் இருப்பேன். ஓ! நல்ல அந்தணரே {பிராமணோத்தமரே - கௌசிகரே}, பெற்றோர் இருவர், புனித நெருப்பு, ஆன்மா, ஆன்ம குரு ஆகிய ஐவரும், செழிப்பைத் தேடும் ஒருவனின் உயர்ந்த மதிப்புக்கு உரியவர்களாவர். அவர்களை முறையாகச் சேவித்தால், ஒருவன் புனித நெருப்பை நிரந்தரமாக எரிய விட்டதற்கான தகுதியை அடைகிறான். இதுவே இல்லறவாசியின் நித்தியமான தவிர்க்கக்கூடாத கடமையாகும்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்