Monday, April 27, 2015

கேசவனைத் தஞ்சமடை துரியோதனா! - உத்யோக பர்வம் பகுதி 69

Duryodhana, seek refuge with Kesava? | Udyoga Parva - Section 69 | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 29) {யானசந்தி பர்வம் - 23}

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனை அடைவது எப்படி என்று சஞ்சயன் திருதராஷ்டிரனுக்குச் சொன்னது; கிருஷ்ணனைத் தஞ்சமடையும்படி துரியோதனனிடம் திருதராஷ்டிரன் சொன்னது; துரியோதனன் மறுப்பது; காந்தாரி துரியோதனனைக் கண்டிப்பது; கிருஷ்ணனை அடையும் வழிகளைச் சஞ்சயன் திருதராஷ்டிரனுக்குச் சொன்னது...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், "ஓ! சஞ்சயா, அண்டத்தின் உயர்ந்த தலைவனாக {மஹாதேவனாக} மாதவனை {கிருஷ்ணனை} எப்படி உன்னால் அறிய முடிகிறது? என்னால் ஏன் அவனை {கிருஷ்ணனை} அப்படி அறிய முடியவில்லை? ஓ! சஞ்சயா, இதை எனக்குச் சொல்" என்றான்.

அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ மன்னா {திருதராஷ்டிரரே} கேளும். உமக்கு ஞானமில்லை {பக்தியில்லை}, எனக்கோ எனது ஞானம் குறையவில்லை. ஞானமில்லாமல், அறியாமை எனும் இருளில் மூழ்கி இருக்கும் ஒருவனால், கேசவனை {கிருஷ்ணனை} அறிய முடியாது. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, திரள், நுட்பம் மற்றும் காரணம் ஆகியவற்றின் சங்கமமே மதுவைக் கொன்றவன் {மதுசூதனனான கிருஷ்ணன்} என்றும்; அனைத்தையும் படைத்தவன் அவனே, ஆனால் படைக்கப்படாதவன் {சுயம்பு} அவன்; தெய்வீகமானவன் அவன், அவனிலிருந்தே அனைத்தும் எழுகின்றன, அவனிடமே அனைத்தும் திரும்பிச் சேர்கின்றன என்றும் எனது அறிவின் துணை கொண்டு நான் அறிகிறேன்" என்றான் {சஞ்சயன்}.


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! கவல்கணன் மகனே {சஞ்சயா}, ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்} நீ கொண்டுள்ள நம்பிக்கையின் {பக்தியின்} இயல்பு எப்படிப்பட்டது? திரள், நுட்பம் மற்றும் காரணம் ஆகியவற்றின் சங்கமமே மதுவைக் கொன்றவன் {மதுசூதனனான கிருஷ்ணன்} என்று எதன் {எந்த நம்பிக்கையின்} விளைவாக அறிகிறாய்?" என்று கேட்டான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் அருளப்பட்டிரும். (உலக இன்பங்களோடு அடையாளப்படுத்தப்படும்) மாயைக்கு நான் எவ்வித மதிப்பும் அளிப்பதில்லை. (நோன்புகள், அவனிடம் {கிருஷ்ணனிடம்} நம்பிக்கையில்லாத வேலை மற்றும் ஆத்ம தூய்மை போன்ற) பயனற்ற அறங்களை நான் எப்போதும் பயில்வதுமில்லை. நம்பிக்கையால் ஆத்மாவின் தூய்மையை அடைந்து, சாத்திரங்களில் இருந்து நான் ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} அறிந்து கொண்டேன்" என்றான்.

திருதராஷ்டிரன் {துரியோதனனிடம்}, "ஓ! துரியோதனா, ரிஷிகேசன் என்றும் அழைக்கப்படும் ஜனார்த்தனனின் {கிருஷ்ணனுடைய} பாதுகாப்பை நீ நாடுவாயாக. ஓ! குழந்தாய் {துரியோதனா}, சஞ்சயன், நாம் நம்பத்தகுந்த நண்பர்களில் ஒருவனாவான். கேசவனை {கிருஷ்ணனைத்} தஞ்சமடைவாயாக" என்றான்.

துரியோதனன் {திருதராஷ்டிரனிடம்}, "தேவகியின் தெய்வீக மகன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனோடு நட்பில் ஒன்றுபட்டு மனிதவகையைக் கொல்லப்போகிறான் என்றாலும் கூட, என்னால் கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} செல்ல முடியாது" என்றான்.

திருதராஷ்டிரன் {காந்தாரியிடம்}, "ஓ! காந்தாரி, தீய மனம் கொண்ட இந்த உனது மகன் {துரியோதனன்} பேரிடரில் மூழ்கத் தீர்மானித்திருக்கிறான். பொறாமையும், தீய ஆன்மாவும் கொண்ட இந்த வீணன் {துரியோதனன்}, தன்னைவிட மேன்மையான அனைவரின் வார்த்தைகளையும் புறந்தள்ளுகிறான்" என்றான்.

காந்தாரி {துரியோதனனிடம்}, "முதிர்ந்தோரின் கட்டளைகளை அலட்சியம் செய்யும் பேராசை கொண்ட இழிந்தவனே {துரியோதனா}, உனது தந்தையையும், என்னையும் கைவிட்டுவிட்டு, செழிப்பையும் வாழ்வையும் விட்டுவிட்டு, எதிரிகளின் மகிழ்ச்சியை மேம்படுத்தி, என்னை ஆழ்ந்த துயரில் ஆழ்த்துகிறாயே. ஓ! மூடா {துரியோதனா}, பீமசேனனால் அடிக்கப்பட்டு, புழுதியை {மண்ணை} நீ கடிக்கும்போது, உனது தந்தையின் வார்த்தைகளை நீ நினைவுகூர்வாய்" என்றாள்.

வியாசர், "ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, நான் சொல்வதைக் கேள். ஓ! திருதராஷ்டிரா, கிருஷ்ணனின் அன்புக்குப் பாத்திரமாக நீ இருக்கிறாய். சஞ்சயனை உனது தூதனாக நீ கொண்டிருக்கிறாய். அவன் {சஞ்சயன்} உனது நன்மைக்கு உன்னை வழிநடத்துவான். பழமையானவனும், மேன்மையானவனுமான ரிஷிகேசனை {கிருஷ்ணனை} அவன் {சஞ்சயன்} அறிவான். அவன் சொல்வதை நீ கவனமாகக் கேட்டாயானால், உன் தலைக்கு மேலே தொங்கும் பெரும் ஆபத்திலிருந்து அவன் {சஞ்சயன்} உன்னை நிச்சயம் காப்பான். ஓ! விசித்திரவீரியன் மகனே {திருதராஷ்டிரா}, கோபத்துக்கும் இன்பத்துக்கும் ஆட்படும் மனிதர்கள் பல்வேறு வலைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.

தங்கள் சுய உடைமைகளோடு மனநிறைவு கொள்ளாதவர்கள், விருப்பங்களுடனும் பேராசைகளுடனும் இருப்பதால் அறிவை இழந்து, குருடனால் வழிநடத்தப்படும் {மற்றொரு} குருடன் (குழிகளில் விழுவதைப்} போலத் தங்கள் சொந்த செயல்களின் விளைவாகவே மரணத்திற்கு ஆட்படுகிறார்கள். ஞானிகள் நடக்கும் (பிரம்மத்துக்கு வழிநடத்தும்) பாதை ஒன்றே. அந்தப் பாதையை நோக்கில் கொள்ளும் மேன்மையானவர்கள், மரணத்தை வென்று, அதன் மூலமே இலக்கை {முக்தியை} அடைகிறார்கள்" என்றார் {வியாசர்}.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, முக்தி {விடுதலை} எனதாகும் வகையில், ரிஷிகேசனை {கிருஷ்ணனை} அடையும் பயங்கரமற்ற பாதையைக் குறித்து எனக்குச் சொல்வாயாக" என்றான்.

சஞ்சயன், "கட்டுப்பாடற்ற மனம் கொண்ட ஒரு மனிதன், ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} அறிய எந்த வழிகளும் இல்லை. புலன்களை அடக்காதவன் செய்யும் வேள்விகளும் முடிவை {முக்தியை} அடையும் எந்த வழிகளையும் காட்டாது. தூண்டப்பட்ட புலன்களுக்கு உகந்த பொருட்களைத் துறக்க ஆன்ம ஒளியாலேயே இயலும்; ஆன்ம ஒளி மற்றும் ஊறிழையாமை {அஹிம்சை} ஆகிய இரண்டும் உண்மை ஞானத்தில் இருந்து உதிப்பவை என்பதில் ஐயமில்லை.

எனவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உம்மால் முடிந்த அளவு கடுமையாக உமது புலன்களை அடக்கத் தீர்மானிப்பீராக; உண்மை ஞானத்தில் இருந்து உமது புத்தி தடம் மாறாதிருக்கட்டும்; அதை {புத்தியைச்} சூழ்ந்திருக்கும் உலகளாவிய மயக்கங்களை உமது இதயத்தில் இருந்து விலக்குவீராக. கற்ற அந்தணர்கள், இந்தப் புலனடக்கத்தையே உண்மை ஞானம் என்று விளக்குகிறார்கள். இந்த ஞானமே, கற்ற மனிதர்கள் தங்கள் இலக்கை {முக்தியை} அடைவதற்கான பாதையாக இருக்கிறது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புலன்களை அடக்காத மனிதர்களால் கேசவனை {கிருஷ்ணனை} அடைய முடியாது. புலன்களை அடக்கிய ஒருவனே, சாத்திர அறிவினாலும், யோக ஈர்ப்பின் இன்பத்தினாலும் விழிப்புணர்வடைந்து ஆன்ம அறிவை விரும்புகிறான்" என்றான் {சஞ்சயன்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்