Tuesday, April 28, 2015

கிருஷ்ணனின் பெயர்களும் பொருளும்! - உத்யோக பர்வம் பகுதி 70

The import of Krishna's names | Udyoga Parva - Section 70 | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 30) {யானசந்தி பர்வம் - 24}

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனின் பெயர்களையும் அதற்கான பொருள்களையும் உரைக்குமாறு சஞ்சயனைத் திருதராஷ்டிரன் வேண்டுவது; சஞ்சயன் அவற்றையும் கிருஷ்ணனின் பெருமைகளையும் சொல்லி, கௌரவர்களின் அழிவைத் தடுக்கக் கிருஷ்ணன் அங்கே வரப்போகிறான் என்பதையும் சொன்னது...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், "ஓ! சஞ்சயா, தாமரைக்கண் கிருஷ்ணனைக் குறித்து மீண்டும் எனக்குச் சொல்லுமாறு நான் உன்னை வேண்டிக் கொள்கிறேன்; ஏனெனில், ஓ! ஐயா {சஞ்சயா}, அவனது {கிருஷ்ணனுடைய} பெயர்களின் பொருளை அறிந்தாலாவது, நான் அந்த ஆண்மகன்களில் மேன்மையானவனை {புருஷோத்தமனை} அடையக்கூடும்" என்றான் {திருதராஷ்டிரன்}.


அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "(கேசவனின் {கிருஷ்ணனின்}) அந்த மங்கலகரமான பெயர்களை நான் முன்பே கேட்டிருக்கிறேன். அவற்றில் நான் அறிந்தவற்றை மட்டும் உமக்குச் சொல்கிறேன். எனினும், கேசவன் {கிருஷ்ணன்}, அளவிடப்பட முடியாதவனும், பேச்சின் சக்தியால் விவரிக்கப்பட முடியாதவனும் ஆவான் {என்பதை அறிந்து கொள்ளும்}.

தனது மாயத்திரையால் அனைத்து உயிர்களையும் ஆக்கிரமிப்பதாலோ , தனது மகிமைமிக்கப் பிரகாசத்தாலோ, தேவர்களின் ஓய்விடமாகவும் ஆதரவாகவும் இருப்பதாலோ {எல்லா உயிர்களிலும் வசிப்பதாலோ} அவன் வாசுதேவன் என்று அழைக்கப்படுகிறான்.

எங்கும் பரந்திருக்கும் தனது இயல்பினால்  {எங்கும் வியாபித்துள்ளதால்} அவன் விஷ்ணு என்று அழைக்கப்படுகிறான்.

யோக உட்கவர்தலிலும், உண்மையிலும் மனதைக் குவித்து முனிவனாகப் பயிற்சி செய்வதால், அவன் மாதவன் {பெரும் தவம் செய்பவன்} என்று அழைக்கப்படுகிறான்.

அசுரன் மதுவைக் கொன்றதனாலும், அறிவுக்கான இருபத்து நான்கு பொருட்களின் [1] {ஆத்ம தத்துவங்களின்} சாரமாக அவன் இருப்பதாலும் மதுசூதனன் என்று அழைக்கப்படுகிறான்.

[1] அந்தக்கரணங்கள் நான்கு {மனம், அறிவு, நினைவு, முனைப்பு}, அறிபொறிகள் ஐந்து {ஞானேந்திரியங்கள் - மெய், வாய், கண், மூக்கு, செவி}, செயற்பொறிகள் ஐந்து {கர்மேந்திரியங்கள் - வாக்கு, கை, கால், மலவாய், கருவாய்} , தன்மாத்திரைகள் ஐந்து {சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்}, பூதங்கள் ஐந்து {நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு} ஆகியவை சேர்ந்த இருபத்து நான்கு ஆன்ம தத்துவங்கள்

சாத்வத குலத்தில் பிறந்த அவன், "ஏற்கனவே இருக்கிறது" என்பதைக் குறிக்கும் "கிருஷி" மற்றும் "நித்திய அமைதி" என்பதைக் குறிக்கும் "ண" ஆகிய இரண்டு வார்த்தைகளுக்குள் தன்னை மறைமுகமாக ஐக்கியப்படுத்திக் கொள்வதால் {ஏற்கனவே நிலைத்து இருக்கும் நித்திய அமைதியாக [சமாதானமாக] அவனே இருப்பதால்} அவன் கிருஷ்ணன் என்று அழைக்கப்படுகிறான். [2]

[2] "க்ருஷ்" என்றால் கீறுதல் என்று பொருள். "கருஷ்" என்றால் பூமி என்று பொருள், "ண" என்றால் சுகம் என்று பொருள். "கிருஷ்ண" என்றால் கலப்பையினால் பூமி கீறப்படுவதால் {நிலத்தை உழுவதால்} விளையும் நன்மையைக் குறிப்பதாகும் என்றும் சொல்கிறார்கள்.

"உயர்ந்ததும், நிரந்தரமானதுமான அவனது வசிப்பிடத்தை" குறிக்கும் "புண்டரீகம்" {ஹ்ருதயக் கமலம் = இதயத்தாமரை} மற்றும் "அழிவற்றதைக்" குறிக்கும் "அக்ஷம்" ஆகியவற்றில் இருந்து அவன் புண்டரீகாக்ஷன் என்று அழைக்கப்படுகிறான்;

மேலும் தீயவர்களின் இதயங்களில் அச்சத்தை விளைவிப்பதால் அவன் ஜனார்த்தனன் என்று அழைக்கப்படுகிறான்.

சத்வ குணம் அவனை விட்டு எப்போதும் விலகாததாலும், அவனும் அதைவிட்டு எப்போதும் விலகாமல் இருப்பதாலும் அவன் சாத்வதன் என்று அழைக்கப்படுகிறான்;

"விருஷபம்" என்பது "வேதங்களைக்" குறிக்கும், "இக்ஷணம்" என்பது "கண்ணைக்" குறிக்கும். அந்த இரண்டும் இணைந்து வேதங்களே அவனது கண்கள் என்றோ, வேதங்களே அவனைக் காண்பதற்கான கண்கள் என்றோ குறிக்கின்றன என்பதால், அவன் விருஷபாக்ஷணன் என்று அழைக்கப்படுகிறான்,

எதிரி படைகளை வெற்றிக் கொள்ளும் அவன், எந்த உயிரிலிருந்தும் சாதாரண வழியில் தனது பிறப்பை எடுக்காததால், "பிறக்காதவன்" அல்லது அஜா என்று அழைக்கப்படுகிறான்.

தேவர்களைப் போலல்லாமல் அவனது பிரகாசமும், அவனது சுயமும் படைக்கப்படாததாக இருப்பதாலும், சுயக்கட்டுப்பாடும், பெரும் பிரகாசமும் கொண்டிருப்பதாலும் அந்தப் பரமாத்மா தாமோதரன் [3] என்று அழைக்கப்படுகிறான்.

[3] புலன்களுக்கு மத்தியில் தானே பிரகாசித்து அமைதியாக இருப்பவன் என்றும் அப்பெயர் விளக்கப்படுகிறது.

"நித்திய மகிழ்ச்சி" என்பதற்கு "ஹ்ரிஷிகா" என்றும் "ஈசா" என்பதற்கு "ஆறு தெய்வீகப் பண்புகள்" என்றும் பொருள், இவற்றின் இணைப்பு இன்பம், மகிழ்ச்சி, தெய்வீகம் ஆகியவற்றைக் குறிப்பதால் அவன் ரிஷிகேசன் {ஹ்ரிஷிகேசன்} என்று அழைக்கப்படுகிறான்.

தனது இரு கரங்களால் பூமியையும், வானத்தையும் தாங்கிப் பிடிப்பதால், அவன் மஹாபாஹு என்று அழைக்கப்படுகிறான்.

எப்போதும் கீழே வீழாதவன் என்பதாலும், எந்தக் குறைவும் அற்று இருப்பதனாலும் அவன் அதாக்ஷஜன் {அதோக்ஷஜன்} என்று அழைக்கப்படுகிறான்,

மேலும், மனிதர்கள் {நரர்கள்} அனைவருக்கும் புகலிடமாக இருப்பதால் {அயனமாக இருப்பதால்} அவன் நாராயணன் என்று அழைக்கப்படுகிறான்.

"படைத்துப் பாதுகாப்பவன்" என்பதையும், "அண்டத்தைப் படைத்து, பாதுகாத்து, அழிப்பவனைக் குறிக்கும் ஒருமையை அழிப்பவன்" என்பதையும் குறிக்கும் "புரு" என்பதில் இருந்து அவன் புருஷோத்தமன் {ஆண்மகன்களில் மேன்மையானவன்} என்று அழைக்கப்படுகிறான்.

அனைத்துப் பொருட்களின் அறிவையும் கொண்டிருப்பதால் அவன் சர்வன் என்று அழைக்கப்படுகிறான்.

கிருஷ்ணன் எப்போதும் உண்மையில் இருக்கிறான், உண்மையும் எப்போதும் அவனில் இருக்கிறது, மேலும் கோவிந்தனே உண்மையின் உண்மையாவான். எனவே, அவன் சத்யன் என்று அழைக்கப்படுகிறான்.

தனது {வியாபிக்கும் தன்மை கொண்ட} ஆற்றலுக்காக விஷ்ணு என்றும், தனது வெற்றிகாக ஜிஷ்ணு என்றும் அவன் அழைக்கப்படுகிறான்.

நித்தியமானவனாக {அழிவில்லாதவனாக} இருப்பதால் அனந்தன் என்றும், அனைத்து வகைப் பேச்சுகளின் அறிவையும் கொண்டிருப்பதால் கோவிந்தன் என்றும் அவன் அழைக்கப்படுகிறான்.

உண்மையற்றவற்றை உண்மையாகத் தோன்றச் செய்து அனைத்து உயிர்களையும் அவன் ஏமாற்றுகிறான். இத்தகு குணங்களைக் கொண்டவனும், அறத்திற்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவனும், தெய்வீகமானவனும், சிதையும் திறனற்ற வலிய கரங்கள் கொண்டவனும் மதுவைக்கொன்றவனுமான, அவன் {மதுசூதனன் = கிருஷ்ணன்}, குருக்களின் {கௌரவர்களின்} படுகொலையைத் தடுக்கும்பொருட்டு இங்கே வருவான்" என்றான் {சஞ்சயன்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்