Monday, June 29, 2015

"ஒரே வழி போரே!" என்ற கிருஷ்ணன்! - உத்யோக பர்வம் பகுதி 150

"War is the only way left!" said Krishna! | Udyoga Parva - Section 150 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –79)

பதிவின் சுருக்கம் : பெரியோர் சொல் கேளாத துரியோதனன் அவர்களை அவமதிக்கும் வகையில் சபையை விட்டு அகன்றது, பதினோரு அக்ஷௌஹிணி படையை குருக்ஷேத்திரத்திற்கு அனுப்பியது ஆகியவற்றை யுதிஷ்டிரனிடம் சொன்ன கிருஷ்ணன், சாம, தான, பேதங்களைத் தான் துரியோதனனிடம் கௌரவச் சபையில் முயற்சித்துப் பார்த்துவிட்டதாகவும், இனி தண்டமே மீதி என்றும் சொன்னது...

வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} சொன்னான், "இப்படி பீஷ்மர், துரோணர், விதுரர், காந்தாரி, திருதராஷ்டிரர் ஆகியோர் சொல்லியும், அந்தப் பொல்லாதவன் {துரியோதனன்} அறிவைப் பெறவில்லை. மறுபுறம், அந்தத் தீய துரியோதனன், கோபத்தால் கண்கள் சிவக்க, (அவையை விட்டு அகன்று), அவர்கள் அனைவரையும் அவமதித்தான். (அவனால் அழைக்கப்பட்டவர்களும்), தங்கள் உயிரைக் கொடுக்கத் தயாராக இருந்த மன்னர்கள் அனைவரும், அவனது {துரியோதனனின்} பின்னை தொடர்ந்து சென்றனர்.


"இன்று பூச நட்சத்திரக் கூட்டம் உச்சம் பெற்றிருக்கிறது {இன்று பூச நட்சத்திரமாகும்}. (இன்றே) குருக்ஷேத்திரத்திற்கு அணிவகுத்துச் செல்லுங்கள்" என்று மன்னன் துரியோதனன், தீய இதயம் கொண்ட அந்த ஆட்சியாளர்களிடம், மீண்டும் மீண்டும் சொன்னான். விதியால் உந்தப்பட்ட அந்த ஏகாதிபதிகள், பீஷ்மரைப் படைத்தலைவராக {சேனாதிபதியாகக்} கொண்டு, தங்கள் படைவீரர்களுடன் மகிழ்ச்சியாகப் புறப்பட்டுச் சென்றனர்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, கௌரவர்களுக்காக பதினோரு {11} அக்ஷௌஹிணி துருப்புகள் கூடியிருக்கின்றன. அப்படையின் தலைமையில், பனைமரக் கொடியைத் தனது தேரில் கொண்டவரான பீஷ்மர் பிரகாசித்துக் கொண்டிருந்தார். எனவே, இதுவரை நடந்ததை நோக்கில் கொண்டு, ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, எது சரியாகத் தோன்றுகிறதோ, அதைச் செய்யும். ஓ! மன்னா, ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, எனது முன்னிலையில், பீஷ்மர், துரோணர், விதுரர், காந்தாரி மற்றும் திருதராஷ்டிரர் ஆகியோர் சொன்னது அனைத்தையும் உமக்குச் சொல்லிவிட்டேன்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, (பூமியில் உள்ள) மக்களின் வளர்ச்சி, செழிப்பு மற்றும் இந்தக் {கௌரவக்} குலத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றின் நிமித்தமாக, ({பாண்டவர்களாகிய} உங்களுக்கும், {கௌரவர்களாகிய} உமது சகோதரர்களுக்கும் இடையில்) சகோதரப் பாசத்தை நிறுவும் விருப்பத்தால், சமரசப் பேச்சில் தொடங்கும் கலைகள் அனைத்தையும் {சாம வழி} முயன்றேன். சமரசம் தோற்றதும், கருத்து வேறுபாட்டை (உண்டாக்கும்) கலையை {பேத வழியை} முயன்று, பாண்டவர்களாகிய உங்கள் அனைவரின் இயல்பான மற்றும் இயல்புக்கு மிக்க {சாதாரண மற்றும் அசாதாரண} சாதனைகளைக் குறிப்பிட்டேன். உண்மையில், சுயோதனன் சமரசப் பேச்சுகளுக்கு எந்த மதிப்பையும் காட்டாத போதே, ஒன்றாகக் கூடியிருந்த மன்னர்களுக்கிடையில் (அவர்களுக்குள்) கருத்து வேறுபாட்டை உண்டாக்க முயற்சி செய்தேன் (பேசினேன்). ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, இயல்புக்கு மிக்க, மோசமான, பயங்கரமான மற்றும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட அறிகுறிகளை நான் என்னிடம் வெளிப்படுத்தினேன்.

ஓ! தலைவா {யுதிஷ்டிரரே}, {பேத வழியில்} மன்னர்கள் அனைவரையும் கடிந்து கொண்டு, துரியோதனனைப் புல்லாக்கி {துரும்பாகச் சிறுமை செய்து}, ராதையின் மகனை {கர்ணனை} அச்சுறுத்தி, திருதராஷ்டிரர் மகன்களின் சூதாட்டத்துக்காக சுபலனின் மகனை {சகுனியை} மீண்டும் மீண்டும் நிந்தித்து, வார்த்தைகள் மற்றும் சூழ்ச்சிகள் ஆகிய இரண்டின் மூலமாகவும் மன்னர்கள் அனைவருக்குள்ளும் ஒற்றுமையின்மையை {கருத்த வேறுபாட்டை} ஏற்படுத்த மீண்டும் ஒருமுறை முயற்சித்த பிறகு, நான் மீண்டும் சமரசம் பேசினேன். {மீண்டும் சாம வழிக்குத் திரும்பினேன்}. குரு குலத்தின் ஒற்றுமைக்காகவும், (நெருங்கி வரும்) தொழிலுக்கான {போருக்கான} முக்கிய தேவைகளை நோக்கில் கொண்டும், நான் கொடையளிப்பது குறித்தும் {தானவழியிலும்} பேசினேன்.

உண்மையில் நான், "வீரர்களான அந்தப் பாண்டுவின் மகன்கள், தங்கள் பெருமையைத் துறந்து, திருதராஷ்டிரர், பீஷ்மர் மற்றும் விதுரரைச் சார்ந்தே வாழ்வார்கள். {துரியோதனனான} உனக்கே நாடு கொடுக்கபடட்டும். அவர்கள் {பாண்டவர்கள்} எந்த அதிகாரத்தையும் பெறாமல் இருக்கட்டும். மன்னன் (திருதராஷ்டிரர்), கங்கையின் மகன் (பீஷ்மர்), மற்றும் விதுரர் ஆகியோர் உனது நன்மைக்காகச் சொல்வது அனைத்தும் நடைபெறட்டும். நாடும் உனதாகட்டும். (பாண்டவர்களுக்கு) ஐந்து கிராமங்களை மட்டும் விட்டுக்கொடு. ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, உனது தந்தையால் தாங்கப்படத் தகுந்தவர்கள் {ஆதரிக்கப்பட வேண்டியவர்கள்} அவர்கள் {பாண்டவர்கள்} என்பதில் ஐயமில்லை" என்றேன். {இப்படியே தான வழியில் பேசினேன்}.

இப்படிச் சொல்லப்பட்டும், அந்தத் தீய ஆன்மா கொண்டவன் {துரியோதனன்}, உமக்கு உங்கள் பங்கைத் தர மறுக்கிறான். எனவே, தண்டனையைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியவில்லை. அதுவே, பாவம் நிறைந்தவர்களுக்கு எதிராகச் செய்யப்பட வேண்டிய வழியாக இப்போது இருக்கிறது [1]. உண்மையில், அந்த மன்னர்கள் அனைவரும், ஏற்கனவே குருக்ஷேத்திரத்திற்கு அணிவகுத்துச் சென்றுவிட்டார்கள். குருக்களின் சபையில் நடந்தது அத்தனையும் நான் உமக்குச் சொல்லிவிட்டேன். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, போரில்லாமல் உமக்கு அவர்கள் நாட்டைத் தரமாட்டார்கள். மரணம் அவர்களுக்கு முன் காத்திருப்பதால், உலக அழிவுக்கு அவர்கள் அனைவரும் காரணமாக விளங்குகிறார்கள்" என்றான் {கிருஷ்ணன்}."

[1] சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு வழிகளில் முதல் மூன்று வழிகளை முயன்றாகிவிட்டது. சமாதானத்தைத் துரியோதனன் ஏற்கவில்லை. எனவே, இனி நான்காவது வழியான தண்டமே மிச்சமிருக்கிறது என்கிறான் கிருஷ்ணன்.



வேறு பதிப்புகளில் இங்கேயே {உத்யோக பர்வம் பகுதி 150} உபபர்வமான பகவத்யாந பர்வம் முற்று பெற்று, மற்றொரு உபபர்வமான சைனியநிர்யாண பர்வம் ஆரம்பமாகிறது. கங்குலியிலோ பகவத்யாந பர்வம் முற்று பெறாமல் தொடர்கிறது. வழக்கம் போலவே நாம் கங்குலியின் பாதையில் தொடர்ந்தாலும், அடுத்தப்பதிவில் இருந்து பகவத்யாந பர்வம் அந்தத் தலைப்பின் அருகிலேயே {சைனியநிர்யாண பர்வம்} என்ற உபதலைப்பையிட்டுத் தொடர்வோம்.
_________________________________________________________________________________


திருக்குறள் 673:
பொருட்பால் - அமைச்சியல் - வினைசெயல்வகை

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் 
செல்லும்வாய் நோக்கிச் செயல்.


Translation:
When way is clear, prompt let your action be;
When not, watch till some open path you see.

Explanation:
Whenever it is possible (to overcome your enemy) the act (of fighting) is certainly good; if not, endeavour to employ some more successful method.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போது சாம, தான, பேத, தண்டம் என்னும் எல்லா உபாயங்களிலும் தண்டம் என்னும் உபாயம் கொண்டு செய்வது நல்லது. அது பலன் அளிக்காத போது, பிற மூன்றினுள் ஏற்ற ஒன்று கொண்டு செய்க.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்