Monday, July 20, 2015

அம்பையைத் தேற்றிய சைகாவத்யர்! - உத்யோக பர்வம் பகுதி 177

Saikhavatya consoled Amva! | Udyoga Parva - Section 177 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 4)

பதிவின் சுருக்கம் : சால்வனின் நகரத்தை விட்டு வெளியே வந்த அம்பை தன் நிலை குறித்து ஆலோசிப்பது; இந்நிலைக்குத் தானே காரணம் என்று முதலில் நினைப்பது; பிறகு தனது துன்பம் அனைத்துக்கும் பீஷ்மரே காரணம் என்று நினைப்பது; இதை நினைத்துக் கொண்டே ஓர் ஆசிரமத்திற்குச் சென்ற அவள், அங்கிருந்த தவசிகளிடம் தன் வரலாறு அனைத்தையும் நுணுக்கமாகச் சொல்வது;  அந்தணரான சைகாவத்யர் அவளைத் தேற்றியது...

பீஷ்மர் {துரியோதனனிடம்}, "நகரத்தைவிட்டு வெளிவந்த அம்பை {கீழ்க்கண்ட} இவ்வகையிலேயே துயரத்துடன் ஆலோசித்தாள். அவள் {அம்பை}, "இந்த முழு உலகிலும், இத்தகு துன்பகரமான அவல நிலையை அடைந்த ஓர் இளம்பெண் எவளும் இல்லை! ஐயோ, நண்பர்களை இழந்த நான், சால்வனாலும் நிராகரிக்கப்பட்டேனே! சால்வனை எதிர்பார்த்த என்னைத் தனது நகரைவிட்டு செல்ல பீஷ்மன் அனுமதித்ததால், யானையின் பெயரைக் கொண்ட அந்த நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} என்னால் திரும்ப முடியாது! யாரை நான் பழிப்பது? என்னையா? வெல்லப்பட முடியாத பீஷ்மனையா? அல்லது சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்த எனது முட்டாள் தந்தையையா?


உண்மையில், அஃது என் தவறே! அந்தக் கடும்போர் நடந்து கொண்டிருந்தபோது, சால்வனிடம் செல்ல பீஷ்மனின் தேரில் இருந்து நான் ஏன் குதித்திருக்கக்கூடாது? அறிவற்றவள்போல நான் அதைத் தவிர்த்ததன் கனியாலேயே {விளைவாகவே} நான் இப்படித் துன்புற்றிருக்கிறேன். பீஷ்மன் சபிக்கப்படட்டும்! ஆற்றலை வரதட்சணையாகக் கொண்டு, கருத்தில் கொள்ள (அனுப்பப்படும்) பெண்ணைப் {வேசியைப்} போல, என்னை அனுப்ப ஏற்பாடு செய்தவனும், மூடப் புத்தி கொண்டவனுமான எனது இழிந்த தந்தையும் சபிக்கப்படட்டும்! {இந்நிலைக்குக் காரணமான} நானும் சபிக்கப்படட்டும்! மன்னன் சால்வனும் சபிக்கப்படட்டும்! என்னைப் படைத்தவனும் சபிக்கப்படட்டும்! யாவரின் தவறால் எனக்கு இந்தப் பேரிடர் நேர்ந்ததோ அவர்கள் அனைவரும் சபிக்கப்படட்டும்!

மனிதர்கள் தங்களுக்கு விதிக்கபட்டதிலேயே எப்போதும் துன்புறுகிறார்கள். எனினும், எனது தற்போதைய துன்பத்திற்குக் காரணம் சந்தனுவின் மகனான பீஷ்மனே; எனது துயரத்திற்கான காரணம் அவனே என்பதால், தவத்தினாலோ, போரினாலோ தற்போதைய எனது பழியுணர்வை நான் அவன் {பீஷ்மன்} மீது விழச்செய்ய வேண்டும். ஆனால், போரில் பீஷ்மனை வெல்ல முயற்சி செய்யக்கூடிய மன்னன் எவன்தான் இருக்கிறான்?" என்று நினைத்தாள்.

இதைத் தீர்மானித்த அவள் {அம்பை}, அந்த நகரத்தை விட்டு வெளியேறி, அறச்செயல்கள் செய்யும் உயர் ஆன்ம தவசிகளின் ஆசிரமத்திற்குச் சென்றாள். அந்தத் தவசிகள் சூழ அந்த இரவு அங்கேயே தங்கினாள். ஓ! பாரதா {துரியோதனா}, இனிய புன்னகை கொண்ட அந்த மங்கை {அம்பை}, தான் கடத்தப்பட்டது, சால்வனால் நிராகரிக்கப்பட்டது ஆகியவற்றையும், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, தனக்கு நேர்ந்த அனைத்தையும் நுணுக்கமான தகவல்களுடன் அந்தத் துறவிகளிடம் சொன்னாள்.

அந்த ஆசிரமத்தில் கடும் நோன்புகளைக் கொண்டவரும் நன்கு அறியப்பட்டவருமான அந்தணர் ஒருவர் வாழ்ந்தார்; அவரது பெயர் சைகாவத்யர் [1] ஆகும். உயர்வகைத் தவத்தகுதி கொண்ட அவர் {சைகாவத்யர்}, சாத்திரங்களிலும், ஆரண்யகங்களிலும் {வேத விளக்கங்களிலும்} ஆசானாக இருந்தார். பெரும் தவத்தகுதி கொண்ட அந்தத் தவசியான சைகாவத்யர், துயுருற்றிருந்த அந்தக் கன்னிகையிடம் {அம்பையிடம்}, துயரத்தில் பெரிதும் அழுதுகொண்டிருந்த அந்தக் கற்புடைய பெண்ணிடம் {அம்பையிடம்}, "இஃது அப்படியே இருப்பினும், ஓ! அருளப்பட்ட மங்கையே {அம்பையே}, (வனத்தில் உள்ள) ஓய்வில்லங்களில் {தபோவனங்களில்} வசித்து, தவங்களில் ஈடுபட்டு வரும் உயர் ஆன்ம தவசிகளால் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டார் {சைகாவத்யர்}.

[1] சைகாவத்யர் என்பதற்கு, வைதீக காரியங்களான அக்னியின் காரியங்களில் மிகப் பற்றுடையவர் என்று பொருளாகும்.

எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, அந்த மங்கை அவரிடம் {அம்பை சைகாவத்யரிடம்}, "என்னிடம் கருணை காட்டப்படட்டும்; உலகைத் துறந்த நான், வனவாழ்வையே விரும்புகிறேன். நான் தவத்துறவுகளில் கடுமையானவற்றைப் பயில்வேன். எனது முந்தைய வாழ்வில் அறியாமையால் நான் செய்தப் பாவங்களின் கனியே இப்போது நான் அனுபவிக்கும் துன்பம் என்பது நிச்சயம். சால்வனால் நிராகரிக்கப்பட்டதையும் அவமதிக்கப்பட்டதையும் அறிந்து துயருற்றவளான நான் எனது உறவினர்களிடம் திரும்பிச் செல்ல முயல மாட்டேன்! பாவங்கள் கழுவப்பட்டவரும், எனக்குத் தேவனைப் போன்றவருமான நீர், தவத்துறவை எனக்கு அறிவுறுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்! ஓ..., என்னிடம் கருணை காட்டப்படட்டும்" என்றாள் {அம்பை}.

இப்படிச் சொல்லப்பட்ட அந்தத் தவசி {சைகாவத்யர்}, சாத்திரங்களில் இருந்து உதாரணங்களையும் காரணங்களையும் சொல்லி அந்தக் கன்னிகைக்கு {அம்பைக்கு} ஆறுதல் கூறினார். இப்படி அவளைத் தேற்றிய அவர் {சைகாவத்யர்}, பிற அந்தணர்களுடன் கூடி அவள் விரும்பியதைச் செய்வதாக உறுதியளித்தார்" என்றார் {பீஷ்மர்}. 


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்