Monday, July 20, 2015

அம்பையை மறுத்த சால்வன்! - உத்யோக பர்வம் பகுதி 176

Salwa rejected Amba! | Udyoga Parva - Section 176 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 3)

பதிவின் சுருக்கம் : பீஷ்மரிடம் அனுமதி பெற்ற அம்பை, சால்வனிடம் சென்றது; அங்கு அவனால் அவள் நிராகரிக்கப்பட்டது; அம்பை சால்வனிடம் மன்றாடியது; பீஷ்மர் மீது கொண்ட அச்சத்தால் தான் அவளை மறுப்பதாக சால்வன் அம்பையிடம் சொல்லி போ... போ.. என்று அவளை அவசரப்படுத்தியது; அம்பை துயரத்துடன் சால்வனின் நகரத்தில் இருந்து வெளியேறியது...

சால்வனும் அம்பையும்
பீஷ்மர் {துரியோதனனிடம்}, "பிறகு நான் இக்காரியத்தைக் காந்தவதி என்றும் அழைக்கப்பட்ட (எனது தாயான) காளியிடமும் {சத்தியவதியிடமும்), எங்கள் ஆலோசகர்கள் {அமைச்சர்கள்} அனைவரிடமும், புரோகிதர்கள் மற்றும் சிறப்புப் புரோகிதர்கள் ஆகியோரிடமும் வைத்த பிறகு, ஓ! மன்னா {துரியோதனா}, அந்தக் கன்னிகையரில் மூத்தவளான அம்பையைப் புறப்பட அனுமதித்தோம். என்னால் அனுமதிக்கப்பட்ட அந்தக் கன்னிகை {அம்பை}, சால்வர்களின் ஆட்சியாளன் நகருக்குச் சென்றாள். அவள் தனது துணைக்கு, முதிர்ந்த அந்தணர்கள் பலரைக் கொண்டிருந்தாள். மேலும் அவள் தனது சொந்த செவிலியாலும் பின்தொடரப்பட்டாள்.

(ஹஸ்தினாபுரத்திற்கும், சால்வனின் நகரத்திற்கும் இடைப்பட்ட) முழு தூரத்தையும் கடந்து பயணம் செய்த அவள் {அம்பை}, மன்னன் சால்வனை அணுகி, "ஓ! வலிமைமிக்க கரங்களைக் கொண்டவரே, ஓ! உயர் ஆன்மா கொண்டவரே {சால்வரே}, நான் உம்மை எதிர்பார்த்து வந்திருக்கிறேன்" என்றாள். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, அந்தச் சால்வர்களின் தலைவன் சிரித்துக் கொண்டே அவளிடம் {சால்வன் அம்பையிடம்}, "ஓ! அழகிய நிறம் கொண்டவளே {அம்பையே}, இன்னொருவனுக்குத் திருமணம் செய்யப்பட இருந்த உன்னை மனைவியாக அடைய இனியும் நான் விரும்பவில்லை. எனவே, ஓ அருளப்பட்டவளே {அம்பையே}, இங்கிருந்து நீ பீஷ்மனின் முன்னிலைக்குச் செல்வாயாக. பீஷ்மனால் பலவந்தமாகக் கடத்தப்பட்ட உன்னை இனியும் நான் விரும்பவில்லை.

உண்மையில், பீஷ்மன், மன்னர்களை வீழ்த்தி உன்னைக் கடத்திச் செல்கையில் நீ அவனுடன் {பீஷ்மனுடன்} உற்சாகமாகவே சென்றாய். பூமியின் மன்னர்கள் அனைவரையும் அவமானப்படுத்தி வீழ்த்தி, பீஷ்மன் உன்னைக் கவர்ந்து சென்றதாலும், நீ இன்னொருவனுக்குத் திருமணம் செய்யப்பட இருந்தவள் என்பதாலும், நான் இனியும் உன்னை மனைவியாக்கிக் கொள்ள விரும்பவில்லை. அறிவின் அனைத்துக் கிளைகளையும் அறிந்தவனும், பிறருக்கு வழிகாட்டும் விதிகளைச் சமைப்பவனுமான என்னைப் போன்ற மன்னன் ஒருவனால், இன்னொருவனுக்குத் திருமணம் செய்யப்பட இருந்த ஒரு பெண்ணை (தனது இல்லத்துக்குள்) எப்படி அனுமதிக்க முடியும்? ஓ! அருளப்பட்ட மங்கையே {அம்பையே}, நேரத்தை வீணாகக் கழிக்காமல், நீ எங்கு செல்ல விரும்புகிறாயோ அங்கே செல்வாயாக" என்றான் {சால்வன்}.

ஓ! மன்னா {துரியோதனா}, அவனது {சால்வனது} வார்த்தைகளைக் கேட்ட அம்பை,  காம தேவனின் {மன்மதனின்} கணைகளால் தாக்குண்டு சால்வனிடம், "அப்படிச் சொல்லாதீர், ஓ! பூமியின் தலைவா {சால்வரே}, ஏனெனில் அது அப்படி இல்லை. ஓ! எதிரிகளை வாட்டுபவரே, பீஷ்மரால் கடத்தப்பட்ட போது, நான் மகிழ்ச்சியாக இல்லை! நாளெல்லாம் நான் அழுது கொண்டிருந்த போது, மன்னர்கள் அனைவரையும் கலங்கடித்தபடி பலவந்தமாக அவர் {பீஷ்மர்} என்னைத் தூக்கிச் சென்றார். ஓ! சால்வர்களின் தலைவரே, உம்முடன் பிணைப்புடன் இருக்கும் அப்பாவிப் பெண்ணான என்னை ஏற்றுக் கொள்வீராக! (ஒருவனிடம்) பிணைப்புடன் இருப்பவர்களை (அவன்) கைவிடுவது, சாத்திரங்களில் மெச்சப்படுவதில்லை.

போரில் இருந்து பின்வாங்காதவரான கங்கையின் மைந்தரிடம் {பீஷ்மரிடம்} வேண்டிக்கொண்டு, இறுதியாக அவரது {பீஷ்மரது} அனுமதியைப் பெற்றே நான் உம்மிடம் வந்தேன். உண்மையில், வலிமைமிக்க கரங்களைக் கொண்ட பீஷ்மர், ஓ! மன்னா {சால்வரே}, என்னை விரும்பவில்லை! (இக்காரியத்தில்) அவரது செயல்பாடு, அவரது தம்பிக்காகவே {விசித்திரவீரியனுக்காகவே} செய்யப்பட்டது என்று நான் கேள்விப்பட்டேன். என்னுடன் ஒரே சமயத்தில் கடத்தப்பட்ட அம்பிகை மற்றும் அம்பாலிகை ஆகிய என் தங்கையர் இருவரும், ஓ! மன்னா {சால்வரே}, கங்கையின் மைந்தரால் {பீஷ்மரால்}, அவரது தம்பி விசித்திரவீரியனுக்கு அளிக்கப்பட்டார்கள்.

ஓ! சால்வர்களின் தலைவா, ஓ! மன்னர்களில் புலியே {சால்வரே}, உம்மைத் தவிர நான் வேறு யாரையும் கணவனாக நினைத்ததில்லை என்று என் தலையைத் தொட்டு சத்தியம் செய்கிறேன். ஓ! பெரும் மன்னா {சால்வரே}, இன்னொருவருக்கு திருமணம் செய்யப்பட வேண்டிய நிலையில் இருந்து நான் உம்மிடம் வரவில்லை. ஓ! சால்வரே, எனது ஆன்மாவின் மீது உண்மையாக ஆணையிட்டு, நான் உம்மிடம் உண்மையையே சொல்கிறேன். ஓ! பெரிய கண்களை உடையவரே, இன்னொருவருக்குத் திருமணம் செய்யப்பட வேண்டாதவளாக, உமது அருளை விரும்பி, தனது சொந்த விருப்பத்தில் உம்மிடம் வந்திருக்கும் கன்னிகையான என்னை ஏற்றுக் கொள்ளும்" என்றாள் {அம்பை}.

என்னதான் அவள் இதே வகையில் பேசினாலும், ஓ! பாரதர்களின் தலைவா {துரியோதனா}, பாம்பு தனது சட்டையைக் கைவிடுவது போல, காசி ஆட்சியாளனின் மகளை {அம்பையைச்} சால்வன் நிராகரித்தான். இதுபோன்ற பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி ஆவலோடு வேண்டப்பட்டாலும், அந்தச் சால்வர்களின் தலைவன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, அந்தப் பெண்ணை {அம்பையை} ஏற்றுக்கொள்ளும் எந்த ஆவலையும் வெளிப்படுத்தவில்லை.

பிறகு, அந்தக் காசி ஆட்சியாளனின் மூத்த மகள் {அம்பை}, கோபத்தால் நிறைந்து, கண்ணீரால் குளித்த கண்களுடன், கண்ணீராலும், துயரத்தாலும் தடைப்பட்ட குரலுடன் {அம்பை சால்வனிடம்}, "உம்மால் கைவிடப்படும் நான், ஓ! மன்னா {சால்வரே}, எங்கே போனாலும், நீதிமான்கள் எனக்குப் பாதுகாவலர்களாக இருப்பார்கள். ஏனெனில், உண்மை அழிவற்றதாகும்" என்றாள் {அம்பை}.

இப்படியே, ஓ! குருகுலத்தோனே {துரியோதனா}, அந்தச் சால்வர்களின் தலைவன், தன்னிடம் இம்மொழியில் பேசியவளும், மென்மையாக அழுதுகொண்டிருந்தவளுமான அந்தக் கன்னிகையை நிராகரித்தான். "போ... போ..." என்ற வார்த்தைகளே சால்வன் அவளிடம் மீண்டும் மீண்டும் சொன்ன வார்த்தைகளாக இருந்தது. "ஓ! அழகிய இடை கொண்டவளே {அம்பையே}, நான் பீஷ்மனை அஞ்சுகிறேன். நீயோ பீஷ்மனின் கைதி" என்று அவன் {சால்வன்} சொன்னான். தொலைநோக்குப் பார்வையாற்ற அந்தச் சால்வனால் இப்படிச் சொல்லப்பட்ட கன்னிகை, பெண் அன்றில் {பறவையைப்} போல அழுது கொண்டே, துயரத்துடன் அவனது {சால்வனின்} நகரத்தை விட்டு வெளியேறினாள்.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்