Wednesday, July 22, 2015

அம்பையைத் தூண்டிய அகிருதவரணர்! - உத்யோக பர்வம் பகுதி 179

Akritavrana urged Amva! | Udyoga Parva - Section 179 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 6)

பதிவின் சுருக்கம் : சால்வனை மணந்து கொள்ளச் செய்வது, அல்லது பீஷ்மரைக் கொல்வது ஆகிய இரண்டில் ஒரு தீர்வைச் சொல்லுமாறு அகிருதவரணர் அம்பையிடம் கேட்பது; பீஷ்மரின் அறியாமையை அகிருதவரணரிடம் தெரிவித்த அம்பை, இரண்டில் எது அறிவுக்கு இசைவானதோ அதைச் செய்யுமாறு சொல்வது; பீஷ்மரே அம்பையின் துக்கத்திற்குக் காரணம் என்று அகிருதவரணர் அம்பையைத் தூண்டுவது; அடுத்த நாள் அங்கே பரசுராமர் வருவது; அவரிடம் தனது நிலையை அம்பை விளக்குவது; பீஷ்மரைத் தண்டிக்கப் பரசுராமரை அம்பை தூண்டுவது...

அகிருதரவரணர் {அம்பையிடம்}, "உனது இந்தத் துன்பங்கள் இரண்டில், ஓ! அருளப்பட்ட மங்கையே {அம்பையே}, நீ எதற்குத் தீர்வைப் பெற விரும்புகிறாய்? இதை எனக்குச் சொல்வாயாக. சௌபத்தின் தலைவன் {சால்வன்} உன்னை மணந்து கொள்ள வேண்டும் என்பது உனது விருப்பமாக இருந்தால், உனக்கு நன்மையைச் செய்ய விரும்பும் உயர் ஆன்ம ராமர் {பரசுராமர்} நிச்சயம் அவனை {சால்வனைத்} தூண்டுவார்? அல்லது கங்கையின் மைந்தனான பீஷ்மன் ராமரால் {பரசுராமரால்} போரில் வீழ்த்தப்படுவதை நீ காண வேண்டும் என்றாலும், பார்கவர் {பரசுராமர்} அந்த உனது விருப்பதையும் நிறைவேற்றுவார். சிருஞ்சயர் {ஹோத்திரவாஹனர்} என்ன சொல்லப் போகிறார், நீ என்ன சொல்லப் போகிறாய் என்பதைக் கேட்ட பிறகு, எது செய்யப்பட வேண்டும் என்பது இன்றே தீர்மானிக்கப்படட்டும்" என்றார் {அகிருதவரணர்}.


இந்த வார்த்தைகளைக் கேட்ட அம்பை {அகிருதவரணரிடம்}, "ஓ! புனிதமானவரே {அகிருதவரணரே}, {என் நிலையை அறியாமல்} அறியாமையில் செயல்பட்ட பீஷ்மனால் நான் அபகரிக்கப்பட்டேன். ஏனெனில், ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, எனது இதயத்தை நான் சால்வனுக்குக் கொடுத்திருந்தேன் என்பது பீஷ்மனுக்குத் தெரியாது. இதை உமது மனதில் நினைத்து, நீதிக்கு இசைவானது எதுவோ, அஃது உம்மால் தீர்மானிக்கப்படட்டும்; அந்தத் தீர்மானத்தைச் சாதிக்க வேண்டிய நடைமுறைகளும் மேற்கொள்ளப்படட்டும். ஓ! அந்தணரே {அகிருதவரணரே}, குருக்களில் புலியான பீஷ்மனிடத்திலோ, சால்வர்களின் ஆட்சியாளனிடத்திலோ, அல்லது அந்த இருவரிடத்திலும் எது முறையாகச் செய்யப்பட வேண்டுமோ அதைச் செய்வீராக. நான் எனது துயரத்தின் வேர் குறித்து உம்மிடம் சொல்லிவிட்டேன். ஓ! புனிதமானவரே {அகிருதவரணரே}, அறிவுக்கு இசைவானது எதுவோ, அதைச் செய்வதே உமக்குத் தகும்" என்றாள் {அம்பை}.

அகிருதவரணர் {அம்பையிடம்}, "ஓ! அருளப்பட்ட மங்கையே, ஓ! அழகிய நிறம் கொண்டவளே {அம்பையே}, அறத்தில் நிலைத்த கண்களைக் கொண்டு உன்னால் சொல்லப்படும் இஃது, உண்மையில் உனக்குத் தகுந்ததே. எனினும், நான் சொல்வதைக் கேட்பாயாக! யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திற்குக் {ஹஸ்தினாபுரத்திற்குக்} கங்கையின் மைந்தன் {பீஷ்மன்} உன்னைத் தூக்கிச் சொல்லவில்லையெனில், ஓ! மருட்சியுடைய பெண்ணே {அம்பையே}, ராமரின் {பரசுராமரின்} உத்தரவின் பேரில் சால்வன் உன்னைத் தலையில் தூக்கி வைத்திருப்பான். ஓ! கொடியிடையாளே {அம்பையே}, பீஷ்மன் உன்னைக் கடத்திச் சென்றதாலேயே மன்னன் சால்வனுக்கு உன்னைக் குறித்துச் சந்தேகங்கள் எழுந்தன. பீஷ்மன் தனது ஆண்மையில் செருக்குக் கொண்டு, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டிருக்கிறான். எனவே, நீ உனது பழியுணர்வை (வேறு யார் மீதும் விழச்செய்யாமல்) பீஷ்மன் மீதே விழச் செய்ய வேண்டும்" என்றார் {அகிருதவரணர்}.

அந்தத் தவசியின் {அகிருதவரணரின்} வார்த்தைகளைக் கேட்ட அம்பை {அகிருதவரணரிடம்}, "ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, இந்த விருப்பம் என் இதயத்திலும் உள்ளது. முடிந்தால், போரில் பீஷ்மனைக் கொல்ல என்னால் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, பீஷ்மனோ, மன்னன் சால்வனோ, அவர்களில் எவரைக் நீர் குற்றவாளியாகக் கருதுகிறீரோ, {அவ்விருவரில்} எவரால் எனக்கு இந்தப் பரிதாபகர நிலை ஏற்பட்டதோ அந்த மனிதனைத் தண்டிப்பீராக", என்றாள் {அம்பை}.

பீஷ்மர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "இதுபோன்ற விவாதத்திலேயே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா} அந்த நாளும் இரவும், குளிரோ வெப்பமோ இல்லாத இனிய தென்றலுடன் கடந்து சென்றது. பிறகு, சக்தியால் பிரகாசித்துக் கொண்டிருந்த ராமர் {பரசுராமர்} அங்கே தோன்றினார். தலையில் சடாமுடி தரித்து, மான் தோலுடுத்தியிருந்த அந்தத் தவசி {பரசுராமர்} தனது சீடர்களால் சூழப்பட்டிருந்தார். பெருந்தன்மைமிக்க ஆன்மா கொண்டவரான அவரது {பரசுராமரின்} கையில் வில் இருந்தது. வாளும், போர்க்கோடரியும் தரித்திருந்த அந்தப் பாவமற்றவர் {பரசுராமர்}, ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனா}, அந்தக் காட்டில் இருந்த சிருஞ்சய மன்னனை (ஹோத்திரவாஹனரை) அணுகினார்.

அங்கே வசித்திருந்த தவசிகள், பெரும் தவத் தகுதியை உடைய அந்த மன்னன் {ஹோத்திரவாகனர்} ஆகிய அனைவரும் அவரைக் கண்டு, எழுந்திருந்து, ஓ! மன்னா {துரியோதனா}, கூப்பிய கரங்களோடு காத்திருந்தனர். அந்த ஆதரவற்ற கன்னிகையும் {அம்பையும்} அதையே செய்தாள். தேன் மற்றும் தயிர்க்கடைசல்களைக் காணிக்கையாக அளித்த அவர்கள் அனைவரும், அந்தப் பார்கவரை {பரசுராமரை} மகிழ்ச்சியுடன் வழிபட்டனர். அவர்களால் முறையாக வழிபடப்பட்ட ராமர் {பரசுராமர்}, தன்னைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களுடன் அமர்ந்தார். ஓ! பாரதா {துரியோதனா}, பிறகு, இப்படி அமர்ந்த ஜமதக்னியின் மகனும் {பரசுராமரும்}, ஹோத்திரவாஹனரும் தங்கள் உரையாடலைத் தொடங்கினர். அவர்களது உரையாடல் முடிந்ததும் கிடைத்த வாய்ப்பில் தவசியான அந்த ஹோத்திரவாஹனர், பிருகு குலத்தின் முதன்மையானவரும், பலமிக்கவருமான ராமரிடம் {பரசுராமரிடம்}, இனிய குரலில் பயனுள்ள வார்த்தைகளைச் சொன்னார்.

அவர் {ஹோத்ததிரவாகனர் பரசுராமரிடம்}, "ஓ! ராமரே {பரசுராமரே}, காசி மன்னனின் மகளான இவள் {அம்பை}, ஓ! தலைவா, எனது மகளின் மகளாவாள் {எனக்குப் பேத்தியாவாள்}. அவளுக்குச் செய்யப்பட வேண்டிய ஒன்று உள்ளது! ஓ! அனைத்துப் பணிகளிலும் திறமிக்கவரே, அவற்றை முறையாகக் கேளும்" என்றார். தனது நண்பரின் {ஹோத்திரவாகனரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட ராமர் {பரசுராமர்}, அந்தக் கன்னிகையிடம் {அம்பையிடம்}, "நீ சொல்ல வேண்டியதை என்னிடம் சொல்வாயாக" என்றார். இந்த வார்த்தைகளால் அம்பை, சுடர்மிகும் நெருப்பென இருந்த அந்த ராமரை {பரசுராமரை} அணுகி, சிரம் தாழ்த்தி, அவரது பாதங்களை வணங்கி, தாமரைமலர்களின் இணையைப் போல இருந்த அவற்றைத் தன்னிரு கைகளாலும் தொட்டு, அவரெதிரில் அமைதியாக நின்றாள். துயரத்தால் நிறைந்த அவள் {அம்பை} உரக்க அழுதாள். அவளது கண்கள் கண்ணீரால் குளித்தன. துயர்மிக்கவர் அனைவருக்கும் புகலிடமான அந்தப் பிருகு வழித்தோன்றலின் {பரசுராமரின்} பாதுகாப்பை அவள் நாடினாள். ராமர் {அம்பையிடம்}, "உனது இதயத்தில் இருக்கும் துயரை என்னிடம் சொல்வாயாக! நான் உனது வார்த்தைகளின் படி செயல்படுவேன்" என்றார். இப்படி உற்சாகமூட்டப்பட்ட அம்பை {பரசுராமரிடம்}, "ஓ! பெரும் நோன்புகளைக் கொண்டவரே {பரசுராமரை}, இன்று நான் உமது பாதுகாப்பை நாடுகிறேன்! ஓ! தலைவா, முடிவற்ற இந்தத் துன்பக்கடலில் இருந்து என்னை எழுப்புவீராக {மீட்பீராக}" என்றாள் {அம்பை}.

பீஷ்மர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "அவளது {அம்பையின்} அழகையும், இளமை நிறைந்த அவளது உடலையும், அதன் பெரும் நளினத்தையும் கண்ட ராமர் {பரசுராமர் அம்பையிடம்}, "இவள் என்ன சொல்லப் போகிறாள்?" என்று நினைக்கத் தொடங்கினார். பிருகு குலத்தைத் தழைக்கவைப்பவரான அவர் {பரசுராமர்}, தன்னுள்ளேயே இப்படி நினைத்து, இரக்கத்தால் நிறைந்து, அமைதியாக அமர்ந்திருந்தார். பிறகு அவர் {பரசுராமர்} இனிய புன்னகைகளைக் கொண்ட அந்தக் கன்னிகையிடம் மீண்டும், "நீ சொல்ல வேண்டியதை எங்களிடம் சொல்வாயாக" என்றார். இப்படி உற்சாகப்படுத்தப்பட்ட அந்தக் கன்னிகை {அம்பை}, நடந்த அனைத்தையும் பார்கவரிடம் {பரசுராமரிடம்} தெரிவித்தாள். அந்த இளவரசியின் {அம்பையின்} வார்த்தைகளைக் கேட்ட ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, தான் என்ன செய்ய வேண்டும் என்பதை மனதில் தீர்மானித்துக் கொண்டு அந்த அழகிய நிறம் கொண்ட காரிகையிடம் {அம்பையிடம்}, "ஓ! அழகிய பெண்ணே, குரு குலத்தில் முதன்மையானவனான பீஷ்மனுக்கு நான் சொல்லி அனுப்புகிறேன். எனது உத்தரவு என்ன என்பதைக் கேட்கும் அந்த மன்னன் {பீஷ்மன்}, நிச்சயம் அதற்குக் கீழ்ப்படிவான். எனினும், அந்த ஜானவியின் {கங்கையின்} மைந்தன் {பீஷ்மன்}, எனது வார்த்தைகளின்படி செயல்படவில்லையெனில், ஓ! அருளப்பட்ட பெண்ணே, போரில் நான் அவனை {பீஷ்மனை} அவனது ஆலோசகர்களுடன் சேர்த்து எரித்துவிடுவேன். அல்லது, ஓ! இளவரசி {அம்பையே}, நீ விரும்பினால், சால்வர்களின் வீர ஆட்சியாளனிடம் {சால்வனிடம்} கூட இக்காரியம் குறித்துப் பேசுவேன்" என்றார் {பரசுராமர்}.

ராமரின் {பரசுராமரின்} இவ்வார்த்தைகள் கேட்ட அம்பை {பரசுராமரிடம்}, "எனது இதயம் சால்வர்களின் ஆட்சியாளனிடம் {சால்வனிடம்} முன்பே கொடுக்கப்பட்டது என்பதை அறிந்ததும், ஓ! பிருகுலத்தின் மகனே {பரசுராமரே}, பீஷ்மன் என்னை அனுப்பிவிட்டான். சௌபத்தின் ஆட்சியாளனை அணுகிய நான், சொல்லக்கூடாமுடியாத மொழியில் எல்லாம் அவனிடம் பேசினேன். எனது நடத்தையின் தூய்மையில் சந்தேகங்கொண்ட அவன் {சால்வன்}, என்னை ஏற்க மறுத்துவிட்டான். இவை யாவையும் உமது அறிவின் துணை கொண்டு கருதிப் பார்த்து, ஓ! பிருகு குலத்தின் மகனே {பரசுராமரே}, இந்தச்சூழ்நிலையில் என்ன செய்யப்பட வேண்டுமோ, அதைச் செய்வதே உமக்குத் தகும்.

எனினும், பெரும் நோன்புகளைக் கொண்ட பீஷ்மனே, எனது துயரின் வேராவான். ஏனெனில், அவனே (தனது தேரில்) என்னைப் பலவந்தமாகத் தூக்கி வந்தான். ஓ! பிருகு குலத்தின் புலியே {பரசுராமரே}, எவனால் நான் இத்தகு துயரத்தில் மூழ்கி இதுபோன்ற கசப்பான இன்னல்களை அனுபவிக்கிறேனோ, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பரசுராமரே}, அந்தப் பீஷ்மனைக் கொல்வீராக! ஓ! பிருகு குலத்தவரே {பரசுராமரே}, பேராசையும், இழிதன்மையும் கொண்ட பீஷ்மன் தனது வெற்றியால் செருக்கடைந்திருக்கிறான். எனவே, ஓ! பாவமற்றவரே, நீர் அவனுக்குத் {பீஷ்மனுக்குத்} தகுந்ததைக் கொடுக்க வேண்டும். அவனால் {பீஷ்மனால்} நான் கடத்தப்பட்ட போது, ஓ! தலைவா {பரசுராமரே}, பெரும் நோன்புகள் கொண்ட இந்த வீரனைக் கொல்ல நான் காரணமாக இருக்க வேண்டும் என்பதே எனது இதயத்தின் விருப்பமாக இருந்தது. எனவே, ஓ! பாவமற்ற ராமரே {பரசுராமரே}, எனது விருப்பத்தை நிறைவேற்றுவீராக! ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பரசுராமரே}, விருத்திரனைக் கொன்ற புரந்தரனைப் {இந்திரனைப்} போல, நீர் பீஷ்மனைக் கொல்வீராக!" என்றாள் {அம்பை}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்