Wednesday, July 22, 2015

பீஷ்மரைக் கண்டிக்க குருக்ஷேத்திரம் வந்த பரசுராமர்! - உத்யோக பர்வம் பகுதி 180

Parasurama came to Kurukshetra to condemn Bhishma! | Udyoga Parva - Section 180 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 7)

பதிவின் சுருக்கம் : பிராமணர்களின் உத்தரவில்லாமல் எவனையும் கொல்வதில்லை என்பது தனது உறுதிமொழி என்றும், வேறு ஏதாவது கேட்கும்படியும் பரசுராமர் அம்பையிடம் சொல்வது; அம்பை மீண்டும் பரசுராமரிடம் பீஷ்மரைக் கொல்லச் சொல்வது; இப்படியே மாறி மாறி பேசிக் கொண்டிருந்த அந்த இருவரைக் கண்ட அகிருதவரணர், பீஷ்மரைக் கண்டித்தால் அவரே அடிபணிந்து விடுவார் என்று பரசுராமரிடம் தெரிவிப்பது; பீஷ்மரைக் காண்பதற்காகப் பரசுராமரும் மற்ற அனைவரும் குருக்ஷேத்திரத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வது...


பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், "ஓ! தலைவா {துரியோதனா}, பீஷ்மரைக் கொல்லும்படி அந்தக் கன்னிகையால் {அம்பையால்} தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட ராமர் {பரசுராமர்}, அழுது கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் {அம்பையிடம்}, "ஓ! காசியின் மகளே, ஓ! அழகிய நிறம் கொண்டவளே, வேதங்களை அறிந்தோருக்காக அன்றி வேறு யாருக்காகவும் நான் ஆயுதம் எடுப்பதில்லை. எனவே, என்னால் வேறு என்ன உனக்குச் செய்ய முடியும் என்று சொல்வாயாக! ஓ! இளவரசி {அம்பையே}, பீஷ்மன், சால்வன் ஆகிய இருவரும் எனக்கு மிகவும் கீழ்ப்படிந்து நடப்பவர்களாவர். வருந்தாதே, நான் உனது நோக்கத்தை நிறைவேற்றுவேன். எனினும், அந்தணர்களின் உத்தரவின்றி நான் ஆயுதம் எடுக்க மாட்டேன். இதுவே எனது நடத்தைவிதியாகும்" என்றார் {பரசுராமர்}.


அம்பை {பரசுராமரிடம்}, "ஓ! புனிதமானவரே, எவ்வழியிலாவது எனது துயர் உம்மால் களையப்பட வேண்டும். எனது அந்தத் துயரத்திற்குக் காரணம் பீஷ்மனாவான். எனவே, ஓ! தலைவா {பரசுராமரே}, அதிகத் தாமதமில்லாமல் அவனை {பீஷ்மனைக்} கொல்வீராக" என்றாள் {அம்பை}.

ராமர் {பரசுராமர் அம்பையிடம்}, "ஓ! காசியின் மகளே, அவ்வார்த்தைகளையே சொல்கிறாய். சொல், எனினும், உனது மதிப்புக்கு தகுதியுடைய வார்த்தைகளைச் சொல். எனது வார்த்தையால் பீஷ்மன், உனது பாதங்களை எடுத்துத் தனது தலையில் வைத்துக் கொள்வான்" என்றார் {பரசுராமர்}.

அம்பையோ {பரசுராமரிடம்}, "ஓ! ராமரே {பரசுராமரே}, அசுரனைப் போலக் கர்ஜிக்கும் பீஷ்மனைப் போரில் கொல்வீராக. உண்மையில், எனக்கு ஏற்புடையதைச் (செய்ய) விரும்பினால், (அவனைப்) போருக்கு அழைத்துக் கொல்வீராக. அதுவும் தவிர, {இங்கு} உமது சூளுரையை உண்மையாக்குவதே உமக்குத் தகும்" என்றாள் {அம்பை}.

பீஷ்மர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னா {துரியோதனா}, ராமரும் {பரசுராமரும்}, அம்பையும் ஒருவருக்கொருவர் இப்படிப் பேசிக் கொண்டிருக்கையில், அறம்சார்ந்த உயர் ஆன்மாக் கொண்ட அந்த முனிவர் (அகிருதவரணர்) {பரசுராமரிடம்}, "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பரசுராமரே}, உமது பாதுகாப்பை நாடும் இந்தப் பெண்ணைக் கைவிடுவது உமக்குத் தகாது! போருக்கு அழைக்கப்பட்டால், அந்த மோதலுக்கு வரும் பீஷ்மன், "நான் வீழ்ந்தேன்" என்றே சொல்வான். அல்லது உமது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவான். இதனால், ஓ! பிருகு குலத்தின் மகனே {பரசுராமரே}, இந்தக் கன்னிகையின் {அம்பையின்} வேண்டுதலும் நிறைவேறும், ஓ! வீரரே {பரசுராமரே}, ஓ! தலைவா, உம்மால் சொல்லப்பட்ட வார்த்தைகளும்,  உண்மையாகும். "பிராமணர்களுக்கு எதிரியாக இருப்பவன் பிராமணனாக இருந்தாலும், க்ஷத்திரியனாக இருந்தாலும், வைசியனாக இருந்தாலும், சூத்திரனாக இருந்தாலும் போரில் அவனைக் கொல்வேன்" என்று க்ஷத்திரியர்கள் அனைவரையும் வெற்றிக் கொண்ட பிறகு நீர் அந்தணர்கள் முன்னிலையில் சூளுரைத்தீர். ஓ! ராமரே {பரசுராமரே}, இதுவே உம்மால் ஏற்கப்பட்ட உறுதியாகும்.

மேலும், நீர் எவ்வளவு காலம் வாழ்வீரோ, அவ்வளவு காலமும், அச்சத்துடன் உம்மிடம் வந்து, உமது பாதுகாப்பு நாடி நிற்போரைக் கைவிடமாட்டீர் என்றும், ஓ! பார்கவரே {பரசுராமரே}, கூடியிருக்கும் பூமியின் க்ஷத்திரியர்கள் அனைவரையும் வீழ்த்தும் செருக்கு நிறைந்த போர் வீரனைக் கொல்வதாகவும் நீர் உறுதியேற்றிருக்கிறீர். ஓ! ராம {பரசுராம}, குரு குலத்தைத் தழைக்க வைப்பவனான பீஷ்மனும் (க்ஷத்திரியர்கள் அனைவரிடமும்) அத்தகு வெற்றியை அடைந்திருக்கிறான். ஓ! பிருகு குலத்தவரே {பரசுராமரே}, அவனை {பீஷ்மனை} அணுகி, இப்போதே அவனுடன் போரில் மோதுவீராக!" என்றார் {அகிருதவரணர்}.

ராமர் {பரசுராமர் அகிருதவரணரிடம்}, "ஓ! முனிவர்களில் சிறந்தவரே {அகிருதவரணரே}, முன்பு நான் செய்த எனது உறுதிமொழியை நினைவில் கொள்கிறேன். எனினும், (தற்போதைய சந்தர்ப்பத்தில்) சமரசம் எதைச் சுட்டிக் காட்டுகிறதோ அதையே நான் செய்வேன். ஓ! அந்தணரே, காசியின் மகள் மனதில் கொண்டுள்ள பணி பயங்கரமானதாகும். இந்தக் கன்னிகையை {அம்பையை} என்னுடன் அழைத்துக் கொண்டு பீஷ்மன் இருக்கும் இடத்திற்கு நானே செல்வேன்.

போரில் தான் சாதித்திருப்பதால் செருக்குக் கொண்டு, அந்தப் பீஷ்மன் எனது உத்தரவுக்குக் கீழ்ப்படியவில்லையெனில், அந்த ஆணவம் பிடித்தவனைக் கொன்றுவிடுவேன். இதுவே எனது உறுதியான தீர்மானமாகும். என்னால் அடிக்கப்படும் கணைகள், உடல் கொண்ட உயிரினங்களில் ஒட்டிக் கொண்டிருக்காது (மாறாகத் துளைத்து அவற்றைக் கடந்து செல்லும்). ஏற்கனவே க்ஷத்திரியர்களுடனான எனது மோதலைக் கண்டிருக்கும் நீர் அதை அறிந்தே இருப்பீர்" என்றார் {பரசுராமர்}.

இதைச் சொன்ன ராமர் {பரசுராமர்}, பிரம்மத்தைத் தேடிக்கொண்டிருக்கும் அவர்களுடன் {முனிவர்களுடன்} சேர்ந்து, அந்த ஆசிரமத்தில் இருந்து புறப்படத் தீர்மானித்தார். பிறகு அந்தப் பெரும் தவசி {பரசுராமர்} தனது ஆசனத்தில் இருந்து எழுந்தார். பிறகு அந்தத் தவசிகள் அனைவரும் அந்த இரவை அங்கேயே கழித்து, (அடுத்த நாள் காலையில்) தங்கள் ஹோமச் சடங்குகளையும், வேண்டுதல்களை {மந்திரங்களை} உரைப்பதையும் நிகழ்த்தினர். பிறகு {பீஷ்மனான} எனது உயிரை எடுக்க விரும்பிய அவர்கள் அனைவரும் {அங்கிருந்து} புறப்பட்டனர். பிரம்மத்துக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பவர்கள் மற்றும், அந்தக் கன்னிகை {அம்பை} ஆகியோரின் துணையோடு, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, ராமர் {பரசுராமர்} குருக்ஷேத்திரத்திற்கு வந்தார். பிருகு குலத்தின் முதன்மையானவரை {பரசுராமரைத்} தலைமையாகக் கொண்ட அந்த உயர் ஆன்மத் தவசிகள் அனைவரும், சரஸ்வதி ஓடையின் கரைக்கு வந்து, தங்களை அங்கே நிறுத்திக் கொண்டனர்.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்