Wednesday, July 29, 2015

சிகண்டினியும்! ஸ்தூணாகர்ணனும்! - உத்யோக பர்வம் பகுதி 194

Sikhandini and Sthunakarna! | Udyoga Parva - Section 194 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 1)

பதிவின் சுருக்கம் : தனது சக்காளத்திகளிடம் கொண்ட அச்சத்தின் காரணமாகத் தனது மகளை மகன் என்று சொன்னதாக ராணி  துருபதனிடம் பலர் முன்னிலையில் சொன்னது; ராணியின் சொல்லால் குற்றமற்ற தான் ஏற்படுத்திக் கொண்ட சம்பந்தம் முறையானது என்று மந்திரிகளிடம் சொன்ன துருபதன், அவர்கள் மூலம் தனது நகரைக் காக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டது; துருபதனும் அவனது ராணியும் தேவர்களைத் துதித்தது; தன் தாய் தந்தையரின் நிலையை எண்ணிப் பார்த்த சிகண்டினி, தன் உயிரை மாய்த்துக் கொள்ள எண்ணி அடர்ந்த காட்டினுள் புகுந்தது; அங்கிருந்த ஒரு மாளிகையில் பல நாட்களாக உணவின்றிக் கிடந்த சிகண்டினி; அந்தக் காட்டைக் காத்து வந்த யக்ஷன் ஸ்தூணன், சிகண்டினியிடம் மனம் இரங்கி, உதவி செய்வதாக உறுதியளித்தது; சிகண்டினி அந்த யக்ஷனிடம் தனக்கு நேர்ந்தது அத்தனையும் சொன்னது...

சிகண்டினி - ஸ்தூணாகர்ணன் ( Sikhandini and Sthunakarna )
பீஷ்மர் {துரியோதனனிடம்}, "பிறகு, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட மன்னா {துரியோதனா}, சிகண்டியின் அன்னை தனது தலைவனிடம் {துருபதனிடம்}, தனது மகள் சிகண்டி குறித்த உண்மையைச் சொன்னாள். அவள் {துருபதனின் ராணி}, "பிள்ளையற்றிருந்த நான், ஓ! பெரும் மன்னா {துருபதரே}, சிகண்டினி எனக்கு மகளாகப் பிறந்த போது, எனது சக்காளத்திகளிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக உம்மிடம் மகன் பிறந்தான் என்று சொன்னேன்! என் மீது கொண்ட அன்பின் காரணமாக நீரும், ஓ! மன்னர்களில் காளையே {துருபதரே}, அதை ஏற்றுக் கொண்டு, எனது மகளுக்கு {சிகண்டினிக்கு} ஒரு மகனுக்குரிய சடங்குகள் அனைத்தையும் செய்தீர். பிறகு, ஓ! மன்னா {துருபதரே}, நீர் அவளுக்குத் தசார்ணகர்கள் மன்னின் மகளையும் மணமுடித்து வைத்தீர். நானும் (பெரும்) தேவனின் {சிவனின்} வார்த்தைகளை நினைவுகூர்ந்து அச்செயலை அங்கீகரித்தேன். உண்மையில், "மகளாய்ப் {பெண்ணாய்ப்} பிறந்த இவள் மகனாக {ஆணாக} மாறுவாள்" என்ற சிவனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தே, அதை நான் தடுக்காமல் இருந்தேன்.


இவை அனைத்தையும் கேட்டவனும், யக்ஞசேனன் என்றும் அழைக்கப்பட்டவனுமான துருபதன், இந்த உண்மைகள் அனைத்தையும் தனது ஆலோசகர்களிடம் {அமைச்சர்களிடம்} தெரிவித்தான். மேலும், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, அந்த மன்னன் {துருபதன்}, (தனது நாட்டின் மீது படையெடுக்கப்பட்டால்) தனது குடிமக்களை முறையாகப் பாதுகாப்பதற்குத் தனது அமைச்சர்களுடன் ஆலோசனை செய்தான். அவனே {துருபதனே} தசார்ணகர்களின் மன்னனை {ஹிரண்யவர்மனை} வஞ்சித்து இருந்தாலும், தான் செய்த கூட்டு {சம்பந்தம்} முறையானதே என்று வெளிப்படுத்தும் வகையில் [1], தனது திட்டங்களைச் சிதறாத உறுதியுடன் தீர்மானிக்கத் தொடங்கினான்.

[1] தனக்கு உண்மை தெரியாதெனவும், மகனில்லாத தன் மனைவியின் வார்த்தைகளைக் கேட்டே தான் அவ்விதம் செய்ததாகவும் வெளிப்படுத்தினான்.

மன்னன் துருபதனின் நகரம் {காம்பில்யம்}, ஓ! பாரதா {துரியோதனா}, இயற்கையாகவே நன்கு பாதுகாக்கப்பட்டதாகும். எனினும், அந்த ஆபத்தின் நெருக்கத்தில், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, அவர்கள், அதை மிகக் கவனமாகப் பாதுகாத்து, (தற்காப்பு வேலைப்பாடுகளால்) அரணமைத்துக் கொண்டனர். எனினும் தனது ராணியுடன் கூடிய மன்னன் {துருபதன்} பெரிதும் துன்புற்று, தனது சம்பந்தியுடன் போர் ஏற்படாதிருக்கச் செய்வது எப்படி என நினைத்தான். இதையே மனதில் ஆலோசித்த அவன் {துருபதன்}, தேவர்களுக்குத் தனது துதியைச் செலுத்த ஆரம்பித்தான்.

தேவனை நம்பி தனது துதிகளைச் செலுத்தும் அவனை {துருபதனைக்} கண்ட அவனது மதிப்புமிக்க மனைவி, ஓ! மன்னா {துரியோதனா}, அவனிடம் {துருபதனிடம்}, "தேவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதே நன்மைகளை விளைவிக்கும்! எனவேதான் அது நல்லோரால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், துன்பக்கடலில் மூழ்கியிருப்போருக்கு நான் என்ன சொல்ல முடியும்? எனவே, மேன்மையானோருக்கு அஞ்சலி செலுத்துவீராக. தேவர்கள் அனைவரும் வழிபடப்படட்டும். அதே வேளையில் (அந்தணர்களுக்கு) பெரும் தானங்களையும் செய்வீராக! தசார்ணகர்களின் ஆட்சியாளனை {ஹிரண்யவர்மனைத்} தணிக்க நெருப்பில் நீர்க்காணிக்கைகள் {நெய்} ஊற்றப்படட்டும். {தக்ஷிணைகளுடன் அக்னிகள் ஹோமம் செய்யப்படட்டும்}. ஓ! தலைவா {துருபதரே}, போரில்லாமல் உமது சம்பந்தியைத் தணிக்கும் வழிகளைச் சிந்திப்பீராக! தேவர்கள் அருளின் மூலம் இவையாவும் நடைபெறும். இந்த நகரத்தைப் பாதுகாப்பதற்காக, ஓ! பெரிய கண்களைக் கொண்டவரே {துருபதரே}, நீர் உமது அமைச்சர்களுடன் ஆலோசித்தீர். ஓ! மன்னா {துருபதரே}, அந்த ஆலோசனைகள் சுட்டிக்காட்டும் அனைத்தையும் செய்வீராக. தேவர்களிடம் கொண்ட நம்பிக்கை, மனித உழைப்பினால் ஆதரிக்கப்படும்போது, ஓ! மன்னா {துருபதரே}, அது வெற்றிக்கே வழிவகுக்கும். {தெய்வத்தோடு கூடிய மனித முயற்சி நன்கு பயனளிக்கும்}. இவ்விரண்டும் ஒன்றோடொன்று இணைந்து செல்லவில்லையெனில், வெற்றி அடைய முடியாததாகும். எனவே, உமது ஆலோசகர்கள் அனைவருடன், உமது நகரம் சரியாக இருக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்யும்! ஓ! ஏகாதிபதி, நீர் விரும்பும்படி தேவர்களுக்கு அஞ்சலியைச் செலுத்துவீராக" என்றாள் {துருபதனின் ராணி}.

இப்படியே கணவனும் மனைவியும் துயர் நிறைந்து உரையாடிக் கொண்டிருந்தபோது, ஆதரவற்ற அவர்களது மகள் சிகண்டினி வெட்கக்கேட்டால் நிறைந்தாள். பிறகு அவள் {சிகண்டினி}, "என்னால்தான் இவர்கள் இருவரும் துயரில் மூழ்கியிருக்கிறார்கள்!" என்று நினைத்தாள். இப்படி நினைத்த அவள் {சிகண்டினி}, தனது உயிரை ஒரு முடிவுக்குக் கொண்டு வரத் தீர்மானித்தாள். இந்தத் தீர்மானத்தை அடைந்த அவள், வீட்டை விட்டு அகன்று, பெரும் சோகத்தால் நிறைந்து, அடர்ந்த காட்டுக்குள் சென்றாள். ஸ்தூணாகர்ணன் என்று அழைக்கப்படும் பயங்கரமான ஒரு யக்ஷனால் பாதுகாக்கப்பட்டு வந்த அந்தத் தனிமையான காட்டுக்குள் அவள் {சிகண்டினி} சென்றாள். அந்த யக்ஷன் மீது கொண்ட பயத்தால் மனிதர்கள் யாரும் அந்தக் காட்டுக்குள் செல்லவே மாட்டார்கள். அதற்குள் {அந்தக் காட்டிற்குள்} மணற்தூளால் {சுண்ணாம்பு மற்றும் மண்ணால்} பூசப்பட்ட உயர்ந்த சுவர்களும், வாயில்களும் கொண்ட ஒரு மாளிகை இருந்தது. அங்கிருந்து {அந்த மாளிகையில் இருந்து} வறுத்த நெல்லின் {Fried Paddy} {விலாமிச்சையின்} நறுமணத்தைச் சுமந்தபடி புகையும் வந்து கொண்டிருந்தது.

ஓ! மன்னா {துரியோதனா}, அந்த மாளிகைக்குள் நுழைந்த துருபதனின் மகளான சிகண்டினி, பல நாட்களாக உணவைத் துறந்து தன்னை வற்ற செய்தாள். அதன் பேரில், ஸ்தூணன் என்று அழைக்கப்பட்டவனும், கருணை கொண்டவனுமான அந்த யக்ஷன், அவளிடம் {சிகண்டினியிடம்} தன்னை வெளிக்காட்டினான். அவளிடம் {சிகண்டினியிடம்} விசாரிக்கும் வகையில், அவன் {அந்த யஷன் ஸ்தூணகர்ணன் சிகண்டினியிடம்}, "இந்த உனது முயற்சியின் நோக்கம் என்ன? அதை நான் சாதிப்பேன். தாமதிக்காமல் என்னிடம் சொல்வாயாக!" என்றான். அப்படிக் கேட்கப்பட்ட அந்தக் கன்னிகை {சிகண்டினி}, அவனுக்கு {ஸ்தூணகர்ணனுக்குப்} பதிலளிக்கும் வகையில், "நீ அதைச் சாதிக்க இயன்றவனல்ல. {அது உன்னால் ஆகக்கூடியதல்ல}." என்று மீண்டும் மீண்டும் சொன்னாள்.

எனினும், அந்தக் குஹ்யகன் {யக்ஷன்}, நொடியும் தாமதிக்காமல், மறுமொழி சொல்லும் வகையில், "நான் சாதிப்பேன்! நான் பொக்கிஷத்தலைவனின் {குபேரனின்} தொண்டனாவேன். ஓ! இளவரசி, என்னால் உனக்கு வரங்களை அளிக்க முடியும்! கொடுக்க முடியாததையும் நான் உனக்கு அருள்வேன்! சொல்வதற்கென்ன இருக்கிறதோ அதை என்னிடம் சொல்வாயாக!" என்றான். இப்படி உறுதி கூறப்பட்ட சிகண்டினி, ஸ்தூணாகர்ணன் என்று அழைக்கப்பட்ட அந்த யக்ஷர்களின் தலைவனிடம் நடந்தது அத்தனையும் விபரமாகத் தெரிவித்தாள்.

மேலும் அவள் {சிகண்டினி ஸ்தூணகர்ணனிடம்}, "ஓ! யக்ஷா {ஸ்தூணகர்ணா}, எனது தந்தை {துருபதன்} விரைவில் அழிவைச் சந்திக்கப் போகிறார். தசார்ணகர்களின் ஆட்சியாளன் {ஹிரண்யவர்மன்} அவருக்கு எதிராகக் கோபத்துடன் அணிவகுப்பான். தங்கக் கவசத்துடன் கூடிய அந்த மன்னன் {ஹிரண்யவர்மன்}, பெரும் வலிமையுடனும், பெரும் வீரத்துடனும் இருக்கிறான். எனவே, ஓ! யக்ஷா {ஸ்தூணகர்ணா}, என்னையும், எனது தாயையும், எனது தந்தையையும் காப்பாயாக! உண்மையில், நீ என்னைத் துயரில் இருந்து விடுவிப்பதாக ஏற்கனவே வாக்குறுதி அளித்திருக்கிறாய். ஓ! யக்ஷா {ஸ்தூணகர்ணா}, உனது அருளால், நான் குற்றமில்லா ஆண்மகனாக வேண்டும். ஓ! பெரும் யக்ஷா {ஸ்தூணகர்ணா}, அந்த மன்னன் {ஹிரண்யவர்மன்} எதுவரை எனது நகரத்தில் {காம்பில்யத்தில்} இருந்து புறப்படாமல் நீடித்திருக்கிறானோ அது {காலம்} வரை, ஓ! குஹ்யகா {யக்ஷா}, என்னிடம் கருணை காட்டுவாயாக!" என்றாள் {சிகண்டினி}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்