Tuesday, July 28, 2015

மனைவியோடு ஆலோசித்த துருபதன்! - உத்யோக பர்வம் பகுதி 193

Drupada took counsel with his wife! | Udyoga Parva - Section 193 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 20)

பதிவின் சுருக்கம் : ஹிரண்யவர்மனின் கோபத்தை அறிந்த துருபதன், இனிய சொல்லுடைய தூதர்களை அவனிடம் அனுப்பியது; சிகண்டி பெண்தான் என்பதை மீண்டும் உறுதி செய்து கொண்ட ஹிரண்யவர்மன், துருபதனுக்கு எதிராகப் படைகளைத் திரட்டியது; சிகண்டி பெண்ணாக இருந்தால் துருபதனையும் அவனது அந்தப் பெண்ணையும் சேர்த்து கொல்வது என ஹிரண்யவர்மனின் ஆலோசகர்கள் தீர்மானித்தது; தனது அறியாமையை வெளிப்படுத்த பிறர் முன்னிலையில் தனது மனைவியுடன் ஆலோசித்த துருபதன்...

பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! மன்னா {துரியோதனா}, அந்தத் தூதனால் இப்படிச் சொல்லப்பட்டதும், (திருடும் போது) அகப்பட்ட கள்வனைப் போல, மன்னன் துருபதனால் {ஒன்றும்} பேசமுடியவில்லை. அவன் {துருபதன்}, இனிமையான பேச்சுடைய தூதர்களை அனுப்பி, அவர்கள் மூலமாக "அப்படியில்லை" என்ற தனது செய்தியையும் அனுப்பி, தனது சம்பந்தியைச் [1] {ஹிரண்யவர்மனைச்} சமாதானம் செய்யத் தீவிரமாக முயற்சி செய்தான். எனினும், மன்னன் ஹிரண்யவர்மன், பாஞ்சாலர்களின் மன்னனுடைய பிள்ளை {சிகண்டி/ சிகண்டினி} உண்மையில் அவனது {துருபதனின்} பெண்ணே என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்து கொண்டு, மேலும் நேரத்தைக் கடத்தாமல் தனது நகரத்தை விட்டுப் புறப்பட்டான். பிறகு அவன் {ஹிரண்யவர்மன்}, தனது மகள் வஞ்சிக்கப்பட்டாள் என்று தனது செவிலிகள் மூலம் கேள்விப்பட்ட செய்திகளை வலிமைமிக்கத் தனது நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பினான்.


[1] இங்குக் கங்குலி brother என்ற வார்த்தையைக் கையாள்கிறார். வேறு பதிப்புகளில் சம்பந்தி என்ற வார்த்தை இருக்கிறது. நாம் சம்பந்தி என்ற வார்த்தையையே கைக்கொள்கிறோம்.

பிறகு, அந்த மன்னர்களில் சிறந்தவன் {ஹிரண்யவர்மன்}, பெரும் படையைத் திரட்டிக் கொண்டு, ஓ! பாரதா {துரியோதனா}, துருபதனுக்கு எதிராக அணிவகுக்கத் தீர்மானித்தான். பிறகு, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, மன்னன் ஹிரண்யவர்மன் பாஞ்சாலர்களின் ஆட்சியாளனை {துருபதனைக்} குறித்துத் தனது அமைச்சர்களுடன் ஓர் ஆலோசனையை நடத்தினான். ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, சிகண்டி உண்மையிலேயே பெண்ணாக இருந்தால், நகரத்தில் {தலைநகரம் காம்பில்யத்தில்} இருந்து பாஞ்சாலர்களின் ஆட்சியாளனைக் {துருபதனைக்} கட்டி  இழுத்து வந்து, பாஞ்சாலர்களுக்கு வேறு ஒரு மன்னனை நிறுவி, சிகண்டியோடு சேர்த்துத் துருபதனைக் கொல்ல வேண்டும் என்று அந்த உயர் ஆன்ம மன்னர்களுக்கு மத்தியில் தீர்மானம் ஏற்பட்டது. (தான் அழைத்த அனைவரும் தீர்மானித்த) அதையே உறுதியான தீர்மானமாகக் கொண்ட மன்னன் ஹிரண்யவர்மன், "நான் உன்னைக் கொல்வேன், அமைதியாயிரு" என்று பிருஷதனின் வழித்தோன்றலுக்கு {துருபதனுக்கு} மீண்டும் ஒருமுறை தூதனுப்பினான்.

பீஷ்மர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "மன்னன் துருபதன் இயல்பாகவே வீரமிக்கவனல்ல. மேலும், தனது குற்றத்தின் விளைவால் அவன் {துருபதன்} அச்சத்தில் நிறைந்திருந்தான். தசார்ணகர்களின் ஆட்சியாளனிடம் {ஹிரண்யவர்மனிடம்}, மீண்டும் தூதுவர்களை அனுப்பிய மன்னன் துருபதன், துக்கத்தால் பீடிக்கப்பட்டு, தனது மனைவியை அணுகி, அவளது ஆலோசனையைக் கேட்டான்.

பெரும் அச்சத்தைக் கொண்டவனும், துயரால் இதயம் பீடிக்கப்பட்டவனுமான பாஞ்சாலர்களின் மன்னன் {துருபதன்}, சிகண்டியின் தாயான தனது அன்பிற்குரிய மனைவியிடம், "வலிமைநிறைந்த எனது சம்பந்தியான மன்னன் ஹிரண்யவர்மன், பெரும் படையைத் திரட்டிக் கொண்டு, கோபத்துடன் என்னை நோக்கி வருகிறான். இந்த நமது பெண்ணின் {சிகண்டினியின்} காரியமாக மூடர்களாகிய நாம் இருவரும், இப்போது என்ன செய்யப் போகிறோம்? உனது மகன் சிகண்டி, மகளே என்பதாகச் சந்தேகிக்கப்படுகிறான். இந்தச் சந்தேகத்தின் அடிப்படையில், தனது கூட்டாளிகளுடன் கூடிய ஹிரண்யவர்மனும், அவனைத் தொடர்ந்து வரும் படையினரும், அவன் {ஹிரண்யவர்மன்} என்னால் வஞ்சிக்கப்பட்டதாக நினைத்துக் கொண்டு என்னைக் கொல்ல விரும்புகின்றனர்.

ஓ! அழகிய இடையைக் கொண்டவளே, ஓ! அழகிய பெண்ணே, இதில் எது உண்மை அல்லது எது பொய் என்பதை இப்போது எங்களுக்குச் சொல்வாயாக. ஓ! அருளப்பட்ட மங்கையே, முதலில் உன்னிடம் இருந்து கேட்ட பிறகே, எப்படிச் செயல்படுவது என்பதை நான் தீர்மானிப்பேன். நானும், இந்தப் பிள்ளை சிகண்டியும் சமமான ஆபத்தில் இருக்கிறோம். உண்மையில், ஓ! ராணி, ஓ! அழகிய நிறம் கொண்ட மங்கையே, நீயும் ஆபத்தின் அச்சுறுத்தலிலேயே இருக்கிறாய். அனைவரின் நிவாரணத்திற்காகவும், உன்னிடம் கேட்கும் என்னிடம், உண்மை எது என்பதைச் சொல்வாயாக. ஓ! அழகிய இடையும், இனிய புன்னகையும் கொண்டவளே, நீ என்ன சொல்கிறாய் என்பதைக் கேட்டுவிட்டு, அதற்குத் தகுந்தாற்போலவே நான் செயல்படுவேன். ஒரு மகனுக்கு ஆற்ற வேண்டிய கடைமைகளில் உன்னால் நான் வஞ்சிக்கப்பட்டிருந்தாலும் கூட. ஓ! அழகிய பெண்ணே, கருணையால் நான் உங்கள் இருவருக்கும் தகுந்தபடி நடந்து கொள்வேன். எனவே, அச்சப்படாதே, இந்த உனது மகளும் எதற்காகவும் அஞ்ச வேண்டாம். உண்மையில், நான் தான் தசார்ணகர்களின் மன்னனை {ஹிரண்யவர்மனை} வஞ்சித்துவிட்டேன். ஓ! உயர்ந்த அருள் கொண்ட பெண்ணே, அனைத்தும் நன்மையாக மாற, நான் அவனிடம் {ஹிரண்யவர்மனிடம்} எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்வாயாக" என்றான் {துருபதன்}.

உண்மையில், அந்த மன்னன் {துருபதன்} அனைத்தையும் அறிந்திருந்தாலும், மற்றவர்களுக்குத் தனது அறியாமையை அறிவிப்பதற்காக, பிறருக்கு முன்னிலையில் இவ்வழியிலேயே தன் மனைவியிடம் பேசினான். பிறகு, அவனது ராணி பின் வரும் வார்த்தைகளால் அவனுக்குப் பதிலளித்தாள்" என்றார் {பீஷ்மர்}. 


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்