Friday, July 31, 2015

படைப்பிரிவுகளை மாற்றி அமைத்த யுதிஷ்டிரன்! - உத்யோக பர்வம் பகுதி 199

Yudhishthira changed his divisions order! | Udyoga Parva - Section 199 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 26)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனும் தனது படையை மூன்றாகப் பிரித்து அனுப்பியது; பாண்டவப் படை அணிவகுத்து சென்ற காட்சியின் வர்ணனை; இடையில் யுதிஷ்டிரன், கௌரவப் படையைக் குழப்புவதற்காகத் தனது படைப்பிரிவுகளின் வரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தியது; அந்தப் படையில் இருந்த சில படைக்கலன்களின் எண்ணிக்கையும் அவை பற்றிய குறிப்பும்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "துரியோதனனைப் போலவே, குந்தி மற்றும் தர்மனின் மகனான மன்னன் யுதிஷ்டிரனும், ஓ! பாரதா {ஜனமேஜயா}, திருஷ்டத்யும்னனின் தலைமையிலான தனது வீரப் போராளிகள் புறப்படக் கட்டளையிட்டான். மேலும், எதிரிகளைக் கொல்பவனும், ஆற்றலில் உறுதியானவனும், சேதிகள், காசிகள் மற்றும் கரூஷர்களின் படைத்தளபதியும், தலைவனுமான திருஷ்டக்கேதுவையும், விராடன், துருபதன், யுயுதானன், சிகண்டி, வலிமைமிக்க வில்லாளிகளும், பாஞ்சாலத்தின் இளவரசர்கள் இருவருமான யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகியோரையும் புறப்பட உத்தரவிட்டான். அந்த வீரமிக்கப் போராளிகள், அழகிய கவசங்களைப் பூட்டிக் கொண்டு, தெளிந்த நெய்யால் ஊட்டப்படும் வேள்விப்பீடத்தின் நெருப்பைப் போன்று சுடர்விடும் தங்கத்தாலான காது குண்டலங்களை அணிந்திருந்தனர். உண்மையில், அந்த வலிமைமிக்க வில்லாளிகள் ஆகாயத்தில் இருக்கும் கோள்களைப் போலப் பிரகாசித்துக் கொண்டிருந்தனர்.


மனிதர்களில் காளையான மன்னன் யுதிஷ்டிரன், தனது வீரர்கள் அனைவரையும் முறையாக மதித்த பிறகு, அவர்களை அணிவகுத்துச் செல்ல உத்தரவிட்டான். காலாட்படை, யானைகள், குதிரைகள், தொண்டர்கள் மற்றும் சிற்ப வேலைகளால் பிழைப்பவர்கள் ஆகியோர் அடங்கிய துருப்புகளைக் கொண்ட உயர் ஆன்ம மன்னர்களுக்கு அற்புத உணவு வசதிகளையும் மன்னன் யுதிஷ்டிரன் வழங்கினான். அபிமன்யு, பிருஹந்தன், திரௌபதியின் ஐந்து மகன்கள் ஆகியோரை திருஷ்டத்யும்னன் தலைமையில் முதலில் அணிவகுத்துச் செல்லும்படி அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} கட்டளையிட்டான். பிறகு அவன் {யுதிஷ்டிரன்}, பாண்டுவின் மகன்களான பீமன், மற்றும் தனஞ்சனைத் {அர்ஜுனனைத்} தனது படையின் இரண்டாவது பிரிவில் அனுப்பி வைத்தான்.

தங்கள் குதிரைகள், யானைகள் ஆகியவற்றைப் பூட்டி, போர்க்கருவிகளைத் தங்கள் தேர்களில் ஏற்றிக் கொண்டும், நகர்ந்து கொண்டும், ஓடிக்கொண்டும் இருந்த மனிதர்களாலும், உற்சாகமிகுந்திருந்த போராளிகளின் மகிழ்ச்சியான ஒலியாலும் ஏற்பட்ட ஆரவாரம் சொர்க்கத்தையே எட்டியது {விண்ணை முட்டியது}. அனைத்திலும் இறுதியாக, விராடன், துருபதன் மற்றும் பிற ஏகாதிபதிகளுடன் (அவர்களைத் தன் பக்கத்தில் கொண்டு) மன்னனே {யுதிஷ்டிரனே} அணிவகுத்துச் சென்றான்.

இதுவரை ஒரே இடத்தில் நிலைகொண்டிருந்ததும், திருஷ்டத்யும்னனால் உத்தரவிடப்பட்டதும், பயங்கர வில்லாளிகளைக் கொண்டதுமான அந்தப் படை, இப்போது நடந்த அணிவகுப்பின் போது அதன் வரிசைகள் விரிவடைந்ததால், (மூர்க்கமான) கங்கையின் ஊற்று போலக் காணப்பட்டது.

பிறகு, தனது அறிவை நம்பியிருக்கும் புத்திமானான யுதிஷ்டிரன், திருதராஷ்டிரன் மகன்களைக் குழப்புவதற்காக, தனது படைப்பிரிவுகளை வேறு வகையில் மாற்றி அமைத்தான். அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, வலிமைமிக்க வில்லாளிகளான திரௌபதியின் (ஐந்து) மகன்கள், அபிமன்யு, நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரையும் மற்றும் பிரபத்திரகர்கள் அனைவரையும், பத்தாயிரம் {10000} குதிரைகளையும், இரண்டாயிரம் {2000} யானைகளையும், பத்தாயிரம் {10000} காலாட்படை வீரர்களையும், ஐநூறு {500} தேர்களையும் கொண்ட தனது படையின் முதல் பிரிவை பீமசேனனின் கட்டளைக்குக் கீழ் அமர்த்தினான்.

விராடன், ஜெயத்சேனன், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், பாஞ்சாலத்தின் உயரான்ம இளவரசர்களும், பெரும் ஆற்றல் கொண்டவர்களும், கதாயுதம் மற்றும் வில் ஆகியவற்றைத் தரித்திருந்த இருவருமான யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகியோரைத் தனது படையின் நடுப்பிரிவில் அவன் {யுதிஷ்டிரன்} நிறுத்தினான். அந்த நடுப்பிரிவிலேயே வாசுதேவனும் {கிருஷ்ணனும்} தனஞ்சயனும் {அர்ஜுனனும்} அணிவகுத்து வந்தார்கள். ஆயுதங்களில் உயர்வான சாதனை கொண்டவர்களும், கோபத்தால் எரிபவர்களுமான போராளிகள் அங்கே (நிலைநிறுத்தப்பட்டு) இருந்தனர். அவர்களுக்கு மத்தியில் குதிரைகளைச் செலுத்தும் வீரப் போராளிகளும், ஐயாயிரம் {5000} யானைகளும், தேர்க்கூட்டங்களும் சுற்றிலும் இருந்தன.

வீரமிக்கவர்களாகவும், விற்கள், வாட்கள் மற்றும் கதாயுதங்களைத் தரித்துக் கொண்டவர்களாகவும் அணிவகுத்த ஆயிரக்கணக்கான காலாட்படை வீரர்களுக்கு முன்னும் பின்னும் ஆயிரம் வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். அந்தத் துருப்புகளின் கடலில், யுதிஷ்டிரன் இருந்த அந்தப் பகுதியில், பூமியின் தலைவர்கள் எண்ணற்றோர் நிறுத்தப்பட்டிருந்தனர். அங்கே ஆயிரக்கணக்கான யானைகளும், பத்தாயிரக்கணக்கான குதிரைகளும், ஆயிரக்கணக்கான தேர்களும், காலாட்படை வீரர்களும் இருந்தனர். அங்கே, ஓ! மன்னர்களில் காளையே {ஜனமேஜயா}, தனது பெரும் படையுடன் கூடிய சேகிதானனும், சேதிகளின் தலைவனான மன்னன் திருஷ்டக்கேதுவும் அணிவகுத்து நின்றனர். அங்கேதான் வலிமைமிக்க வில்லாளியும், விருஷ்ணிகளின் தேர்வீரர்களில் முதன்மையானவனும், வலிமைமிக்கப் போராளியுமான சாத்யகி, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தேர்களால் சூழப்பட்டு, அவற்றை (போருக்கு) வழிநடத்திச் சென்று கொண்டிருந்தான்.

மனிதர்களில் காளையரான க்ஷத்ரஹனன், க்ஷத்ரதேவன் ஆகியோர் தங்கள் தேர்களில் பின்புறம் அணிவகுத்து வந்து, பின்புறத்தைப் பாதுகாத்து நின்றனர். அங்கே (பின்புறத்தில்) தான் வண்டிகள், கூடங்கள், சீருடைகள், வாகனங்கள் மற்றும் இழுவை விலங்குகளும் இருந்தன. அங்கே ஆயிரக்கணக்கான யானைகளும், பத்தாயிரக்கணக்கான குதிரைகளும் இருந்தன. செல்லாதவர்கள், பெண்கள், இளைத்தவர்கள், பலவீனர்கள் மற்றும் தனது செல்வங்களையும், களஞ்சியங்களையும் சுமந்த விலங்குகள் ஆகிய அனைவரையும் அழைத்துக் கொண்டு, தனது யானைப் பிரிவின் துணையுடன் யுதிஷ்டிரன் மெதுவாக அணிவகுத்துச் சென்றான்.

உண்மையை உறுதியாகப் பின்பற்றுபவனும், போரில் ஒப்பற்றவனுமான சௌசிட்டி, சிரேனிமத், வாசுதேவன், காசி ஆட்சியாளனின் மகன் விபு, இருபதாயிரம் {20,000} தேர்கள், தனது அங்கங்களில் வரிசையாக மணிகளைத் தாங்கிய பத்து கோடி {10,00,00,000} உயர்வகைக் குதிரைகள், நல்ல இனத்தைச் சார்ந்தவையும், மதம் பிளந்தவையும், அசையும் மேகத் திரளைப் போன்றவையும், ஏர்க்காலின் {கலப்பையின்} அளவு நீளம் கொண்ட தந்தங்களைக் கொண்டவையுமான இருபதாயிரம் {20,000} யானைகளும் பின்தொடர அவன் {யுதிஷ்டிரன்} சென்றான். மேலும் இவை அந்த ஏகாதிபதிகளின் பின்பே நடந்து சென்றன. இவை தவிர்த்து, யுதிஷ்டிரன் தனது ஏழு அக்ஷௌஹிணி படையிலும் கொண்டிருந்த யானைகள், மழை பொழியும் மேங்களைப் போன்ற துதிக்கைகளும், வாய்களும் கொண்டவையும், மலைகளைப் போல அசைபவையுமான எழுபதாயிரம் {7,000} எண்ணிக்கையில் அந்த மன்னனை {யுதிஷ்டிரனைப்} பின்பற்றிச் சென்றன.

இப்படியே அந்தப் புத்திமானான குந்தியின் மகனால் {யுதிஷ்டிரனால்}, அந்தப் பயங்கரப் படை வரிசைப்படுத்தப்பட்டது. அந்தப் படையை நம்பியே அவன் {யுதிஷ்டிரன்}, திருதராஷ்டிரன் மகனான சுயோதனனிடம் {துரியோதனனிடம்} போரிட்டான். ஏற்கனவே பெயர் சொல்லப்பட்டவர்களைத் தவிர, நாற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும், பத்தாயிரக்கணக்கிலும் இருந்த பிற மனிதர்கள், உரக்க ஆரவாரம் செய்தபடி ஆயிரங்களில் எண்ணிக்கையைக் கொண்ட அந்தப் (பாண்டவப் படையின்) பிரிவுகளைப் பின்தொடர்ந்து சென்றனர். ஆயிரக்கணக்கான, பத்தாயிரக்கணக்கான போராளிகள் மகிழ்ச்சியால் நிறைந்து, தங்கள் ஆயிரக்கணக்கான துந்துபிகளை அடித்தபடி, பத்தாயிரக்கணக்கான சங்குகளை ஊதிக் கொண்டு சென்றனர்" என்றார் {வைசம்பாயனர்}.

****************** அம்போபாக்யான உபபர்வம் முற்றிற்று ******************
********* உத்யோக பர்வம் முற்றிற்று *********



மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்