Sunday, August 16, 2015

மன்னரற்ற அரசுமுறை கொண்ட சாகத்வீபம்!- பீஷ்ம பர்வம் பகுதி - 011

Kingdoms without king in Sakadwipa! | Bhishma-Parva-Section-011 | Mahabharata In Tamil

(பூமி பர்வம் – 1)

பதிவின் சுருக்கம் : ஜம்பூத்வீபத்தைத் தவிர்த்து வேறு கண்டங்களையும் விளக்குமாறு திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் கேட்டது; சாகத்வீபம் இருக்கும் பகுதியைக் குறித்தும், அதன் தன்மைகள் குறித்தும், அங்கிருக்கும் மக்கள் குறித்தும், அவர்களது தொழில்களைக் குறித்தும், மன்னரற்ற அரசு முறை குறித்தும் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னது ...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், "ஓ! சஞ்சயா, ஜம்பூகண்டத்தைக் குறித்து நீ எனக்கு முறையாக விளக்கிச் சொன்னாய். ஓ! சஞ்சயா, ஓ! கவல்கணன் மகனே {சஞ்சயனே}, கடல், சாகத்வீபம், குசத்வீபம், சால்மலித்வீபம், கிரௌஞ்சத்வீபம் ஆகியவற்றின் பரப்பளவை எனக்கு உண்மையாகச் சொல்வாயாக. மேலும் ராகு, சோமன் {சந்திரன்}, சூரியன் ஆகியவற்றையும் எதையும் விட்டுவிடாமல் எனக்குச் சொல்வாயாக" {என்றான் திருதராஷ்டிரன்}.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இந்தப் பூமியெங்கும் பரந்திருக்கும் பல தீவுகள் இருக்கின்றன. எனினும், நான் உமக்கு ஏழு தீவுகளை மட்டும் மற்றும் சந்திரன், சூரியன் மற்றும் கோள் (ராகு) ஆகியவற்றையும் விளக்குவேன்

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஜம்பூ மலை,  பதினெட்டாயிரத்து அறுநூறு {18,600} யோஜனைகள் பரந்திருக்கிறது. உப்புக் கடலின் பரப்போ அதை விட இருமடங்காகச் {37,200 யோஜனைகளாகச்} சொல்லப்படுகிறது. அந்தக் கடல் பல நாடுகளால் நிரம்பியும், மணிகளாலும், பவளங்களாலும் அலங்கரிக்கப்பட்டும் இருக்கிறது. அது தவிரவும், அது பல்வேறு வகை உலோகங்களால், பல நிறங்களில் காட்சியளிக்கும், பல மலைகளும் அதில் நிறைந்திருக்கிறது. சித்தர்கள், சாரணர்கள் ஆகியோரால் நெருக்கமாகச் சூழப்பட்டிருக்கும் அந்தக் கடல் வட்ட வடிவில் இருக்கிறது.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} நான் இப்போது சாகத்வீபத்தைக் குறித்து உமக்குச் சொல்லப் போகிறேன். ஓ! குரு குலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, அதை உமக்கு நான் முறையாக விளக்கிச் சொல்வதைக் கேட்பீராக. ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, அந்தத் தீவு, ஜம்பூத்வீபத்தைவிட இருமடங்கு பரப்புடையதாகும். கடலும், ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, அதைவிட இரண்டு மடங்குடையதாகும். உண்மையில், ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அந்தச் சாகத்வீபம் அனைத்துப் புறங்களிலும் கடலால் சூழப்பட்டுள்ளது. அங்கே இருக்கும் நாடுகளில் நீதி நிறைந்திருக்கிறது. அங்கே இருக்கும் மனிதர்கள் இறப்பதில்லை. {அப்படியிருக்கும்போது}, அங்கே பஞ்சம் எப்படி ஏற்படும்? அங்கே இருக்கும் மக்கள் அனைவரும் பொறுமையையும் பெரும் சக்தியையும் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நான் இப்போது சாகத்வீபத்தைக் குறித்த சுருக்கமான விளக்கத்தைச் சொல்லிவிட்டேன். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இது தவிர நீர் வேறு எதைக் கேட்க விரும்புகிறீர்?" {என்றான் சஞ்சயன்}.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, சாகத்வீபத்தைக் குறித்த சுருக்கமான விளக்கத்தை நீ எனக்கு அளித்துவிட்டாய். ஓ! பெரும் அறிவைக் கொண்டவனே, நீ இப்போது அனைத்தையும் உண்மையில் விபரமாகக் கூறுவாயாக" என்று கேட்டான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "அந்தத் தீவில் {சாகத்வீபத் தீவில்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பொன்னால் அலங்கரிக்கப்பட்டவையும், ரத்தினங்கள் மற்றும் விலைமதிப்பற்ற கற்களின் சரங்கங்களைக் கொண்டவையுமாக ஏழு மலைகள் இருக்கின்றன. அந்தத் தீவில் பல ஆறுகளும் இருக்கின்றன. அவற்றின் பெயர்களை நான் சொல்லும்போது கேட்பீராக. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கே இருக்கும் அனைத்தும் அற்புதமாவையாகவும், இனிமை நிறைந்தவையுமாக இருக்கின்றன. அந்த மலைகளில் முதன்மையாக மேரு என்று அழைக்கப்படும் மலை இருக்கிறது. அது தேவர்கள், முனிவர்கள் மற்றும் கந்தர்வர்களின் வசிப்பிடமாக இருக்கிறது. அடுத்ததாகக் கிழக்கு நோக்கிப் படர்ந்திருக்கும் மலயம் என்று அழைக்கப்படும் மலை இருக்கிறது அங்கேதான் மேகங்கள் உற்பத்தியாகி, அங்கிருந்துதான் அனைத்துப் புறங்களுக்கும் செல்கின்றன.

அடுத்ததாக, ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, ஜலதாரம் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய மலை இருக்கிறது. அங்கிருந்துதான் இந்திரன் சிறந்த தரத்தில் இருக்கும் நீரைத் தினமும் எடுக்கிறான். ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, அந்த நீரில் இருந்துதான் நாம் மழைக்காலங்களில் மழையைப் பெறுகிறோம். அடுத்ததாக ரைவதகம் என்று அழைக்கப்படும் உயர்ந்த மலை இருக்கிறது. அதற்கு {அந்த மலைக்கு} மேலே ஆகாயத்தில் ரேவதி என்று அழைக்கப்படும் நட்சத்திரக் கூட்டம் நிலையாக இருக்கிறது. இந்த ஏற்பாடு பெரும்பாட்டனாலேயே {பிரம்மனாலேயே} ஏற்படுத்தப்பட்டதாகும். இதற்கு வடக்கில், ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, சியாமம் என்று அழைக்கப்படும் பெரும் மலை இருக்கிறது. புதியாய் எழுந்த மேகங்களைப் போன்ற பிரகாசத்தைக் கொண்ட அது மிக உயரமானதாகவும், அழகு நிரம்பியதாகவும், பிரகாசமான உடலைக் கொண்டதாகவும் இருக்கிறது. அந்த மலைகளின் நிறம் கருமையாகஇருப்பதால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கே வசிக்கும் மக்கள் அனைவரும் கரிய நிறம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்" என்றான் {சஞ்சயன்}.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "நீ சொன்னதிலிருந்து, ஓ! சஞ்சயா, எனது மனதில் ஒரு பெரிய ஐயம் எழுகிறது. ஓ! சூதனின் {கவல்கணனின்} மகனே {சஞ்சயா}, அங்கே இருக்கும் மக்கள் ஏன் கருப்பாக இருக்க வேண்டும்?" என்று கேட்டான்.

அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! பெரும் மன்னா, ஓ! குரு குலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, வெண்ணிறமும், கரிய நிறமும் கொண்ட மனிதர்களும், வெள்ளை மற்றும் கருப்பைக் கலவையாகக் கொண்ட இனங்களைச் சார்ந்தவர்களும் அனைத்துத் தீவுகளிலும் இருக்கிறார்கள். ஆனால், அங்கிருக்கும் மக்கள் அனைவருமே கருப்பாக இருப்பதால் அந்த மலையும் கருமலை {சியாம மலை} என்று அழைக்கப்படுகிறது. இதற்குப் பிறகு, ஓ! குருக்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, துர்க்கசைலம் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய மலை இருக்கிறது.

அதன் பிறகு கேசரி என்று அழைக்கப்படும் மலை வருகிறது. அந்த மலையில் இருந்து வீசும் தென்றல் (நறுமண) வாசனையைச் சுமந்து வருகிறது. அந்த ஒவ்வொரு மலையின் அளவும், உடனடியாக அதற்கு முன் சொன்ன மலையைப் போன்று இரு மடங்கு கொண்டதாகும். ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, அறிவுடையோரால் அந்தத் தீவில் ஏழு வர்ஷங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.
மேருவின் வர்ஷம் மஹாகாசம் {1} என்று அழைக்கப்படுகிறது;
நீர் தரும் (மலயம்) குமுதோத்ரம் {2} என்று அழைக்கப்படுகிறது.
ஜலதாரத்தின் வர்ஷம் சுகுமாரம் {3} என்று அழைக்கப்படுகிறது;
அதே வேளையில் ரைவதகத்தினுடையது கௌமாரம் {4} என்று அழைக்கப்படுகிறது;
சியாமத்தினுடையது மணிகாஞ்சனம் {5} என்று அழைக்கப்படுகிறது.
கேசரத்தின் வர்ஷம் மௌதாகி {6} என்று அழைக்கப்படுகிறது.
அடுத்த மலைக்கு அடுத்து உள்ளது மகாபூமன் {மஹாபௌமம்} {7} என்று அழைக்கப்படுகிறது.

அந்தத் தீவின் மத்தியில் சாகம் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய மரம் இருக்கிறது. அதன் உயரமும் அகலமும், ஜம்பூத்வீபத்தில் உள்ள நாவல் {ஜம்பூ} மரத்தின் அளவுக்கு இணையானதாக இருக்கிறது. அங்கிருக்கும் மக்கள் அந்த மரத்தை எப்போதும் துதிக்கின்றனர். சிவனை வழிபடும் பல இனிமையான மாகாணங்கள் அந்தத் தீவில் இருக்கின்றன. அங்கே சித்தர்கள், சாரணர்கள் மற்றும் தேவர்கள் ஆகியோர் எப்போதும் செல்கிறார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டரே}, அங்கே இருக்கும் மக்கள் அறம் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அங்கே இருக்கும் நால்வகையினரும் தங்கள் தங்களுக்குரிய தொழில் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். திருட்டுக்கான சந்தர்ப்பம் அங்கே ஏதும் காணப்படாது. முதுமை, மரணம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, நீண்ட வாழ்நாளுடன் இருக்கும் அந்த மக்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மழைக்காலத்தில் வளரும் ஆறுகளைப் போல வளர்கிறார்கள்.

அங்கே இருக்கும் ஆறுகள் அனைத்தும் கங்கையைப் போலவே புனித நீரால் நிரம்பி, பல்வேறு ஊற்றுகளாகச் சுகுமாரி, குமாரி, சீதாசி, கேவேரகை {வேணிகை}, மகாநதி, ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே} மணிஜலை, சக்ஷூஸ், வர்த்தனிகை என்று பிரிந்து பாய்கின்றன. அவை, ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, இவற்றாலும் இன்னும் பிற ஆறுகளாலும் ஆயிரக்கணக்கிலும், நூற்றுக்கணக்கிலும், புனித நீரால் முழுவதும் நிரம்பி இருக்கின்றன. அவற்றில் இருந்துதான், ஓ! குருகுலத்தைத் தழைக்க வைப்பவரே {திருதராஷ்டிரரே}, வாசவன் {இந்திரன்} நீரை எடுத்து மழையாகப் பொழிகிறான். அந்த ஆறுகளின் நீளங்களையும் அவற்றின் பெயர்களையும் உரைப்பது இயலாததாகும். அவை அனைத்தும் ஆறுகளில் முதன்மையானவையும், பாவத்தைப் போக்குபவையுமாகும்.

மனிதர்கள் அனைவராலும் கேட்கப்பட்டது போலவே அந்தச் சாகத் தீவில் நான்கு புனிதமான மாகாணங்கள் {நாடுகள்} இருக்கின்றன. அவை, மிருகம் {மங்கம்}, மசகம், மானசம், மந்தகம் என்பனவாகும். மிருகத்தில் {மிருக நாட்டில்}, உள்ளோர் பெரும்பாலும் தங்கள் வகைக்கான தொழில்களில் அர்ப்பணிப்புடன் இருக்கும் அந்தணர்களாக இருக்கின்றனர். அந்தணர்கள் விரும்பும் அனைத்தையும் கொடுக்கும் அறம்சார்ந்த க்ஷத்திரியர்கள் மசகத்தில் {மசக நாட்டில்} இருக்கிறார்கள். மானசத்தில் {மானச நாட்டில்} இருப்போர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வைசிய வகைக் கடமைகளைப் பின்பற்றி வாழ்ந்து வருகிறார்கள். தங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறிய அவர்கள் வீரர்களாகவும் அறம் மற்றும் பொருளுக்குத் தங்களை உறுதியாக அர்ப்பணித்தவர்களாகவும் இருக்கிறார்கள். மதங்கம் {மதங்க நாடு} முழுவதிலும், அறம் சார்ந்த நடத்தை கொண்ட வீரமான சூத்திரர்கள் இருக்கிறார்கள்.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இந்த மாகாணங்களில் {நாடுகளில்},  மன்னன், தண்டனை ஆகியவை ஏதுமில்லை. தண்டிக்கத்தகுந்த மனிதர் யாரும் அங்கே இல்லை. கடமையின் விதிகளை அறிந்த அவர்கள் அனைவரும், தங்கள் தங்கள் கடமைகளில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொள்கின்றனர். சாகம் என்று அழைக்கப்படும் தீவைக் குறித்து இவ்வளவே சொல்ல இயலும். பெரும் சக்தி மிக்க அந்தத் தீவைக் குறித்து இந்த அளவே கேட்கப்பட வேண்டும் [1].

[1] "சாகத்வீபம் குறித்த இந்தப் புராண அடிப்படை, ஒரு வேளை, கிழக்கு ஆசியாவிலோ, மாகடலில் {சமுத்திரத்தில்} உள்ள ஆசியாவிலோ (அல்லது மேலும் தள்ளியிருக்கும் கிழக்கு பசிபிக்கிலோ) இருந்த பழமையான இந்தியக் குடியரசுகளைக் குறிப்பதாக இருக்கலாம். மன்னராட்சி முறையும், மன்னரில்லாத அரசு முறையும் தங்கள் பழக்க வழக்கத்தில் இருந்ததே எனும் இந்துக்கள், இந்தக் கடைசி இரு சுலோகங்களின் சரியான விளக்கத்தால் நல்ல தாக்கத்தைப் {உணர்வைப்} பெறுவார்கள்" என்கிறார் கங்குலி. ஒரு வேளை கம்போடியா, இந்தோனேசியா, பாலி போன்ற நாடுகள் சாகத்வீபத்தில் இருந்திருக்கலாம்.



ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்