Thursday, October 01, 2015

நம்பிக்கையறம் - பக்தி யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 036

The Religion of Faith - Bhakti yoga! | Bhishma-Parva-Section-036 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 24) {பகவத் கீதை - பகுதி 12}

பதிவின் சுருக்கம் : கடவுளிடம் அர்ப்பணிப்புடன் செல்லும் பாதையைக் கிருஷ்ணன் புகழ்வது; அர்ப்பணிப்புடன் செயலாற்றும் முறையான பக்தி யோகத்தைக் கிருஷ்ணன் விளக்கிச் சொல்வது; மேலும் அவன் பல்வேறு வடிவங்களிலான ஆன்ம ஒழங்குகளை விளக்குவது...

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "தொடர் அர்ப்பணிப்புடன், உன்னை வணங்கி வழிபடுபவர்களிலும், மாற்றமில்லாதவனாக, தோற்றமில்லாதவனாக உன்னை (தியானித்து) வழிபடுபவர்களிலும், {மேற்கண்ட இருவரிலும்}, அர்ப்பணிப்பை {பக்தியை} சிறந்த முறையில் அறிந்தவர்கள் {யோக அறிவில் சிறந்தவர்} யார்?" என்றான் {அர்ஜுனன்}. 12:1


அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "என்னில் (தங்கள்) மனத்தை நிலைக்கச் செய்து, தொடர்ச்சியாக என்னை வணங்கி {நித்திய யோகியாக}, (அது தவிரவும்) உயர்ந்த நம்பிக்கையையும் கொண்டவர்களே என்னால் அர்ப்பணிப்பு மிக்கவர்களாகக் {யோகிகளில் மேலானவர்களாகக்} கருதப்படுகிறார்கள். 12:2

எனினும், புலன்களின் மொத்த தொகுதியையும் கட்டுப்படுத்தி, சுற்றிலும், அனைத்து வகையிலும் சம மனதுடன், அனைத்து உயிரினங்களின் நன்மையில் ஈடுபட்டு, மாற்றமில்லாததும் {அழிவற்றதும்}, தோற்றமற்றதும் {குறிப்பற்றதும்}, எங்கும் நிறைந்ததும், சிந்தனைக்கு அப்பாற்பட்டதும், வேறுபாடற்றதுமான நித்தியமான பொருளை {பரம்பொருளை} வழிபடுவோரும் என்னையே அடைகின்றனர். 12:3-4

தோற்றமில்லாததில் {அவ்யக்தத்தில்} மனதை நிலைக்கச் செய்வோருக்கான தொல்லை {கவலை} பெரிது; ஏனெனில் தோற்றமற்றதற்குச் செல்லும் பாதையைக் {நெறியைக்} கண்டடைவதென்பது, உடல்கொண்டோருக்குக் கடினமானதாகும். 12:5

செயல்களனைத்தையும் எனக்கே அர்ப்பணித்து, என்னையே (அடையத்தக்க) தங்கள் உயர்ந்த நோக்கமாகக் கொண்டு, என்னையே வழிபட்டு, வேறு எதிலும் அர்ப்பணிப்பைச் செலுத்தாமல், என்னையே தியானித்து, (இப்படியே) என்னிலேயே தங்கள் மனத்தை நிலைக்கச் செய்பவர்கள் எவரோ, அவர்களை, (இந்த) மரணத்தின்பாற்படும் உலகம் எனும் கடலில் இருந்து தாமதமில்லாமல் நான் விடுவிப்பேன். 12:6-7

என்னில் மட்டுமே உனது இதயத்தை நிலைக்கச் செய்து, உனது புத்தியை என்னில் செலுத்துவாயாக. இதன்பிறகு {இந்த உலகத்திற்குப் பிறகு} நீ என்னில் வசிப்பாய். (இதில்) ஐயமில்லை. 12:8

எனினும், என்னில் உனது இதயத்தை உறுதியாக நிலைநிறுத்த இயலவில்லையெனில், ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, தொடர்ந்த பயிற்சியினால் (எழும்) அர்ப்பணிப்பின் {யோகத்தின்} மூலம் என்னை அடைய முயற்சிப்பாயாக. 12:9

(இந்தத்) தொடர்ந்த பயிற்சிக்கும் நீ தகுதிவாய்ந்தவனாக இல்லாவிட்டால், எனக்காகச் செய்யப்படும் செயல்களே உனது உயர்ந்த இலக்காக இருக்கட்டும். உனது செயல்கள் அனைத்தையும் எனக்காகச் செய்வதால் கூட, நீ முழுமையை {என்னை} அடைவாய். 12:10

இதை உன்னால் செய்ய இயலாவிட்டால் கூட, என்னை அடையும் அர்ப்பணிப்பில் {யோகத்தில்} ஈடுபட்டு, உனது ஆத்மாவைக் கட்டுப்படுத்தி, செயல்கள் அனைத்தின் பலனையும் துறப்பாயாக. 12:11

(அர்ப்பணிப்பில் {யோகத்தில்} ஈடுபடும்) பயிற்சியை விட அறிவு மேன்மையானது; அறிவை விடத் தியானம் மேன்மையானது; தியானத்தைவிட {செயலுக்கான} எதிர்விளைவின் பலனைத் துறப்பது சிறந்தது, துறவில் இருந்து அமைதி உடனே விளைகிறது. 12:12

எந்த உயிரினித்திடமும் வெறுப்பில்லாதவன் எவனோ, நட்பும் கருணையும் கொண்டவன் எவனோ, ஆணவத்தில் இருந்து விடுபட்டவன் எவனோ, தற்பெருமையும், பற்றும் நீங்கியவன் எவனோ, இன்பத்திலும், வலியிலும் {துன்பத்திலும்} ஒன்றாக இருப்பவன் எவனோ, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, மனநிறைவு, எப்போதும் அர்ப்பணிப்பு, கட்டுப்படுத்தப்பட்ட ஆத்மா, உறுதியான நோக்கம் ஆகியவற்றைக் கொண்டு இதயத்தையும், புத்தியையும் என்னில் நிலைக்கச் செய்தவன் எவனோ, அவனே எனது அன்புக்குரியவன் ஆவான். 12:13-14

உலகத்துக்குத் தொல்லை {கவலை} கொடுக்காதவன் எவனோ, உலகத்தால் தொல்லை அடையாதவன் {கலங்காதவன்} எவனோ, மகிழ்ச்சி, கோபம், அச்சம் மற்றும் கவலைகள் ஆகியவற்றில் இருந்து விடுபட்டவன் எவனோ, அவனே எனது அன்புக்குரியவன் ஆவான். 12:15

கவலையற்று {எதிர்பார்ப்புகள் அற்று}, தூய்மையுடன், (உலகப் பொருள்களில்) தொடர்பில்லாதவனாக, (மனத்) துயரத்தில் இருந்து விடுபட்டவனாக என்னிடம் அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டிருப்பவன் எவனோ, ஒவ்வொரு செயலையும் (அதன் பலனையும்) துறப்பவன் எவனோ, அவனே எனது அன்புக்குரியவன் ஆவான். 12:16

மகிழ்ச்சியும், வெறுப்பும் இல்லாதவன் எவனோ, கவலைப்படாமல், ஆசைப்படாமல் இருப்பவன் எவனோ, நன்மையையும், தீமையையும் துறப்பவன் எவனோ, (மேலும்) என்னிடம் நம்பிக்கை நிறைந்தவன் எவனோ, அவனே எனது அன்புக்குரியவன் ஆவான். 12:17

நண்பன் மற்றும் எதிரி, மதிப்பு மற்றும் அவமதிப்பு ஆகியவற்றில் ஒன்றாக இருப்பவன் எவனோ, குளுமை மற்றும் வெம்மை (இன்பம் மற்றும் துன்பம்) ஆகியவற்றில் ஒன்றாக இருப்பவன் எவனோ, பற்றில் இருந்து விடுபட்டவன் எவனோ, இகழ்வையும், புகழையும் ஒன்றாகக் கருதுபவன் எவனோ, அதிகம் பேசாதவன் {அமைதியாக இருப்பவன்} எவனோ, (தான்) எதிர்கொள்ளும் எதிலும் மனநிறைவுடன் இருப்பவன் எவனோ, வீடற்று {வீட்டைக் குறித்துக் கவலையற்று}, உறுதியான மனத்துடனும், நிறைந்த நம்பிக்கையுடன் இருப்பவன் எவனோ, அவனே எனது அன்புக்குரியவன் ஆவான். 12:18-19

(ஏற்கனவே) அறிவித்தது போல, அழிவற்ற {அமுதம் போன்ற} இந்த நீதியின்படி {அறத்தின்படி} நடப்போர் எவரோ, (அடையத்தக்க) உயர்ந்த பொருளாக என்னையே கருதும் நம்பிக்கை நிறைந்த அந்த அர்ப்பணிப்பாளர்கள் {பக்தர்கள்} எவரோ, அவர்களே எனது மிகுந்த அன்புக்கு உரியவர்களாவர்" என்றான் {கிருஷ்ணன்}. 12:20


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்