Wednesday, October 21, 2015

அபிமன்யுவின் வீரம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 047அ

The braveness of Abhimanyu! | Bhishma-Parva-Section-047a | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 05)

பதிவின் சுருக்கம் : பாண்டவப் படையைக் கலங்கடித்துக் கொண்டிருந்த பீஷ்மரைக் கண்ட அபிமன்யு, அவரிடம் விரைவது; ஐந்து பெரும் வீரர்களால் காக்கப்பட்ட பீஷ்மருடன் அபிமன்யு சளைக்காமல் போரிட்டது; பீஷ்மரைப் பலவீனப்படுத்தி, கிருபரின் வில்லை அபிமன்யு இரண்டாகப் பிளப்பது; பனைமரக்கொடியைக் கொண்ட பீஷ்மரின் கொடிக்கம்பத்தை அபிமன்யு வெட்டி வீழ்த்துவது;  அபிமன்யுவின் வீரத்தைக் கண்ட பீமன் உரக்க முழக்கமிடுவது; பீஷ்மர் தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்த தொடங்குவது; அபிமன்யுவைக் காக்க பாண்டவத் தரப்பில் இருந்து எட்டு பேர் விரைவது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அச்சம்நிறைந்த அந்த நாளின் முற்பகலில் பெரும்பகுதி கழிந்ததும், மனிதர்களில் முதன்மையானோரின் அழிவுக்கான அந்தப் பயங்கர மோதலில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்ட துர்முகன், கிருதவர்மன், கிருபர், சல்லியன், விவிம்சதி ஆகியோர் பீஷ்மரை அணுகி அவரைப் பாதுகாக்கத் தொடங்கினர். வலிமைமிக்க அந்த ஐந்து {5} தேர்வீரர்களால் {அதிரதர்களால்} பாதுகாக்கப்பட்ட அந்தப் பெரும் தேர்வீரர் {மகாரதர் பீஷ்மர்} பாண்டவப் படைக்குள் ஊடுருவினார்.


சேதிகள் {சேதி நாட்டவர்}, காசிகள் {காசி நாட்டவர்}, கரூசர்கள், பாஞ்சாலர்கள் ஆகியோருக்கு மத்தியில் தொடர்ச்சியாகப் பீஷ்மரின் பனைமரக்கொடி இழைந்து செல்வதாகக் காணப்பட்டது. பெரும் வேகம் கொண்டவையும், நேரானவையுமான பல்லங்களால் {அகன்ற தலை கொண்ட அம்புகளால்}, (எதிரிகளின்) தலைகளையும், நுகத்தடிகள் மற்றும் கொடிகளுடன் கூடிய தேர்களையும் அந்த வீரர் {பீஷ்மர்} துண்டாடினார். மேலும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அதன் பாதையில் ஓடிக்கொண்டிருந்த தனது தேரில், பீஷ்மர் ஆடிக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது. (அவரால்) உயிர் நிலைகளில் {மர்மஸ்தானத்தில்} அடிக்கப்பட்ட சில யானைகள் வேதனையில் அலறின.

அப்போது, மஞ்சட்பழுப்பு நிறக் {பொன்னிறக்} குதிரைகள் பூட்டப்பட்ட தனது தேரில் இருந்த அபிமன்யு, பெரும் கோபத்துடன் பீஷ்மரின் தேரை நோக்கி விரைந்தான். கோங்கு மரத்தைப் போன்றதும், பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்டதுமான தனது கொடியுடன் அவன் {அபிமன்யு}, பீஷ்மரையும், அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானோரையும் (ஐந்து பேரையும்) அணுகினான். பனைமரக்கொடி கொண்ட வீரரின் {பீஷ்மரின்} கொடிக்கம்பத்தைக் கூரிய கணைகளால் அடித்தவண்ணம், அந்த வீரன் {அபிமன்யு}, பீஷ்மருடனும், அவரைப் பாதுகாத்து நின்ற தேர்வீரர்களுடனும் போரில் ஈடுபட்டான்.

கிருதவர்மனை ஒரு கணையாலும், சல்லியனை ஐந்தாலும் {5 கணைகளாலும்} துளைத்த அவன் {அபிமன்யு}, தனது பூட்டனை {தனது பாட்டனின் தந்தையான பீஷ்மரை} ஒன்பது கணைகளால் அடித்துப் பலவீனப்படுத்தினான். முழுமையாக நீட்டி இழுக்கப்பட்ட தனது வில்லில் இருந்து நன்றாக அடிக்கப்பட்ட கணையால், பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்டிருந்த (தனது எதிரியின்) {துர்முகனாக இருக்க வேண்டும்} கொடிக்கம்பத்தை வெட்டி வீழ்த்தினான். அனைத்து தடுப்புகளையும் {கவசங்களையும்} துளைக்கவல்லதும், நேரானதுமான ஓர் அகன்ற தலை கொண்ட கணையால், துர்முகனுடைய தேரோட்டியின் தலையை அவனது உடலில் இருந்து துண்டித்தான். மற்றுமொரு கூர்முனை கணை கொண்டு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கிருபருடைய வில்லை இரண்டாகப் பிளந்தான்.

அவர்களும் {அந்த அறுவரும்} பல கூர்முனை கணைகளால், எப்போதும் ஆடிக்கொண்டிருப்பவனாகத் தெரிந்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {அபிமன்யுவை} தாக்கினர். அவனது {அபிமன்யுவின்} கரங்களின் வேகத்தைக் கண்டு தேவர்களும் கூட மனம் நிறைந்தனர். இலக்கை அடிப்பதில் அவனுக்கு {அபிமன்யுவுக்கு} இருந்த நிச்சயத்தன்மையின் விளைவால், பீஷ்மரின் தலைமையில் இருந்த தேர்வீரர்கள் அனைவரும், அவன் {அபிமன்யு}, தனஞ்சயனின் {அர்ஜுனனின்} திறமையைக் கொண்டிருப்பதாகவே கருதினர். காண்டீவத்தைப் போன்றே நாணொலியை எழுப்பிய அவனது வில் நீட்டி வளைக்கப்பட்ட போது, அது நெருப்பு வளையமாகச் சுழல்வதைப் போலத் தெரிந்தது.

பிறகு, எதிரிவீரர்களைக் கொல்பவரான பீஷ்மர், அவனிடம் {அபிமன்யுவிடம்} மூர்க்கமாக விரைந்து, அந்த மோதலில் ஒன்பது {9} கணைகளால் அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} துளைத்தார். மேலும் அவர் {பீஷ்மர்}, அகன்ற தலை கொண்ட மூன்று {3} கணைகளால், பெரும் சக்தி கொண்ட அந்த வீரனின் {அபிமன்யுவின்} கொடிக்கம்பத்தை அறுத்தார். கடும் நோன்புகளைக் கொண்ட பீஷ்மர், அவனது (எதிரியான அபிமன்யுவின்) தேரோட்டியையும் தாக்கினார். கிருதவர்மன், கிருபர், சல்லியன் ஆகியோரும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன் மகனை {அபிமன்யுவைத்} துளைத்தாலும், மைநாக மலை போல உறுதியாக நின்ற அவனை {அபிமன்யுவை} அவர்களால் நடுங்கச் செய்ய முடியவில்லை.

தார்தராஷ்டிரப்படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களால் சூழப்பட்டாலும், அர்ஜுனனின் அந்த வீர மகன் {அபிமன்யு}, அந்த ஐந்து தேர்வீரர்கள் மேலும் இன்னும் கணைமாரியைப் பொழிந்து கொண்டே இருந்தான். தனது கணைகளின் மழையால், அவர்களது வலிமைமிக்க ஆயுதங்களைக் கலங்கடித்தும், பீஷ்மர் மீது தனது கணைகளைக் கொட்டிய வண்ணமும், அந்தப் பலம்நிறைந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு} உரத்த முழக்கத்தைச் செய்தான். போரில் இப்படிப் போராடி, (தனது) கணைகளால் பீஷ்மரைப் பீடித்த அவனது கரங்களில் நாம் கண்ட பலம் பெரிதாக இருந்தது. அவன் இத்தகு ஆற்றலைக் கொண்டிருந்தாலும், பீஷ்மரும் அவன் மீது கணைகளை அடிக்கவே செய்தார். ஆனால் பீஷ்மரின் வில்லில் இருந்து அடிக்கப்பட்ட கணைகளை அந்த மோதலில் அவன் வெட்டி வீழ்த்தினான்.

பிறகு, தோற்காத கணைகளைக் கொண்ட அந்தப் போர்வீரன் {அபிமன்யு}, அந்த மோதலில், ஒன்பது {9} கணைகளைக் கொண்டு, பீஷ்மரின் கொடிக்கம்பத்தை அறுத்தான். அச்சாதனையைக் கண்ட மக்கள் பெரும் கூச்சலிட்டார்கள். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், வெள்ளியால் செய்யப்பட்டதும் பனைமரம் பொறிக்கப்பட்ட கொடியைக் கொண்டதுமான அந்த நெடிய கொடிக்கம்பம், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்} வெட்டப்பட்டுப் பூமியில் வீழ்த்தப்பட்டது. ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} கணைகளால் சாய்க்கப்பட்ட கொடிக்கம்பத்தைக் கண்டு பெருமையடைந்த பீமன், சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} உற்சாகமூட்டும் பொருட்டு உரத்த முழக்கமிட்டான்.

பிறகு, வலிமைமிக்கப் பீஷ்மர், பெரும் திறம் கொண்ட தெய்வீகக் கணைகளை, அந்தக் கடும் மோதலில் தோன்றச் செய்தார். அளவிடமுடியாத ஆன்மா கொண்ட அந்தப் பூட்டன் {பீஷ்மர்}, சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} ஆயிரக்கணக்கான கணைகளால் மூழ்கடித்தார். இதன்பேரில், பாண்டவத் தரப்பில் வலிமைமிக்கத் தேர்வீரர்களான பத்து {10} பெரும் வில்லாளிகள், சுபத்திரையின் மகனைப் {அபிமன்யுவைப்} பாதுகாக்க தங்கள் தேர்களில் விரைந்து சென்றனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனது மகனுடன் {உத்தரனுடன்} கூடிய விராடன், பிரிஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், பீமன், கேகயச் சகோதரர்கள் ஐவர், சாத்யகி ஆகியோரே அவர்கள் {அந்த பத்து (10)பெரும் வில்லாளிகள்}.

அந்த மோதலில், சந்தனுவின் மகனான பீஷ்மரை நோக்கி கடும் வேகத்துடன் பாய்ந்து சென்றவர்களில், பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னன்} மூன்று {3} கணைகளாலும், சாத்யகியை பத்து {10} கணைகளாலும் அவர் {பீஷ்மர்} துளைத்தார். இறகு படைத்ததும், சாணைக்கல்லில் கூர் தீட்டப்பட்டுக் கூர்மையாக இருந்ததுமான ஒரு கணையைக் கொண்டு, வில்லை முழுமையாக இழுத்து, பீமசேனனின் கொடிக்கம்பத்தை அவர் {பீஷ்மர்} அறுத்தார். ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, தங்கத்தாலானதும், சிங்கம் பொறிக்கப்பட்ட கொடி கொண்டதுமான பீமசேனனின் கொடிக்கம்பம், பீஷ்மரால் வெட்டப்பட்டு, தேரில் இருந்து விழுந்தது. பிறகு பீமன், அந்த மோதலில், சந்தனுவின் மகனான பீஷ்மரை மூன்று{3} கணைகளாலும், கிருபரை ஒரு கணையாலும், கிருதவர்மனை எட்டு{8} கணைகளாலும் துளைத்தான்.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்