Thursday, February 04, 2016

துரியோதனனை நிந்தித்த கடோத்கசன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 092

Ghatotkacha reproached Duryodhana!! | Bhishma-Parva-Section-092 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 50)

பதிவின் சுருக்கம் : அரவான் கொல்லப்பட்டதைக் கண்டு கோபத்துடன் கர்ஜித்த கடோத்கசன்; கடோத்கசனைக் கண்டு அஞ்சி நடுங்கிய கௌரவத் துருப்புகள்; கடோத்கசனை எதிர்த்த துரியோதனன்; துரியோதனனை நிந்தித்த கடோத்கசன்...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, இராவத் {அரவான்} கொல்லப்பட்டதை அவர்கள் {பாண்டவர்கள்} கேட்டபோது, போரில் வலிமைமிக்கப் பார்த்தன் {அர்ஜுனன்} [1] செய்தவை அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.

[1] இங்கே பார்த்தர்கள் {பாண்டவர்கள்} என்றும் கொள்ளலாம். ஏனெனில் வேறு பதிப்பு ஒன்றில் இந்த இடத்தில் பாண்டவர்கள் என்றே இருக்கிறது.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரில் இராவத் {அரவான்} கொல்லப்பட்டதைக் கண்டவனும், பீமசேனனின் மகனுமான ராட்சசன் கடோத்கசன் பேரொலியுடன் முழக்கங்களிட்டான். அம்முழக்கங்களின் ஒலிவன்மையின் விளைவால் கடலைத் தன் ஆடைகளாகக் கொண்ட பூமியானவள், தன் மலைகள் மற்றும் காடுகளுடன் வன்மையாக நடுங்கத் தொடங்கினாள். ஆகாயமும், திக்குகள் மற்றும் துணை திக்குகளைக் கொண்ட கோணங்கள் இரண்டும் என அனைத்தும் நடுங்கத் தொடங்கின. பேரொலிமிக்க அவனது முழக்கங்களைக் கேட்டு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது துருப்பினரின் [2] தொடைகளும், பிற அங்கங்களும் நடுங்கத் தொடங்கின, மேலும், அவர்களது மேனியில் வியர்வையும் தோன்றியது.


[2] இங்கே the troops என்று இருக்கிறது. அது thy troops என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன். வேறு பதிப்புகளில் உமது துருப்புகள் என்றே இருக்கிறது.

மேலும், உமது போராளிகள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இதயத்தில் மகிழ்ச்சியற்றவர்களாக ஆனார்கள். சிங்கத்தைக் கண்டு அஞ்சிய யானை ஒன்றைப் போல, களமெங்கிலும் இருந்த வீரர்கள் அசையாமல் நின்றனர். இடியின் இரைச்சலை ஒத்த பேரொலிமிக்க முழக்கங்களையிட்ட அந்த ராட்சசன் {கடோத்கசன்}, பயங்கர வடிவொன்றை ஏற்று, சுடர்மிகும் சூலமொன்றைத் தன் கையில் ஏந்திக் கொண்டு, பல்வேறு வகையான ஆயுதங்கள் தரித்தவர்களும், கடும் வடிவங்களைக் கொண்டவர்களுமான ராட்சசக் காளைகள் பலரால் சூழப்பட்டபடி, யுக முடிவின் போதான அந்தகனைப் போலச் சினம் தூண்டப்பட்ட நிலையில் முன்னேறினான்.

பயங்கர முகத் தோற்றம் கொண்டவனும், கோபத்தில் முன்னேறுபவனுமான அவனையும் {கடோத்கசனையும்}, கிட்டத்தட்ட தன் துருப்புகள் அனைத்தும் அந்த ராட்சன் மீது கொண்ட அச்சத்தால் ஓடுவதையும் கண்ட மன்னன் துரியோதனன், தனது வில்லை எடுத்துக் கொண்டு, நாணில் கணையைப் பொருத்தி, சிங்கத்தைப் போல மீண்டும் மீண்டும் முழங்கியபடி, அந்தக் கடோத்கசனை எதிர்த்து விரைந்தான். அவனுக்கு {துரியோதனனுக்குப்} பின்னால், மலைகளைப் போன்று பெரியவையும், மதநீர் ஒழுகிக் கொண்டிருந்தவையுமான பத்தாயிரம் யானைகளுடன் வங்கர்களின் ஆட்சியாளனும் {பகதத்தனும்} [3] சென்றான்.

[3] சபாபர்வம் பகுதி 14ல்  ஜராசந்தனின் கூட்டாளியும், வாசுதேவக் கிருஷ்ணனின் எதிரியுமான பௌந்தரக வாசுதேவன் வங்கம், புண்டரம், கிராதம் ஆகிய நாடுகளின் மன்னானக குறிப்பிடப்படுகிறான். சபாபர்வம் பகுதி 29ல் பீமசேனன் படையெடுப்பின் போது  சமுத்திரசேனன் மற்றும் சந்திரசேனன் ஆகிய இரு மன்னர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் வங்கத்தின் ஆட்சியாளர்களா என்பது தெளிவாக அதில் இல்லை. சபா பர்வம் பகுதி 43ல் யுதிஷ்டிரனின் ராஜசூய வேள்வியின் போது அங்கம் மற்றும் வங்கத்தின் ஆட்சியாளனாகக் கர்ணன் குறிப்பிடப்படுகிறான். கர்ண பர்வம் பகுதி 22ல் பகதத்தன் வங்கத்தின் ஆட்சியாளனாகக் குறிப்பிடப்படுகிறான். வங்கத்தின் வடக்கில் உள்ள பிராக்ஜோதிஷ நாட்டின் மன்னன் பகதத்தன் என்பதும், வங்கத்தின் கிழக்கில் உள்ள புண்டர நாட்டின் ஆட்சியாளன் பௌந்தரக வாசுதேவன் என்பதும், வங்கத்தின் மேற்கில் உள்ள அங்க நாட்டின் ஆட்சியாளன் கர்ணன் என்பதும் இங்கே நினைவுகூரத்தக்கது. இதில் பௌந்தரக வாசுதேவன் குருக்ஷேத்திரப் போர் நடக்கும் காலத்தில் உயிருடன் இருந்திருக்க வாய்ப்பில்லை. கர்ணனும் பீஷ்மர் வீழும் வரை போரிடவில்லை எனும் போது, இங்கே குறிப்பிடப்படுவது பகதத்தனாகவே இருக்க வேண்டும். இதற்கான சான்று இதற்கடுத்த பகுதியில் இருக்கிறது.

அந்த யானைப் படையால் சூழப்பட்டு (இப்படி) முன்னேறும் உமது மகனை {துரியோதனனைக்} கண்ட அந்த இரவு உலாவி {கடோத்கசன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் பெரிதாகக் கொழுந்துவிட்டெரிந்தான். பிறகு, வல்லமைமிக்க அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்}, துரியோதனனின் துருப்புகளுக்கும் இடையில், உச்சபட்சத் தீவிரத்துடன் கூடியதும், மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதுமான ஒரு போர் தொடங்கியது. (அடிவானில்) எழுந்த மேகத்தைப் போல இருந்த அந்த யானைப் படையைக் கண்டு சினத்தால் எரிந்த அந்த ராட்சசர்கள், மின்னலுடன் கூடிய மேகங்களைப் போலக் கையில் ஆயுதங்களுடன், பல்வேறு விதங்களிலான முழக்கங்களிட்டபடி, அதை {அந்த யானைப்படையை} நோக்கி விரைந்தனர். கணைகள், ஈட்டிகள், வாள்கள் {ரிஷ்டிகள்}, நாராசங்கள் {நீண்ட கணைகள்} ஆகியவற்றாலும், மேலும், சூலங்கள், உலக்கைகள், போர்க்கோடரிகள், பிண்டிபாலங்கள் {குறுங்கணைகள்} ஆகியவற்றாலும் அவர்கள் {ராட்சசர்கள்}, அந்த யானைப் படையைத் தாக்கத் தொடங்கினர். கொடுமுடிகளாலும் {மலை முகடுகளாலும்}, பெரும் மரங்களாலும் அவர்கள் {அந்த ராட்சசர்கள்} பெரும் யானைகளைக் கொன்றார்கள்.

ராட்சசர்கள் அந்த யானைகளைக் கொன்ற போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவற்றில் சில மத்தகம் நொறுங்கியும், சில குருதியில் குளித்தும், சில தங்கள் அங்கங்கள் உடைக்கப்பட்டும், வெட்டப்பட்டும் கிடப்பதை நாங்கள் கண்டோம். இறுதியாக அந்த யானைப்படை உடைக்கப்பட்டு, குறைக்கப்பட்ட போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தின் வசப்பட்ட துரியோதனன், தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாது, அந்த ராட்சசர்களை எதிர்த்து விரைந்தான். பிறகு அந்த வலிமைமிக்க வீரன் {துரியோதனன்}, அந்த ராட்சசர்கள் மீது கூரிய கணைகளின் மேகங்களை {கணைக்களின் கூட்டத்தை} ஏவினான். மேலும் அந்தப் பெரும் வில்லாளி {துரியோதனன்} அவர்களின் {ராட்சச} வீரர்களில் முதன்மையானோர் பலரையும் கொன்றான்.

சினத்தால் கொழுந்துவிட்டெரிந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான உமது மகன் துரியோதனன், ஓ! பாரதர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, நான்கு கணைகளைக் கொண்டு ராட்சசர்களில் முக்கியமானவர்களான வேகவான், மஹாருத்ரன் {மகாரௌத்ரன்}, வித்யுஜ்ஜிஹ்வன், பிரமாதி ஆகிய நால்வரைக் கொன்றான். பிறகு, அந்த அளவிடமுடியாத ஆன்மா {மனத்துணிவு} கொண்டன் {துரியோதனன்}, ஓ! பாரதர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, அந்த ராட்சசன் {கடோத்கசன்} மீது, தடுப்பதற்குக் கடினமான கணைமாரியைப் பொழிந்தான்.

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது மகனின் {துரியோதனனின்} அந்த அருஞ்செயலைக் கண்டவனும், பீமசேனனின் வலிமைமிக்க மகனுமான அவன் {கடோத்கசன்} கோபத்தால் சுடர்விட்டெரிந்தான். மின்னலைப் போன்ற பிரகாசத்துடன் கூடிய தனது பெரிய வில்லை வளைத்த அவன் {கடோத்கசன்}, கோபம்நிறைந்த துரியோதனனிடம் மூர்க்கமாக விரைந்தான். காலத்தினால் ஏவப்பட்ட அந்தகனைப் போல (இப்படித்) தன்னிடம் விரையும் அவனைக் {கடோத்கசனைக்} கண்ட உமது மகன் துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிஞ்சிற்றும் நடுங்கவில்லை.

பிறகு, கோபத்தால் சிவந்த கண்களுடன், ஆத்திரத்தால் தூண்டப்பட்ட கடோத்கசன், உமது மகனிடம் {துரியோதனனிடம்}, “கொடியவனான உன்னால் நெடுநாளைக்கு நாட்டை விட்டுத் துரத்தப்பட்டவர்களான எனது தந்தைமாரிடமும், தாயிடமும் பட்டக் கடனிலிருந்து நான் இன்று விடுபடப் போகிறேன். ஓ! மன்னா {துரியோதனா}, பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, உன்னால் பகடையாட்டத்தில் வீழ்த்தப்பட்டனர். நோயுற்றிருந்ததால் ஒரே ஆடை உடுத்தியிருந்த துருபதன் மகளான கிருஷ்ணையும் {திரௌபதியும்} சபைக்குக் கொண்டு வரப்பட்டாள். ஓ! மிகப் பொல்லாதவனே {துரியோதனா}, அவளுக்கு உன்னால் பல்வேறு வழிகளிலும் பெரும் தொல்லைகள் கொடுக்கப்பட்டன.

மரங்களடர்ந்த தனது ஓய்வில்லத்தில் {ஆசிரமத்தில்} அவள் {திரௌபதி} வசித்து வந்த போது, உன் நலன் விரும்பியும், சிந்துக்களின் ஆட்சியாளனுமான அந்தத் தீயவன் {ஜெயத்ரதன்}, என் தந்தைமாரை பொருட்படுத்தாது, மேலும் அவளைத் துன்புறுத்தினான். நீ களத்தைவிட்டு வெளியேறாமல் இருந்தாயானால், ஓ! உன் குலத்தில் இழிந்தவனே {துரியோதனா}, இவற்றிற்காகவும், இன்னும் பிற தவறுகளுக்காகவும் நான் இன்று {உன்னைப்} பழி தீர்ப்பேன்” என்றான் {கடோத்கசன்}.

இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த ஹிடிம்பை மகன் {கடோத்கசன்}, தன் பெரிய வில்லை வளைத்து, தன் (அடி) உதட்டைத் தனது பற்களால் கடித்து, கடைவாயை நாவால் நனைத்து {நக்கி}, மழைக்காலத்தில், மழையின் நீர்த்தாரைகளை மலைச்சாரலில் பொழியும் மேகங்களின் திரளைப் போல, அதிகளவிலான {கணை} மழையால் துரியோதனனை மறைத்தான்” {என்றான் சஞ்சயன்}.

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்