Sunday, February 21, 2016

ருத்திரனாகத் தெரிந்த பீமசேனன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 103

Bhimasena looked like Rudra! | Bhishma-Parva-Section-103 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 61)

பதிவின் சுருக்கம் : துரோணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த போர்; துரோணரின் பாதுகாப்புக்காகச் சுசர்மனை ஏவிய துரியோதனன்; அர்ஜுனனுக்கும் திரிகர்த்த மன்னன் சுசர்மனுக்கு இடையில் நடந்த போர்; வாயவ்ய ஆயுதமும், சைல ஆயுதமும்; சுசர்மனைப் புறமுதுகிடச் செய்த அர்ஜுனன்; பீமனை நோக்கி யானைப் படையுடன் சென்ற பகதத்தன்; யானைகளின் தந்தங்களை உடைத்து அந்தத் தந்தங்களாலேயே அவற்றின் மத்தகங்களைப் பிளந்த பீமன்; தங்கள் படையையே நசுக்கிச் சென்ற கௌரவப் படையின் யானைகள்; கௌரவப் படை புறமுதுகிட்டோடியது...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “மனிதர்களில் காளையரான, பெரும் வில்லாளி துரோணரும், பாண்டுவின் மகன் தனஞ்சயனும் {அர்ஜுனனும்} போரில் தங்களுக்குள் எவ்வாறு மோதிக்கொண்டனர்? அறிவாளியான பரத்வாஜரின் மகனுக்கு {துரோணருக்கு}, அந்தப் பாண்டுவின் மகன் எப்போதும் அன்புக்குரியவனாவான். அதே போலப் பிருதையின் {குந்தியின்} மகனுக்கு {அர்ஜுனனுக்கு} ஆசானும் {துரோணரும்} எப்போதும் அன்புக்குரியவராவார். அந்தப் போர் வீரர்கள் இருவரும் போரில் மகிழ்ச்சியடைபவர்கள் ஆவர். மேலும் அவர்கள் இருவருமே சிங்கங்களைப் போலக் கடுமையானவர்களுமாவர். எனவே, கவனமாகப் போரிடுபவர்களான பரத்வாஜர் மகன் {துரோணர்}, தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் தங்களுக்குள் எவ்வாறு போரிட்டனர்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துரோணர் பார்த்தனை {அர்ஜுனனைத்} தன் அன்புக்குரியவனாகப் போரில் ஒருபோதும் உணரவில்லை. க்ஷத்திரியக் கடமைகளை நோக்கில் கொண்ட பார்த்தனும் {அர்ஜுனனும்}, தன் ஆசானை {துரோணரை} அப்படி {அன்புக்குரியவராக} உணரவில்லை.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, க்ஷத்திரியர்கள் போரில் ஒருவரையொருவர் ஒருபோதும் தவிர்ப்பதில்லை. ஒருவரையொருவர் பொருட்படுத்தாத அவர்கள் {க்ஷத்திரியர்கள்}, தந்தைமாருடனும், சகோதரர்களுடனும் போரிட்டனர்.

அந்தப் போரில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பார்த்தன் {அர்ஜுனன்} மூன்று {3} கணைகளால் துரோணரைத் துளைத்தான். எனினும், துரோணர், போரில் பார்த்தனின் {அர்ஜுனனின்} வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளை மதிக்கவில்லை. உண்மையில் அந்தப் போரில் பார்த்தன் {அர்ஜுனன்} மீண்டும் ஆசானை {துரோணரைக்} கணை மழையால் மறைத்தான். அதன் பேரில் பின்னவர் {துரோணர்} ஆழ்ந்த கானகத்தின் நெருப்பைப் போலக் கோபத்தால் சுடர்விட்டெரிந்தார். பிறகு, ஓ! மன்னா, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணர், நேரான கணைகள் பலவற்றால் அந்த மோதலில் அர்ஜுனனை விரைவாக மறைத்தார்.

அப்போது மன்னன் துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போரில் துரோணரின் வலப்பக்கத்தை ஏற்கும்படி {பாதுகாக்கும்படி} சுசர்மனை அனுப்பினான். பிறகு அந்தத் திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, சினத்தால் தூண்டப்பட்டு, தன் வில்லைப் பலமாக வளைத்து, இரும்புத் தலைகள் கொண்ட ஏராளமான கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைப்} போரில் மறைத்தான். அவ்விருவீரர்களாலும் ஏவப்பட்ட அந்தக் கணைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூதிர் காலத்தின் நாரைகளைப் [1] போல ஆகாயத்தில் அழகாகத் தெரிந்தன. குந்தியின் மகனை {அர்ஜுனனை} அடைந்த அந்த அம்புகள், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, சுவைநிறைந்த கனிகளால் கனத்து வளைந்திருந்த ஒரு மரத்திற்குள் பறவைகள் மறைவதைப் போல அவனது உடலில் நுழைந்தன.

[1] வேறு ஒரு பதிப்பில் அன்னப்பறவைகள் என்று இந்த இடத்தில் குறிக்கப்படுகிறது

அப்போது, தேர்வீரர்களில் முதன்மையான அர்ஜுனன், அந்தப் போரில் உரத்த முழக்கமிட்டபடி, திரிகர்த்தர்களின் ஆட்சியாளனையும் {சுசர்மனையும்}, அவனது மகனையும் தன் கணைகளால் துளைத்தான். யுக முடிவின் காலனைப் போன்ற பார்த்தனால் {அர்ஜுனனால்} துளைக்கப்பட்ட அவர்கள் {சுசர்மனும் அவனது மகனும்}, தங்கள் உயிரை விடத் தீர்மானித்துக் கொண்டு, பார்த்தனை {அர்ஜுனனைத்} தவிர்க்க விரும்பாதிருந்தார்கள். பிறகு அவர்கள் அர்ஜுனனுடைய தேரின் மீது {கணை} மழையைப் பொழிந்தனர். எனினும், அர்ஜுனன், மேகங்களின் மழைத்தாரையை ஏற்கும் மலையொன்றைப் போல அந்தக் கணைமாரியைத் தன் கணைமாரியால் ஏற்றான்.

நாங்கள் அப்போது கண்ட பீபத்சுவின் {அர்ஜுனனின்} கர லாகவம் மிக அற்புதமானதாக இருந்தது. போர்வீரர்கள் பலரால் ஏவப்பட்டுத் தாங்க முடியாததாக இருந்த அந்தக் கணைகளின் மழையை, மேகங்களை நோக்கி விரைந்து, அந்த மேகக்கூட்டங்களைச் சிதறடிக்கும் காற்றைப் போலத் தனி ஒருவனாகவே அவன் {அர்ஜுனன்} கலங்கடித்தான். பார்த்தனின் {அர்ஜுனனின்} அந்தச் சாதனையினால் (அந்தப் போரைக் காண அங்கே கூடியிருந்த) தேவர்களும், தானவர்களும் பெரிதும் நிறைந்தனர் {திருப்தியடைந்தனர்}.

பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் திரிகர்த்தர்களுடன் ஈடுபட்டு {போரிட்டுக்} கொண்டிருந்த அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களின் படைப்பிரிவை எதிர்த்து வாயவ்ய ஆயுதத்தை {வாயவ்யாஸ்திரத்தை} ஏவினான். அப்போது, ஆகாயத்தைக் கலங்கச் செய்த காற்றானது, மரங்கள் பலவற்றை வீழ்த்தியும், (பகை) துருப்புகளை அடித்துக் கீழே வீழ்த்தவும் செய்தது. அப்போது, கடுமையான அந்த வாயவ்ய ஆயுதத்தைக் கண்ட துரோணர், சைலம் {சைலாஸ்திரம்} என்று அழைக்கப்பட்ட ஒரு பயங்கர ஆயுதத்தை ஏவினார். போரில் துரோணரால் அந்தக் கணை ஏவப்பட்டதும், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, காற்று தணிந்து, பத்துத் திக்குகளும் அமைதியடைந்தன.

எனினும், வீரனான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, திரிகர்த்தப் படைப்பிரிவைச் சேர்ந்த அந்தத் தேர்வீரர்களின் ஆற்றலையும், நம்பிக்கையையும் இழக்கச் செய்து, போர்க்களத்தில் அவர்களை {சுசர்மனையும் அவனது மகனையும்} புறமுதுக்கிடச் செய்தான். பிறகு, துரியோதனன், தேர்வீரர்களில் முதன்மையான கிருபர், அஸ்வத்தாமன், சல்லியன், காம்போஜர்களின் ஆட்சியாளனான சுதக்ஷிணன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், பாஹ்லீகர்களின் துணையோடு கூடிய பாஹ்லீகன் ஆகியோர், பெரும் எண்ணிக்கையிலான தேர்களுடன் அனைத்துப் பக்கங்களிலும் பார்த்தனைச் {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர்.

அதே போல, பகதத்தனும், வலிமைமிக்கச் சுருதாயுஷும் யானைப்படைப் பிரிவு ஒன்றோடு அனைத்துப் பக்கங்களிலும் பீமனைச் சூழ்ந்து கொண்டனர்.

பூரிஸ்ரவஸ், சலன், சுபலனின் மகன் சகுனி ஆகியோர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பளபளக்கும் கூர்மையான கணைகளால் மாத்ரியின் இரட்டைமகன்களைத் {நகுலன் மற்றும் சகாதேவனைத்} தடுக்கத் தொடங்கினர்.

எனினும், பீஷ்மர், அந்தப் போரில் திருதராஷ்டிரர் மகனுடைய {துரியோதனனுடைய} துருப்புகளின் துணையைக் கொண்டு, யுதிஷ்டிரனை அணுகி, அனைத்துப் பக்கங்களிலும் அவனை {யுதிஷ்டிரனைச்} சூழ்ந்து கொண்டார்.

பெரும் துணிச்சலைக் கொண்டவனும், பிருதையின் {குந்தியின்} மகனுமான அந்த விருகோதரன் {பீமன்}, தன்னை நோக்கி வரும் அந்த யானைப்படைப் பிரிவைக் கண்டு, காட்டுச் சிங்கம் ஒன்றைப் போலத் தன் கடைவாயை நனைக்க {நக்கத்} தொடங்கினான். பிறகு, தேர்வீரர்களில் முதன்மையான அந்தப் பீமன், அந்தப் பெரும்போரில், தன் கையில் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தன் தேரில் இருந்து விரைவாகக் குதித்து உமது வீரர்களின் இதயங்களை அச்சத்தால் பீடிக்கச் செய்தான். அந்த யானை வீரர்கள், கையில் கதாயுதத்துடன் வரும் பீமசேனனைக் கண்டு, அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களிலும் அவனைக் கவனமாகச் சூழ்ந்து கொண்டனர். அந்த யானைகளின் மத்தியில் இருந்த பாண்டுவின் மகன் {பீமன்}, வலிமைமிக்க மேகத்திரள்களுக்கு மத்தியில் உள்ள சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.

அப்போது, பாண்டு மகன்களில் காளையான அவன் {பீமன்}, ஆகாயத்தை மறைத்திருக்கும் மேகங்களின் பெரும் திரளை விலகச் செய்யும் காற்றைப் போல அந்த யானைப் படைப் பிரிவை தன் கதாயுதத்தால் எரிக்கத் தொடங்கினான். வலிமைமிக்கவனான அந்தப் பீமசேனனால் கொல்லப்பட்ட அந்த யானைகள், மேகத்திரள்களின் முழக்கங்களைப் போலத் துன்ப ஒலியால் உரக்க அலறின. அந்தப் பெரும் விலங்குகளின் {யானைகளின்} தந்தங்களால் (தன் மேனியில்} பல்வேறு கீறல்களைக் கொண்ட அந்தப் பிருதையின் மகன் {பீமன்}, மலர்ந்திருக்கும் கின்சுகத்தை {அசோக மரத்தைப்} போல, அந்தப் போர்க்களத்தில் அழகாகத் தெரிந்தான்.

சில யானைகளின் தந்தங்களைப் பிடித்த அவன் {பீமன்}, அவற்றை அந்த ஆயுதங்களை {தந்தங்களை} இழக்கச் செய்தான். பிறவற்றின் {பிற யானைகளின்} தந்தங்களை முறுக்கி வெளியே எடுத்த அவன் {பீமன்}, தண்டத்தைக் கையில் கொண்ட காலனைப் போல, அந்தத் தந்தத்தைக் கொண்டே அந்தப் போரில் அவற்றின் மத்தகங்களில் தாக்கினான். அப்படிச் சிந்திய குருதியில் குளித்த தன் கதாயுதத்தை ஏந்திக் கொண்டு, கொழுப்பும் ஊனீரும் தன் மேல் சிதறிக் கிடக்க, இரத்தத்தால் பூசப்பட்டிருந்த அவன் {பீமன்}, ருத்திரனைப் போலவே தெரிந்தான். இப்படி அவனால் கொல்லப்பட்டவை போக எஞ்சி இருந்த சில பெரிய யானைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நட்புப் படைப்பிரிவுகளையே {தங்கள் துருப்புகளையே} கூட நசுக்கிக் கொண்டே திசைகள் அனைத்திலும் தப்பி ஓடின. அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடும் அந்தப் பெரிய யானைகளின் விளைவால், ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் துருப்புகள் போர்க்களத்திலிருந்து மீண்டும் புறமுதுகிட்டோடின” {என்றான் சஞ்சயன்}. 


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்