Thursday, April 21, 2016

சம்சப்தகர்களுடன் போரிட்ட அர்ஜுனன்! - துரோண பர்வம் பகுதி – 018

The war between Samsaptakas and Arjuna! | Drona-Parva-Section-018 | Mahabharata In Tamil

(சம்சப்தகவத பர்வம் – 02)

பதிவின் சுருக்கம் : சம்சப்தகர்களை அணுகிய அர்ஜுனன்; அர்ஜுனனின் சங்கு முழக்கத்தைக் கேட்டு அஞ்சிய திரிகர்த்தர்கள்; சுதன்வானைக் கொன்ற அர்ஜுனன்; பீதியடைந்த திரிகர்த்தர்கள் துரியோதனின் படையை நோக்கி ஓடியது; ஓடியவர்களைத் தடுத்து அவர்களைப் போருக்குத் திருப்பிய சுசர்மன்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, மகிழ்ச்சியால் நிறைந்த சம்சப்தகர்கள் [1], அர்த்தச்சந்திர வடிவத்தில் தங்கள் வியூகத்தை அமைத்து, சமமான நிலத்தில் தங்கள் தேர்களுடன் நின்றனர். அந்த மனிதர்களில் புலிகள் {சம்சப்தகர்கள்}, தங்களை நோக்கி கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்) வருவதைக் கண்டு, மகிழ்ச்சியால் நிறைந்து, உரக்கக் கூச்சலிட்டனர். அவ்வொலி வானத்தையும், முக்கியத் திசைகள் மற்றும் துணைத்திசைகள் அனைத்தையும் நிறைத்தது. மனிதர்களால் மட்டும் மறைக்கப்பட்ட களமாக இருந்ததால், அஃது எதிரொலிகள் எதையும் உண்டாக்கவில்லை.


[1] வெற்றி அல்லது மரணம் என்ற உறுதியை ஏற்ற படைவீரர்களே சம்சப்தகர்கள் என்று சொல்லப்படுவார்கள். இவர்களைக் குறிக்கும் சொல் வரும்போதெல்லாம் நீண்ட சொற்றொடர்களைச் {அதாவது, வெற்றி அல்லது மரணம் என்ற உறுதியை ஏற்ற படைவீரர்கள் என்று} சொல்வதைவிட இந்த வடிவில் {சம்சப்தகர்கள் என்று} சொல்வது சிறப்பானதாகும் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பதை உறுதிசெய்து கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, சிறு புன்னகையுடன், கிருஷ்ணனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! தேவகியைத் தாயாகக் கொண்டவனே {தேவகீநந்தனா, கிருஷ்ணா}, போரில் அழியப் போகும் அந்தத் திரிகர்த்தர்கள், தாங்கள் அழ வேண்டிய இந்த நேரத்தில் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதைப் பார். அல்லது, கோழைகளால் அடையவே முடியாத சிறந்த உலகங்களை இவர்கள் அடையப் போவதால் இஃது அவர்கள் மகிழ வேண்டிய காலமே என்பதிலும் ஐயமில்லைதான்” {என்றான் அர்ஜுனன்}.

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ரிஷிகேசனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன அர்ஜுனன், போரில் அணிவகுத்து நிற்கும் திரிகர்த்தர்களின் படையணிகளிடம் வந்து, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தேவதத்தம் என்று அழைக்கப்பட்டதுமான தன் சங்கை எடுத்து பெரும்பலத்துடன் ஊதி, அதன் ஒலியால் திசைப்புள்ளிகள் அனைத்தையும் நிறைத்தான். அவ்வொலியால் பீதியடைந்த அந்தச் சம்சப்தகர்களின் தேர்ப்படை செயலிழந்து போய், போரில் அசைவற்று நின்றது. அவர்களது விலங்குகள் {குதிரைகள்} அனைத்தும் கண்களை அகலவிரித்துக் கொண்டு, காதுகள், கழுத்துகள் மற்றும் உதடுகள் செயலற்று, கால்கள் அசைவற்று நின்றன. மேலும் அவை சிறுநீர் கழித்தன, குருதியையும் கக்கின.

பிறகு சுயநினைவு மீண்ட பிறகு, தங்கள் படையணிகளை முறையான வரிசையில் நிறுத்திய அவர்கள், ஒரே சமயத்தில் தங்கள் கணைகள் அனைத்தையும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது ஏவினர். பெரும் வேகத்துடன் தன் ஆற்றலை வெளிக்காட்டவல்ல அர்ஜுனன், அந்த ஆயிரக்கணக்கான கணைகளும் தன்னை வந்து அடையும் முன்பே பதினைந்து [2] கணைகளால் அவற்றை வெட்டினான். பிறகு அவர்கள் ஒவ்வொருவரும், அர்ஜுனனைப் பத்து {பத்து பத்து} கணைகளால் துளைத்தனர். பார்த்தன் {அர்ஜுனன்} அவர்களை மூன்று {மும்மூன்று} கணைகளால் துளைத்தான். பிறகு அவர்கள் ஒவ்வொருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனை {அர்ஜுனனை} ஐந்து {ஐந்தைந்து} கணைகளால் துளைத்தனர். பெரும் ஆற்றலைக் கொண்ட அவன் {அர்ஜுனன்}, அவர்கள் ஒவ்வொருவரையும் இரண்டு {இரண்டிரண்டு} கணைகளால் துளைத்தான்.

[2] கங்குலியில் Five and Ten arrows என்று இருக்கிறது. வேறு ஒரு பதிப்பில் இவை ஐம்பது கணைகள் என்று குறிப்பிடப்படுகின்றன.

மீண்டும் கோபத்தால் தூண்டப்பட்ட அவர்கள், தடாகத்தில் மேகங்கள் தடையில்லாமல் பொழிவதைப் போல அர்ஜுனன் மற்றும் கேசவன் {கிருஷ்ணன்} மீது எண்ணற்ற கணைகளை விரைவாகப் பொழிந்தனர். பிறகு அந்த ஆயிரக்கணக்கான கணைகளும், காட்டில் பூத்திருக்கும் மரங்களில் வண்டுக்கூட்டங்கள் விழுவதைப் போல அர்ஜுனன் மீது விழுந்தன. கடினமானதும், பலமானதுமான அர்ஜுனனின் கிரீடம் முப்பது கணைகளால் ஆழமாகத் துளைக்கப்பட்டது. தங்கச் சிறகுகளைக் கொண்ட அந்தக் கணைகள் அவனது கிரீடத்தில் இருந்ததால், அர்ஜுனன், ஏதோ தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனைப் போலவும், (புதிதாக) உதித்த சூரியனைப் போலவும் ஒளிர்ந்தான்.

பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பிறகு அந்தப் போரில், சுபாகுவின் கையுறையை ஒரு பல்லத்தால் அறுத்து, சுதர்மன் மற்றும் சுதன்வானையும் மறைத்தான். சுபாகுவோ பத்து கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான் [3]. தன் கொடியில் சிறந்த குரங்கு வடிவத்தைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, பதிலுக்குப் பல கணைகளால் அவர்கள் அனைவரையும் துளைத்து, மேலும் சில பல்லங்களால் தங்கத்தாலான அவர்களது கொடிமரங்களையும் வெட்டினான். சுதன்வானின் வில்லையும் அறுத்த அவன் {அர்ஜுனன்}, தன் கணைகளால் பின்னவனின் {சுதன்வானின்} குதிரைகளையும் கொன்றான். பிறகு, தலைப்பாகையால் அருளப்பட்ட பின்னவனின் {சுதன்வானின்} தலையையும் அவனது உடலில் இருந்து வெட்டி வீழ்த்தினான்.

[3] இந்த வரி வேறொரு பதிப்பில் வேறு மாதிரி இருக்கிறது. அது பின்வருமாறு, “பாண்டவன் யுத்தத்தில் அர்த்தசந்திரபாணத்தால் சுபாகுவின் கையுறையை அறுத்து, மீண்டும் அவன் மீது அம்பு மழைகளைப் பொழிந்தான். பிறகு, சுசர்மனும், சுரதனும், சுதர்மனும், சுதனுவும், சுபாகுவும் பத்துப் பத்துப் பாணங்களால் கிரீடியை அடித்தனர்” என்று இருக்கிறது.

அந்த வீரனின் {சுதன்வானின்} வீழ்ச்சியில், அவனது தொண்டர்கள் {அவனைப் பின்தொடர்ந்து வந்தவர்கள்} பீதியடைந்தனர். பீதியால் தாக்குண்ட அவர்கள் அனைவரும், துரியோதனனின் படைகள் இருந்த இடத்திற்குத் தப்பி ஓடினர். பிறகு வாசவனின் {இந்திரனின்} மகன் {அர்ஜுனன்}, கோபத்தால் நிறைந்து, சூரியன் தன் தடையற்ற கதிர்களால் இருளை அழிப்பதைப் போலத் தன் இடைவிடாத கணைகளின் மழையால் அந்த வலிமைமிக்கப்படையைத் தாக்கத் {அழிக்கத்} தொடங்கினான். பிறகு, அந்தப் படை உடைந்து அனைத்துப் பக்கங்களிலும் உருகி ஓட, அர்ஜுனன் கோபத்தால் நிறைந்தபோது, திரிகர்த்தர்கள் அச்சத்தால் தாக்குண்டனர். பார்த்தனின் {அர்ஜுனனின்} நேரான கணைகளால் கொல்லப்பட்ட போது, பீதியடைந்த மான்கூட்டத்தைப் போலத் தங்கள் உணர்வுகளை இழந்த அவர்கள், தாங்கள் நின்ற இடத்திலேயே நீடித்தனர்.

பிறகு சினத்தால் நிறைந்த திரிகர்த்தர்களின் மன்னன் {சுசர்மன்}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களிடம், “வீரர்களே, தப்பி ஓடாதீர்! அச்சமுறுவது உங்களுக்குத் தகாது. துருப்புகள் அனைத்தின் பார்வையிலும் பயங்கர நிலைப்பாடுகளை எடுத்து {சபதம் செய்து} இங்கே வந்த பிறகு, துரியோதனனின் படைத்தலைவர்களிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்? போரில் இத்தகு (கோழைத்தனமான) செயலைச் செய்வதால், உலகத்தின் பரிகாசத்திற்கு நாம் ஆளாக மாட்டோமா? எனவே, அனைவரும் நிற்பீராக. உங்கள் பலத்துக்குத் தக்கபடி போரிடுவீராக” என்றான் {சுசர்மன்}.

இப்படிச் சொல்லப்பட்ட அந்த வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் மகிழ்ச்சியுறச் செய்தபடி, மீண்டும் மீண்டும் உரத்த கூச்சலிட்டுக் கொண்டு தங்கள் சங்குகளை முழங்கினர். பிறகு அந்தச் சம்சப்தகர்கள், காலனையே மங்கச் செய்யத் தீர்மானித்திருந்த நாராயணக் கோபாலர்களுடன் மீண்டும் களத்திற்குத் திரும்பினர்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்