Saturday, May 14, 2016

அபிமன்யுவைக் கண்டு மகிழ்ந்த துரோணர்! - துரோண பர்வம் பகுதி – 037

Drona delighted with Abhimanyu ! | Drona-Parva-Section-037 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 07)

பதிவின் சுருக்கம் : அபிமன்யு செய்த கடும்போர்; அபிமன்யுவைக் கண்டு கிருபரிடம் மெச்சிய துரோணர்; அபிமன்யுவைக் கொல்ல கௌரவர்களைத் தூண்டிய துரியோதனன்; அபிமன்யுவைக் கொல்லப் போவதாகச் சொன்ன துச்சாசனன்; அபிமன்யுவுக்கும் துச்சாசனனுக்கும் இடையில் ஏற்பட்ட போர்...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, என் மகனின் படை முழுவதையும் தனியாளாகத் தடுத்ததைக் கேட்டு, வெட்கம், மனநிறைவு ஆகிய பல்வேறு உணர்வுகளால் என் இதயம் கலங்குகிறது. ஓ! கவல்கணன் மைந்தா {சஞ்சயா}, அசுரப்படையுடன் மோதிய ஸ்கந்தனைப் {முருகனைப்} போலத் தெரியும் இளமைநிறைந்த அபிமன்யுவின் மோதலைக் குறித்து விவரமாக மீண்டும் எனக்கு அனைத்தையும் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஒருவனுக்கும், பலருக்கும் இடையில் நடந்த அந்தப் பயங்கர மோதலை, அந்தக் கடும்போரை அது நடந்தது போலவே நான் உமக்கு உரைக்கிறேன்.

தன் தேரில் ஏறிய அபிமன்யு, எதிரிகளைத் தண்டிப்பவர்களும், பெரும் வீரம் கொண்டவர்களும், தங்கள் தேர்களில் இருந்தவர்களுமான உமது படையின் போர்வீரர்கள் மீது தன் கணைகளைப் பெரும் துணிச்சலுடன் பொழிந்தான். அவன் {அபிமன்யு}, நெருப்பு வளையம் போல வேகமாகச் சுழன்று, துரோணர், கர்ணன், கிருபர், சல்லியன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, போஜகுலத்தின் கிருதவர்மன், பிருஹத்பலன், துரியோதனன், சோமதத்தன், வலிமைமிக்கச் சகுனி, பல்வேறு மன்னர்கள், பல்வேறு இளவரசர்கள், பல்வேறு அணிகளிலான துருப்பினர் ஆகியோரைத் {தன் கணைகளால்} துளைத்தான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மேன்மையான ஆயுதங்களின் மூலம் தன் எதிரிகளைக் கொல்வதில் ஈடுபட்டவனும், வலிமையும் சக்தியும் கொண்டவனுமான சுபத்திரையின் வீரமகன் {அபிமன்யு}, எங்கும் இருப்பவனாகத் தெரிந்தான். அளவிலா சக்தி கொண்ட சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} நடத்தையைக் கண்ட உமது துருப்புகள் மீண்டும் மீண்டும் நடுங்கின.

அப்போது பெரும் ஞானியான பரத்வாஜர் மகன் {துரோணர்}, போரில் பெரும் திறம் கொண்ட அந்தப் போர்வீரனைக் {அபிமன்யுவைக்} கண்டு, மகிழ்ச்சியால் தன் கண்களை அகல விரித்து, கிருபரிடம் வந்து, {தன் பேச்சால்} உமது மகனின் {துரியோதனனின்} உயிரையே நசுக்கத்தக்க வகையில் அவரிடம் {கிருபரிடம்} பின்வரும் வார்த்தைகளைச் சொன்னார், “பார்த்தர்களுக்குத் தலைமையில் நிற்கும் இளமை நிறைந்த சுபத்திரை மகன் {அபிமன்யு}, தன் நண்பர்கள் அனைவருக்கும், மன்னன் யுதிஷ்டிரன், நகுலன், சகாதேவன், பாண்டுவின் மகனான பீமசேனன் ஆகியோருக்கும், தன் சொந்தங்கள் அனைவருக்கும், திருமணத்தால் உண்டான உறவினர்களுக்கும், போரில் கலந்து கொள்ளாமல் பார்வையாளர்களாக மட்டும் இந்தப் போரைக் கண்டு வருபவர்களுக்கும் மகிழ்வூட்டியபடியே அதோ வருகிறான். இந்தப் போரில் அவனுக்கு {அபிமன்யுவிற்கு} நிகராக எந்த வில்லாளியையும் நான் கருதவில்லை. அவன் {அபிமன்யு} மட்டும் விரும்பினானென்றால், இந்தப் பரந்த படையையே அவனால் கொல்ல முடியும். வேறு ஏதோ காரணத்திற்காக அவன் அதை விரும்பவில்லை என்றே தெரிகிறது” என்றார் {துரோணர்}.

துரோணர், அவர் உணர்ந்த மனநிறைவை நன்கு வெளிப்படுத்தும்படி சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் {துரியோதனன்}, அபிமன்யுவிடம் கொண்ட கோபத்துடனும் லேசாகச் சிரித்தபடியும் துரோணரைப் பார்த்தான். உண்மையில் துரியோதனன், கர்ணன், மன்னன் பாஹ்லீகன், துச்சாசனன், மத்ரர்களின் ஆட்சியாளன், உமது படையின் வலிமைமிக்கத்தேர்வீரர்கள் வேறு பலர் ஆகியோரிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான், “பிரம்மத்தை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவரான க்ஷத்திரிய குலத்தினர் அனைவரின் ஆசான் {துரோணர்}, உணர்வு மழுக்கத்தால் இந்த அர்ஜுனன் மகனை {அபிமன்யுவைக்} கொல்ல விரும்பவில்லை. போரில் ஆசானிடம் {துரோணரிடம்} எவனும் உயிரோடு தப்ப முடியாது. ஆசானை {துரோணரை} எதிர்த்து யமனே அவரது எதிரியாக வந்தாலும் அவனும் {எமனும்} அவரிடம் தப்ப முடியாது. ஓ! நண்பர்களே, வேறு எந்த மனிதனையும் குறித்து நான் என்ன சொல்வேன்? இதை நான் உண்மையாகவே சொல்கிறேன். இவனோ அர்ஜுனன் மகனாக இருக்கிறான், அர்ஜுனனோ ஆசானின் {துரோணரின்} சீடனாக இருக்கிறான். இதற்காகவே ஆசான் {துரோணர்} இந்த இளைஞனை {சிறுவனைக்} காக்க விரும்புகிறார். சீடர்கள், மகன்கள், அவர்களது மகன்கள் {பேரர்கள்} ஆகியோர் அறம் சார்ந்தோரின் {நல்லோரின்} அன்புக்குரியவர்களாகவே எப்போதும் இருக்கிறார்கள். துரோணரால் பாதுகாக்கப்படும் இந்த இளமைநிறைந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு} தன்னைப் பேராண்மை கொண்டவனாகக் கருதிக் கொள்கிறான். தன்னைத் தானே உயர்வாக மதித்துக் கொள்ளும் அவன் {அபிமன்யு} மூடன் மட்டுமே. எனவே, தாமதமில்லாமல் அவனை நசுக்குவீர்களாக” என்றான் {துரியோதனன்}.

குரு மன்னனால் {துரியோதனனால்} இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் போர்வீரர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்டு, தங்கள் எதிரியைக் கொல்ல விரும்பி, துரோணர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சாத்வத குலமகள் சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} நோக்கி விரைந்தனர்.

குறிப்பாக, குருக்களில் புலியான துச்சாசனன், துரியோதனனின் அந்த வார்த்தைகளைக் கேட்டு, பின்னவனிடம் {துரியோதனனிடம்}, “ஓ! ஏகாதிபதி {துரியோதனரே}, பாண்டவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பாஞ்சாலர்களின் கண்களுக்கு முன்பாகவே நான் அவனைக் கொல்வேன் என்று நான் உமக்குச் சொல்கிறேன். சூரியனை விழுங்கும் ராகுவைப் போல, நான் இன்று சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} நிச்சயமாக விழுங்குவேன்” என்று பதிலுரைத்தான் {துச்சாசனன்}.

குரு மன்னனிடம் {துரியோதனனிடம்} மீண்டும் உரக்கப் பேசிய துச்சாசனன், “பெரும் வீணர்களான இரண்டு கிருஷ்ணர்களும் {கருப்பர்களான வாசுதேவனும், அர்ஜுனனும்}, என்னால் சுபத்திரையின் மகன் {அபிமன்யு} கொல்லப்பட்டான் என்பதைக் கேட்டு, மனிதர்களின் உலகை விட்டு இறந்தோருடைய ஆவிகளின் உலகத்திற்குச் {யமலோகத்திற்குச்} செல்வார்கள் என்பதில் ஐயமில்லை. பாண்டுவின் மனைவியருக்குப் பிறந்த பிற மகன்களும், இரண்டு கிருஷ்ணர்களின் மரணத்தைக் கேட்டுத் தங்கள் நண்பர்கள் அனைவருடன் சேர்ந்து துக்கத்தால் தங்கள் உயிரை ஒரே நாளில் விடுவார்கள் என்பதும் தெளிவு. எனவே, இந்த உமது ஒரு பகைவன் {அபிமன்யு} கொல்லப்பட்டால், உமது எதிரிகள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என்பது தெளிவாகிறது. ஓ! மன்னா {துரியோதனரே}, எனக்கு நன்மையை விரும்புவீராக, இதோ நான் உமது எதிரியைக் கொல்லப் போகிறேன்” என்றான் {துச்சாசனன்}.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்த வார்த்தைகளைச் சொன்ன உமது மகன் துச்சாசனன், சினத்தால் நிறைந்து, உரக்க முழங்கியபடியே சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} எதிர்த்து விரைந்து கணை மழையால் அவனை {அபிமன்யுவை} மறைத்தான். பிறகு அபிமன்யு, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, தன்னை நோக்கி கோபத்துடன் முன்னேறும் உமது மகனை கூர் முனைகளைக் கொண்ட இருப்பத்தாறு கணைகளால் வரவேற்றான். எனினும், சினத்தால் நிறைந்து, மதங்கொண்ட யானையைப் போலத் தெரிந்த துச்சாசனன், அந்தப் போரில் சுபத்திரையின் மகனான அபிமன்யுவுடன் தீவிரமாகப் போரிட்டான். தேர்ப்போரில் நிபுணர்களான அவ்விருவரும், இடப்புறம் ஒருவரும், வலப்புறம் மற்றவரும் எனத் தங்கள் தேர்களில் வட்டமாகச் சுழன்று போரிட்டனர். பிறகு அந்தப் போர்வீரர்கள், தங்கள் பணவங்கள், மிருதங்கங்கள், துந்துபிக்கள், கிரகசங்கள், பெரும் ஆனகங்கள், பேரிகைகள் மற்றும் ஜர்ஜரங்கள் ஆகியவற்றுடன் தங்கள் சிங்க முழக்கங்களையும் கலந்து, உப்புநீரின் கொள்ளிடமான பெருங்கடலில் இருந்து எழும் ஒலியைப் போலச் செவிடாக்கும்படி ஒலியை எழுப்பினர்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்