Sunday, May 15, 2016

துச்சாசனனை மயக்கமடையச் செய்த அபிமன்யு! - துரோண பர்வம் பகுதி – 038

Abhimanyu made Duhsasana faint! | Drona-Parva-Section-038 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 08)

பதிவின் சுருக்கம் : துச்சாசனனை நிந்தித்த அபிமன்யு; துச்சாசனனைத் தாக்கி மயக்கமடையச் செய்தது; கர்ணனிடம் பேசிய துரியோதனன்; கர்ணனுக்கு அபிமன்யுவுக்கும் இடையில் ஏற்பட்ட போர்; கர்ணனின் வில்லை அறுத்த அபிமன்யு; அபிமன்யுவை எதிர்த்த கர்ணனின் தம்பி...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பிறகு, கணைகளால் சிதைக்கப்பட்ட அங்கங்களுடன் கூடியவனும், நுண்ணறிவு கொண்டவனுமான அபிமன்யு, தன் முன்பு நின்று கொண்டிருந்த தன் எதிரியான துச்சாசனனிடம் சிரித்துக் கொண்டே, “தற்புகழ்ச்சிகளை மோகத்துடன் சச்சரவு செய்பவர் எவரோ, நீதிகள் அனைத்தையும் எப்போதும் கைவிடுபர் எவரோ, குரூரருமானவர் எவரோ, அந்த வீண் வீரர் போரில் என் முன்பு நிற்பதை நற்பேறாலேயே நான் காண்கிறேன். (குருக்களின்) சபையில், மன்னர் திருதராஷ்டிரர் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, உமது கடுமுரையால் மன்னர் யுதிஷ்டிரரை நீர் கோபப்படுத்தினீர். பகடையில் மோசடியையும், சுபலன் மகனின் {சகுனியின்} திறனையும் நம்பிய நீர், வெற்றியால் பித்துப் பிடித்து, பீமரிடம் பலவாறு பிதற்றினீர். அந்தச் சிறப்புமிக்கோரின் கோபத்தினால், இறுதியாக நீர் உமது நடத்தையின் கனியை அடையப்போகிறீர். ஓ! தீய புரிதல் கொண்டவரே {துச்சாசனரே}, பிறர் உடைமைகளைத் திருடியது, கோபம், அமைதியை வெறுத்தது, பேராசை, அறியாமை, (சொந்தங்களுடன்) பகை, அநீதி, துன்புறுத்தல், கடும் வில்லாளிகளான என் தந்தைமாரின் அரசை அவர்களை இழக்கச் செய்தது மற்றும் உமது கடும் மனோ நிலை ஆகியவற்றிற்கான கனியை {பலனைத்} தாமதமில்லாமல் பெறுவீராக. 


மொத்தப் படையும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இன்று என் கணைகளால் நான் உம்மைத் தண்டிக்கப் போகிறேன். உமக்கெதிராகக் கொண்டிருக்கும் கோபச்சுமையை இன்று நான் இறக்கி வைக்கப் போகிறேன். கோபம் கொண்ட கிருஷ்ணைக்கும் {அன்னை திரௌபதிக்கும்}, உம்மைத் தண்டிக்கும் சந்தர்ப்பத்திற்காக எப்போதும் ஏங்கும் என் தந்தைக்கும் {அர்ஜுனருக்கும்} நான் பட்ட கடனிலிருந்து இன்று நான் விடுபடப் போகிறேன். ஓ! கௌரவரே {துச்சாசனரே}, பீமருக்கு நான் பட்ட கடனிலிருந்தும் இன்று நான் விடுபடுவேன். உண்மையில் போரை நீர் கைவிடவில்லையெனில், உயிரோடு என்னிடம் இருந்து தப்ப மாட்டீர்” என்றான் {அபிமன்யு}.

இந்த வார்த்தைகளைச் சொன்னவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான அந்த வீரன் {அபிமன்யு}, துச்சாசனனை அடுத்த உலகத்திற்கு அனுப்பவல்லதும், யமன், அல்லது அக்னி, அல்லது வாயுத்தேவனின் காந்தியைக் கொண்டதுமான கணையொன்றை குறிபார்த்தான். துச்சாசனனின் மார்பை விரைவாக அணுகிய அந்தக் கணை, அவனது தோள்ப்பூட்டில் பாய்ந்து, எறும்புப் புற்றுக்குள் செல்லும் பாம்பைப் போல, {கணையின்} சிறகுகள் வரை அவனது உடலுக்குள் ஊடுருவியது. மேலும் விரைவாக அபிமன்யு நெருப்பின் தீண்டலைக் கொண்டவையும், முழுமையாக வளைக்கப்பட்ட வில்லில் இருந்து ஏவப்பட்டவையுமான இருபத்தைந்து கணைகளால் மீண்டும் அவனைத் தாக்கினான். ஆழமாகத் துளைக்கப்பட்டுப் பெரும் வலியை உணர்ந்த துச்சாசனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தேர்த்தட்டில் அமர்ந்தவாறே மயக்கமடைந்தான். இப்படிச் சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} கணைகளால் பீடிக்கப்பட்டுத் தன் உணர்வுகளை இழந்த துச்சாசனன், அவனது தேரோட்டியால் போருக்கு மத்தியில் இருந்து வேகமாக வெளியே சுமந்து செல்லப்பட்டான்.

இதைக் கண்டவர்களான பாண்டவர்கள், திரௌபதியின் மகன்கள் ஐவர், விராடன், பாஞ்சாலர்கள், கேகயர்கள் ஆகியோர் சிங்க முழக்கம் செய்தனர். மகிழ்ச்சியால் நிறைந்த பாண்டவத் துருப்புகள் பல்வேறு இசைக்கருவிகளை அடிக்கவும் முழக்கவும் செய்தனர். சுபத்ரை மகனின் {அபிமன்யுவின்} அந்த அருஞ்செயலைக் கண்ட அவர்கள் மகிழ்ச்சியால் சிரித்தனர். யமன், மாருதன், சக்ரன் {இந்திரன்}, அசுவினி இரட்டையர் ஆகியோரின் உருவங்களைத் தங்கள் கொடிகளில் கொண்ட (ஐந்து) திரௌபதி மகன்கள், சாத்யகி, சேகிதானன், திருஷ்டத்யும்னன், சிகண்டி, கேகயர்கள், திருஷ்டகேது, மத்ஸ்யர்கள், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் மற்றும் யுதிஷ்டிரனின் தலைமையிலான பாண்டவர்கள் ஆகிய அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், தீராச்சினமும், செருக்குமுடைய தங்கள் எதிரி {துச்சாசனன்} இப்படி வீழ்த்தப்பட்டதைக் கண்டு மகிழ்ச்சியில் நிறைந்தனர். மேலும் அவர்கள் அனைவரும் துரோணரின் வியூகத்தைத் துளைக்கும் விருப்பத்துடன் வேகமாக விரைந்தனர். பிறகு, வெற்றி அடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டவர்களும், புறமுதுகிடாதவர்களுமான அந்தப் போர்வீரர்களுக்கும், எதிரியின் போர்வீரர்களுக்கும் இடையில் பயங்கரப் போர் ஒன்று நடைபெற்றது.

அந்தப் பயங்கரப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ராதையின் மகனுடன் {கர்ணனுடன்} பேசிய துரியோதனன், “எரிக்கும் சூரியனுக்கு ஓப்பான வீரத் துச்சாசனன், போரில் எதிரியைக் கொல்ல முயன்று இறுதியில் அபிமன்யுவுக்கு அடிபணிந்ததைப் பார். சினத்தால் தூண்டப்பட்டு வலிமைமிக்கக் கடுஞ்சிங்கங்களாகத் தெரியும் பாண்டவர்களும், சுபத்திரையின் மகனை {அபிமன்யுவைக்} காக்க விரும்பி நம்மை நோக்கி விரைகின்றனர்” என்றான்.

இப்படிச் சொல்லப்பட்ட கர்ணன் சினங்கொண்டு, உமது மகனுக்கு {துரியோதனனுக்கு} நன்மை செய்ய விரும்பி, வெல்லப்பட முடியாத அபிமன்யுவின் மேல் கூரிய கணைகளை மழையாகப் பொழிந்தான். வீரக் கர்ணன், தன் எதிரியை {அபிமன்யுவை} அவமதிக்கும் வகையில், போர்க்களத்தில் பின்னவனை {எதிரியான அபிமன்யுவைப்} பின் தொடர்ந்து வருவரையும் பெரும் கூர்மை கொண்ட சிறந்த கணைகள் பலவற்றால் துளைத்தான். எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரை எதிர்த்துச் செல்ல விரும்பிய உயர் ஆன்ம அபிமன்யு, எழுபத்துமூன்று கணைகளால் ராதையின் மகனை {கர்ணனைத்} துளைத்தான்.

கௌரவப் படையின் தேர்வீரர்களில் முதன்மையானோர் அனைவரையும் பீடித்துக் கொண்டிருந்தவனும், இந்திரனின் மகனுக்கு {அர்ஜுனனுக்கு} மகனுமான அபிமன்யு, துரோணரிடம் செல்வதைத் தடுப்பதில் உமது படையில் எந்தத் தேர்வீரனும் அந்நேரத்தில் வெல்லவில்லை. வில்லாளிகள் அனைவரிலும் பெருமதிப்புக்கு உரியவனான கர்ணன், வெற்றியடைய விரும்பி, தன் சிறந்த ஆயுதங்களை எடுத்து நூற்றுக்கணக்கான கணைகளால் சுபத்திரையின் மகனை {அபிமன்யுவைத்} துளைத்தான். ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவனும், {பரசு} ராமரின் வீரச் சீடனுமான அவன் {கர்ணன்}, எதிரிகளால் தோற்கடிக்கப்பட முடியாத அபிமன்யுவைத் தன் ஆயுதங்களின் மூலம் இப்படிப் பீடித்தான்.

ஆயுத மழையால் ராதையின் மகனால் {கர்ணனால்} போரில் பீடிக்கப்பட்டாலும், (ஆற்றலில்) தேவர்களையே ஒத்திருந்த அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு} எந்த வலியையும் உணரவில்லை. அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, கல்லில் கூர்த்தீட்டப்பட்டவையும், கூர்முனைகளைக் கொண்டவையுமான தன் கணைகளைக் கொண்டு வீரப் போர்வீரர்கள் பலரின் விற்களை வெட்டி, பதிலுக்குக் கர்ணனைப் பீடிக்கத் தொடங்கினான். அபிமன்யு சிரித்துக் கொண்டே, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையும், வட்டமாக வளைக்கப்பட்ட வில்லில் இருந்து ஏவப்பட்டவையுமான கணைகளால் கர்ணனின் குடை, கொடிமரம், தேரோட்டி மற்றும் குதிரைகளை விரைவாக வெட்டினான்.

பிறகு கர்ணன் அபிமன்யுவின் மேல் ஐந்து நேரான கணைகளை ஏவினான். எனினும், பல்குனன் மகனோ {அபிமன்யுவோ} அவற்றை அச்சமற்றவகையில் வரவேற்றான். பெரும் வீரமும் தீரமும் கொண்ட பின்னவன் {அபிமன்யு}, ஒரே ஒரு கணையால் கர்ணனின் வில் மற்றும் கொடிமரத்தை வெட்டி ஒரு கணத்தில் அவற்றைக் கீழே தரையில் விழச் செய்தான். இத்தகு துயரில் இருக்கும் கர்ணனைக் கண்ட அவனது தம்பி {கர்ணனின் தம்பி}, பெரும் பலத்துடன் வில்லை வளைத்துக் கொண்டு, சுபத்திரையின் மகனை எதிர்த்து வேகமாகச் சென்றான். பிறகு பார்த்தர்களும், அவர்களைப் பின்தொடர்பவர்களும், உரக்க கர்ஜித்துத் தங்கள் இசைக்கருவிகளை முழக்கி சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} (அவனது வீரத்திற்காக} மெச்சினார்கள்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்