Sunday, May 22, 2016

யுதிஷ்டிரனின் புலம்பல்! - துரோண பர்வம் பகுதி – 049

The lamentation of Yudhishthira! | Drona-Parva-Section-049 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 19)

பதிவின் சுருக்கம் : அபிமன்யு இறந்ததும் போர்க்களத்தை விட்டு அகன்ற வீரர்கள் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து அமர்தல்; யுதிஷ்டிரனின் புலம்பல்…


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "தேர்ப்படைகளின் தலைவனும், சுபத்திரையின் மகனுமான அந்த வீரன் {அபிமன்யு} கொல்லப்பட்ட பிறகு, பாண்டவ வீரர்கள் தங்கள் தேர்களை விட்டு, தங்கள் கவசங்களைக் களைந்து, தங்கள் விற்களை ஒருபுறமாக வீசிவிட்டு மன்னன் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து அமர்ந்தனர். (இறந்து போன) அபிமன்யுவின் மீது தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்து, தங்கள் சோகத்தையே அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்தனர்.

உண்மையில், தன் தம்பியின் {அர்ஜுனனின்} வீரமகனான வலிமைமிக்கத் தேர்வீரன் அபிமன்யுவின் வீழ்ச்சியால் சோகத்தால் நிரம்பிய மன்னன் யுதிஷ்டிரன், (இப்படிப்பட்ட) புலம்பல்களிலேயே ஈடுபட்டான்: “ஐயோ, என் நலனை அடைய விரும்பிய அபிமன்யு, படை வீரர்களால் நிறைந்ததும், துரோணரால் அமைக்கப்பட்டதுமான அந்த வியூகத்தைப் பிளந்தானே. பெரும் துணிவுள்ளவர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களும், போரில் எளிதாக வெல்லப்பட முடியாதவர்களும், போரில் அவனுடன் {அபிமன்யுவுடன்} மோதியவர்களுமான வலிமைமிக்க வில்லாளிகள் முறியடிக்கப்பட்டு, புறமுதுகிடச் செய்யப்பட்டனரே. கருணையற்ற நம் எதிரியான துச்சானனுடன் போரில் மோதிய அவன் {அபிமன்யு}, அந்த வீரனின் {துச்சாசனனின்} புலன்களை இழக்கச் செய்து {மயக்கமடையச் செய்து}, களத்தில் இருந்தே அவனை ஓடச் செய்தானே.

ஐயோ, அர்ஜுனனின் வீரமகன் {அபிமன்யு}, துரோணப் படை எனும் பரந்த கடலைக் கடந்த பிறகு, துச்சாசனன் மகனுடன் மோதி யமனின் வசிப்பிடத்திற்கு விருந்தினனாகச் சென்றுவிட்டானே. அபிமன்யு கொல்லப்பட்ட பிறகு, அர்ஜுனன் மீதும், தனக்குப் பிடித்த மகனை இழந்த அருளப்பட்ட சுபத்திரை மீதும் நான் எவ்வாறு என் கண்களைச் செலுத்துவேன். பொருளற்ற {முட்டாள் தனமான}, ஒத்திசைவற்ற, முறையற்ற எந்த வார்த்தைகளை நாம் இன்று ரிஷிகேசனிடமும் {கிருஷ்ணனிடமும்}, தனஞ்சயனிடமும் {அர்ஜுனனிடமும்} சொல்லப் போகிறோம்? நன்மையை அடைய விரும்பியும், வெற்றியை எதிர்பார்த்தும் சுபத்திரைக்கும், கேசவனுக்கும், அர்ஜுனனுக்கும் நானே இந்தப் பெரும் தீங்கைச் செய்துவிட்டேனே.

பேராசை கொண்ட ஒருவன், தனது தவறுகளை ஒருபோதும் காணமாட்டான். தேனைச் சேகரிப்போர் தங்களுக்கு முன் இருக்கும் வீழ்ச்சியை {பெரும் பள்ளத்தைக்} காண்பதில்லை; நானும் அவர்களைப் போலவே இருக்கிறேன். எவன் பாலகனோ, எவனுக்கு (நல்ல) உணவு, வாகனங்கள், படுக்கைகள், ஆபரணங்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டுமோ, அவனையே நம் படையின் முன்னிலையில் நிறுத்தினோமே. இளம் வயதுடையவனும், போரில் தேர்ச்சி அடையாதவனுமான ஒரு பாலகனுக்குப் பெரும் ஆபத்தான இது போன்ற ஒரு சூழலில் நன்மை எப்படி விளையும்? தன் தலைவனின் ஏவலைச் செய்ய மறுக்காமல், திறமையில் {மனவுறுதியில்} செருக்குடைய ஒரு குதிரையைப் போல, அவன் {அபிமன்யு} தன்னையே தியாகம் செய்து கொண்டானே.

ஐயோ, கோபத்தால் நிறைந்திருக்கும் அர்ஜுனனின் சோகப் பார்வையில் வெடித்து, நாமும் இன்று வெறுந்தரையில் நம்மைக் கிடத்திக் கொள்ளப் போகிறோம். பரந்தமனம், நுண்ணறிவு, பணிவு, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, அழகு, வலிமை, நன்கு வளர்க்கப்பட்ட அழகிய அங்கங்கள், உயர்ந்தோரிடம் மரியாதை, வீரம், அன்பு, உண்மையில் அர்ப்பணிப்பு, மகத்தான சாதனைகள் ஆகியவற்றைக் கொண்ட தனஞ்சயனின் {அர்ஜுனனின்} அருஞ்செயல்களுக்காகத் தேவர்களே கூட அவனைப் புகழ்கின்றனர். அந்த வீரன் {அர்ஜுனன்}, இந்திரனின் எதிரிகளும், ஹிரண்யபுரத்தைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்டவர்களுமான நிவாதகவசர்களையும், காலகேயர்களையும் கொன்றான். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அவன் {அர்ஜுனன்}, பௌலோமர்களையும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தோரையும் கொன்றான். பெரும் வலிமையைக் கொண்ட அவன் {அர்ஜுனன்}, புகலிடம் கேட்பவர்களான தீராச் சினமுடைய எதிரிகளுக்கும் புகலிடத்தை அளிப்பவன் ஆவான் [1]. ஐயோ, அப்படிப்பட்ட ஒருவனின் மகனை {அபிமன்யுவை} இன்று நம்மால் ஆபத்தில் இருந்து காக்க முடியவில்லையே.

[1] வேறொரு பதிப்பில் இவ்வரி, “அபயத்தை விரும்பும் எதிரிக்கும் அபயத்தைக் கொடுப்பவன்” என்று இருக்கிறது.

தார்தராஷ்டிரர்கள் பெரும் பலத்தைக் கொண்டவர்களாக இருப்பினும் ஒரு பெரும் அச்சம் அவர்களை நிறைக்கிறது. தன் மகனின் {அபிமன்யுவின்} கொலையால் சினமூளும் பார்த்தன் {அர்ஜுனன்}, இந்தக் கௌரவர்களை நிர்மூலமாக்கப் போகிறான். தன் சொந்த குலம் மற்றும் தன் ஆதரவாளர்களை அழிப்பவனும், தீய ஆலோசகர்கள் மற்றும் தீய மனம் கொண்டவனுமான துரியோதனன், கௌரவப்படை நிர்மூலமாக்கப்படுவதைக் கண்டு கவலையால் தன் உயிரை விடப் போகிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஒப்பற்ற சக்தி மற்றும் ஆற்றலைக் கொண்டவனும், இந்திரனின் மகனுக்கு மகனுமான இவன் {அபிமன்யு} போர்க்களத்தில் கிடப்பதைக் காணும் எனக்கு, வெற்றியோ, அரசுரிமையோ, சாகாத்தன்மையோ, தேவர்களுடன் வசிப்பதோ கூடச் சிறு மகிழ்ச்சியையும் தராது” என்றான் {யுதிஷ்டிரன்}” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்