Sunday, May 22, 2016

பயங்கரப் போர்க்களம்! - துரோண பர்வம் பகுதி – 048

Terrible Battlefield! | Drona-Parva-Section-048 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 18)

பதிவின் சுருக்கம் : அபிமன்யு இறந்ததும் படைகள் பாசறைக்குத் திரும்பியது; போர்க்களத்தின் வர்ணனை...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அவர்களின் {பாண்டவர்களின்} முதன்மையான வீரர்களில் ஒருவனை {அபிமன்யுவை} இப்படிக் கொன்ற பிறகு, அவர்களின் கணைகளால் பீடிக்கப்பட்டிருந்த நாங்கள், குருதியில் நனைந்தபடியே மாலை வேளையில் எங்கள் பாசறைக்குத் திரும்பினோம். எதிரியால் உறுதியாக வெறித்துப் பார்க்கப்பட்ட நாங்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கடும் இழப்பை அடைந்து, கிட்டத்தட்ட நினைவுகளை இழக்கும் தருவாயில் போர்க்களத்தைவிட்டு மெல்ல வெளியேறினோம். அப்போது பகலுக்கும் இரவுக்கும் இடைப்பட்ட அற்புதமான நேரமும் வந்தது. நரிகளின் அமங்கலமான ஊளைகளையும் நாங்கள் கேட்டோம்.


மேற்கு மலைகளை {அஸ்த மலையை} அடைந்த சூரியன், தாமரை இதழ்களைப் போன்ற வெளிர் சிவப்பு நிறத்தில் கீழே அடிவானத்தில் மூழ்கிக் கொண்டிருந்தான். அவன் {சூரியன்}, எங்கள் வாள்கள், கணைகள், ரிஷ்டிகள், தேரின் வரூதங்கள், கேடயங்கள் மற்றும் ஆபரணங்களில் இருந்த காந்தியையும் தன்னோடு எடுத்துச் சென்றுவிட்டான். ஆகாயத்தையும், பூமியையும் ஒரே நிறம் கொள்ளச் செய்த சூரியன் தனக்குப் பிடித்தமான நெருப்பின் வடிவத்தை ஏற்றான் {அக்னி ஸ்வரூபமான சரீரத்தை அடைந்தான்}.

தங்கள் முதுகில் இருந்த கொடிமரங்கள், அங்குசங்கள் மற்றும் பாகர்கள் விழுந்து கிடக்க, இடியால் பிளக்கப்பட்ட மேகமுடி கொண்ட மலைமுகடுகளைப் போல, உயிரை இழந்து கிடந்த எண்ணற்ற யானைகளின் அசைவற்ற உடல்கள் போர்களமெங்கும் பரவிக் கிடந்தன. தங்கள் வீரர்கள், தேரோட்டிகள், ஆபரணங்கள், குதிரைகள், கொடிமரங்கள், கொடிகள் ஆகியவை நசுங்கி, உடைந்து, கிழிந்து போய்த் துண்டுகளாக நொறுங்கிக் கிடக்கும் பெருந்தேர்களுடன் பூமியானது அழகாகத் தெரிந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பெருந்தேர்கள், எதிரியின் கணைகளால் தங்கள் உயிர்களை இழந்த உயிரினங்களைப் போலத் தெரிந்தன.

விலையுயர்ந்த பொறிகள் மற்றும் பல்வேறு விதங்களிலான விரிப்புகளுடன் கூடிய பெரும் எண்ணிக்கையிலான குதிரைகள் மற்றும் சாரதிகள் தங்கள் கண்கள், பற்கள், நரம்புகள், நாக்கு ஆகியன தங்கள் இடங்களில் இருந்து பிதுங்கி உயிரற்றுக் கிடந்ததால் அந்தப் போர்க்களம் கொடூரமான பயங்கரத் தன்மையை அடைந்தது. விலையுயர்ந்த கவசங்கள், ஆபரணங்கள், ஆடைகள், ஆயுதங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்த உயிரிழந்த மனிதர்கள், விலையுயர்ந்த படுக்கைகள் மற்றும் விரிப்புகளுக்குத் தாங்கள் தகுந்தோரெனினும், கொல்லப்பட்ட குதிரைகள், யானைகள் மற்றும் உடைந்த தேர்களுடன் முற்றிலும் ஆதரவற்றோராக வெறுந்தரையில் கிடந்தனர்.

அந்தப் போர்க்களத்தில் நாய்கள், நரிகள், காக்கைகள், கொக்குகள், ஊனுண்ணும் பிற பறவைகள், ஓநாய்கள், கழுதைப்புலிகள், அண்டங்காக்கைகள், உணவைக் குடிக்கும் பிற உயிரினங்கள், பல்வேறு இனங்களைச் சேர்ந்த அனைத்து ராட்சசர்கள், பெரும் எண்ணிக்கையிலான பிசாசங்கள் ஆகியன, பிணங்களின் தோலைக் கிழித்து, அவற்றின் கொழுப்பையும், இரத்தத்தையும், மஜ்ஜையையும் குடித்து, அவற்றின் இறைச்சியை உண்ணத் தொடங்கின. மேலும் அவை, அழுகிய பிணங்களின் சுரப்புகளை உறிஞ்சத் தொடங்கும் அதே வேளையில், ஆயிரக்கணக்கான சடலங்களை இழுத்துச் சென்ற ராட்சசர்கள் கொடூரமாகச் சிரித்துக் கொண்டே உரக்கப் பாடினர்.

முதன்மையான தேர்வீரர்களால், வைதரணீயைப் போலக் கடப்பதற்குக் கடினமான பயங்கர நதியொன்று அங்கே உண்டாக்கப்பட்டது. அதன் நீர் (விழுந்த உயிரினங்களின்) குருதியால் அமைந்தது. தேர்கள் அதன் தெப்பங்களாகின, யானைகள் அதன் பாறைகளாகின, மனிதர்களின் தலைகள் அதன் சிறு கற்களாகின. (கொல்லப்பட்ட குதிரைகள், யானைகள், மனிதர்கள் ஆகியோரின்) சதைகள் அதன் சேறானது. பல்வேறு விதங்களிலான விலையுயர்ந்த ஆயுதங்கள் (அந்த ஆற்றில் மிதக்கவோ, அதன் கரைகளில் கிடக்கவோ செய்யும்) மலர் மாலைகளாகின. இறந்தோரின் உலங்கங்களுக்கு உயிரினங்களை இழுத்துச் செல்லும் அந்தப் பயங்கர ஆறானது போர்க்களத்தின் நடுவில் மூர்க்கமாகப் பாய்ந்து கொண்டிருந்தது.

வெறுப்பூட்டும் பயங்கரத் தோற்றங்களைக் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான பிசாசங்கள், அந்த ஓடையில் குடித்தும், உண்டும் மகிழ்ந்தன. அதே உணவை உண்ட நாய்கள், நரிகள் மற்றும் ஊனுண்ணும் பறவைகள் ஆகியன, {மற்ற} உயிரினங்களின் அச்சத்தைத் தூண்டும் வகையில் தங்கள் பெரும் களியாட்டத்தை அங்கே நிகழ்த்தின.

மனிதச் சடலங்கள் எழுந்து நடனமாடத் தொடங்கும் இடமும், யமனுடைய ஆட்சிப்பகுதியைப் பெருகச் செய்வதும், இப்படிப் பயங்கரமாகக் காட்சயளிப்பதுமான அந்தப் போர்க்களத்தை வெறித்துப் பார்த்தப் போர்வீரர்கள், விலையுயர்ந்த தன் ஆபரணங்கள் சிதறிக்கிடக்க, தெளிந்த நெய்யால் மேலும் நனைக்கப்படாத பீடத்தில் உள்ள வேள்வி நெருப்பைப் போலக் களத்தில் கிடப்பவனும், சக்ரனுக்கு ஒப்பானவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அபிமன்யுவைக் கண்டவாறே அதைவிட்டு {போர்க்களத்தைவிட்டு} மெதுவாக வெளியேறினர்” {என்றான் சஞ்சயன்}.

பதிமூன்றாம் நாள் போர் முற்றும்


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்