Friday, June 03, 2016

மாமன்னன் பரதன்! - துரோண பர்வம் பகுதி – 068

Imperial Bharata! | Drona-Parva-Section-068 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 38)

பதிவின் சுருக்கம் : துஷ்யந்தனின் மகனான மாமன்னன் பரதனின் கதையைச் சொன்ன நாரதர்; அவன் செய்த வேள்விகள்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…


நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், "ஓ! சிருஞ்சயா, துஷ்யந்தனின் [1] மகன் பரதனும் மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். குழந்தையாக அவன் {பரதன்} காட்டில் வாழும் போதே, பிறரால் செய்ய முடியாத சாதனைகளைச் செய்தான். பெரும் பலம் கொண்ட அவன் {பரதன்}, பனி போன்று வெள்ளையாகவும், பற்களையும், நகங்களையும் ஆயுதங்களாகக் கொண்டவையுமான சிங்கங்களின் ஆற்றலை இழக்கச் செய்து, அவற்றை இழுத்து வந்து (தன் விருப்பப்படி) கட்டிப்போட்டான். மேலும் அவன் {பரதன்}, (சிங்கங்களை விட) இரக்கமற்றவையும், மூர்க்கமானவையுமான புலிகளையும் அடக்கி, அவற்றைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.


[1] துஷ்யந்தனைக் குறித்து ஆதிபர்வம் பகுதி 68 முதல் பகுதி 74 வரை சொல்லப்பட்டுள்ளது.

பெரும் வலிமைமிக்க இரைதேடும் பிற விலங்குகளையும், மனோசிலை {சிவப்பு ஈயம் [அ] அரிதாரம்} பூசப்பட்டு, பிற திரவக் கனிமங்களால் கறையேறிய பற்களுடனும், தந்தங்களுடனும் கூடிய பெரும் யானைகளையும் பிடித்து, அவற்றைத் தன் கட்டுக்குள் கொண்டுவந்து, அவற்றின் வாய்களை வறண்டு போகச்செய்தான், அல்லது அவற்றைப் புறமுதுகிட்டோடும்படி விரட்டினான். பெரும் வலிமை கொண்ட அவன் {பரதன்}, எருமைகளில் வலிமைமிக்க எருமைகளை இழுத்து வந்தான். தன் பலத்தின் விளைவால் அவன் {பரதன்}, செருக்குமிக்கச் சிங்கங்களையும், வலிமைமிக்கச் சிருமரங்களையும் {மான்களையும்}, கொம்பு படைத்த காண்டாமிருகங்களையும், இன்னும் பிற விலங்குகளையும் நூற்றுக்கணக்கில் அடக்கினான். அவற்றின் கழுத்தைக் கட்டி, கிட்டத்தட்ட அவை உயிரைவிடும் அளவுக்கு நசுக்கிய பிறகு, அவற்றை அவன் விட்டான் {விடுவித்தான்}. அவனது அந்தச் சாதனைகளுக்காகவே (அவனோடு வாழ்ந்த) மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள் அவனைச் சர்வதமனன் (அனைத்தையும் கட்டுப்படுத்துவபன்) என்று அழைத்து வந்தனர். இறுதியில், அவன் அவ்வழியில் விலங்குகளுக்குக் கொடுமை செய்வதை அவனது தாய் {சகுந்தலை} தடுத்தாள்.

பெரும் ஆற்றலைக் கொண்ட அவன் {பரதன்}, யமுனையாற்றங்கரையில் நூறு குதிரை வேள்விகளைச் செய்தான், பிறகு, சரஸ்வதி ஆற்றங்கரையில் அது போன்ற முன்னூறும், கங்கை ஆற்றங்கரையில் நானூறும் {குதிரை வேள்விகளும்} செய்தான். இவ்வேள்விகளைச் செய்த பிறகு, அவன் {பரதன்}, பிராமணர்களுக்கு அபரிமிதமான பரிசுகளை வழங்கி, மீண்டும் ஆயிரம் குதிரை வேள்விகளையும், நூறு ராஜசூயங்களையும், பெரும் வேள்விகளையும் செய்தான். மேலும், பிற வேள்விகளான அக்நிஷ்டோமம், அதிராத்ரம், உக்தியம், விஸ்வஜித் ஆகியவற்றையும், அவைகளுடன் ஆயிரமாயிரம் {பத்து லட்சம்} வாஜபேயங்களையும் எந்த இடையூறுமின்றிச் செய்து முடித்தான். இவை அனைத்தையும் செய்து முடித்த அந்தச் சகுந்தலையின் மகன் {பரதன்}, பிராமணர்களுக்குச் செல்வங்களைப் பரிசளித்து அவர்களை மனம்நிறையச் செய்தான்.

பெரும் புகழ் படைத்த அந்தப் பரதன், (தன் தாயான சகுந்தலையைத் தன் மகளாகவே வளர்த்த) கண்வருக்கு, மிகத் தூய்மையான {ஜம்பூநதம் என்ற} தங்கத்தாலான பத்து லட்சம் கோடி {பத்தாயிரம் பில்லியன் 10000,000,000,000} நாணயங்களைக் கொடுத்தான். இந்திரனின் தலைமையிலான தேவர்களும், பிராமணர்களும் அவனது வேள்விக்கு வந்து, நூறு வியாமங்கள் [2] அகலம் கொண்டதும் முற்றிலும் தங்கத்தாலானதுமான அவனது வேள்விக்கம்பை {யூபஸ்தம்பத்தை} நிறுவினர்.

[2] இரண்டு கரங்களையும் அகல நீட்டினால் வரும் அளவே வியாமமாகும் என்று கங்குலி இங்கே விளக்குகிறார்.

உன்னத ஆன்மா கொண்டவனும், எதிரிகள் அனைவரையும் வெல்பவனும், எதிரியால் வெல்லப்பட முடியாத ஏகாதிபதியும், பேரரசனுமான அந்தப் பரதன், அழகிய குதிரைகளையும், யானைகள், தேர்கள், தங்கத்தாலும், அனைத்து வகை அழகிய ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேர்கள், ஒட்டகங்கள், ஆடுகள், செம்மறியாடுகள், வேலைக்காரர்கள், வேலைக்காரிகள், செல்வங்கள், தானியங்கள், கன்றுகளுடன் கூடிய கறவை மாடுகள், கிராமங்கள், வயல்கள், பல்வேறு விதங்களிலான ஆடைகள் ஆகியவற்றையும், லட்சக் கணக்காகவும் கோடிக்கணக்காவும் பிராமணர்களுக்குத் தானமளித்தான்.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {மாமன்னன் பரதனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்