Sunday, March 31, 2013

துஷ்யந்தன்! | ஆதிபர்வம் - பகுதி 68

Dushmanta (Dushyanta)! | Adi Parva - Section 68 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 4)

பதிவின் சுருக்கம் : பௌரவக் குலத்தை நிறுவிய துஷ்யந்தன்; துஷ்யந்தனின் ஆட்சி சிறப்பு...

ஜனமேஜயன், "ஓ பிராமணரே! {வைசம்பாயனரே} உண்மையில் நான் தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோரின் உயிர்ப்பகுதிகளுக்கேற்ப உண்டான அவதராங்களை உம்மிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டேன்.(1) எனினும் நான், குருக்களின் அரசமரபை {வம்சத்தைக்} குறித்துத் தொடக்கத்திலிருந்தே கேட்க விரும்புகிறேன். எனவே, ஓ பிராமணரே {வைசம்பாயனரே}, அவற்றை இந்த மறுபிறப்பாளர்களான முனிவர்கள் அனைவரின் முன்னிலையில் சொல்வீராக" என்றான்.(2)



வைசம்பாயனர் சொன்னார், "ஓ பாரதக் குலத்தின் மேன்மைமிக்கவனே {ஜனமேஜயா}, பௌரவக் குலத்தை நிறுவியவன் பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்ட துஷ்யந்தனாவான் {துஷ்மந்தனாவான்}. நான்கு கடல்களால் சூழப்பட்ட பூமியின் பாதுகாவலனாக அவன் இருந்தான். இந்த உலகின் நாற்காற்பகுதிகள் முழுமையும் அவனது {துஷ்யந்தன்} ஆதிக்கத்திலேயே இருந்தன. நடுக்கடலில் இருந்த பல்வேறு மண்டலங்களுக்கும் அவனே {துஷ்யந்தனே} தலைவனாக இருந்தான்.(3,4) அந்த எதிரிகளை ஒடுக்குபவன் {துஷ்யந்தன்}, {நால் வகை மனிதர்களால் நிறைந்தவையும், கடலால் சூழப்பட்டவையும், ரத்தினங்களின் சுரங்கமாவும் இருந்த} மிலேச்சர்களின் நாடுகளின் மேலும் தன் ஆதிக்கத்தைக் கொண்டிருந்தான்.(5)

அவனுடைய ஆட்சிக்காலத்தில் மனிதர்களில் கலப்பு சாதியினரோ[1], (நிலம் தானே விளைந்ததால்) மண்ணை உழுபவர்களோ, (பூமியின் பரப்பிலேயே செல்வம் அபரிமிதமாக இருந்ததால்) சுரங்கத் தொழிலாளர்களோ, பாவம் நிறைந்த மனிதர்களோ எவரும் இல்லை[2].(6) ஓ மனிதர்களில் புலியே {ஜனமேஜயா}, அவர்கள் அனைவரும் அறம் சார்ந்தோராகவும், அற நோக்கங்களைக் கொண்டவர்களுமாகவே இருந்தனர்.(7) ஓ அன்புக்குரியோனே! {ஜனமேஜயா}, அங்கே கள்வர்கள் குறித்த அச்சமேதும் இல்லை, பஞ்சம் குறித்த அஞ்சமேதும் இல்லை, நோய் குறித்த அச்சமேதும் இல்லை.(8) தங்கள் தங்களுள்ளுரிய கடமைகளைச் செய்வதில் இன்புற்ற நால் வகை மனிதர்களும், ஆசைகளின் பலனை அடைவதற்காக எப்போதும் அறச் செயல்களைச் செய்ததில்லை. அவனை {துஷ்யனைச்} சார்ந்திருந்த அவனது குடிமக்கள் எந்த அச்சத்தையும் கொண்டிருக்கவில்லை.(9) பரஜன்யா (இந்திரன்) சரியான காலத்தில் மழையைப் பொழிந்ததால், நிலத்தில் விளைந்ததனைத்திலும் நீர்ச்சத்தும், சதைப்பற்றும் நிறைந்திருந்தன. பூமியில் அனைத்து வகைச் செல்வங்களும், அனைத்து வகை விலங்குகளும் நிறைந்திருந்தன.(10) பிராமணர்கள் எப்போதும் தங்கள் கடமைகளில் ஈடுபடுபவர்களாக, எப்போதும் உண்மை பேசுபவர்களாக இருந்தனர்.

[1] கங்குலியிலும், மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளிலும் இங்கே கலப்புச் சாதிகள் என்றே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பிலோ, "வருணங்களின் ஒழுக்கங்களை மீறுகிறவன்" என்றிருக்கிறது. கங்குலியும் மன்மதநாததத்தரும் ஆங்கில வாசகர்களுக்குச் சொல்வதால் மூலத்தில் வர்ணங்கள் என்றிருப்பதைச் சாதிகள் என்று சொல்லியிருக்க வேண்டும்.

[2] மண்ணை உழுவதனாலோ, சுரங்கம்-கிணறு எனத் தோண்டுவதாலோ மண்ணைத் துன்புறுத்தாமல், தானாய் விளைந்த தானியங்கள் காய்கனிகள், தாமாய் வெளிப்படும் இரத்தினங்கள் மற்றும் உலோகங்களை உபயோகித்த மக்கள் வாழ்ந்தனர் என்று கொள்ளலாம்.

இளமை நிறைந்த அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்}, அற்புதமான ஆற்றலையும், காடுகள் மற்றும் புதர்களோடு கூடிய மந்தர மலையை எடுத்துத் தன் கரங்களில் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு வஜ்ரத்தைப் போன்ற கடினமான உடலையும் கொண்டிருந்தான். கதாயுதத்தைக் கொண்டு போரிடும் நான்கு முறைகளிலும் (அதாவது, தூரத்தில் இருப்பவர்கள் மீது வீசுவது, அருகில் இருப்பவர்களைத் தாக்குவது, பலருக்கு மத்தியில் சுழற்றுவது, எதிரில் இருக்கும் எதிரிகளை விரட்டுவது போன்ற முறைகளில்) அவன் மிகுந்த திறம் பெற்றவனாக இருந்தான். மேலும் அவன் {துஷ்யந்தன்}, அனைத்து வகை ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும்,(11,12) யானைகள் மற்றும் குதிரைகளைச் செலுத்துவதிலும் திறமை பெற்றவனாக இருந்தான். பலத்தில் அவன் {துஷ்யந்தன்} விஷ்ணுவைப் போன்றவனாகவும், காந்தியில் பகலை உண்டாக்குபவனை {சூரியனைப்} போன்றவனாகவும்,(13) நிறையீர்ப்பில் கடலைப் போன்றவனாகவும், பொறுமையில் பூமியைப் போன்றவனாகவும் இருந்தான். மேலும் தன் குடிமக்கள் அனைவராலும் பெரிதும் நேசிக்கப்பட்ட அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்}, நிறைவுள்ள தன் மக்களை அறம் சார்ந்து ஆண்டான்" {என்றார் வைசம்பாயனர்}.(14)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்