Friday, July 15, 2016

ஜெயத்ரதனின் பாதுகாவலர்களுடன் கடும்போர்! - துரோண பர்வம் பகுதி – 103

Arjuna's fight against the protectors of Jayadratha! | Drona-Parva-Section-103 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 19)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனனை எதிர்த்த எட்டு மகாரதர்கள்; பயங்கரச் சங்கொலிகள்; கிருஷ்ணார்ஜுனர்களின் சங்கொலிகள் கௌரவர்களை அச்சுறுத்தியது; காயம்பட்ட கிருஷ்ணனைக் கண்டு கோபமூண்ட அர்ஜுனன் கௌரவர்களைத் துளைத்தது; கௌரவர்களைப் பந்தாடிய அர்ஜுனன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "விருஷ்ணி மற்றும் அந்தகருள் முதன்மையானவனையும் {கிருஷ்ணனையும்}, குரு குலத்தவரில் முதன்மையானவையும் {அர்ஜுனனையும்} கண்ட உடனேயே, உமது வீரர்களில் முதன்மையடைய முயன்ற ஒவ்வொருவரும் நேரத்தை இழக்கமால், அவர்களைக் கொல்லும் விருப்பத்தில் எதிர்த்துச் சென்றனர்.

விஜயனும் {அர்ஜுனனும்} அந்தத் தன் எதிரிகளை எதிர்த்து விரைந்தான். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், புலித்தோலால் மறைக்கப்பட்டவையும், ஆழ்ந்த சடசடப்பொலியை உண்டாக்குபவையும், சுடர்மிக்க நெருப்புக்கு ஒப்பானவையுமான தங்கள் பெரும் தேர்களில் சென்ற அவர்கள், தங்கப்பிடி கொண்டவையும், பிரகாசத்தால் பார்க்கப்பட முடியாதவையுமான விற்களை ஏந்தி, உரக்க கூச்சலிட்டுக் கொண்டு, கோபக்கார குதிரைகளால் இழுக்கப்பட்டுத் திசைகளின் பத்துப் புள்ளிகளுக்கும் ஒளியூட்டியபடி விரைந்தனர்.

பூரிஸ்ரவஸ், சலன், கர்ணன், விருஷசேனன், ஜெயத்ரதன், கிருபர், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} மற்றும் தேர்வீரர்களில் முதன்மையான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகிய அந்தப் பெரும் தேர்வீரர்களான எட்டு பேரும், ஏதோ வானத்தை விழுங்கிவிடுவதைப் போல, புலித்தோலால் மறைக்கப்பட்டவையும், தங்கச் சந்திரன்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான தங்கள் அற்புதத் தேர்களால் திசைகளில் பத்து புள்ளிகளுக்கும் ஒளியூட்டியபடிய சென்றனர்.

கவசம் பூண்டு, கோபத்தால் நிறைந்து, மேகங்களின் திரள்களின் முழக்கங்களுக்கு ஒப்பான சடசடப்பொலி கொண்ட தங்கள் தேர்களில் ஏறி, கூரிய கணைகளின் மழையால் அனைத்துப் பக்கங்களிலும் அர்ஜுனனை மறைத்தனர். பெரும் வேகம் கொண்டவையும், சிறந்த இனத்தைச் சேர்ந்தவையுமான அழகிய குதிரைகளால் தாங்கப்பட்ட அந்தப் பெரும் தேர்வீரர்கள், திசைப்புள்ளிகளை ஒளியூட்டியபோது பிரகாசமாகத் தெரிந்தனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, மலைப்பகுதிகளைச் சேர்ந்த சிலவும், நதிகளைச் சேர்ந்த சிலவும், சிந்துக்களின் நாட்டைச் சேர்ந்த சிலவும் எனப் பல்வேறு நாடுகள், பல்வேறு இனங்களைச் சேர்ந்தவையும், பெரும் வேகம் கொண்டவையுமான முதன்மையான குதிரைகளால் இழுக்கப்பட்ட தேர்களைக் கொண்ட குருக்களில் முதன்மையான தேர்வீரர்கள் பலர், உமது மகனை {துரியோதனனை} மீட்க விரும்பி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} தேரை நோக்கி விரைந்தனர். ஓ! மன்னா, மனிதர்களில் முதன்மையான அவர்கள், தங்கள் சங்குகளை எடுத்து முழக்கி, ஆகாயத்தையும், கடல்களுடன் கூடிய பூமாதேவியையும் {அவற்றின் ஒலியால்} நிறைத்தனர்.

அப்போது தேவர்களில் முதன்மையானோரான அந்த வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்} கூடப் பூமியில் முதன்மையான தங்கள் சங்குகளை முழக்கினர். குந்தியின் மகன் {அர்ஜுனன்} தேவதத்தத்தையும், கேசவன் பாஞ்சஜன்யத்தையும் முழக்கினர். தனஞ்சயனால் {அர்ஜுனனால்} வெளியிடப்பட்ட தேவதத்தத்தின் வெடிப்பொலியானது, பூமியையும், ஆகாயத்தையும், திசைகளின் பத்து புள்ளிகளையும் நிறைத்தது. வாசுதேவனால் முழக்கப்பட்ட பாஞ்சஜன்யமும் அனைத்து ஒலிகளையும் விஞ்சி வானத்தையும் பூமியையும் நிறைத்தது.

மருண்டோருக்கு அச்சத்தையும், துணிவுள்ளோருக்கு உற்சாகத்தையும் தூண்டிய அந்தக் கடுமையான பயங்கரமான ஒலி தொடர்ந்த போது, பேரிகைகள், ஜர்ஜரங்கள், ஆனகங்கள், மிருதங்கங்கள் ஆகியன ஆயிரக்கணக்கில் முழக்கப்பட்ட போது, ஓ! பெரும் மன்னா, குரு தரப்பால் அழைக்கப்பட்டவர்களும், தனஞ்சயனின் நன்மையில் அக்கரையுள்ளவர்களும், சினத்தால் நிறைந்தவர்களுமான அந்தப் பெரும் வில்லாளிகளாலேயே கூட அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோரின் சங்குகளின் உரத்த வெடிப்பொலிகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தங்கள் தங்கள் துருப்புகளால் ஆதரிக்கப்பட்ட பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த மன்னர்களும், கேசவன் மற்றும் அர்ஜுனனின் வெடிப்பொலிகளுக்குத் தங்கள் வெடிப்பொலிகளால் பதில் சொல்ல விரும்பி, சினத்தால் தங்கள் பெரும் சங்குகளை முழக்கினர். அந்தச் சங்கொலிகளால் தூண்டப்பட்டு முன் நகர்ந்த குரு படையின் தேர் வீரர்களும், யானைகளும், குதிரைகளும், கவலையாலும், அச்சத்தாலும் நிறைந்திருந்தன. உண்மையில், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அந்தப் படையில் இருந்தோர் ஏதோ நோயுற்றவர்களைப் போலவே {மந்தமாகக்} காணப்பட்டனர்.

துணிவுமிக்க அந்த வீரர்களால் {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனால்} முழக்கப்பட்ட அந்தச் சங்கொலியின் எதிரொலியால் கலங்கடிக்கப்பட்ட குரு படையானது, இடியொலியின் எதிரொலியால் (ஏதோ ஓர் இயற்கையான நடுக்கத்தின் மூலம்) கீழே விழுந்த ஆகாயம் போல இருந்தது [1]. ஓ! ஏகாதிபதி, அந்த உரத்த ஆரவாரமானது, பத்து புள்ளிகளிலும் எதிரொலித்து, யுக முடிவின் போது அனைத்துயிர்களையும் அச்சுறுத்தும் முக்கிய நிகழ்வுகளைப் போல அந்த {கௌரவப்} படையை அச்சுறுத்தியது.

[1] "இங்கே Praviddham சொல்லப்படும் என்பது தன் வழக்கமான இடத்தில் இருந்து தளர்ந்தது, அல்லது விழுந்தது என்று பொருள் படும். இப்படியே நீலகண்டர் விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே சொல்கிறார்.

பிறகு துரியோதனன், ஜெயத்ரதனின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட அந்த எட்டு பெரும் தேர்வீரர்கள் ஆகிய அனைவரும் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} எழுபத்துமூன்று கணைகளால் வாசுதேவனையும், மூன்று பல்லங்களால் அர்ஜுனனையும், மேலும் ஐந்து பிற கணைகளால் அவனது கொடிமரத்தையும், (நான்கு) குதிரைகளையும் தாக்கினான்.

ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} துளைக்கப்பட்டதைக் கண்ட அர்ஜுனன், சினத்தால் நிறைந்து, நூறு கணைகளால் அஸ்வத்தாமனைத் தாக்கினான். பிறகு கர்ணனைப் பத்து கணைகளாலும், விருஷசேனனை மூன்றாலும் துளைத்த வீரத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, சல்லியனுக்குச் சொந்தமானதும், நாணில் பொருத்தப்பட்ட கணைகளுடன் கூடியதுமான வில்லையும் கைப்பிடிக்கும் இடத்தில் அறுத்தான். பிறகு சல்லியன், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு பாண்டுவின் மகனை {அர்ஜுனனைத்} துளைத்தான்.

பூரிஸ்ரவஸ், கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான மூன்று கணைகளால் அவனை {அர்ஜுனனைத்} துளைத்தான். கர்ணன், இருபத்துமூன்று கணைகளாலும், விருஷசேனன் ஏழு கணைகளாலும் அவனைத் துளைத்தனர். ஜெயத்ரதன் எழுபத்து மூன்று கணைகளாலும், கிருபர் பத்தாலும் அர்ஜுனனைத் துளைத்தனர். அந்தப் போரில் மத்ரர்களின் ஆட்சியாளனும் {சல்லியனும்} பத்துக் கணைகளால் பல்குனனைத் {அர்ஜுனனைத்} துளைத்தான். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அறுபது கணைகளால் அவனைத் துளைத்தான். அவன் மீண்டும் ஒரு முறை பார்த்தனை ஐந்து கணைகளாலும், வாசுதேவனை இருபது கணைகளாலும் துளைத்தான்.

மனிதர்களில் புலியும், வெண்குதிரைகளைக் கொண்டவனும், கிருஷ்ணனைத் தன் தேரோட்டியாகக் கொண்டவனுமான அர்ஜுனன், தன் கரநளினத்தை வெளிக்காட்டும்படி அவ்வீரர்கள் ஒவ்வொருவரையும் பதிலுக்குத் துளைத்தான். கர்ணனை பனிரெண்டு கணைகளாலும், விருஷசேனனை மூன்றாலும் துளைத்த பார்த்தன், சல்லியனின் வில்லை அதன் கைப்பிடியில் அறுத்தான். மேலும் சோமதத்தன் மகனை {பூரிஸ்ரவசை} மூன்று கணைகளாலும், சல்லியனைப் பத்தாலும் துளைத்த பார்த்தன் {அர்ஜுனன்}, கிருபரை இருபத்தைந்து கணைகளாலும், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} நூறாலும் துளைத்தான், மேலும் அவன் எழுபது கணைகளால் துரோணரின் மகனையும் {அஸ்வத்தாமனையும்} தாக்கினான்.

அப்போது சினத்தால் நிறைந்த பூரிஸ்ரவஸ், கிருஷ்ணனின் கையில் இருந்த சாட்டையை அறுத்து, இருபத்து மூன்று கணைகளால் அர்ஜுனனைத் தாக்கினான். பிறகு வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனன், சினத்தால் நிறைந்து, வலிமைமிக்கச் சூறாவளியொன்று மேகத்திரள்களைக் கிழிப்பதைப் போல நூற்றுக்கணக்கான கணைகளால் தன் எதிரிகளான அவர்களைச் சிதைத்தான்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்