Wednesday, July 20, 2016

அலம்புசனைக் கொன்ற கடோத்கசன்! - துரோண பர்வம் பகுதி – 108

Ghatotkacha killed Alamvusha! | Drona-Parva-Section-108 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 24)

பதிவின் சுருக்கம் : கடோத்கசனுக்கும் அலம்புசனுக்கும் இடையில் ஏற்பட்ட போர்; மாயைகளைப் பயன்படுத்திப் போரிட்ட ராட்சசர்கள்; அந்த ராட்சசர்களுக்கிடையில் நடைபெற்ற போரில் தலையிட்ட பாண்டவ வீரர்கள்; தன் தேரில் இருந்து அலம்புசனின் தேருக்குப் பறந்து சென்ற கடோத்கசன்; அலம்புசன் கொல்லப்பட்டது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பீமனிடம் இருந்து தப்பி ஓடிய அலம்புசன், களத்தின் மற்றொரு பகுதியில் போரில் அச்சமற்று உலவினான். இப்படி அவன் {அலம்புசன்} போரில் அச்சமற்று உலவி கொண்டிருந்த போது, ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} அவனை நோக்கி மூர்க்கமாக விரைந்து, கூரிய கணைகளால் அவனைத் துளைத்தான். ராட்சசர்களில் சிங்கங்களான அவ்விருவருக்கிடையில் நடைபெற்ற போரானது மிகப் பயங்கரமாக மாறியது. (பழங்காலத்தின்) சக்ரனையும் {இந்திரனையும்}, சம்பரனையும் போல அவ்விருவரும் மாயைகளை இருப்புக்கு அழைத்தனர்.


சினத்தால் தூண்டப்பட்ட அலம்புசன், கடோத்கசனைத் தாக்கினான். உண்மையில், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பாக ராட்சசர்களில் முதன்மையான அவ்விருவருக்கும் இடையிலான மோதல் இருந்தது. கடோத்கசன், இருபது நாராசங்களால் அலம்புசனின் மார்பைத் துளைத்து மீண்டும் மீண்டும் ஒரு சிங்கத்தைப் போல முழங்கினான். ஓ! மன்னா, சிரித்துக் கொண்டே அலம்புசனும், வெல்லப்படாத ஹிடிம்பையின் மகனை {கடோத்கசனை} மீண்டும் மீண்டும் துளைத்து மொத்த ஆகாயத்தையும் நிறைக்கும்படி மகிழ்ச்சியால் உரத்த முழக்கங்களை இட்டான்.

பிறகு, பெரும் வலிமை கொண்டவர்களும் ராட்சசர்களில் முதன்மையானவர்களுமான அவ்விருவரும் சினத்தால் நிறைந்தனர். தங்கள் மாய சக்திகளை வெளிப்படுத்தியபடி தங்களுக்குள் போரிட்டுக்கொண்ட அவர்களில் ஒருவராலும் தங்களில் மற்றவன் மேல் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் நூறு மாயைகளை உண்டாக்கி மற்றவனை மலைக்கச் செய்தனர். மாயைகளை உண்டாக்குவதில் சாதித்தவர்களான அவ்விருவரில், ஓ! மன்னா, கடோத்கசன் வெளிப்படுத்திய மாயைகள் அனைத்தும் அப்போரில், அது போன்றே மாயைகளை உண்டாக்கிய அலம்புசனால் அழிக்கப்பட்டன. மாயைகளை உண்டாக்குவதில் சாதித்தவனான ராட்சச இளவரசன் அலம்புசன், அப்படிப் போரிடுவதைக் கண்ட பாண்டவர்கள் கவலையால் நிறைந்து, அவனைச் சுற்றி தேர்வீரர்களில் முதன்மையானோர் பலரை நிற்கச் செய்தனர்.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீமசேனனும், பிறர் அனைவரும், அவனை {அலம்புசனை} எதிர்த்துச் சினத்துடன் விரைந்தனர். ஓ! ஐயா, எண்ணற்ற தேர்களால் அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சுற்றி வளைத்த அவர்கள், காட்டில் மனிதர்கள் கொள்ளிக்கட்டைகளுடன் ஒரு யானையைச் சூழ்ந்து கொள்வதைப் போல அனைத்துப் பக்கங்களிலும் கணைகளால் அவனை அடைத்தனர். அவனோ {அலம்புசனோ}, தன் ஆயுதங்களின் மாயையால் அந்தக் கணை மழையைக் கலங்கடித்து, காட்டுத்தீயில் இருந்து விடுபட்ட யானையைப் போல, அந்தத் தேர்களின் நெருக்கத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டான்.

அப்போது, இந்திரனின் வஜ்ரத்துக்கு ஒப்பான நாணொலியைக் கொண்ட தன் பயங்கர வில்லை வளைத்த அவன் {அலம்புசன்}, வாயுத் தேவனின் மகனை {பீமனை} இருபத்தைந்து கணைகளாலும், பீமனின் மகனை {கடோத்கசனை} ஐந்தாலும், யுதிஷ்டிரனை மூன்றாலும், சகாதேவனை ஏழாலும், நகுலனை எழுபத்துமூன்றாலும், திரௌபதி மகன்கள் ஐவரில் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளாலும் துளைத்து உரத்த முழக்கம் செய்தான். பிறகு, பீமசேனன் ஒன்பது கணைகளாலும், சகாதேவன் ஐந்தாலும் பதிலுக்கு அவனைத் துளைத்தனர். யுதிஷ்டிரன் அந்த ராட்சசனை {அலம்புசனை} ஒரு நூறு கணைகளால் துளைத்தான். நகுலன் அவனை மூன்று கணைகளால் துளைத்தான்.

ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, ஐநூறு கணைகளால் அவனை {அலம்புசனைத்} துளைத்தான். அந்த வலிமைமிக்க வீரன் {கடோத்கசன்}, எழுபது கணைகளால் மீண்டும் ஒரு முறை அலம்புசனைத் துளைத்து உரக்க முழங்கினான். ஓ மன்னா, கடோத்கசனின் அந்த உரத்த முழக்கத்தால், மலைகள், காடுகள், மரங்கள் மற்றும் நீர்நிலைகளுடன் கூடிய பூமாதேவி நடுங்கினாள். பெரும் வில்லாளிகளும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அவர்களால் அனைத்துப் பக்கங்களிலும் ஆழத் துளைக்கப்பட்ட அலம்புசன், பதிலுக்கு அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளால் துளைத்தான். அப்போது, ஓ! பாரதர்களில் தலைவரே {திருதராஷ்டிரரே}, ராட்சசனான அந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, அந்தப் போரில் கோபக்கார ராட்சசனான மற்றொருவனை {அலம்புசனை} பல கணைகளால் துளைத்தான். ஆழத் துளைக்கப்பட்டவனும், ராட்சசர்களில் வலிமைமிக்க இளவரசனுமான அந்த அலம்புசன், தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான கணக்கிலடங்காக் கணைகளை விரைவாக ஏவினான். முற்றிலும் நேராக இருந்த அந்தக் கணைகள் அனைத்தும், மலைச்சிகரத்திற்குள் நுழையும் பெரும்பலங்கொண்ட கோபக்காரப் பாம்புகளைப் போலக் கடோத்கசனின் உடலுக்குள் நுழைந்தன.

அப்போது துயரத்தால் நிறைந்த பாண்டவர்களும், ஹிடிம்பையின் மகனான கடோத்கசனும், ஓ! மன்னா, தங்கள் எதிரியின் மீது அனைத்துப் பக்கங்களில் இருந்து கூரிய கணை மேகங்களை ஏவினர். வெற்றியை விரும்பிய பாண்டவர்களால் அந்தப் போரில் இப்படித் தாக்கப்பட்ட அலம்புசன் அழிவுடையவனே, ஆகையால் அவனுக்கு {அலம்புசனுக்கு} என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போது, போரில் மகிழ்பவனான வலிமைமிக்கப் பீமசேனன் மகன் {கடோத்கசன்}, அலம்புசனின் அந்நிலையைக் கண்டு, அவனுடைய அழிவில் தன் இதயத்தை நிறுத்தினான். அவன் {கடோத்கசன்}, எரிந்த மலைச்சிகரத்திற்கோ, சிதறிப்போன கறுத்த மைக்குவியலுக்கோ ஒப்பாக இருந்த அந்த ராட்சச இளவரசனுடைய {அலம்புசனுடைய} தேரை நோக்கி மிக மூர்க்கமாக விரைந்தான்.

கோபத்தால் தூண்டப்பட்ட ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, தன் தேரில் இருந்து அலம்புசனின் தேருக்குப் பறந்து சென்று, பின்னவனை {அலம்புசனைப்} பிடித்தான். பிறகு அவன் {கடோத்சகசன்}, கருடன் பாம்பொன்றைத் தூக்குவது போல அவனை {அலம்புசனைத்} தேரில் இருந்து தூக்கினான். இப்படித் தன் கரங்களால் அவனை {அலம்புசனை} இழுத்த அவன் {கடோத்கசன்}, மீண்டும் மீண்டும் சுழற்றத் தொடங்கி, ஒரு மனிதன் பானையொன்றைப் பாறை மீது வீசித் துண்டுகளாக நொறுக்குவதைப் போல, அவனைப் பூமியில் வீசிச் சிதறச் செய்தான். பலம், சுறுசுறுப்பு, பெரும் ஆற்றல் ஆகியவற்றைக் கொண்ட அந்தப் பீமசேனன் மகன் {கடோத்கசன்}, போரில் கோபத்தால் தூண்டப்பட்டுத் துருப்புகள் அனைத்தின் அச்சத்தையும் தூண்டினான்.

இவ்வாறு அச்சந்தரும் ராட்சசனான அலம்புசன், அங்கங்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு, எலும்புகள் துண்டு துண்டாகப் போகும்படி வீரக் கடோத்கசனால் கொல்லப்பட்டது, நெடிய சால மரம் ஒன்று காற்றால் வேரோடு சாய்க்கப்பட்டதற்கு ஒப்பாக இருந்தது. அந்த இரவு உலாவியின் {அலம்புசனின்} படுகொலையால் பார்த்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் சிங்க முழக்கங்களைச் செய்தபடி தங்கள் ஆடைகளை அசைத்தனர். எனினும், ஓ! ஏகாதிபதி, ராட்சசர்களில் வலிமைமிக்க இளவரசனான அலம்புசன் கொல்லப்பட்டு, நொறுங்கிய மலை போலக் கிடப்பதைக் கண்ட துணிச்சல்மிக்க உமது வீரர்கள், "ஓ!" என்றும், "ஐயோ!" என்றும் கதறினர்.

ஆவல் கொண்ட மனிதர்கள், (மேலும் எரிய முடியாத) கரித்துண்டைப் போல, பூமியில் ஆதரவற்றுக் கிடக்கும் அந்த ராட்சசனைக் காணச் சென்றனர். அப்போது, வலிமைமிக்க உயிரினங்களில் முதன்மையானவனும், ராட்சசனுமான கடோத்கசன், இப்படித் தன் எதிரியைக் கொன்றதும், (அசுரன்) வலனைக் கொன்ற வாசவனை {இந்திரனைப்} போல உரக்க முழங்கினான். மிகக் கடினமான சாதனையைச் செய்த கடோத்கசன், தன் தந்தைமாராலும், தன் உறவினர்களாலும் மிகவும் புகழப்பட்டான். உண்மையில் அலம்புசக் கனியொன்றைப் போல அந்த அலம்புசனை வீழ்த்திய அவன் {கடோத்கசன்} தன் நண்பர்களோடு சேர்ந்து மிகவும் மகிச்சியடைந்தான். அங்கே (பாண்டவப் படையில்), பல்வேறு வகைகளிலான கணைகளின் ஒலிகளாலும், சங்கொலிகளாலும் பெரும் ஆரவாரம் எழுந்தது. அவ்வொலியைக் கேட்ட கௌரவர்களும் பதிலுக்கு உரத்த முழக்கங்களைச் செய்து, அதன் எதிரொலிகளால் முழுப் பூமியையும் நிறைத்தனர்" {என்றான் சஞ்சயன்} [1].

[1] இந்தப் பகுதியைப் பொறுத்தவரை, கங்குலியின் பதிப்பும், மன்மதநாததத்தரின் பதிப்பும் வரிகளாலும், வர்ணனைகளாலும் ஒத்துப் போகின்றன. வேறொரு பதிப்பில் முற்றிலும் வேறு வகையில், அதிக விவரங்களைக் கொண்ட வர்ணனைகளும், அதிக வரிகளும் இருக்கின்றன.



ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்