Saturday, July 23, 2016

சாத்யகி, யுதிஷ்டிரன் உரையாடல்! - துரோண பர்வம் பகுதி – 110

The conversation of Satyaki and Yudhishthira! | Drona-Parva-Section-110 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 26)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனின் பாதுகாப்புக்காகவே அர்ஜுனனால் தான் நியமிக்கப்பட்டிருப்பதாக யுதிஷ்டிரனிடம் சொன்ன சாத்யகி; யுதிஷ்டிரனின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் அர்ஜுனனை நோக்கிச் செல்லப்போவதில்லை என்ற சாத்யகி; யுதிஷ்டிரன் சொன்ன சமாதானம்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "முழுப் பாசத்தைக் கொண்டதும், ஏற்புடையதும், இனியவொலிகளால் நிரம்பியதும், மனத்திற்கு உகந்ததும், மகிழ்ச்சிகராமனதும், நியாயமானதுமான இவ்வார்தைகளை நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் சொன்னதும், ஓ! பாரதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} மறுமொழியாக, சிநிக்களில் காளையான அந்தச் சாத்யகி, "ஓ! மங்கா மகிமை கொண்டவரே {யுதிஷ்டிரரே}, நீதி நிறைந்ததும் {நியாயமானதும்}, மகிழ்ச்சிகரமானதும், பல்குனரின் {அர்ஜுனரின்} புகழுக்கு ஏற்றதுமான நீர் சொன்ன வார்த்தைகள் அனைத்தையும் கேட்டேன். உண்மையில் இத்தகு நேரத்தில், ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, (உமக்கு) அர்ப்பணிப்புள்ள என்னைப் போன்ற ஒருவனைக் காண்கையில், பார்த்தருக்கு நீர் கட்டளையிடுவதைப் போலவே அவனுக்கும் கட்டளையிடுவதே உமக்குத் தகும். என்னைப் பொறுத்தவரை, தனஞ்சயருக்காக {அர்ஜுனருக்காக} என் உயிரையும் விட நான் தயாராக இருக்கிறேன். மேலும், நீர் கட்டளையிட்டால், இந்தப் போரில் எந்தக் காரியைத்தைத் தான் நான் செய்யமாட்டேன்? இந்தப் பலவீனமான (திருதராஷ்டிரப்) படையைக் குறித்து நான் என்ன சொல்வேன்? ஓ! மனிதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, உம்மால் தூண்டப்பட்டால், தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுடன் கூடிய மூன்று உலகங்களோடும் போரிட நான் தயாராக இருக்கிறேன்.


இன்று நான் சுயோதனனின் மொத்தப் படையுடனும் போரிட்டுப் போரில் அதை வெல்வேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். பாதுகாப்புடன் இருக்கும் தனஞ்சயரை {அர்ஜுனரை}, பாதுகாப்பாக அடையும் நான், ஓ! மன்னா, ஜெயத்ரதன் கொல்லப்பட்ட பிறகே உமது முன்னிலைக்குத் திரும்புவேன். எனினும், ஓ! மன்னா, வாசுதேவர் {கிருஷ்ணர்} மற்றும் புத்திசாலியான அர்ஜுனர் ஆகியோர் சொன்ன வார்த்தைகளைக் குறித்து நான் உமக்குச் சொல்ல வேண்டும். நமது போர்வீரர்கள் அனைவரின் மத்தியிலும், வாசுதேவர் {கிருஷ்ணர்} கேட்டுக் கொண்டிருக்கும்போது, அர்ஜுனர் என்னை உறுதியுடன் (உறுதிமிக்க இவ்வார்த்தைகளால்) மீண்டும் மீண்டும் வேண்டிக் கொண்டோர்.

{அர்ஜுனர்}, "ஓ! மாதவா {சாத்யகி}, இன்று நான் ஜெயத்ரதனைக் கொல்லும் வரை, போரில் மேன்மையான தீர்மானத்துடன் மன்னரை {யுதிஷ்டிரரைக்} கவனமாகப் பாதுகாப்பாயாக. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {சாத்யகி}, உன்னிடமோ, பெரும் தேர்வீரனான பிரத்யும்னனிடமோ ஏகாதிபதியை {யுதிஷ்டிரரின் பாதுகாப்பை} ஒப்படைத்தால், கவலையற்ற இதயத்துடன் ஜெயத்ரதனை நோக்கிச் செல்வேன். குருக்களில் முதன்மையானவராகக் கருதப்படும் போர்வீரரானத் துரோணர் எவ்வாறு போரிடுவார் என்பதை நீ அறிவாய். ஓ! தலைவா {சாத்யகி}, அனைவருக்கு முன்னிலையிலும் அவர் ஏற்ற உறுதிமொழியையும் நீ அறிவாய். அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, மன்னரை {யுதிஷ்டிரரைக்} கைப்பற்ற எப்போதும் ஆவலாக இருக்கிறார். போரில் அவர் {துரோணர்}, மன்னர் யுதிஷ்டிரரைப் பீடிக்கத் தகுந்தவராவார்.

மனிதர்களில் சிறந்தவரும், நீதிமானுமான மன்னர் யுதிஷ்டிரரின் பாதுகாப்பில் உன்னை நியமித்துவிட்டு, நான் இன்று ஜெயத்ரதனை அழிக்கச் செல்வேன். ஓ! மாதவா {சாத்யகி}, ஜெயத்ரதனைக் கொன்றுவிட்டு நான் விரைவில் திரும்புவேன். நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரைப் பலவந்தமாகக் கைப்பற்றுவதில் துரோணர் வெல்லாதவாறு நீ பார்த்துக் கொள்வாயாக. ஓ! மாதவா, பரத்வாஜர் மகனால் {துரோணரால்} யுதிஷ்டிரர் கைப்பற்றப்பட்டால், ஜெயத்ரதனைக் கொல்வதில் என்னால் வெல்ல முடியாது, என் துயரமும் அதிகமாகும். மனிதர்களில் சிறந்தவரும், பாண்டுவின் உண்மை நிறைந்த மகனுமான அவர் {யுதிஷ்டிரர்} கைப்பற்றப்பட்டால், நான் மீண்டும் காட்டுக்கே செல்வேன் என்பது தெளிவானதாகும் {நிச்சயமாகும்}. எனவே, சினத்தால் தூண்டப்பட்ட துரோணர், போரில் யுதிஷ்டிரரைப் பிடிப்பதில் வென்றுவிட்டால், ஜெயத்ரதனை நான் வென்றாலும், அஃது எந்தப் பலனையும் உண்டாக்காது என்பது வெளிப்படையானது. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! மாதவா {சாத்யகி}, எனவே, எனக்கு ஏற்புடையதைச் செய்வதற்காகவும், எனது வெற்றி மற்றும் புகழுக்காவும், போரில் மன்னரை {யுதிஷ்டிரரைக்} காப்பாயாக" என்றார் {அர்ஜுனர்}.

எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, பரத்வாஜர் மகன் {துரோணர்} மூலம் தொடரும் அச்சத்தின் விளைவாக, சவ்யசச்சின் {அர்ஜுனர்} உம்மை {பாதுகாப்பதை} என்னிடம் நம்பிக்கையின் பேரில் ஒப்படைத்தார். ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, ஓ! தலைவா {யுதிஷ்டிரரே}, ருக்மினியின் மகனை (பிரத்யும்னனைத்) தவிரப் போரில் துரோணருக்குப் பொருத்தமான வேறு எவனும் இல்லை என்பதை நானே தினமும் பார்க்கிறேன். புத்திசாலியான பரத்வாஜரின் மகனுக்குப் போரில் நானும் பொருத்தமானவனாகவே கருதப்படுகிறேன். எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, என் மதிப்பை நானே பொய்த்துக் கொள்வதோ, எனது ஆசான் (அர்ஜுனரின்) கட்டளைகளை அலட்சியம் செய்வதோ, உம்மை விட்டு அகல்வதோ கூடாது என்பது தெளிவாகிறது. ஊடுருவமுடியாத கவசம்பூண்டிருக்கும் ஆசான் (துரோணர்), தன் கரநளினத்தின் விளைவால் போரில் உம்மை அடைந்து, சிறு பறவையுடன் {விளையாடும்} சிறுவனைப் போல உம்முடன் விளையாடுவார்.

மகரக் கொடி தாங்கிய கிருஷ்ணரின் மகன் {பிரத்யும்னன்} இங்கே இருந்தால், அர்ஜுனரைப் போலவே அவன் உம்மைப் பாதுகாப்பான் என்பதால், அவனிடம் {உம்மை பாதுகாக்கும் பணியை} ஒப்படைத்திருக்க முடியும். {ஆனால் இப்போதோ}, நீரே உம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கும். நான் சென்றுவிட்டால், உம்மைப் பாதுகாப்பது யார்? நான் அர்ஜுனரிடம் செல்லும்போது, துரோணரை எதிர்த்துச் செல்லக்கூடியவர் யார்? ஓ! மன்னா,  அர்ஜுனனைக் குறித்த அச்சமேதும் இன்று உமதாக வேண்டாம். எந்தச் சுமை எவ்வளவு கனமானதாக இருந்தாலும் அவர் ஒருபோதும் {அர்ஜுனர்} உற்சாகமிழப்பதில்லை.

அவருக்கு {அர்ஜுனருக்கு} எதிரான போர்வீரர்களான சௌவீரகர்கள், சிந்தவப் பௌரவர்கள், வடக்கத்தியர், தெற்கத்தியர், கர்ணனின் தலைமையிலானோர் ஆகியோரின் தேர்வீரர்களில் முதன்மையானோர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வந்தாலும் அர்ஜுனருக்குப் பதினாறில் ஒரு பங்குக்கும் அவர்கள் ஈடாகமாட்டார்கள். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், அனைத்து ராட்சச இனங்கள், கின்னரர்கள், பெரும்பாம்புகள், உண்மையில் அசைவன, அசையாதன ஆகிய அனைத்தையும் கொண்ட மொத்த உலகமும் அவருக்கு எதிராக ஒன்றாகத் திரண்டு எழுந்தாலும், போரில் அர்ஜுனருக்கு அவர்கள் ஈடாகமாட்டார்கள். ஓ! மன்னா, இஃதை அறிந்து கொண்டு தனஞ்சயர் நிமித்தமான உமது அச்சத்தை விலக்குவீராக. கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவர்களும், பெரும் வில்லாளிகளுமான வீரக் கிருஷ்ணர்கள் {வீர கருப்பர்கள்} இருவரும் எங்கிருக்கிறார்களோ, அங்கே அவர்களது நோக்கத்திற்குச் சிறு தடங்கலும் ஏற்பட முடியாது.

உமது தம்பியின் {அர்ஜுனரின்} தெய்வீக வலிமை, ஆயுதங்களில் சாதனை, வளம், போரில் கோபம், நன்றியுணர்வு மற்றும் கருணையை நினைத்துப் பாரும். ஓ! மன்னா, அர்ஜுனரிடம் செல்வதற்காக நான் இந்த இடத்தைவிட்டு அகன்றால், போரில் துரோணர் வெளிக்காட்டப் போகும் ஆயுதங்களின் அற்புத அறிவையும் நினைத்துப் பாரும். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, ஆசான் {துரோணர்} உம்மைக் கைப்பற்றுவதில் பேராவல் கொண்டிருக்கிறார். மேலும், ஓ! மன்னா, ஓ! பாரதரே, தன் உறுதிமொழிக்கு நன்மை செய்வதையும் ஆவலுடன் விரும்புகிறார். ஓ! மன்னா, உமது பாதுகாப்பில் கவனமாக இருப்பீராக. நான் சென்ற பிறகு உம்மைப் பாதுகாப்பவர் யார்? யாரிடம் நம்பிக்கை வைத்து, பிருதையின் மகனான பல்குனரை {குந்தியின் மகன் அர்ஜுனரை} நோக்கி நான் செல்வது? {அந்த நம்பிக்கைக்குரிய} அவர் யார்? ஓ! பெரும் மன்னா, ஓ! குரு குலத்தவரே {யுதிஷ்டிரரே}, இந்தப் பெரும்போரில் உம்மை எவரிடமாவது ஒப்படைக்காமல், நிச்சயம் நான் அர்ஜுனரிடம் செல்ல மாட்டேன் என்பதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். ஓ! புத்திசாலி மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, ஓ! மன்னா, உமது நுண்ணறிவின் துணை கொண்டு, அனைத்துக் கண்ணோட்டங்களில் இருந்தும் சிந்தித்து, உயர்ந்த நன்மையைத் தரவல்லது எது என்பதை உறுதி செய்த பிறகு எனக்குக் கட்டளையிடுவீராக" என்றான் {சாத்யகி}.

இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன் {சாத்யகியிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! மாதவா, நீ சொன்னது போலவே தான் இருக்கிறது. எனினும், ஓ! ஐயா, இவையனைத்தாலும் கூட, என் இதயம் அர்ஜுனன் நிமித்தமாக அமைதியை அடையவில்லை. என்னைப் பாதுகாத்துக் கொள்வதில் பெரும் முன்னெச்சரிக்கைகளை நான் எடுத்துக் கொள்வேன். என்னால் ஆணையிடப்படும் நீ தனஞ்சயன் {அர்ஜுனன்} எங்கே சென்றானோ அங்கே செல்வாயாக. போரில், என் பாதுகாப்புடன், அர்ஜுனனை நோக்கி நீ செல்ல வேண்டிய அவசியத்தை {ஒப்பிட்டு} என் புத்தியால் ஆராய்ந்தால் பின்னதே எனக்கு விரும்பத்தக்கதாக இருக்கிறது. எனவே, தனஞ்சயன் எங்குச் சென்றானோ அங்கே செல்ல நீ தயாராவாயாக.

வலிமைமிக்கப் பீமன் என்னைப் பாதுகாப்பான். தன் உடன் பிறந்த தம்பிகளுடன் கூடிய பிருஷதன் மகனும் {திருஷ்டத்யும்னனும்}, வலிமைமிக்க மன்னர்கள் அனைவரும், திரௌபதியின் மகன்களும் என்னைப் பாதுகாப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஓ! ஐயா, கேகயச் சகோதரர்கள் ஐவர், ராட்சசன் கடோத்கசன், விராடன், துருபதன், வலிமைமிக்கத் தேர்வீரனான சிகண்டி, பெரும் பலத்தைக் கொண்ட திருஷ்டகேது, குந்திபோஜன், நகுலன், சகாதேவன், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் ஆகிய இவர்கள் அனைவரும் என்னை மிகக் கவனமாகப் பாதுகாப்பார்கள் என்பதிலும் ஐயமில்லை. தன் துருப்புகளுக்குத் தலைமையில் இருக்கும் துரோணராலும், கிருதவர்மனாலும் கூட, போரில் நம்மைத் தாக்குவதிலோ, என்னைப் பீடிப்பதிலோ வெல்ல முடியாது.

எதிரிகளை எரிப்பவனான திருஷ்டத்யும்னன், தன் ஆற்றலை வெளிப்படுத்தி, கடலைத் தடுக்கும் கரையைப் போலக் கோபக்காரத் துரோணரைத் தடுப்பான். பகைவர்களைக் கொல்பவனான பிருஷதன் மகன் எங்கிருக்கிறானோ, அங்கே துரோணரால் நமது துருப்புகளைப் பலவந்தமாக மீறிச் செல்ல முடியாது. இந்தத் திருஷ்டத்யும்னன், கவசம் பூண்டவரும், வில், கணைகள், வாள் ஆகியவற்றைத் தரித்தவரும், விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவருமான துரோணரின் அழிவுக்காகவே நெருப்பில் இருந்து உதித்தவனாவான். ஓ! சிநியின் பேரனே {சாத்யகி}, என்னைக் குறித்து வருத்தப்படாமல், கவலையற்ற இதயத்துடன் செல்வாயாக. போரில் திருஷ்டத்யுமனன், கோபக்காரத் துரோணரைத் தடுப்பான்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்