Monday, August 29, 2016

பீமனிடம் மீண்டும் புறமுதுகிட்ட கர்ணன்! - துரோண பர்வம் பகுதி – 135

Karna once more turned his back upon Bhima! | Drona-Parva-Section-135 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 51)

பதிவின் சுருக்கம் : தன்னையே குற்றவாளியாகக் கருதிய கர்ணன்; கர்ணனின் வில்லை அறுத்து, அவனது குதிரைகளையும், தேரோட்டியையும் கொன்ற பீமன்; மீண்டும் கர்ணனின் வில்லை அறுத்தது; பீமனின் கவசத்தை அறுத்த கர்ணன்; பீமசேனனிடம் மீண்டும் புறமுதுகிட்ட கர்ணன்; பீமன் மீது தன் தம்பிகளை ஏவிய துரியோதனன்; அவர்களில் எழுவரைக் கொன்ற பீமன்; விதுரனின் வார்த்தைகளை நினைத்த கர்ணன்; கர்ணனின் கவசத்தை அறுத்த பீமன்;பீமனுக்கும் கர்ணனுக்கும் இடையில் மீண்டும் ஏற்பட்ட கடும் மோதல்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது மகன்கள் (களத்தில்) நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பதைக் கண்டு, பெரும் ஆற்றலைக் கொண்ட கர்ணன், பெரும் கோபத்தால் நிறைந்து, தன் உயிரில் நம்பிக்கையற்றவனானான்.(1) அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, பீமனால் தன் கண்களுக்கு எதிரிலேயே போரில் கொல்லப்பட்ட உமது மகன்களைக் கண்டு தன்னையே குற்றவாளியாகக் கருதினான்.(2) அப்போது பீமசேனன், முன்னர்க் கர்ணனால் இழைக்கப்பட்ட தீமைகளை நினைவுகூர்ந்து, சினத்தால் நிறைந்து, திட்டமிட்ட கவனத்தோடு {பாதுகாப்போடு} கூரிய கணைகள் பலவற்றால் கர்ணனைத் துளைக்கத் தொடங்கினான்.(3)


பிறகு கர்ணன், சிரித்துக் கொண்டே ஐந்து கணைகளால் பீமனைத் துளைத்து, தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான எழுபது கணைகளால் மீண்டும் அவனை {பீமனைத்} துளைத்தான்.(4) கர்ணனால் ஏவப்பட்ட அக்கணைகளை அலட்சியம் செய்த விருகோதரன் {பீமன்}, நேரான ஒரு நூறு {100} கணைகளால் அந்தப் போரில் ராதையின் மகனை {கர்ணனைத்} துளைத்தான்.(5) மீண்டும் ஐந்து கூரிய கணைகளால் அவனது முக்கிய அங்கங்களைத் துளைத்த பீமன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஒரு பல்லத்தைக் கொண்டு அந்தச் சூத மகனின் {கர்ணனின்} வில்லை அறுத்தான்.(6) பிறகு மகிழ்ச்சியற்றவனான கர்ணன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, தன் கணைகளால் அனைத்துப் பக்கங்களிலும் பீமசேனனை மறைத்தான்.(7)


அப்போது பீமன், கர்ணனின் குதிரைகள் மற்றும் தேரோட்டியைக் கொன்று, இப்படியே கர்ணனின் அருஞ்செயல்களுக்கு எதிர்வினையாற்றி உரத்த சிரிப்பொன்றைச் சிரித்தான்.(8) பிறகு மனிதர்களில் காளையான அந்தப் பீமன், தன் கணைகளால் கர்ணனின் வில்லை அறுத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உரத்த நாணொலி கொண்டதும், கைப்பிடியில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்த வில்லானது (அவனது {கர்ணனின்} கரங்களில் இருந்து) கீழே விழுந்தது.(9) அப்போது வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன் தன் தேரில் இருந்து இறங்கி அந்தப் போரில் ஒரு கதாயுதத்தை எடுத்து, அதைப் பீமனின் மீது கோபத்துடன் வீசினான்.(10) ஓ மன்னா, தன்னை நோக்கி வேகமாக வரும் அந்தக் கதாயுதத்தைக் கண்ட விருகோதரன் {பீமன்}, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதைத் தன் கணைகளால் தடுத்தான்.(11)

பிறகு, பெரும் ஆற்றலைக் கொடையாகக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, சூதன் மகனின் {கர்ணனின்} உயிரை எடுக்க விரும்பி, பெரும் சுறுசுறுப்புடன் முயன்று, பின்னவன் {கர்ணன்} மீது ஓராயிரம் கணைகளை ஏவினான்.(12) எனினும் கர்ணன், அந்தப் போரில், அந்தக் கணைகள் அனைத்தையும் தடுத்து, தன் கணைகளால் பீமனின் கவசத்தை அறுத்தான்.(13) பிறகு அவன் {கர்ணன்}, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இருபத்தைந்து குறுங்கணைகளால் பீமனைத் துளைத்தான். இவை யாவும் காண மிக அற்புதமாக இருந்தன.(14) பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்ட பீமன், ஒன்பது நேரான கணைகளை அந்தச் சூதனின் மகன் {கர்ணன்} மீது ஏவினான்.(15) கர்ணனின் கவசத்தையும், வலக்கரத்தையும் துளைத்துச் சென்ற அந்தக் கூரிய கணைகள், எறும்புப் புற்றுக்குள் நுழையும் பாம்புகளைப் போலப் பூமிக்குள் நுழைந்தன. (16) பீமசேனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைமாரியால் மறைக்கப்பட்ட கர்ணன், மீண்டும் பீமசேனனிடம் புறமுதுகிட்டான்.(17)

சூதனின் மகன் {கர்ணன்} புறமுதுகிடுவதையும், குந்தியின் மகனுடைய {பீமனின்} கணைகளால் எங்கும் மறைக்கப்பட்டுக் காலாளாக ஓடுவதையும் கண்ட துரியோதனன்,(18) {தன் தம்பிகளிடம்} “ராதையின் மகனுடைய {கர்ணனின்} தேரை நோக்கி அனைத்துப் பக்கங்களில் இருந்து விரைந்து செல்வீராக” என்றான். பிறகு, ஓ! மன்னா, தங்கள் அண்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு ஆச்சரியமடைந்த உமது மகன்கள், கணை மாரியை ஏவியபடியே போரில் பாண்டுவின் மகனை {பீமனை} நோக்கி விரைந்தனர்.(19) அவர்கள் {துரியோதனனின் அந்தத் தம்பிகள்}, சித்ரன், உபசித்ரன், சித்ராக்ஷன் [1], சாருசித்ரன், சராஸனன், சித்ராயுதன், சித்ரவர்மன் ஆகியோராவர். அவர்கள் அனைவரும் போர்க்கலையின் அனைத்து முறைகளையும் அறிந்தவர்களாக இருந்தனர். எனினும், வலிமைமிக்கத் தேர்வீரனான பீமசேனன், இப்படித் தன்னை எதிர்த்து விரைந்து வரும் அந்த உமது மகன்கள் ஒவ்வொருவரையும் ஒரே கணையால் {ஒவ்வொரு கணைகளால்} வீழ்த்தினான். உயிரை இழந்த அவர்கள், சூறாவளியால் வேரோடு சாய்க்கப்பட்ட மரங்களைப் போலக் கீழே பூமியில் விழுந்தனர் [2].(20-22)

[1] கங்குலியின் பதிப்பில் இப்பெயர் விடுபட்டிருக்கிறது. வேறொரு பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இப்பெயர் இடம்பெற்றிருக்கிறது.

[2] சென்ற பதிவின் அடிக்குறிப்பு [3]ல், போர் தொடங்கிய நாளில் இருந்து, துரியோதனின் தம்பிகளில் 42 பேரைப் பீமன் கொன்றிருப்பதாகக் கண்டோம். இப்போது இந்தப்பதிவில் கொல்லப்பட்ட சித்ரன், உபசித்ரன், சித்ராக்ஷன், சாருசித்ரன், சராஸனன், சித்ராயுதன், சித்ரவர்மன் ஆகிய எழுவரைச் சேர்த்து இதுவரை பீமன், திருதராஷ்டிரன் மகன்களில் 49 பேரைக் கொன்றிருக்கிறான்.

வலிமைமிக்கத் தேர்வீரர்களான அந்த உமது மகன்கள் அனைவரும் இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்ட கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அழுகை நிறைந்த முகத்துடன், விதுரனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தான்.(23) முறையான சாதனங்களுடன் கூடிய மற்றொரு தேரில் ஏறியவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான கர்ணன், போரில் பாண்டுவின் மகனை {பீமனை} எதிர்த்து வேகமாகச் சென்றான்.(24) தங்கச் சிறகுகளுடன் கூடிய கூரிய கணைகளால் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்ட அவ்விரு வீரர்களும், சூரியனின் கதிர்கள் ஊடுருவிய இரு மேகத் திரள்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(25)

அப்போது சினத்தால் தூண்டப்பட்ட பாண்டுவின் மகன் {பீமன்}, பெரும் கூர்மை மற்றும் கடும் சக்தியைக் கொண்ட முப்பத்தாறு {36} பல்லங்களால் சூதன் மகனின் {கர்ணனின்} கவசத்தை அறுத்தான்.(26) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சூதனின் மகனும் {கர்ணனும்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ஐம்பது நேரான கணைகளால் குந்தியின் மகனை {பீமனைத்} துளைத்தான்.(27) செஞ்சந்தனக் குழம்பைத் தங்கள் மேனியில் பூசியிருந்த அவ்விரு வீரர்களும், கணைகளால் ஒருவருக்கொருவர் பல காயங்களை உண்டாக்கி சிந்திய குருதியால் மறைக்கப்பட்டு, உதயச் சூரியனையும், சந்திரனையும் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(28) கணைகளால் அறுக்கப்பட்ட கவசங்களுடன் தங்கள் உடல்கள் குருதியால் மறைக்கப்பட்டிருந்த கர்ணனும், பீமனும், தங்கள் சட்டைகளில் இருந்து அப்போதுதான் விடுபட்ட இரு பாம்புகளைப் போலத் தெரிந்தனர்.(29) உண்மையில், தங்கள் பற்களால் ஒன்றையொன்று சிதைத்துக் கொள்ளும் இரு புலிகளைப் போல மனிதர்களில் புலிகளான அவ்விருவரும், தங்கள் கணைகளால் ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர். மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகத் திரள்களைப் போல அவ்விரு வீரர்களும் தங்கள் கணைகளை இடையறாமல் பொழிந்தனர்.(30)

எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும், தங்கள் தந்த முனைகளால் ஒன்றையொன்று கிழித்துக் கொள்ளும் இரு யானைகளைப் போலத் தங்கள் கணைகளால் தங்கள் ஒவ்வொருவரின் உடல்களையும் கிழித்துக் கொண்டனர்.(31) ஒருவரை நோக்கி ஒருவர் முழங்கி தங்கள் கணைகளை ஒருவர் மேல் ஒருவர் பொழிந்த முதன்மையான அவ்விரு தேர்வீரர்களும், தங்கள் தேர்களைக் கொண்டு வட்டங்களாலான அழகிய தடங்களை உண்டாக்கச் செய்து ஒருவரோடொருவர் விளையாடுவதாகத் தெரிந்தது.(32) அவர்கள், பருவகாலத்தில் உள்ள பசுவின் முன்னிலையில் ஒன்றை நோக்கி ஒன்று முழங்கும் வலிமைமிக்க இரு காளைகளுக்கு ஒப்பாக இருந்தனர். உண்மையில், மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவரும், பெரும் ஆற்றலைக் கொண்ட வலிமைமிக்க இரு சிங்களைப் போலவே தெரிந்தனர்.(33) கோபத்தால் சிவந்த தங்கள் கண்களால் ஒருவரையொருவர் நோக்கியவர்களும், பெரும் சக்தியைக் கொண்டவர்களுமான அவ்விரு போர்வீரர்களும், சக்ரனையும் {இந்திரனையும்}, விரோசனன் மகனையும் {பிரகலாதனையும்} போலப் போரிட்டனர்.(34)

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன், வில்லைத் தன்னிரு கரங்களால் வளைத்தபோது, மின்னலின் சக்தியூட்டப்பட்ட மேகம் ஒன்றைப் போலவே தெரிந்தான்.(35) பிறகு வில்லின் நாணொலியைத் தன் இடியொலியாகவும், இடையறாத கணை மாரியைத் தன் மழைப்பொழிவாகவும் கொண்ட அந்த வலிமைமிக்கப் பீம மேகம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கர்ண மலையை மறைத்தது.(36) பயங்கர ஆற்றலைக் கொண்டவனும் பாண்டுவின் மகனுமான அந்தப் பீமன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மீண்டும் ஒரு முறை தன் வில்லில் இருந்து ஏவப்பட்ட ஓராயிரம் கணைகளால் கர்ணனை மறைத்தான்.(37) கங்க இறகுகளால் அமைந்த சிறகுகளைக் கொண்ட கணைகளைக் கொண்டு அவன் {பீமன்} கர்ணனை மறைத்த போது, உமது மகன்கள் இயல்புக்கு மீறிய அவனது ஆற்றலைக் கண்டனர்.(38)

பார்த்தனுக்கும் {அர்ஜுனனுக்கும்}, சிறப்புமிக்கக் கேசவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, சாத்யகிக்கும், (அர்ஜுனன் தேருடைய இரண்டு) சக்கரங்களைப் பாதுகாப்பவர்களான இருவருக்கும் (யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகியோருக்கும்) மகிழ்ச்சியை ஊட்டியபடி, இப்படியே பீமன் கர்ணனுடன் போரிட்டான்.(39) பீமனின் ஆற்றல், கரங்களின் வலிமை, விடாமுயற்சி ஆகியவற்றை அறிந்தவர்களான உமது மகன்கள் அனைவரும் மகிழ்ச்சியற்றவர்களானார்கள்” {என்றான் சஞ்சயன்}.(40)
--------------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 135ல்  வரும் மொத்த சுலோகங்கள் 40



ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்