Monday, September 19, 2016

அர்ஜுனன் ஏற்ற மற்றொரு சபதம்! - துரோண பர்வம் பகுதி – 147

Another vow by Arjuna! | Drona-Parva-Section-147 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 62)

பதிவின் சுருக்கம் : கர்ணனால் அவமதிக்கப்பட்ட பீமன், அவனைக் கொல்ல வேண்டி அர்ஜுனனிடம் கேட்டது; ஆண்மை நிறைந்த வார்த்தைகளால் கர்ணனை நிந்தித்த அர்ஜுனன்; கர்ணனின் முன்னிலையில் கர்ணனின் மகனைக் கொல்வதாகச் சபதமேற்ற அர்ஜுனன்; ஜெயத்ரதன் கொலைக்காக அர்ஜுனனை வாழ்த்திய கிருஷ்ணன்; கிருஷ்ணனின் மகிமைக்கு தன் வெற்றியை அர்ப்பணித்த அர்ஜுனன்; அந்த நாளின் விளைவுகளை அர்ஜுனனுக்குச் சுட்டிக் காட்டிய அர்ஜுனன்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “போரில், அவர்கள் {பாண்டவர்கள்} தரப்பிலும், என் தரப்பிலும் {கௌரவர்கள் தரப்பிலும்} உள்ள வீரர்களின் நிலை இவ்வாறு இருந்த போது, பீமன் என்ன செய்தான்? ஓ! சஞ்சயா, யாவையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.(1)



சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பீமசேனன் தேரற்றவனாக்கப்பட்ட பிறகு, கர்ணனின் வார்த்தைகளால் பீடிக்கப்பட்ட அந்த வீரன் {பீமன்}, சினத்தால் நிறைந்து பல்குனனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே கர்ணன் என்னிடம் மீண்டும் மீண்டும், “அலியே, மூடனே, பெருந்தீனிக்காரா, ஆயுதங்களில் திறனற்றவனே, குழந்தாய், போரின் சுமையைத் தாங்கிக் கொள்ள முடியாத நீ போரிடாதே” என்று சொன்னான். என்னிடம் அப்படிச் சொல்பவன் என்னால் கொல்லப்பட வேண்டும். ஓ! பாரதா {அர்ஜுனா}, கர்ணன் அந்த வார்த்தைகளை என்னிடம் சொல்லியிருக்கிறான்.(2-4) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நான் உன்னுடன் சேர்ந்து ஏற்ற உறுதிமொழியை {சபதத்தை} நீ அறிவாய். என்னால் அப்போது சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூர்வாயாக. ஓ! மனிதர்களில் சிறந்தவனே, ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, உன் சபதத்தைப் போலவே என் சபதமும் பொய்யாக்கப்படாதவாறு நடந்து கொள்வாயாக. ஓ! தனஞ்சயா {அர்ஜுனா} எதனால் என் சபதம் உண்மையாகுமோ அதைச் செய்வாயாக.(5, 6)

பீமனின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், அளக்க முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான அர்ஜுனன், அந்தப் போரில் கர்ணனின் அருகில் சென்று,(7) “ஓ! கர்ணா, நீ தவறான பார்வையைக் கொண்டிருக்கிறாய். ஓ! சூதனின் மகனே {கர்ணா}, உன்னை நீயே புகழ்ந்து கொள்கிறாய். தீய புரிதல் கொண்டவனே, இப்போது நான் உன்னிடம் சொல்வதைக் கேட்பாயாக.(8) வீரர்கள் போரில் வெற்றி, அல்லது தோல்வி என்ற இரண்டையே அடைகிறார்கள். ஓ! ராதையின் மகனே {கர்ணா}, இவைகளில் இரண்டும் நிச்சயமற்றவையே. போரில் ஈடுபடும் இந்திரனுக்கே வேறு கதி கிடையாது. யுயுதானனால் {சாத்யகியால்} தேரற்றவனாக்கப்பட்டு, உணர்வுகளை இழந்த நீ கிட்டத்தட்ட மருணத்தருவாயில் இருந்தாய். எனினும், உன்னைக் கொல்வதாக நான் ஏற்றிருந்த சபதத்தை நினைவுகூர்ந்த அந்த வீரன் {சாத்யகி}, உன் உயிரை எடுக்காமலேயே உன்னை விட்டான்.(10) பீமசேனரை தேரற்றவனாக்குவதில் நீ வென்றாய் என்பது உண்மையே. எனினும், ஓ! ராதையின் மகனே {கர்ணா}, அவ்வீரரை {பீமரை} நீ இகழ்ந்தது பாவச் செயலாகும்.(11) உண்மையான நேர்மையும், துணிச்சலும் கொண்ட மனிதர்களில் காளையர், ஓர் எதிரியை வெற்றிக் கொண்டால், தற்புகழ்ந்து கொள்ளவோ, எவரையும் இகழ்ந்து பேசவோ மாட்டார்கள்.(12) எனினும், உன் அறிவு அற்பமானதே. இதன் காரணமாகவே, ஓ! சூதனின் மகனே {கர்ணா}, நீ இத்தகு பேச்சுகளில் ஈடுபடுகிறாய். மேலும், பெரும் ஆற்றல் மற்றும் வீரம் கொண்டவரும், நேர்மையான செயல்பாடுகளுக்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவரும், போராடிக் கொண்டிருந்தவருமான பீமசேனர் குறித்த உன் தூற்றும் அடைமொழிகள் எதுவுமே உண்மைக்கு இயைந்தவையாக இல்லை. கேசவனும் {கிருஷ்ணனும்}, நானும், இந்தத் துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருந்தபோதே, பீமசேனரால் போரில் நீ பல முறை தேரற்றவனாகச் செய்யப்பட்டாய்.(13, 14) எனினும் அந்தப் பாண்டுவின் மகன் {பீமர்}, உன்னிடம் கடுமையான வார்த்தை ஒன்றைக் கூடச் சொல்லவில்லை.(15)

எனினும், விருகோதரிடம் {பீமரிடம்} நீ கடுமையான வார்த்தைகள் பலவற்றைச் சொன்னதாலும், என் பார்வைக்கு அப்பால் பிறருடன் சேர்ந்து சுபத்திரையின் மகனைக் {அபிமன்யுவைக்} கொன்றதாலும், அந்த உன் குற்றங்களுக்கான கனியை {பலனை} நீ இன்றே அடையப் போகிறாய்.(16)

ஓ! பொல்லாதவனே {கர்ணா}, உன் அழிவுக்காகத்தான் நீ அபிமன்யுவின் வில்லை அறுத்தாய்.(17) ஓ! அற்ப அறிவைக் கொண்டவனே {கர்ணா}, அதற்காகவே நீ, உன் தொண்டர்கள், படைகள், விலங்குகள் அனைத்துடன் சேர்த்து என்னால் கொல்லப்படுவாய். பேரிடர் உனக்கு நேரப்போவதால், நீ செய்ய வேண்டிய அனைத்துச் செயல்களையும் இப்போதே செய்து கொள்வாயாக.(18) போரில் நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே விருஷசேனனை {உன் மகனை} நான் கொல்வேன். மூடத்தனத்தால் என்னை எதிர்க்கப்போகும் மன்னர்கள் அனைவரையும் நான் யமனுலகுக்கு அனுப்பி வைப்பேன்.(19) என் ஆயுதத்தின் மீது கையைவைத்து இதை நான் உண்மையாகவே {சத்தியமாகச்} சொல்கிறேன். ஞானமற்றவனும், அகங்காரம் நிறைந்தவனும், மூடனுமான நீ போர்க்களத்தில் {வீழ்ந்து} கிடக்கும் போது, உன்னைக் கண்டு, மனங்கசந்து தீயத் துரியோதனன் புலம்பல்களில் ஈடுபடுவான் என்று நான் சொல்கிறேன்” என்றான் {அர்ஜுனன்}.

கர்ணனின் மகனை {விருஷசேனனைக்} கொல்வதாக அர்ஜுனன் சபதமேற்றபோது, தேர்வீரர்களுக்கு மத்தியில் பேரோலியுடன் கூடிய மிகப் பெரிய ஆரவராம் எழுந்தது.(20, 21) அச்சம் நிறைந்த அவ்வேளையில் எங்கும் குழப்பம் நிலவியபோது, ஆயிரம் கதிர்களைக் கொண்ட சூரியன், ஒளியிழந்த கதிர்களுடன் அஸ்த மலைக்குள் நுழைந்தான்.(22) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரின் முன்னணியில் நின்ற ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, சபதத்தை நிறைவேற்றிய அர்ஜுனனை வாரி அணைத்துக் கொண்டு,(23) அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! ஜிஷ்ணு {அர்ஜுனா}, உன் பெரும் சபதம் நிறைவேற்றப்பட்டது நற்பேறாலேயே.(24) பொல்லாதவனான விருத்தக்ஷத்திரனும், அவனது மகனும் {ஜெயத்ரதனும்} கொல்லப்பட்டது நற்பேறாலேயே. ஓ! பாரதா {அர்ஜுனா}, இந்தத் தார்தராஷ்டிரப் படையுடன் தேவர்களின் படைத்தலைவனே {முருகனே} போரிட்டாலும், ஓ! ஜிஷ்ணு {அர்ஜுனா}, அவன் தன் உணர்வுகளை இழந்திருப்பான்.(25) இதில் எந்த ஐயமும் இல்லை. ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, மூவுலகிலும் இந்தப் படையுடன் போரிடக்கூடியவனாக உன்னைத் தவிர வேறு எவனையும் என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

உனக்கு இணையாகவோ, மேன்மையாகவோ பெரும் ஆற்றலைக் கொண்டவர்களான அரசப் போர்வீரர்கள் பலர், துரியோதனனின் கட்டளையின் பேரில் ஒன்று சேர்ந்திருக்கின்றனர். கவசம் பூண்டவர்களான அவர்களாலும் போரில் கோபம் நிறைந்த உன்னை அணுகவே முடியாது.(26-28) உன் சக்தியும், வலிமையும், ருத்ரனுக்கோ, சக்ரனுக்கோ {இந்திரனுக்கோ}, யமனுக்கோ நிகரானவை. ஓ! ஏதிரிகளை எரிப்பவனே, யாருடைய ஆதரவும் இல்லாமல், தனியாகப் போரில் இன்று நீ வெளிப்படுத்திய இத்தகு ஆற்றலை வெளிப்படுத்த இயன்றவன் வேறு எவனும் இல்லை.(29) தீய ஆன்மா கொண்ட கர்ணன் தன் தொண்டர்களுடன் கொல்லப்படும்போது மீண்டும் உன்னை நான் இப்படிப் பாராட்டுவேன். உன் எதிரி வெல்லப்பட்டுக் கொல்லப்படும்போது, நான் இப்படியே உன்னைப் போற்றுவேன்” என்றான் {கிருஷ்ணன்}.

அவனிடம் {கிருஷ்ணனிடம்} மறுமொழியாக அர்ஜுனன், “ஓ! மாதவா {கிருஷ்ணா}, தேவர்களும் சாதிக்கக் கடினமான இந்தச் சபதமானது, உன் அருளாலேயே என்னால் நிறைவேற்றப்பட்டது.(30, 31) ஓ! கேசவா {கிருஷ்ணா}, உன்னைத் தலைவனாகக் கொண்டோரின் வெற்றியானது ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றே அல்ல.(32) உன் அருளால் யுதிஷ்டிரர் முழுப் பூமியையும் அடைவார். ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, இவை யாவும் உன் சக்தியாலேயே நடக்கின்றன. ஓ! தலைவா {கிருஷ்ணா}, இந்த வெற்றி உனதாகும்.(33) ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, எங்கள் செழிப்பு உனது பொறுப்பு, நாங்கள் உன் பணியாட்களே” என்றான் {அர்ஜுனன்}. இப்படிச் சொல்லப்பட்ட கிருஷ்ணன் மெல்லப் புன்னகைத்தபடியே மெதுவாகக் குதிரைகளைத் தூண்டினான். மேலும் அவன் சென்ற வழியெங்கும் பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குக்} கொடூரக் காட்சிகள் நிறைந்த போர்க்களத்தைக் காட்டிக் கொண்டே வந்தான்.(34)

அப்போது கிருஷ்ணன் {அர்ஜுனனிடம்}, “போரில் வெற்றியையோ, உலகப்புகழையோ விரும்பிய வீர மன்னர்கள் பலர் கணைகளால் தாக்கப்பட்டுப் பூமியில் கிடக்கின்றனர்.(35) அவர்களது ஆயுதங்களும், ஆபரணங்களும் சிதறடிக்கப்பட்டும், அவர்களது குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவை சிதைக்கப்பட்டும், உடைக்கப்பட்டும் கிடக்கின்றன. கவசங்கள் துளைக்கப்பட்டோ, பிளக்கப்பட்டோ அவர்கள் பெரும் துன்பத்தை அடைந்தனர்.(36) அவர்களில் சிலர் இன்னும் உயிருடன் இருக்கின்றனர், சிலரோ இறந்து விட்டனர். எனினும் அப்படி மாண்டோரும் கூடத் தங்கள் காந்தியின் விளைவால் இன்னும் உயிருடன் இருப்பவர்களைப் போலவே தெரிகின்றனர்.(37) தங்கச் சிறகுகளைக் கொண்ட அவர்களது கணைகளாலும், தாக்குவதற்கும், தற்காத்துக் கொள்வதற்கும் பயன்படும் அவர்களது எண்ணற்ற பிற ஆயுதங்களாலும், (உயிரை இழந்த) அவர்களது விலங்குகளாலும் பூமியானது மறைக்கப்பட்டிருப்பதைப் பார்.(38) உண்மையில், கவசங்கள், ரத்தின ஆரங்கள், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட அவர்களது தலைகளாலும், தலைக்கவசங்கள், கிரீடங்கள், மலர் மாலைகள், மகுடங்களில் உள்ள கற்கள், கண்டசூத்ரங்கள் {கழுத்தணிகள்}, அங்கதங்கள் {தோள்வளைகள்}, தங்கப்பட்டைகள் மற்றும் பல்வேறு பிற அழகிய ஆபரணங்களாலும் பூமியானது பிரகாசமாகத் தெரிகிறது.(39, 40)

அனுகர்ஷங்கள் {இருசுக்கட்டைகள்}, அம்பறாத்தூணிகள், கொடிமரங்கள், கொடிகள், உபஷ்கரங்கள் {தேரிலுள்ள பிற பொருட்கள்}, அதிஷ்தானங்கள் {பீடங்கள்}, கணைகள், தேர்களின் {கோபுர} முகடுகள், உடைந்த சக்கரங்கள், பெரும் எண்ணிக்கையிலான அழகிய அக்ஷங்கள் {ஏர்க்கால்கள்}, நுகத்தடிகள், குதிரைகளின் கடிவாளங்கள், கச்சைகள், விற்கள், அம்புகள், யானைகளின் அம்பாரிகள், பரிங்கங்கள், அங்குசங்கள், ஈட்டிகள், பிண்டிபாலங்கள் {குறுங்கணைகள்}, தோமரங்கள், சூலங்கள், குந்தங்கள், தண்டாயுதங்கள், சதாக்னிகள், புசுண்டிகள், வாள்கள், கோடரிகள், குறுகிய கனமானத் தண்டாயுதங்கள், உலக்கைகள், கதாயுதங்கள், குணபங்கள் {ஒரு வகை ஈட்டிகள்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட சாட்டைகள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மணிகள், பெரும் யானைகளின் பல்வேறு விதமான ஆபரணங்கள், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடல்களில் இருந்து நுழுவிய மலர்மாலைகள், விலையுயர்ந்த ஆடைகள், ஆபரணங்கள் ஆகிவற்றால் விரவிக் கிடந்த பூமியானது, கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் விரவிக்கிடக்கும் கூதிர்காலத்து ஆகாயத்தைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தது. பூமிக்காகக் கொல்லப்பட்ட பூமியின் தலைவர்கள், அன்புக்குரிய மனைவியை அணைத்துக் கொள்வதைப் போலப் பூமியைத் தங்கள் அங்கங்களால் தழுவியபடி உறங்கிக் கொண்டிருந்தனர்.

மலைகள் தங்கள் குகைகள் மற்றும் பிளவுகளில் சுண்ணாம்பை உதிர்ப்பதைப் போல, ஐராவதத்திற்கு ஒப்பானவையும், மலைகளைப் போலப் பெரியவையுமான இந்த யானைகள், ஆயுதங்களால் தங்கள் உடல்களில் உண்டான பிளவுகளில் அபரிமிதமாகக் குருதியைச் சிந்துகின்றன.(41-49) ஓ! வீரா {அர்ஜுனா}, கணைகளால் பீடிக்கப்பட்டுத் தரையில் கிடக்கும் அந்தப் பெரும் உயிரினங்கள் நடுங்கிக் கொண்டிருப்பதைப் பார். தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டுத் தரையில் கிடக்கும் அந்தக் குதிரைகளையும் பார்.(50) ஓ! பார்த்தா {அர்ஜுனா}, சாரதியற்றவையும், தேரோட்டியற்றவையும், ஒரு காலத்தில் தெய்வீக வாகனங்களுக்கோ, மாலை வானில் தோன்றும் ஆவி வடிவங்களுக்கோ {கந்தர்வ மாளிகைகளுக்கோ} ஒப்பாக இருந்தவையுமான அந்தத் தேர்கள், ஓ! தலைவா {அர்ஜுனா}, துண்டுகளாக வெட்டப்பட்ட கொடிமரங்கள், கொடிகள், அக்ஷங்கள், நுகத்தடிகள் ஆகியவற்றுடனும், உடைந்த ஏர்க்கால்கள் மற்றும் முகடுகளுடனும் இப்போது தரையில் கிடப்பதைப் பார்.(51, 52) ஓ! வீரா {அர்ஜுனா}, விற்கள் மற்றும் கேடயங்களைத் தாங்கிய காலாட்படை வீரர்களும், நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொல்லப்பட்டுக் குருதியில் குளித்துப் புழுதி படிந்த தங்கள் குழல்களுடன் {கேசங்களுடன்}, தங்கள் அனைத்து அங்கங்களாலும் பூமியைத் தழுவியபடி பூமியில் கிடப்பதைப் பார்.(53)

ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, அந்தப் போர்வீரர்களின் உடல்கள் உன் ஆயுதங்களால் சிதைக்கப்பட்டிருப்பதைப் பார்.(54) சாமரங்கள், விசிறிகள், குடைகள், கொடிமரங்கள், குதிரைகள், தேர்கள், யானைகள், பல்வேறு வகையான விரிப்புகள், குதிரைகளின் கடிவாளங்கள், அழகிய ஆடைகள், விலைமதிப்புமிக்க (தேர்களின்) வரூதங்கள், சித்திர வேலைப்பாடுகளுள்ள திரைச்சீலைகள் ஆகியவற்றால் விரவிக் கிடக்கும் இந்தப் பூமியைப் பார்.(55, 56) இடியால் தாக்கப்பட்டு மலையின் முகடுகளில் இருந்து விழும் சிங்கங்களைப் போல, போர்வீரர்கள் பலர், நன்கு ஆயுதம் தரிக்கப்பட்ட யானைகளின் முதுகுகளில் இருந்து விழுந்து, தாங்கள் ஏறி வந்த அந்த விலங்குகளுடனேயே கிடப்பதைப் பார்.(57) (தாங்கள் ஏறி வந்த) குதிரைகள், (தாங்கள் பிடித்திருந்து) விற்கள் ஆகியவற்றோடு கலந்து பெரும் எண்ணிக்கையிலான குதிரைவீரர்களும், காலாட்படை வீரர்கள், குருதியால் மறைக்கப்பட்டுக் களத்தில் விழுந்து கிடப்பதைப் பார்.(58)

ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {அர்ஜுனா}, பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்ட யானைகள், குதிரைகள் மற்றும் தேர்வீரர்களால் மறைக்கப்பட்டதும், அபரிமிதமான இரத்தம், கொழுப்பு மற்றும் அழுகிய இறைச்சியினால் உண்டான சேறில் மகிழும் நாய்கள், ஓநாய்கள், பிசாசங்கள் மற்றும் பல்வேறு இரவு உலாவிகள் திரிவதுமான பூமியின் பரப்புப் பயங்கரமாக இருப்பதைப் பார்.(59) ஓ! பலமிக்கவனே {அர்ஜுனா}, புகழை அதிகரிப்பதான இந்தப் போர்க்கள அருஞ்செயலானது உன்னாலோ, பெரும் போரில் தைத்தியர்களையும், தானவர்களையும் கொல்லும் தேவர்களின் தலைவனான இந்திரனாலோ மட்டுமே அடையத்தக்கதாகும்” என்றான் {கிருஷ்ணன்}.(60)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனான அர்ஜுனனுக்கு இப்படியே போர்க்களத்தைக் காட்டிவந்த கிருஷ்ணன், தன் சங்கான பாஞ்சஜன்யத்தை முழக்கி, (பதிலுக்குத் தங்கள் தங்கள் சங்குகளை முழக்கிய) பாண்டவப்படையின் வீரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினான்.(61) கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட வீரனுக்கு {அர்ஜுனனுக்குப்} போர்க்களத்தைக் காட்டியதும், எதிரிகளைக் கொல்பவனான அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பாண்டுவின் மகனான அஜாதசத்ருவிடம் {யுதிஷ்டிரனிடம்} விரைவாகச் சென்று, ஜெயத்ரதனின் கொலையைக் குறித்து அவனுக்குத் தெரிவித்தான்” {என்றான் சஞ்சயன்}.(62)
--------------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 147ல்  வரும் மொத்த சுலோகங்கள் 62

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்