Saturday, December 03, 2016

நாராயணாயுதம்! - துரோண பர்வம் பகுதி – 196

Narayana Weapon! | Drona-Parva-Section-196 | Mahabharata In Tamil

(நாராயணாஸ்த்ரமோக்ஷ பர்வம் - 03)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனையும், திருஷ்டத்யும்னனையும் நிந்தித்த அஸ்வத்தாமன், பாஞ்சாலர்களையும், பாண்டவர்களையும் கொல்வதாகச் சபதம் ஏற்றது; நாராயணாஸ்திரத்தின் வரலாறு…


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, பாவம் நிறைந்த செயல்களைக் செய்யும் திருஷ்டத்யும்னனால், தன் தந்தை கொல்லப்பட்டதைக் கேட்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, துயராலும், சினத்தாலும் நிறைந்தான்.(1) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்த அவனது உடலானது, யுக முடிவின் போது உயிரினங்களைக் கொல்லும் அந்தகனின் உடலைப் போலச் சுடர்விட்டு எரிவதாகத் தெரிந்தது.(2)

கண்ணீர் நிறைந்த தன் கண்களை மீண்டும் மீண்டும் துடைத்தவனும், சினத்தால் சூடான பெருமூச்சுகளை விட்டவனுமான அவன் {அஸ்வத்தாமன்}, துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(3) “என் தந்தை தமது ஆயுதங்களைக் கீழே வைத்தபிறகு, இழிந்த அற்பர்களால் அவர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதையும், அறத்தின் போர்வையில்[1] மறைந்திருக்கும் யுதிஷ்டிரனால் இந்தப் பாவச் செயல் எவ்வாறு இயற்றப்பட்டது என்பதையும் இப்போது நான் அறிந்தேன்.(4) தர்மன் மகனின் {யுதிஷ்டிரனின்} அந்த அநீதியான, மிகக் கொடூரச் செய்கையை இப்போது நான் கேட்டேன்.


[1] இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் தர்மத்வஜின் Dharmadhwajin என்ற சொல்லின் பொருள், உண்மையில் அறக்கொடி {தர்மக்கொடி} கொண்ட ஒரு மனிதனையே குறிக்கும்; எனவே, ஒரு வேடதாரியானவன் அறத்தையும், அறநெறியையும் மட்டுமே பேசிக் கொண்டு, வேறு வகையில் செயல்படுபவன் என இங்கே பொருள்படும்” என இங்கே விளக்குகிறார் கங்குலி.

உண்மையில், ஓ! மன்னா {துரியோதனா}, போரில் ஈடுபடுவோருக்கு வெற்றியோ, தோல்வியோ இரண்டில் ஏதாவதொன்றே கிடைக்க வேண்டும். போரில் மரணம் என்பது எப்போதும் பாராட்டுக்குரியதாகவே இருக்கிறது. போரிடும் ஒருவனுக்கு நேர்மையான சூழ்நிலைகளின் கீழ் போரில் ஏற்படும் மரணமானது,(5,6) தவசிகளின் நோக்கில் துயருறத் தகாததாகும். வீரர்களின் உலகங்களுக்கே என் தந்தை {துரோணர்} சென்றிருக்கிறார் என்பதில் ஐயமில்லை.(7) இத்தகு மரணத்தை அடைந்த அவருக்காக நான் வருந்தலாகாது. எனினும், அவர் {துரோணர்} போரில் நேர்மையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், வீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவரது {துரோணரது} குழலை {கேசத்தைப்} பற்றி இழுத்த அந்த அவமதிப்பானது என் இதயத்தின் மையத்தையே பிளக்கிறது. நான் உயிரோடிருக்கையில் என் தந்தையின் குழல் பிடிக்கப்பட்டது.(8,9) {எனும்போது} மகனற்றோர் ஏன் வாரிசை விரும்ப வேண்டும்?[2]

[2] “இங்கே சொல்லப்பட்டிருக்கும் புத்ரினாஸ் putrinas அல்ல, அபுத்ரினாஸ் aputrinas என்பதே சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இங்கே உண்மையான பொருள் என்பது, “பிள்ளைகளைக் கொண்டோர் ஏன் அவர்களிடம் பாசத்தை உணர வேண்டும்?” என்பதாகும்” என இங்கே விளக்குகிறார் கங்குலி. வேறொரு பதிப்பில், “நான் உயிருடனிருக்கும்போதே என்னைப் பெற்றவரான துரோணர் மயிர் பிடிக்கப்படுதலை அடைந்தமையால் மற்றுள்ள புத்ரவான்கள் புத்ரர்களிடம் எவ்வாறு பிரியம் வைப்பார்கள்?” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “நான் உயிரோடிருக்கும்போதே என் தந்தையின் மயிர் பற்றப்பட்டதால், மகனற்ற மனிதர்கள், (அவர்களுக்கு எவ்வழியில் உதவ முடியாத) மகன்களை அடைய ஏன் விரும்ப வேண்டும்?” என்றிருக்கிறது.

காமத்தாலோ, கோபத்தாலோ, மடமையாலோ, வெறுப்பாலோ, அலட்சியத்தாலோ தான் மனிதர்கள் அநீதியிழைக்கவோ, பிறரை அவமதிக்கவோ செய்கிறார்கள். கொடூரனும், தீய ஆன்மாக் கொண்டவனுமான பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} என்னை முற்றிலும் அலட்சியம் செய்தே இந்த மாபெரும் பாவச்செயலைச் செய்திருக்கிறான். எனவே, அச்செயலின் பயங்கர விளைவுகளைத் திருஷ்டத்யும்னன் நிச்சயம் காண்பான்,(10,11) அதே போலப் பொய்ப்பேசும் அந்தப் பாண்டு மகனும் {யுதிஷ்டிரனும்} இவ்வளவு தவறாக {அகாரியமாக} நடந்து கொண்டதால் {யுதிஷ்டரனும்} அதைக் {அதன் விளைவுகளைக்} காண்பான். வஞ்சகச் செயல் ஒன்றால் ஆசானைத் தமது ஆயுதங்களைக் கீழே வைக்கச் செய்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இரத்தத்தை இன்று பூமி நிச்சயம் குடிக்கப் போகிறது. ஓ! கௌரவ்யா {துரியோதனா}, பாஞ்சாலர்களை முற்றாக அழிக்கத் தவறினால், அதற்கு மேல் உயிரெனும் சுமையை நான் ஒருபோதும் சுமக்க மாட்டேன் என உண்மையின் பேரிலும், என் அறச்செயல்கள் அனைத்தின் பேரிலும் உறுதியேற்கிறேன். அனைத்து வழிகளிலும் கடுமையாகப் பாஞ்சாலர்களுடன் நான் போரிடுவேன்.(12-15)

மறச் செயல்களைச் செய்யும் அந்தத் திருஷ்டத்யும்னனை போரில் நான் நிச்சயம் கொல்வேன். ஓ! கௌரவா {துரியோதனா}, அமைதி எனதாகும் முன் மென்மையாகவோ, கடுமையாகவோ எவ்வழியைப் பின்பற்றியேனும் பாஞ்சாலர்கள் அனைவரையும் அழிப்பேன். ஓ! மனிதர்களில் புலியே, இங்கேயும் {இம்மையிலும்}, இதன் பிறகும் {மறுமையிலும்} என இரண்டிலும் பேரச்சங்களில் இருந்து மீட்கப்படுவோம் என்பதற்காகவே மனிதர்கள் பிள்ளைகளை விரும்புகின்றனர். எனினும், சீடனும், (வலிமையில்) மலைக்கு ஒப்பான மகனுமான நான் உயிரோடிருக்கும்போதே, நண்பர்களற்ற ஓர் உயிரினத்தைப் போல, என் தந்தை அத்தகு பரிதாப நிலையில் வீழ்ந்தார். மகனாக நான் இருந்தாலும், துரோணரின் குழல்கள் பிடித்து இழுக்கப்பட்டதால், என் தெய்வீக ஆயுதங்களுக்கு ஐயோ! என் கரங்களுக்கு ஐயோ!, என் ஆற்றலுக்கு ஐயோ!(16-19) ஓ! பாரதர்களின் தலைவா {துரியோதனா}, இப்போது மறுவுலகத்திற்குச் சென்ற என் தந்தைக்குப் பட்டிருக்கும் கடனிலிருந்து நான் விடுபட எதை அடைய வேண்டுமோ, அதை இப்போது நான் அடைவேன்.

எவன் நல்லவனோ, அவன் தற்புகழ்ச்சியில் ஈடுபடுவதில்லை.(20,21) எனினும் என் தந்தையின் {துரோணரின்} படுகொலையைப் பொறுத்துக் கொள்ள முடியாமலேயே நான் என் ஆற்றலைக் குறித்துப் பேசுகிறேன். யுகத்தின் முடிவில் (அந்தகனால்) அடையப்படுவது எதுவோ, அஃதை அடைந்து இன்று நான் அவர்களது துருப்புகளைக் கலங்கடிக்கும்போது, பாண்டவர்களும், அவர்களுக்கு மத்தியில் இருக்கும் ஜனார்த்தனனும் {கிருஷ்ணனும்} என் ஆற்றலைக் காணட்டும். தேரில் இருக்கும் என்னைத் தேவர்களோ, கந்தர்வர்களோ, அசுரர்களோ, உரகர்களோ, ராட்சசர்களோ, இல்லை மனிதர்களில் முதன்மையானோர் அனைவரோ இன்று போரில் வெல்ல முடியாது. ஆயுத அறிவில் எனக்கோ, அர்ஜுனனுக்கோ ஈடானவன் இவ்வுலகில் வேறு எவனும் இல்லை.(22-24) தன் சுடர்மிக்கக் கதிர்களுக்கு மத்தியில் இருக்கும் சூரியனைப் போலத் துருப்புகளுக்குள் நுழையும் நான் இன்று என் தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்த போகிறேன்.(25)

இன்று, இந்தப் பயங்கரப்போரில் என் வில்லில் இருந்து ஏவப்பட்டு என்னால் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், தங்கள் பயங்கர சக்தியை வெளிப்படுத்திப் பாண்டவர்களைக் கலங்கடிக்கப்போகின்றன.(26) இன்று, ஓ! மன்னா {துரியோதனா}, அனைத்துத் திசைப்புள்ளிகளும் மழைத்தாரைகளால் மறைக்கப்படுவதைப் போலச் சிறகுகள் படைத்தவையும், கூர்முனை கொண்டவையுமான என் கணைகளால் நிறையப்போவதை நம் படையின் போர்வீரர்கள் காணப் போகிறார்கள்.(27) பேரொலியுடன் அனைத்துப் பக்கங்களிலும் கணை மாரியை இறைத்து, மரங்களை வீழ்த்தும் புயலைப் போல என் எதிரிகளை நான் வீழ்த்தப் போகிறேன்.(28) ஏவுவதற்கும், திரும்பப் பெறுவதற்கும் உரிய மந்திரங்களுடன் நான் கொண்டிருக்கும் அந்த ஓர் ஆயுதத்தை, ஓ! கௌரவ்யா {துரியோதனா}, பீபத்சுவோ {அர்ஜுனனோ}, ஜனார்த்தனனோ {கிருஷ்ணனோ}, பீமசேனனோ, நகுலனோ, சகாதேவனோ, மன்னன் யுதிஷ்டிரனோ, தீய ஆன்மா கொண்ட பிருஷதன் மகனோ (திருஷ்டத்யும்னனோ), சிகண்டியோ, சாத்யகியோ அறியமாட்டார்கள்.(29,30)

முன்பொரு சந்தர்ப்பத்தில், நாராயணன், ஒரு பிராமணனின் வடிவத்தை ஏற்று என் தந்தையிடம் வந்தான். அவனை {நாராயணனை} வணங்கிய என் தந்தை {துரோணர்}, முறையான வடிவத்தில் அவனுக்குக் காணிக்கைகளை அளித்தார்.(31) அப்போது என் தந்தை {துரோணர்} நாராயணம் என்று அழைக்கப்பட்ட அந்த உயர்ந்த ஆயுதத்தை {நாராயணனிடம்} கேட்டார்.(32) தேவர்கள் அனைவரிலும் முதன்மையான அந்தத் தெய்வீகத் தலைவன் {நாராயணன்}, “போரில் எந்த மனிதனும் உமக்கு இணையானவனாக இருக்க மாட்டான். ஓ! பிராமணரே, இந்த ஆயுதத்தை அவசரத்தில் ஒருபோதும் {திடீரெனப்} பயன்படுத்தக் கூடாது. எதிரிக்கு அழிவை ஏற்படுத்தாமல் இஃது ஒருபோதும் திரும்பாது.(34) ஓ! தலைவா, இதனால் கொல்லப்படத் தகாதவன் எவனையும் நான் அறியவில்லை. உண்மையில், கொல்லப்பட முடியாதவனையும் இது கொன்றுவிடும். எனவே, (ஆழமான பெரும் ஆலோசனை இல்லாமல்) இது பயன்படுத்தப்படக்கூடாது.(35) ஓ! எதிரிகளை எரிப்பவரே, போரில் தேர்களை, அல்லது ஆயுதங்களைக் கைவிட்டவர்கள் மீதோ, அபயம் கேட்பவர் மீதோ, சரணடைந்தவர்கள் மீதோ இந்த வலிமைமிக்க ஆயுதத்தை ஒருபோதும் ஏவக்கூடாது. போரில் இதைக் கொண்டு கொல்லப்படத் தகாதவனைப் பீடிக்க முயல்பவன், தானே இதனால் மிகவும் பீடிக்கப்படுவான்[3] என்றான்.(36,37) இப்படியே என் தந்தை {துரோணர்} அவ்வாயுதத்தைப் பெற்றுக் கொண்டார்.

[3] “பம்பாய்ப் பதிப்பில் இந்த 37வது சுலோகத்தின் கடைசிவரி வேறுமாதிரியாக இருக்கிறது. நீலகண்டர் அஃதையே ஏற்று, இலக்கணப் பிழை நேர்வது ஏற்றுக் கொள்ளக்கூடியதே எனத் தனது அழகான விளக்கங்களால் விளக்குகிறார். எனினும் வங்க உரை அப்படியே இதற்கு முரணாக இருக்கிறது” என இங்கே விளக்குகிறார் கங்குலி. எனவே இங்கே கங்குலி ஏற்றுக் கொண்டிருப்பது வங்க உரையே என்பது தெரிகிறது. வேறொரு பதிப்பில், “யுத்ததில் (பகைவர்களைப்) பீடிக்கின்றவன் எல்லா விதத்தாலும் துன்பப்பட்டானேயாகில் கொல்லத்தகாதவர்களையும் கொல்லலாம்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை அறியமுடியவில்லை.

பிறகு, என்னிடம் பேசிய தலைவன் நாராயணன், “இவ்வாயுதத்தின் துணை கொண்டு, நீயும் போரில் பல்வேறு தெய்வீக ஆயுதங்களின் மழையைப் பொழிந்து அதன் விளைவாக சக்தியால் சுடர்விட்டெரியலாம்” என்றான். பிறகு இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தத் தெய்வீகத் தலைவன் {நாராயணன்} சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(38,39) என் தந்தையால் அடையப்பட்ட நாராயண ஆயுதத்தின் {நாராயணாஸ்திரத்தின்} வரலாறு இதுவே. அசுரர்களை முறியடித்துக் கொன்ற சச்சியின் தலைவனை {இந்திரனைப்} போலவே, நானும் அதைக் கொண்டு பாண்டவர்கள், பாஞ்சாலர்கள், மத்ஸ்யர்கள், கைகேயர்கள் ஆகியோரை முறியடித்துக் கொல்வேன். ஓ! பாரதா, என் கணைகள் எவ்வடிவத்தை ஏற்கவேண்டுமென நான் விரும்புவேனோ, அந்தக் குறிப்பிட்ட வடிவங்களை ஏற்கும் அவை {கணைகள்}, போராடும் எதிரிகள் மீது பாயும். போரில் கொல்லும் நான் எனக்கு விருப்பமான ஆயுதங்களின் மழையைப் பொழிவேன்.(40-42)

இரும்பு வாய்களைக் கொண்ட வானுலாவும் கணைகளைக் கொண்டு தேர்வீரர்களில் முதன்மையானோர் அனைவரையும் நான் முறியடித்துக் கொல்வேன். எதிரியின் மீது நான் எண்ணற்ற போர்க்கோடரிகளின் மழையை ஐயமறப் பொழிவேன்.(43) எதிரிகளை எரிப்பவனான நான் அந்த வலிமைமிக்க நாராயணாயுதத்தை {நாராயணாஸ்திரத்தைக்} கொண்டு பாண்டவர்களுக்கு மத்தியில் மகத்தான பேரழிவையுண்டாக்கி {பெரும் படுகொலைகளை நிகழ்த்தி}, அவர்களை அழிப்பேன்.(44) நண்பர்களுக்கும், பிராமணர்களுக்கும், தன் சொந்த ஆசானுக்கும் தீங்கிழைப்பவனும், கண்டிக்கத்தக்க நடத்தையைக் கொண்ட இழிந்த வஞ்சகனுமான அந்தப் பாஞ்சாலர்களில் இழிந்தவன் (திருஷ்டத்யும்னன்) இன்று என்னிடம் இருந்து ஒருபோதும் உயிரோடு தப்ப முடியாது” என்றான் {அஸ்வத்தாமன்}.(45)

துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு (குரு) படை மீண்டும் அணிதிரண்டது. அப்போது மனிதர்களில் முதன்மையானோரான பலர் தங்கள் பெரும் சங்கங்களை முழக்கினர்.(46) மகிழ்ச்சியால் நிறைந்த அவர்கள், தங்கள் பேரிகைகளையும், டிண்டிமங்களையும் ஆயிரக்கணக்கில் இசைத்தனர். பேரொலிகளால் எதிரொலித்த பூமியானது, குதிரைகளின் குளம்படிகளாலும், தேர்ச்சக்கரங்களாலும் பீடிக்கப்பட்டது.(47) அந்த உரத்த ஆரவாரமானது பூமியையும், வானத்தையும், சொர்க்கத்தையும் எதிரொலிக்கச் செய்தது. மேகங்களின் உருளலைப் போன்ற அந்த ஆழ்ந்த ஆரவாரத்தைக் கேட்டவர்களும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களுமான அந்தப் பாண்டவர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒருவரோடொருவர் ஆலோசித்தனர். அதேவேளையில், இவ்வார்த்தைகளைச் சொன்ன துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! பாரதரே, நீரைத் தொட்டு, நாராயணம் என்று அழைக்கப்பட்ட அந்தத் தெய்வீக ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான்” {என்றான் சஞ்சயன்}.(48,49)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்