Saturday, January 28, 2017

மகதர்களின் தலைவன் தண்டதாரன்! - கர்ண பர்வம் பகுதி – 18

Dandadhara, the chief of the Magadhas! | Karna-Parva-Section-18 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : அர்ஜுனனுக்கும் தண்டதாரனுக்கும் இடையில் நடைபெற்ற மோதல்; தண்டதாரனையும், அவனது தம்பி தண்டனையும் கொன்ற அர்ஜுனன்; அர்ஜுனனைத் துதித்த போர்வீரர்கள்; மீண்டும் சம்சப்தகர்களை நோக்கி விரைந்த அர்ஜுனன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில், பாண்டவப்படையின் வடபுறத்தில், தண்டதாரனால் கொல்லப்படும் காலாட்படை வீரர்கள், யானைகள், குதிரைகளாலும் மற்றும் தேர்களாலும் அங்கே உரத்த ஆரவாரம் எழுந்தது.(1) கருடன் அல்லது காற்றின் வேகத்தைக் கொண்ட குதிரைகளை நிறுத்தாமலேயே தேரைத் திருப்பிய கேசவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம்,(2) “(எதிரிகளை) நொறுக்கும் யானையுடன் கூடிய மகதர்களின் தலைவன் {தண்டதாரன்} ஆற்றலில் ஒப்பற்றவனாக இருக்கிறான். பயிற்சியிலும், வலிமையிலும், அவன் பகதத்தனுக்குச் சற்றும் குறைவில்லாதவனாவான்.(3) அவனை {தண்டதாரனை} முதலில் கொன்ற பிறகு, சம்சப்தகர்களைக் கொல்வாயாக” என்று சொன்னான். அந்தக் கேசவன் {கிருஷ்ணன்}, தனது சொற்களின் முடிவில், பார்த்தனை {அர்ஜுனனை} தண்டதாரனின் முன்னிலைக்குக் கொண்டு சென்றான்.(4)


அங்குசத்தைக் கையாள்வதில் ஒப்பற்றவனும்[1], கோள்களனைத்தின் மத்தியில் தலையில்லாத கோளான கேதுவைப் போன்றவனுமான அந்த மகதர்களின் தலைவன் {தண்டதாரன்}, மொத்த உலகையும் அழிக்கும் கடும் வால் விண்மீனைப் போல, பகைவர் படையை அழித்துக் கொண்டிருந்தான்.(5) எதிரிகளைக் கொல்வதும், நன்கு ஆயத்தம் செய்யப்பட்டதும், யானையின் முகத்தையும், வடிவையும் கொண்ட ஒரு தானவனைப் போலத் தெரிந்ததும், மேகக்கூட்டங்களின் திரளுக்கு ஒப்பாகப் பிளிறியதுமான யானையைச் செலுத்திய அந்தத் தண்டதாரன், தன் கணைகளால் ஆயிரக்கணக்கான தேர்களையும், குதிரைகளையும், யானைகளையும், மனிதர்களையும் அழித்துக் கொண்டிருந்தான்.(6) தன் பாதங்களைக் கொண்டு தேர்களை நசுக்கிய அந்த யானையும் கூட, பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களையும், அவர்களது குதிரைகள் மற்றும் சாரதிகளையும் பூமியில் நசுக்கியது. அந்த முதன்மையான யானை, தன்னிரு முன்னங்கால்கள் மற்றும் துதிக்கையைப் பயன்படுத்தி யானைகள் பலவற்றைக் கொன்றது. உண்மையில் அவ்விலங்கு மரணச் சக்கரத்தை {காலச்சக்கரத்தைப்} போல நகர்ந்து கொண்டிருந்தது.(7) உருக்கு கவசங்களால் அலங்கரிக்கப்பட்ட மனிதர்களையும், அவர்களது குதிரைகள் மற்றும் காலாட்படைவீரர்களையும் கொன்ற அந்த மகதர்களின் தலைவன் {தண்டதாரன்}, தடித்த நாணல்களைப் படபடக்கும் ஒலியுடன் நொறுக்குவதைப் போலத் தனக்குச் சொந்தமானதும், வலிமையானதுமான அந்த முதன்மையான யானையைக் கொண்டு அவர்களைப் பூமியில் நசுக்கினான்.(8)

[1] “இங்கே குறிப்பிடப்படும் அங்குசக்கிரகம் Ankusa-graha என்பது “அங்குசத்தைக் கையாள்தல்” என்ற பொருளைத் தரும். விகாச கிரகம் Ankusa-graha என்பது தலையற்ற கோளான கேது, அல்லது பேராபத்தைவிளைவிக்கும் கோளான கடும் வால்விண்மீன் என்ற பொருளைத் தரும் என்று நீலகண்டர் விளக்குகிறார்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அப்போது முதன்மையான தேரில் ஏறிவந்த அர்ஜுனன், ஆயிரக்கணக்கான தேர்கள், குதிரைகள், யானைகள் நிறைந்ததும், எண்ணற்ற மிருதங்கங்கள், பேரிகைகள், சங்குகள் ஆகியவற்றின் இசையால் எதிரொலிக்கப்பட்டதும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி, வில்லின் நாண்கயிறினால் உண்டான நாணொலி, உள்ளங்கையொலி ஆகியவற்றின் ஆரவாரத்துடன் கூடியதுமான படைக்கு மத்தியில் இருந்த அந்த யானைகளின் இளவரசனை நோக்கி வேகமாக விரைந்தான்.(9) பிறகு தண்டதாரன், முதன்மையான பன்னிரு கணைகளால் அர்ஜுனனையும், பதினாறால் ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்}, மூன்றால் குதிரைகள் ஒவ்வொன்றையும் துளைத்து, உரக்க முழங்கி, மீண்டும் மீண்டும் சிரித்தான்.(10) அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, பெரும் எண்ணிக்கையிலான அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} தன் எதிரியின் வில்லை அதன் நாண்கயிற்றோடும், அதில் பொருத்தப்பட்ட கணையோடும் அறுத்து, நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த அவனது கொடிமரத்தையும், அவனது விலங்கின் வழிகாட்டிகளையும், அவ்விலங்கைப் பாதுகாத்த காலாள்களையும் வெட்டினான். இதனால், அந்தக் கிரிவ்ரஜத் [2] தலைவன் {தண்டதாரன்} சினத்தால் நிறைந்தான்.(11) ஆவலால் கன்னக்கதுப்பு {கபோலம்} பிளந்ததும் {மதநீர் ஒழுகியதும்}, மேகத்திரள்களுக்கு ஒப்பானதும், காற்றின் வேகத்துடன் கூடியதுமான தன் யானையைக் கொண்டு ஜனார்த்தனனை கலங்கடிக்க விரும்பிய தண்டதாரன், பல வேல்களால் தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தாக்கினான்.(12)

[2] கிரிவ்ரஜம், மகதத்தின் தலைநகரமாகும்.

அப்போது கிட்டத்தட்ட அதே நேரத்திலேயே அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஒரு யானையின் துதிக்கையைப் போலத் தெரிந்த தன் எதிரியின் இரு கரங்களில் ஒவ்வொன்றையும், முழு நிலவுக்கு ஒப்பான தலையையும் கத்தித் தலை கணைகள் {க்ஷுரப்ரங்கள்} மூன்றைக் கொண்டு வெட்டினான்.(13) தங்கக் கவசத்துடன் கூடிய அந்த யானை, தங்கத்தால் அலங்கரிக்கபட்ட பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் மறைக்கப்பட்டு, இரவில் சுடர்விட்டெரியும் காட்டுத்தீயில், செடிகள் மற்றும் மரங்களுடன் கூடிய மலையொன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(14) வலியால் பீடிக்கப்பட்டு, மேகங்களின் திரளைப் போல முழங்கி, மிகவும் பலவீனமடைந்திருந்த அந்த யானை, பிளிறிக் கொண்டே தள்ளாடிய நடையுடன் திரிந்து, இடியால் பிளக்கப்பட்ட மலைச் சிகரம் ஒன்றைப் போலத் தன் கழுத்தில் இருந்த வழிகாட்டியுடன் கீழே விழுந்தது.(15)

போரில் தன் அண்ணன் வீழ்ந்ததும், தண்டனானவன், இந்திரனின் தம்பியையும் {விஷ்ணுவான கிருஷ்ணனையும்}, தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} கொல்ல விரும்பி, பனி போன்ற வெண்மையானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், இமயச் சிகரத்தைப் போலத் தெரிந்ததுமான தன் யானையில் அவர்களை எதிர்த்துச் சென்றான்.(16) கதிர்களைப் போலப் பிரகாசமானவையும், கூராக்கப்பட்டவையுமான மூன்று வேல்களால் ஜனார்த்தனனைத் {கிருஷ்ணனைத்} தாக்கிய தண்டன், ஐந்தால் அர்ஜுனனையும் தாக்கி உரக்க முழங்கினான். பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தண்டனின் இரு கரங்களையும் உரக்க முழங்கிய படியே அறுத்தான்.(17) கத்தித் தலை கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} அறுக்கப்பட்டவையும், சந்தனக்குழும்பால் பூசப்பட்டவையும், அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், வேல்களைப் பிடித்திருந்தவையுமான அவ்விரு கரங்களும், யானையின் முதுகில் இருந்து விழுந்த அதே வேளையில், மலைச்சிகரத்தில் இருந்து கீழே விழுபவையும், பெரும் அழகுடன் கூடியவையுமான பெரும் பாம்புகள் இரண்டைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன.(18)

கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் (பார்த்தனால் {அர்ஜுனனால்}) பிறைவடிவ {அர்த்தச்சந்திரக்} கணையொன்றைக் கொண்டு வெட்டப்பட்ட தண்டனின் தலையும் யானையின் முதுகில் இருந்து கீழே பூமியில் விழுந்தது. குருதியால் நனைந்து கிடந்த அஃது, அஸ்தமலையில் இருந்து மேற்குப் பகுதியை நோக்கி விழுந்த சூரியனைப் போலப் பிரகாசிப்பதாகத் தெரிந்தது.(19) சூரியக் கதிர்களின் பிரகாசத்துடன் கூடிய சிறந்த கணைகள் பலவற்றைக் கொண்டு பார்த்தனால் துளைக்கப்பட்டதும், வெண்முகில்களின் திரளுக்கு ஒப்பானதுமான அந்த எதிரியின் {தண்டனின்} யானை, இடியால் பிளக்கப்பட்ட இமாலயச் சிகரத்தைப் போல, பேரொலியுடன் கீழே விழுந்தது.(20) அப்போது வெற்றியடையவல்லவையும், ஏற்கனவே கொல்லப்பட்ட {யானைகள்} இரண்டிற்கு ஒப்பானவையுமான வேறு பெரும் யானைகள், அந்தப் போரில் வெட்டப்பட்ட (தண்டனுக்கும், தண்டாதரனுக்கும் சொந்தமான) அந்த இரண்டைப் போலவே சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வெட்டப்பட்டன. இதனால் அந்தப் பரந்த எதிரிப்படை பிளந்தது.(21) அடர்த்தியான கூட்டங்களாக இருந்த யானைகள், தேர்கள், குதிரைகள் ஆகியவையும், மனிதர்களும் ஒருவரோடொருவர் மோதி களத்தில் விழுந்தனர். தள்ளாடிக் கொண்டிருந்த அவை, ஒன்றோடொன்று பயங்கரமாக மோதிக் கொண்டு உயிரற்றுக் கீழே விழுந்தன.(22)

அப்போது புரந்தரனை {இந்திரனைச்} சூழ்ந்து கொள்ளும் தேவர்களைப் போல அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்ட அவனது படைவீரர்கள், “ஓ! வீரா, காலனைக் கண்ட உயிரினங்களைப் போல நாங்கள் அஞ்சிய பகைவன் உன்னால் கொல்லப்பட்டது நற்பேறாலேயே.(23) ஓ! எதிரிகளைக் கொல்பவனே, வலிமைமிக்க எதிரிகளால் ஆழமாகப் பீடிக்கப்பட்ட மக்களை அச்சத்தில் இருந்து நீ பாதுகாக்கவில்லையெனில், எவர்களது மரணத்தில் இப்போது மகிழ்கிறோமோ அந்த நமது எதிரிகளே இந்நேரத்தில் மகிழ்ந்து கொண்டிருப்பார்கள்” என்றனர்.(24) நண்பர்களும், கூட்டாளிகளும் சொன்ன இவற்றையும், இன்னும் பிற வார்த்தைகளையும் கேட்ட அர்ஜுனன், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், அவரவர் தகுதிகளுக்கேற்ப அம்மனிதர்களை வழிபட்டு, மீண்டும் சம்சப்தகர்களை எதிர்த்துச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}[3].(25)

 [3] வேறொரு பதிப்பில் இந்தப் பகுதி கர்ண பர்வத்தின் 54வது பகுதியாக வருகிறது.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்